Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மிஸ்டர் கழுகு: மதுசூதன மல்லுக்கட்டு! - தர்மயுத்தம் சீஸன்-3 ‘‘அ.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல் தொடங்கிவிட்டது’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘நீர் தீர்க்கதரிசி. ‘இரட்டை இலையை வாங்கியபிறகு இவர்களுக்குள் மோதல் நடக்கும்’ என்று முதலிலேயே சொல்லியிருந்தீரே’’ என்றோம். ‘‘ஆமாம்’’ என்றபடி கழுகார் ஆரம்பித்தார். ‘‘எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இருவரும் ஒட்டவில்லை. இதைத்தான், ‘அணிகள் இணைந்தன, மனங்கள் இணையவில்லை’ என்று பன்னீரின் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி போட்டு உடைத்தார். பன்னீர் சொல்லித்தான் மைத்ரேயன் இப்படி எழுதினார் என்று எடப்பாடி சந்தேகப்பட்டார். மதுரை விழாவில் பன்னீர் புறக்கணி…

  2. வெடிக்கக் காத்திருக்கிறதா அதிமுக? அ திமுகவின் தேர்தல் சின்னமான ‘இரட்டை இலை’ பழனிசாமி – பன்னீர்செல்வம் அணிக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, அதிமுக தரப்பில் பெரிய அளவில் கொண்டாட்டங்களைப் பார்க்க முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது அதிமுக தரப்பினருக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால், அதிமுகவின் மகிழ்ச்சி முகத்துக்குப் பின்னே கடும் குழப்பமும் அதிருப்தியும் நிலவுவதுதான் கவனிக்கத்தக்க விஷயம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதிலும், ஆட்சிமன்றக் குழுவில் இடம்பிடிப்…

  3. காவல்நிலையத்தைக் கண்டு அஞ்சும் போலீஸ்காரர்கள்! | Police men does rituals to enter police station M.Ganesh தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தென்கரை. இப்பகுதிக்கு எனப் புதிதாக காவல்நிலையம் ஒன்று சமீபத்தில் கட்டப்பட்டு அதில் குடியேறினார்கள் காவலர்கள். ஆனால், பெரும்பாலும் யாருமே ஸ்டேஷனுக்குச் செல்வதில்லை. என்ன காரணம் எனத் தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். "என்ன ஆச்சு... ஏது ஆச்சுனு தெரியல... அந்த போலீஸ் ஸ்டேஷன் எப்போ திறக்கப்பட்டதோ அது முதல் தொடர்ந்து எங்கள் தரப்பில் இழப்பைச் சந்தித்தோம். பல்வேறு காரணங்களில் எங்கள் உடன் பணியாற்றிய மூவரை நாங்கள் இழந்தோம். இது எல்லாமும் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற பிறகுதான…

  4. எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தினகரன் ஆதரவு எம்.பி-க்கள்! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்.பி-க்கள் மூன்று பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் அணிக்குத் தாவலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம், 5-ம் தேதி ஜெயலலிதாவின் முதல் நினைவு நாள் வருகிறது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில் அமைதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்படலாம் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து சென்னை, பசுமைவழிச் சாலையில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்…

  5. ஆர்.கே.நகரில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்! சிங்கப்பூர் புறப்படும் முன் விஜயகாந்த் பேட்டி Chennai: மருத்துவ சிகிச்சைக்காக தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், பேசுவதில் விஜயகாந்த்துக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்திடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடுமா என்று…

  6. சசிகலாவிடம் விசாரணை எப்போது சிறை கண்காணிப்பாளர் தகவல் பெங்களூரு:சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்தும் வழிமுறைகளை, பெங்களூரு மத்திய சிறை தலைமை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தின், 187 இடங்களில், சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், கல்வி நிறுவனங் கள், தொழிற்சாலைகளில், வருமான வரி துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் சிக்கிய ஆவணங்கள் மூலம், 1,140 கோடி ரூபாய் மதிப்பில், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலம்…

  7. ”தேசிய அரசியலுக்கும் வருவேன்”: கமலஹாசன் சூட்சுமப் பேச்சு திரைப்படம் தயாரிப்பதைப் போன்றதல்ல அரசியல் என்பதால், அரசியலில் தோல்வி ஏற்படும் என்பது குறித்து அஞ்சப் போவதில்லை என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஊடக நிகழ்வு ஒன்றில் நேற்று (25) கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “தமிழகத்தின் நன்மை கருதியே நான் அரசியலில் இறங்குகிறேன். இது திரைப்படம் தயாரிப்பதைப் போன்றதன்று. அதுபோலவே, இது பணம் சம்பாதிக்கும் ஒரு வழிமுறையும் அல்ல. என்னைக் கருவியாகக் கொண்டு எம் மக்களின் நிலையை உயர்த்தும் ஒரு முயற்சியே. எனவே, எனது அரசியல் வாழ்க்கையில் தோல்வி ஏற்படும் என்ற அச்சம் எனக்கு இல்லை. “எனது சமூகச் சிந்தனைகளே எனது நடிப்பின்…

  8. தர்மயுத்தம் பார்ட் டூ-வுக்கு தயாராகும் ஓ.பி.எஸ் அணி! - பதற்றத்தின் உச்சத்தில் ஈ.பி.எஸ் அணி ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, தீபா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடி நடத்திய தர்ம யுத்தத்தில் (!) ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணி வெற்றி பெற்று இரட்டை இலைச் சின்னத்தையும் கட்சியையும் கைப்பற்றிவிட்டது. எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைந்திருந்தாலும், எடப்பாடி அணியால் பன்னீர்செல்வம் ஓரம்கட்டப்படுவதாகப் பேச்சு அடிபட்டது. இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. இதனிடையே கடந்த அக்டோபர் 12-ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரை சந்த…

  9. மிஸ்டர் கழுகு: இரட்டை இலை தர இரண்டு நிபந்தனைகள்! ‘‘முதல் நாள் இரட்டை இலை தீர்ப்பு... அடுத்த நாள் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பு’’ என ரைமிங்கோடு வந்தமர்ந்தார் கழுகார். ‘‘இரட்டை இலைக்கு உயிர் கொடுக்கும் எண்ணமே இல்லாமல்தான் பி.ஜே.பி ஆரம்பத்தில் இருந்தது. ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் கவர்னரிடம் மனு கொடுத்த பிறகுதான் இரட்டை இலை யாருக்கு என்கிற வழக்கு தேர்தல் கமிஷனில் வேகம் பிடித்தது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு காட்டிய சூழலில், இரட்டை இலை இறுதித்தீர்ப்பு வெளியானது. ஆர்.கே.நகர் தேர்தலை ஒரு பரிசோதனைக் களமாகப் பார்க்கிறது பி.ஜே.பி.…

  10. முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே காலியான விழா அரங்கு! - நூற்றாண்டு விழா பரிதாபங்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கிய கொண்டாட்டம் இதுவரை 25 மாவட்டங்களில் நடந்து முடிந்து 26 வது மாவட்டமாக ராமநாதபுரம் பட்டினம் காத்தான் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மேடையில் நடைபெற்று வருகிறது. 10,000 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான பந்தலில் இரவைப் பகலாக்கும் மின்னொளியில் மாலை 3.30 மணிக்கு விழா ஆரம்பமானது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து 161,20,13,…

  11. ஜெ., கைரேகை பதிவு கேட்டு சிறை அதிகாரிக்கு உத்தரவு சென்னை: மறைந்த முதல்வர், ஜெயலலிதா வின் கைரேகை பதிவு இருந்தால், தாக்கல் செய்யும்படி, பெங்களூரு சிறை அதிகாரி மற்றும், 'ஆதார்' அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர், போஸ் வெற்றி பெற்றார்.அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வேட்பாளர், டாக்டர் சரவணன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில், வேட்பாளர் நியமனம் மற்றும் சின்னம் ஒதுக்கீடுக்கான படிவத்தில் இருந்த, ஜெயலலிதாவின் கைரேகை குறித்து, சந்தேக…

  12. அ.தி.மு.க.,வை அபகரிக்க நினைத்த, தினகரனின் கூடாரம் காலியாகிறது. ஆட்சி, அதிகாரம், கட்சி, சின்னம் என, எல்லாமே பறிபோனதால், ஆளும் தரப்பிடம் சரணடைய, அவரின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நம்பி வந்து, பதவி இழந்த, 18 எம்.எல்.ஏ.,க்களும், தங்களை நட்டாற்றில் விட்ட, சசிகலா கும்பல் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதனால், ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க, முடிவு செய்துள்ளனர். ஜெ., மறைந்த பின், அ.தி.மு.க.,வையும், ஆட்சி யையும் கைப்பற்ற, சசிகலா குடும்பத்தினர் முயற்சித்தனர். ஆனால், அவர்களால் முதல்வ ராக்கப்பட்ட பழனிசாமியும், அவர்களால் முதல்வர் பதவியை இழந்த பன்னீர் செல்வமும் கைகோர்த்து, சசி குடும்பத்தை அடியோடு ஓரங்கட்டினர். பன்னீரும், பழனிசாமியும் இணைய மாட்டார் கள…

  13. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும்' எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், டிசம்பர் இறுதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்த…

  14. ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகரும் தமிழகம்! தமிழகம், ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருவதாகவே தெரிகிறது நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால். தமிழக அரசு நிர்வாகத்தின் தலைமையிடமான, சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆளுநருக்கு என்று ஒரு தனி அறை இருக்கிறது. இந்த அறையானது முதலமைச்சரின் அறைக்கு பக்கத்திலேயே இருக்கிறது. இது வெளியுலகில் உள்ள பலருக்கும், ஏன் அரசியல் வாதிகளிலேயே பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இதற்கு முக்கிய காரணம் அந்த அறைக்கு தமிழகத்தின் ஆளுநர்களாக இருப்பவர்கள் வருவது என்பது அரிதினும் அரிதானதாகவே இருந்திருக்கிறது. இந்த கட்டுரையாளரின் நினைவுகள் சரியாக இருக்குமானால், கடைசியாக அந்த ஆளுநர் அறைக்கு வந்தவர் ஆளுநர் …

  15. ஜெயலலிதா மரணம்: வரும் 25-ம் தேதி தொடங்குகிறது விசாரணை! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், வரும் 25-ம் தேதி விசாரணையைத் தொடங்க உள்ளது. ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் , கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைபெற்றுவந்த அவர், டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விச…

  16. தேர்தல் ஆணையம், எங்களுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியுள்ளது! - முதல்வர் பளீச் Chennai: பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், 'இரட்டை இலை' சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பையே அளித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு அடிப்படையில…

  17. நித்யானந்தா - ரஞ்சிதா வீடியோ உண்மையே: டெல்லி தடயவியல் ஆய்வு மையம் தகவல் நித்யானந்தா | கோப்புப் படம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போல வெளியான வீடியோ உண்மைதான் என டெல்லி தடயவியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தியான பீடம் ஆசிரமத்தின் சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ ஊடகங்களில் வெளியானது. நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன் வெளியிட்ட இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பிடதி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ந…

  18. அரசியலுக்கு வருவதற்கான அவசரம் தற்போது இல்லை: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி சென்னை: அரசியலில் நுழைவதற்கு தற்போது எந்த அவசரமும் இல்லை என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் உரையாற்றும் போது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. நான் அரசியலுக்கு வருவது "கடவுள் விருப்பம்" என்றால் அரசியலின் பாதையை அவர் தேர்ந்தெடுப்பார் என்றார். "ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் முடிவு செய்கிறார். இப்போது, அவர் என்னை ஒரு நடிகர் ஆக வ…

  19. சசிகலா குடும்பத்தினர் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை! சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் அடுத்த கட்ட நகர்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வருமான வரி புலனாய்வு துறையின் வேலை ரெய்டு நடத்துவது மட்டும் அல்ல. ரெய்டுக்கு உள்ளானவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதும் அவர்களின் முக்கியமான பணி. நம்பிக்கை என்றால் பூங்குன்றன் 'ஆபரேஷன் க்ளீன் மணி' என்ற பெயரில் தமிழகத்தில் வருமானவரித்துறை நடத்திய மெகா ரெய்டு அடுத்த கட்டத் திருப்பத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. சசிகலாவால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீட்டில் ரெய்டு நடத்தியதையும், அவரிடம் விசாரணை நடத்தியதையும்தான் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவ…

  20. விவேக் குவித்த சொத்துகள்; மலைத்து போன வருமான வரித்துறை..! சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் குவித்துள்ள சொத்துகள்; கறுப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டது போன்றவை குறித்து சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திகைத்துப்போனதாகக் கூறப்படுகிறது. விவேக்கின் அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமாஸ் வளாகத்தில் அதிகாரிகள் நடத்திவரும் சோதனையின்போது, தோண்டத்தோண்ட சொத்துகள் வாங்கிக் குவித்துள்ள விவரங்கள்; பினாமிகளின் பட்டியல் கிடைத்துள்ளன. அதை வைத்துக்கொண்டு விவேக்கிடம் கடந்த இரண்டு நாள்களாக துருவித்துருவி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்…

  21. மிஸ்டர் கழுகு: சசிகலாவைச் சிக்க வைக்கும் ஜெ. பென் டிரைவ்! கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘போயஸ் கார்டன் வீட்டில் வருமானவரித் துறை நடத்திய ரெய்டின் அடுத்தகட்டம் என்ன?’’ என்ற கேள்வியை அவர் முன் வைத்து, அவரது செய்திக் குவியலை உதிர்க்கச் சொன்னோம். ‘‘போயஸ் கார்டன் வீட்டுக்குள் ரெய்டு போவார்கள் என்று சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்ல, எடப்பாடி தரப்பும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு தரப்புக்குமே அதிர்ச்சியான விஷயம்தான் அது. அன்று இரவு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை, ‘உங்கள் இடத்துக்குப் போகலாம், வாருங்கள்’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அழைத்திருக்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள். அவரும் கிளம்பிச் சென்றுள்ளார். ஒரு டெம்போ டிராவலர், ஐந்து க…

  22. தமிழ்நாட்டில், கூடுதலாக 70 மணல் குவாரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு. தமிழகத்தில் கூடுதலாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மணல் தட்டுப்பாட்டை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மணல்களின் அளவும் குறைந்து இருக்கிறது.இதனால் இங்கு நிலவும் மணல் தட்டுப்பாடு குறித்து ஆலோசணை செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 8 மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள், 5 மாவ…

  23. 'சசி கும்பலின் தில்லாலங்கடி வேலைகளை, 'ஸ்லீப்பர் செல்'கள், 'போட்டு'க் கொடுத்ததால் தான், ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது' என்ற, பகீர் தகவலை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோடிக்கணக்கில் குவித்த சொத்துகளின், அசல் ஆவணங்கள் அங்கு இருந்ததால், சோதனை என்ற தகவல் பரவியதும், பின்னங்கால் பிடரியில் பட, இளவரசியின் மகன் விவேக், அங்கு ஓடி வந்துள்ளார். ஜெயலலிதாவின் அறை உட்பட, சில அறைகளில் சோதனை நடத்தக் கூடாது என, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வருமான வரித்துறையினர் அடுத்து எங்கு, சோதனை நடத்தப் போகின்றனரோ என்ற கலக்கத்தில், சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் உள்ளன. சசிகலா கும்பலைச் சேர்ந்தவர்கள…

  24. ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே கருத்து வேறுபாடு! உறுதிப்படுத்தும் மைத்ரேயன் அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை என்கிறரீதியில் அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், அ.தி.மு.க அணிகளாகச் சிதறியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை, சசிகலா குடும்பத்தை ஒதுக்குவது என பன்னீர்செல்வத்தின் இரண்டு கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்ற, ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட்டில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணிகள் இணைந்தன. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.