கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"மரியாதை" [அந்தாதிக் கவிதை] & ["சூடினாள் மல்லிகை" "மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு வாங்கும் புகழ் நிலைத்து நிற்கட்டும் நிற்கும் நிலையில் உறுதி மலரட்டும் மலரும் நட்பில் துலங்கட்டும் மரியாதை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "சூடினாள் மல்லிகை" "சூடினாள் மல்லிகை அழகு கொண்டையில் ஆடினாள் நிருத்தம் முத்திரைகள் காட்டினாள் கூடினாள் இதயத்தில் கவர்ச்சி வீசினாள் தேடினாள் நட்பை சேர்ந்து அனுபவிக்க!" "நாடினாள் அன்பை தனிமை போக்க பாடினாள் கவிதை இனிமை கொடுக்க ஓடினாள் கரையில் ஆனந்தம் பொங்க மூடினாள் நெஞ்சை ஒருவனை நிறுத்தி!" …
-
- 0 replies
- 422 views
-
-
"மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?" "என்னை மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா பெண்ணே? விண்ணில் மறைந்த வெண்ணிலாப் போல கண்ணில் படாமல் ஒழித்தது எனோ?" "இரக்கம் அற்று பிரிந்து போனவளே உருக்கமாக உன்னைக் நான் கேட்கிறேன்? மயக்கும் நளினத்தால் கொள்ளை அடித்தவளே தயக்கம் இல்லையோ மற்றவன் கைப்பிடிக்க ?" "தேடி வந்தாய் தேனாய் கதைத்தாயே தேவை முடிந்தது தள்ளி விட்டாயே? தேவதையே ஒருதரம் திரும்பி பார்க்காயோ தேய்ந்து இவன் படும்பாட்டை காணாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 332 views
-
-
"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள் !" "மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் ? மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ உன்பார்வை ?" "மகரிகை தொங்கும் வீட்டு முன்றலில் மகத்துவம் பொருந்திய அழகு உடல் மகிழ்ச்சி பொங்கி துள்ளி குதிக்குதே மலர் விழியால் ஜாடை காட்டுதே !" "மறைப்பு கொடுத்த தாவணி விலக மகிழ்வு தரும் வனப்பு மயக்க மவுனமாய் திகைத்து நானும் நிற்க மங்கையும் நோக்கினாள் கண்களும் பேசின !" "மருண்டு விழித்து நாணி குனிய மஞ்சள் பொட்டும் வெள்ளி சலங்கையும் மஞ்சர மாலையும் ஒல்லி இடையும…
-
-
- 12 replies
- 720 views
- 1 follower
-
-
செவ்வாய் [29/10/2024] தரணியில் வந்த என் பேரப்பிள்ளைக்கு, மனமார வாழ்த்துக்கள்!! வியாழன் இரவு, 31 /10 / 2024 என் கையில் வீடு வந்து தழுவினார். இதை விட, வேறு என்ன பிறந்த நாள் 01/11/2024 பரிசு, தேவை எனக்கு ? "மழலையின் மொழி கேட்டு" "மழலையின் மொழி கேட்டு நான்பேசும் மொழி மறந்தேன் மழலையின் மொழி பேசி என்னையே நான் மறந்தேன்!" "மழலையின் குறும்பு கண்டு துன்பங்கள் ஓடி மறைந்தன மழலையின் புன்னகை பார்த்து இதயமே வானில் பறந்தன!" "குழலூதும் குழவியை பார்த்து குறும்பு கண்ணனை மறந்தேன் குழந்தை காட்டும் நளினத்தில் குமரி ஊர்வசியை மறந்தேன்!" "கு…
-
-
- 2 replies
- 450 views
-
-
"மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி........" "மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி தொட்டு உறவாட கேட்டு நிக்கிறேன்டி" "மொட்டு மலருதையா மெட்டு போடுதையா பொட்டு வைக்கத் தட்டு தேடுதையா" "நாட்டுப் பாடலில் நயமாகப் பாடுகிறேன்டி காட்டு வழியிலே விறகு பொறுக்கப்போறவளே" "வாட்டும் வெயில் உனக்குப் புரியாதாடா கட்டு விறகை வந்து சுமக்கமாட்டாயோ" "வெட்டிப் பேச்சில் வெகுளி காட்டுறாயடி குட்டைப் பாவாடையில் என்னை ஆட்டுபவளே" "கேட்காத இனிமை காதில் தருபவனே வாட்டாத நிலவு நானென்று தெரியாதோ" "ஒட்டி உடையில் பெண்மை சொல்லுபவளே கட்டி அணைக்க நெஞ்சம் துடிக்குதடி" "நாட்டி வளர்த்த காதல் எல்லாம் கூட்டிக் குழைத்து உனக்குத் தரவாடா" "…
-
-
- 4 replies
- 420 views
-
-
"மாற்ற மொன்றே மாறாதது" "மலைகள் உயரும் சிகரம் கவிழும் விதைகள் முளைக்கும் பூக்கள் வாடும் இன்று இருந்தவன் நாளை இல்லை காலம் காட்டும் உண்மை இதுவே!" "மழை பெய்யுது மண்ணை அரிக்குது பனி பொழியுது உயிர்களை முடக்குது வெயில் அடிக்குது நிலத்தை உலர்த்துது பருவம் செதுக்கும் செயல் இவையே!" "ஆறுகள் பாயும் ஓட்டம் வேறுவேறே சிற்றலை மோதும் வடிவம் பலபலவே காற்று வானம் எல்லாம் மாறுமே மாற்ற மொன்றே மாறாதது என்றுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 392 views
-
-
"மாற்றம் ஒன்றே மாறாதது" "காதல் ஏற்றிய விழியும் குருடாகும் காமம் வீசிய எழிலும் முதுமையாகும் காவலர்கள் கூட அநீதி இழைப்பர் காரணம் எதுவாகினும் மாற்றம் மாறாதது!" "உற்சாகம் தரும் அமுதமும் விடமாகும் அற்புதம் நிகழ்த்திய உடலும் கருகும் குற்றம் புரிந்தவனும் நீதிபதி ஆவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்றும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [விடம் - நஞ்சு]
-
- 0 replies
- 489 views
-
-
"மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்" "வாலிப வயதில் தவற விட்டதை வானம் பார்த்து ஏங்கி துடித்ததை வாலைக் குமாரியை தொழுது கேட்கிறேன் வாட்டம் தராமல் வாலியம் அருள்வாயா வாழா என் வாழ்வை வாழவே!" "வண்டுக் கண்கள் விரிந்து பார்த்து கண்டும் காணாத அழகை ரசித்து குண்டுக் கன்னத்தில் முத்தம் கொடுக்க மண்ணின் வாழ்வு முழுமை பெற மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [‘வாலைக் குமரி’ : இது, பொதுவாக, கடவுளைப் பெண்ணாக வணங்கிப் போற்றும் கவிஞர்கள் கையாளும் சொற்றொடர்!]
-
- 0 replies
- 413 views
-
-
"முகநூல்" "முகநூல் படும்பாடு தலையை சுற்றுது முகர்ந்து பார்க்கினம் காமம் தேடி முகத்தை ரசிக்கினம் காதல் நாடி முழுதாய் அலசினம் நட்பு வேண்டி" "முத்து முத்தான அறிவும் அங்குண்டு முழக்கம் இடும் கவிதைகளும் உண்டு முடங்க வைக்கும் போலிகளும் அங்குண்டு முடிந்தவரை ஏமாற்றிக் கறப்பவரும் உண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 306 views
-
-
"முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும் "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இருவரையும் மதித்து வாய்மை என்னும் பண்பு கொண்டு ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால் செய்த நன்மை தலை காக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 505 views
-
-
"முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!" "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!" "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!" "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!…
-
- 0 replies
- 286 views
-
-
"முப்பெருந் தேவியர்" "மூன்று வடிவில் முப்பெருந் தேவியர் நன்று சிந்தித்தால் மூவரும் ஒருவரே! ஊன்றிக் கவனித்தால் விளக்கம் புரியும் தோன்றிய மூவரின் வரலாறும் தெரியுமே!" "கல்வி இருந்தால் நாகரிகம் வளரும் கருத்துக்கள் தெளிந்தால் தீர்மானம் சரியாகும்! செல்வம் இன்றேல் வறுமை சூழும் இல்லற வாழ்வும் முறிந்து போகும்!" "வீரம் இல்லா சமூகம் அழியும் கரங்கள் இணைந்தால் வாழ்வு இனிக்கும்! அறம் காக்க மூன்றும் வேண்டும் பரம்பொருளாய் உருப் பெற்றதும் இதற்கே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 528 views
-
-
"முற்றத்து மல்லிகையில் மூழ்கும் நினைவு" "முற்றத்து மல்லிகையில் மூழ்கும் நினைவு முட்டி மோதுது கொண்டையில் சூட்டியவனை! முல்லைக் கொடியாக கைகளில் ஏந்தினான் முத்துச்சரமாக நானும் புன்னகை சிந்தினேன்! "பட்டத்து ராணி நீயே என்றான் பகல் இரவாக காதல் தூவினான்! பகட்டு வார்த்தையில் என்னைக் கொடுத்து பருந்து வாயில் இரையாய் போனேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 219 views
-
-
"மூன்று அந்தாதிக் கவிதைகள்" "விமானம்" "விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின பேசிய திசையில் பறந்தது விமானம்!" .............................................. "அறுவடை" "அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக பணம் சேர்ந்து திருமணம் கைகூட கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!" .............................................. "அன்பு" "அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் ஒன்று கூடி இன்பம் பொழிய பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே! நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி ஏந்திய காதலை அவளில் கொட்டி கொட்டிய ஆச…
-
- 0 replies
- 174 views
-
-
"மூன்று அந்தாதிக் கவிதைகள்" "விமானம்" "விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின பேசிய திசையில் பறந்தது விமானம்!" .............................................. "அறுவடை" "அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக பணம் சேர்ந்து திருமணம் கைகூட கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!" .............................................. "அன்பு" "அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் ஒன்று கூடி இன்பம் பொழிய பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே! நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி ஏந்திய காதலை அவளில் கொட்டி கொட்டிய…
-
- 0 replies
- 349 views
-
-
"மூன்று கவிதைகள் / 02" 'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்' என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன் அன்னநடையில் நீவந்தால் விழிகளெல்லாம் மலைப்பதேன் அன்னைமடியில் நானிருந்த நினைப்பெல்லாம் மலருவதேன் கன்னக்குழியில் இதழ்பதிக்க கனவுகண்டு துடிப்பதேன்? வண்ணக்கோலத்தில் கையசைத்து அருகில் வந்ததேன் கண்களால் அறிகுறிகாட்டி அழகைத் தெளித்ததேன் கண்ணன் இவனேயென கட்டியணைத்து முத்தமிட்டதேன் எண்ணமெல்லாம் உன்னைமட்டுமே சுற்றிச் சுழருவதேன்? பெண்மைதரும் வெட்கம்கலைத்து நிலாவொளியில் அழைப்பதேன் கிண்ணத்தில்மது காத்திருந்தும் உன்னைத்தேடி நான்வருவதேன்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 'என்னிதய ஏட்டினில…
-
- 1 reply
- 290 views
-
-
"மூன்று கவிதைகள் / 04" 'யாரடி வந்தார் என்னடி சொன்னார் ?' யாரடி வந்தார் என்னடி சொன்னார் அரசடி நிழலில் பேசியது என்னவோ? பாரடி என்னை தனிமரமாய் தவிக்கிறேனே கூறடி பதிலை கூச்சத்தைவிட்டு எனக்கு? ஆறடி நிலமே சொந்தமாகும் உலகிலே ஏனடி உனக்கு இத்தனை ஆசைகள்? தேரடி வீதியில் யாருக்கு காத்திருக்கிறாய் சேரடி சொத்தை காதலை விற்றா? பூங்கொடி என்று பெயர்வைத்தது எனோ அங்காடி நாய்போல் அலைவது எனோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................ 'விதியின் விளையாட்டு' விதியின் விளையாட்டு உறவைப் பிரிக்குது மதியை இழந்து ஏதேதோ பேசுது ! நதியின் ஓட்டத்தில் அகப்பட்ட துரும்பாய் மோதிமோதி நானும் களைத்து விட்டேன் ! ஊடல் இதுவென முதல…
-
- 2 replies
- 218 views
-
-
"மூன்று கவிதைகள் / 05" 'அக்கினியானவளே' செம்மணியில் உன்னைச் சிதைத்தவர்கள் யாரோ செல்லம் கொட்டிய என் தங்கையே! செவ்வாய் திறந்து சொல்ல மாட்டியோ செந்நெல் வயலில் புதைத்தவர் எவரோ செங்கோல் மடிந்த நாள் இதுவோ? அகன்ற மண் எல்லாம் எலும்புக்கூடுகள் அண்ணன் அங்கே காத்துக் கிடக்கிறானே! அன்பு போதித்த புத்தரும் மௌனம் அறிவு தொலைத்த படையினர் பிடியில் அழிந்ததோ கற்பு என் அக்கினியானவளே? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ......................................................... 'சீவி முடித்து சிங்காரித்து' சீவி முடித்து சிங்காரித்து கண்ணே, சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு, சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ! சித்திரம் சொல்லாத வனிதை நீயே, சீதை காணாத காதல் தருவேன்! கூவி அழைக்குது சிட்…
-
- 0 replies
- 189 views
-
-
"மூன்று கவிதைகள் / 06" 'இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே' இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே நன்று உணர்ந்து காதல் தேடாயோ ? அன்று படித்த சங்கஇலக்கிய கவிதையே நின்று எனக்கு அறிவுரை தாராயோ ? கூடல் இல்லாத வாழ்வு தொலையட்டுமே ஆடல் பாடல் இணைந்து மலரட்டுமே! அன்பு கொண்ட மங்கை கண்டு துன்பம் போக்கும் அணைப்பு அடையாயோ ? இன்பம் கொட்டும் அழகு வியந்து உன்னுடன் அவளை இரண்டறக் கலக்காயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. வெள்ளிப்பூக்கள்' வெள்ளிப்பூக்கள் அந்தி வானில் ஒளிர கள்ளம் இல்லாக் காதலர் தழுவ கொள்ளை இன்பம் ஆறாய் பாய்ந்ததே! அல்லிப்பூ நிலா ஒளியில் மலர ஒல்லி இடையாள் அருகில் நெ…
-
- 0 replies
- 150 views
-
-
"மூன்று கவிதைகள் / 07" 'வண்டியில மாமன் பொண்ணு' வண்டியில மாமன் பொண்ணு வாரார் கெறங்குறேன்டி ஒன்னழகில் நான் இன்று? பட்டுச்சரிகை என் கண்ணைக் குத்துது பருவ எழில் உடலை வாட்டுது பக்கத்தில் வந்தால் குறைந்தா போகும் ? கவலகொண்ட நெஞ்சம் கொஞ்சம் இங்கே கண்மணியே எந்தனுக்கு ஆறுதல் தாராயோ? கால்கள் என்ன இளவாழைத் தண்டுகளா? காத்திருக்க முடியலையே இறங்கி வாராயோ? காலம் போகிறதே கழுத்திலே தாலியேறாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................. 'விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்' விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும் களங்கமற்ற காதல் தடையின்றி மலரட்டும் இளநெஞ்சம் இரண்டும் மெதுவாகச் சேரட்டும் வளர்பிறையாக…
-
- 1 reply
- 234 views
-
-
"மூன்று கவிதைகள் / 08" 'உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்?' உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன் மன்னவனின் மடியிலே மயக்கம் வருவதேன் அன்ன நடையாளின் உடலெல்லாம் பூரிப்பதேன் மென்மையான தழுவல் இன்பம் பொழிய உன்னதமான காதல் வேறெங்கே காண்பேன்? பெண்ணொருத்தி சாய்ந்து படுத்த கோலம் கண்ணிரண்டும் பார்த்து மகிழ்ந்த நேரம் மண்ணில் பிறந்ததின் பயனைக் கண்டேன் விண்ணில் பறந்த உணர்வு கொண்டேன் எண்ணங்கள் எல்லாம் அவள் மட்டுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. 'மனதைத் தொடும் நினைவுகள்' மஞ்சள் வெயில் பூத்த வானமும் பனை மரங்களின் இனிய தாலாட்டும் பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்…
-
- 0 replies
- 186 views
-
-
"மூன்று கவிதைகள் / 09" முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ அன்பு காட்டாயோ !! ........................................... தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள் அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை உண்டாக்குவது எப்படி என்று? என் கல்லறைக்கு வரும் போதாவது அவளை பார்த்து யாராவது கேளுங்கள் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று? ......................................................... மஞ்சள் வெயில் பூத்த வானமு…
-
- 0 replies
- 141 views
-
-
"மூன்று கவிதைகள் / 10" பண்பாடு வரலாறு காட்டும் உடை பலராலும் உடுத்த வெள்ளை வேட்டி! காலம் மாற கோலம் மாறினாலும் திருவிழாக் காலத்தில் தோன்றும் வேட்டி! படித்தவரும் கட்டினர் பாமரரும் கட்டினர் உடுத்த வேட்டியில் மகிழ்ச்சி கொண்டனர்! மடித்தகரை சால்வையை தோளில் போட்டு எழுந்து நடந்தனர் மனதில் கம்பீரம்பொங்க! ........................................... நீல வானத்தில் நிலவு ஒளிர நீண்ட கடலில் அலைகள் தோன்ற வெள்ளை மணலில் நண்டு ஓட துள்ளிக் குதிக்குது டால்பின் கூட்டம்! காற்று வெளியில் பட்டம் பறக்க காந்த மொழியில் மங்கை பாட சலங்கை ஒலிக்க பெதும்பை ஆட சங்கு பொருக்கி பேதை மகிழ்ந்தாள்! ......................................................... யாழ் நூலகத்தின் படிகளின் …
-
- 0 replies
- 151 views
-
-
"மூன்று கவிதைகள் / 11" தீரா அலைகளின் ஓயா ஓசையினால் தீண்டித் தீண்டிச் செல்லும் அலைகளால் குளிர்ந்து நடுங்கி சிலிர்த்து நடக்கிறான் வெள்ளை மணலில் கோட்டை கட்டுகிறான்! நிமிர்ந்து எழும் கடலலை அருகே பிரிய மனமின்றி கடலில் நீந்துகிறாள் சிப்பிகள் சோகிகள் தேடி எடுத்து மாலை ஒன்று செய்து மகிழ்கிறாள்! ........................................... அலை சறுக்கு ஆனந்தம் ஆனந்தமே கடலில் பறக்கும் பறவை அதுவோ மேகத்தின் மேல் மிதப்பது போல பூரிப்பு ஒன்று ஆட்கொள்கிறது தாயே! இன்ப ஊற்று உள்ளத்தில் பாய சக்தி பாய்ந்து ஆன்மாவை நனைக்க உப்புச் சுவை நாவில் கரைய ஆழி சொர்க்கம் இன்பம் இன்பமே! ......................................................... மரக் கம்பம் விடிவெள்ளி நமக்கு விரி …
-
- 0 replies
- 123 views
-
-
"மூன்று கவிதைகள் / 12" விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம் விலங்குகளை ஒவ்வொன்றாக அடக்கி அடக்கி குப்பை மனிதர்கள் செழிக்க விட்டோம்! ஆசையில் மூழ்கி அசிங்கத்தைப் பூசி புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக பாதை தவறி அழுக்கைச் சுமந்து மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே! ........................................................ பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே உன் அறிவும் உனக்குப் பெரிதோ? சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும் உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ? பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன் உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ? வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம் தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ? பாசத்தின் அருமை உனக்குத் …
-
- 0 replies
- 176 views
-