தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருடன் நாளை சந்திப்பு: பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்துகின்றனர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். - படம். | பிடிஐ. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை (ஆகஸ்ட் 31) சந்திக்க இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளனர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட…
-
- 1 reply
- 301 views
-
-
மிஸ்டர் கழுகு: அழைப்பு போகும்... ஆனா போகாது! கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘அ.தி.மு.க பொதுக்குழுவுக்கான வேலைகள் தொடங்கிவிட்டதா?” என்ற கேள்வியைப் போட்டோம். ‘‘அ.தி.மு.க பொதுக்குழு செப்டம்பர் 12-ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த மண்டபத்தில்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி, அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடி, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இப்போது அதே மண்டபத்தில் பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவைக் கட்சியை விட்டே நீக்க இருக்கிறார்கள். பொதுக்குழுவில் சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ள…
-
- 0 replies
- 2.3k views
-
-
குழப்பம்! தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள் இரட்டை இலையை மீட்க யோசனை கேட்பதில் தடுமாற்றம் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே அளித்த பிரமாண வாக்குமூலங்களை திரும்பப் பெறு வதா, வேண்டாமாஎன்பது குறித்து, டில்லியில் யாரிடம் யோசனை கேட்பது என்ற குழப்பத் தில், தமிழக அமைச்சர்கள் சிக்கியுள்ளனர். கட்சிக்குள் ஏற்பட்டுள்ளஉச்சகட்ட குழப்பத்தை அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்பதில், அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்ட துவங்கியுள்ளனர். தமிழகத் தில், அ.தி.மு.க., வில், தினமும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தேர்தல் ஆணை யத்தை பொ…
-
- 0 replies
- 735 views
-
-
ஸ்லீப்பர் செல்லில் அமைச்சர் நடராஜன்? : சசிகலா புகழ்பாடும் மொபைல் பேச்சு அம்பலம் திருச்சி: 'சசிகலாவை எல்லாம் பதவியை விட்டு எடுக்க மாட்டோம்' என, அமைச்சர் நடராஜன் மொபைல் போனில் பேசியது, 'லீக்' ஆகியுள்ளதால், அவர், தினகரனின், 'ஸ்லீப்பர் செல்'களில் ஒருவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர், சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன். சமீபத்தில், தினகரனை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, இவரது மாவட்ட செயலர் பதவியை பறிப்பதாக, தினகரன் அறிவித்தார். இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக மொபைல் போனில், தினகரன் ஆதரவாளருடன் நடராஜன் பேசியது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் விபரம…
-
- 0 replies
- 440 views
-
-
தினகரன் அணியை சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது, கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ள நிலையில், அவர்களில், 11 பேர், முதல்வர் பழனிசாமி விரித்த வலையில் விழுந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அந்த, 11 பேரின் குடும்பத்தினருடன், மூத்த அமைச்சர் ஒருவர் நேரில் நடத்திய ரகசிய பேச்சில், இந்த உடன்பாடு உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மீது மட்டும், கட்சித் தாவல் தடை சட்ட நடவடிக்கை கைவிடப்படலாம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், கவர்னரிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், 19 பேர் க…
-
- 0 replies
- 996 views
-
-
49 'ஸ்லீப்பர் செல்' எம்.எல்.ஏ.க்கள்! அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடக்கும்? #HallOfShameADMK அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்த, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 49 எம்.எல்.ஏ.க்கள் கணக்கில் வரவில்லை என்கிறார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வெற்றிவேல் சொல்வது போல், அவர்கள் 'ஸ்லீப்பர்செல்' எம்.எல்.ஏ.க்களா என்ற பரபரப்பு எதிரணி முகாமில் பற்றிக் கொண்டிருக்கிறது. அது பொதுக்குழுவில் வலுவாக எதிரொலிக்கலாம் என்கிறார்கள்தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில், அ. தி.மு.க. 135, தி.மு.க. 89, காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக், 1 மற்றும் காலி இடம் 1 (ஜெ.ஜெயலலிதா இறப்பு காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி)…
-
- 0 replies
- 522 views
-
-
‘இந்த மிரட்டல் வேலைகள் என்னிடம் நடக்காது!’ - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறிய விவேக் #VikatanExclusive முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களும் சசிகலா குடும்பத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. ‘ஜெயா டிவியைக் கைப்பற்றும் முயற்சி ஒருக்காலும் நடக்காது. என்னை மிரட்டிப் பணிய வைக்க ரெய்டு பயத்தைக் காட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் குடும்ப உறவுகளிடம் கொதித்திருக்கிறார் ஜெயா டி.வி நிர்வாகி விவேக் ஜெயராமன். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம…
-
- 0 replies
- 329 views
-
-
வித்யாசாகர் ராவ்: உண்மையில் ஒரு 'கவர்னர்' தானா ? | Socio Talk | Governor Vidhyasagar Rao
-
- 0 replies
- 238 views
-
-
ஜெயா டி.வி யாருக்குச் சொந்தம்? வைரலாகும் ஜெயலலிதா வீடியோ! ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நடந்த போட்டி தற்போது ஜெயா டி.வி-யைக் கைப்பற்றுவதில் வந்து நிற்கிறது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை தன்னுடன் இணைத்து அவரைத் துணை முதல்வராக்கி, சசிகலா குடும்பத்துக்குச் சவால் விட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக, நேற்று அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்களில்,' ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் கழகத்தின் சொத்துகள். அவற்றை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தினகரன் நியமனங்கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தாண்டி பரபரப்பை ஏற்…
-
- 0 replies
- 637 views
-
-
அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி.,க்கள் கூட்டம் தொடங்கியது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் |படம்: க.ஸ்ரீபரத் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் |படம்: க.ஸ்ரீபரத் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்துள்ள சூழ்நிலையில் தினகரன் தரப்பினர் தணி அணியாக செயல்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூடிவரும் நிலையில் இருத…
-
- 5 replies
- 1.9k views
-
-
செங்கொடி- மூன்று சேய்களைக் காத்த அன்னை- கவிஞர் வாலியின் தீர்க்கதரிசனம்! பெற்ற மகனின் உயிர்காக்க ஒரு தாய் போராடுவதில் எந்த ஆச்சர்யமில்லைதான். ஆனால் யாரென்றே தெரியாத ஒரு இருபது வயதுப் பெண், மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தன் உயிரை தீக்கு திண்ணக் கொடுத்த அதிசயம் இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்ந்தது. அவள்தான் காஞ்சிபுரம் செங்கொடி. இருபத்து ஏழு வயது நிரம்பிய தமிழ் உணர்வாளர். கூடப் பிறந்தால்தான் தொப்புள் கொடி உறவா... இல்லையில்லை... தமிழர் என்ற அடையாளத்துக்குள் வரும் அத்தனை பேரையும் தன் தொப்புள் கொடி உறவாக மதித்த இளம் பெண். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உயிரைக் காக்க தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில…
-
- 1 reply
- 803 views
-
-
ரெய்டுகளின் ரிசல்ட் என்ன? - அன்புநாதன் முதல் விஜயபாஸ்கர் வரை... ஒரு கட்சி பல அணிகளாக உடைவதையும், அந்த அணிகள் மீண்டும் இணைவதையும்விட, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியவை வருமான வரித்துறையின் அதிரடி ரெய்டுகள்தான். கடந்த 16 மாதங்களில், 10-க்கும் மேற்பட்ட ரெய்டுகளைத் தமிழகத்தில் வருமான வரித்துறை நடத்தியுள்ளது. பல ரெய்டுகளின்போது, கட்டுகட்டாகப் பணம், தங்கக் கட்டிகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனாலும், சேகர் ரெட்டி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதைத் தவிர யார் மீதும் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படியென்றால், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அச்சுறுத்திப் பணிய வைப்பதற்கு மட்டுமே இந்த ரெய்டுகள…
-
- 0 replies
- 1k views
-
-
இன்று மாலை கூடுகிறது உரிமைக்குழு: தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் புறக்கணிப்பால் அதிமுக பலம் குறைந்தது தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்களை சட்டபேரவைக்குள் கொண்டு வந்தது குறித்து திமுக உறுப்பினர்கள் பற்றி விசாரிக்க உரிமைக்குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் உறுப்பினராக இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவர் கூட்டத்தைப் புறக்கணிப்பால் அதிமுக பலம் குறைந்தது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், அமைச்சர் மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். …
-
- 1 reply
- 667 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதிப்பதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி பேரறிவாளனின் தாயாரின் கோரிக்கையை ஏற்று இவரை ஒரு மாதம் பரோலில் செல்ல தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணை தற்போது வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு பரோல் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேரறிவாளனின் தாயார் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தன. அந்த வகையில்…
-
- 13 replies
- 1.2k views
-
-
முருகன் பாணியில் நளினி... சிறையில் தொடரும் உண்ணாவிரதம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்தியச் சிறையில் இருக்கும் நளினி இன்று காலை முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன், ஜீவசமாதிக்கு அனுமதி வேண்டும் என்று கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி, அவரது உண்ணாவிரத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நளினி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ''இன்று முதல் நளினி உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாக வந்துள்ள தகவல் உண்மைதான். முருகன், தன் உண்ணாவிரதத்தை கைவிடும் வரை நள…
-
- 0 replies
- 292 views
-
-
ராஜீவ் மரணம்: தொடரும் பரமபத விளையாட்டு! “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்பட்ட வெடிகுண்டு குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்... அதுபற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை முகமை (MDMA) இத்தனை ஆண்டுகளில் நடத்திய விசாரணைகள் என்ன? இதுபற்றி மத்திய அரசு முழுமையான அறிக்கை தரவேண்டும்’’ என இப்போது கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு குறித்த விசாரணை அறிக்கையை, கடந்த 23-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. ராஜீவ் மரணம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அந்த வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசியாக இருக்கும் பேரறிவாளன் தொடுத்த வழக்கில்தான் இப்படிப் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். உ…
-
- 1 reply
- 731 views
-
-
மீண்டும் ரிசார்ட்டுக்கு படையெடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்! புதுச்சேரி நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதே ரிசார்ட்டுக்கு கூடாரத்தை மாற்றியிருக்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் ”பீச் ரிசார்ட்டில்” தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி 100 அடி சாலைய…
-
- 0 replies
- 369 views
-
-
தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள நிலையில், தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. .தி.மு.க., தலைமையகத்தில், இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறிக்க, முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், தலைமை செயலகத்தில், சட்டசபை உரிமை குழு கூடி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது. இந்த இரு கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகள், தமிழக அரசியலில் புயலை கிளப்ப லாம் என்பதால், ஆளும் கட்சி தொண்டர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும், முடிவுகளை அறிய ஆர்வமாக உள்ளனர். தமிழகத்தில், தற்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
'ஸ்டாலின் - டி.டி.வி. தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி' - சுப்பிரமணியன் சுவாமி ஆருடம் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் இணைந்து இன்னும் சில நாள்களில் கூட்டணி ஆட்சியமைப்பார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரவித்துள்ளார். அ.தி.மு.க-வில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. பிரிந்திருந்த ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்தனர். இதையடுத்து, சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு நீக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். டி.டி.வி. தினரனுக்கு தற்போது 23 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. ஏற்கெனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது புதுச்சேரி ரிசார்ட்டில்…
-
- 0 replies
- 617 views
-
-
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி பறிப்பு சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக டி.டி.வி தினரன் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் உள்ளார். அவரை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே. செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் வெளியிடுகிறேன் என்று துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார். அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது என்று கூறிய தினகரன் ஏற்கனவே வைத்திலிங்கம், முக்கிய அ…
-
- 0 replies
- 428 views
-
-
தி.மு.க எம்.எல்.ஏ-க்களை நாளை சந்திக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்! தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நாளை சந்திக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக பிரிந்தது. இதனிடையே, முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் கடந்த திங்கள்கிழமை இணைந்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். ஏற்கெனவே முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வாபஸ் பெற்றுள்ளனர். மேலும், சட்…
-
- 1 reply
- 270 views
-
-
முதல்வருக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி: சட்டப்பேரவை முடக்கப்படுகிறதா? முதல்வர் பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி, ஆதரவு எம்எல்ஏக்களின் ஆட்சி கலைப்பு கோஷம் என தமிழக அரசில் சிக்கல்கள் உருவாகியுள்ளதால், சட்டப்பேரவையை முடக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிமுகவில் கடந்த பிப்ரவரி மாதம் பிளவு ஏற்பட்டது. பிரிந்திருந்த முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். அணிகள் இணைப்பு முடிந்ததும், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழு கூட…
-
- 0 replies
- 444 views
-
-
'கடவுளைத் தவிர யாரும் எங்களை மிரட்ட முடியாது!'- எச்சரித்த தினகரன் டி.டி.வி.தினகரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தற்போது அரங்கேறி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார். இந்நிலையில் இன்று அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், 'கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது' என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.…
-
- 1 reply
- 432 views
-
-
ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி....பேரறிவாளனைப் பரோலில் மீட்ட அற்புதம்மாளின் போராட்டப் பயணம்! நள்ளிரவு என்றாலும் பரபரப்பு குறையாத சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். நைந்துபோன சேலை, தோளில் ஒரு ஜோல்னா பை, கையில் கசங்கிப்போயிருந்த கைக்குட்டையோடு அந்தத் தாய், ரயில் நிலையத்தில் இருந்த ஒரு தூணில் சாய்ந்திருந்தார். பெண்களுக்கு மாதந்தோறும் இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றத்தை, சட்டென்று அத்தருணம் சந்திக்கிறார். உதிரம் போகிறது... உடல் தளர்கிறது. எங்கு திரும்பினாலும் பெரும்பாலும் ஆண்களே சூழ்ந்திருக்கும் புறம். மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சூழலியல் இடர்களை அவர் கொஞ்சம் கூடுதலாகவே அடைந்தார். 'உங்களோடு தொடர்பு வைத்துக்கொண்டால் எங்களுக்கும் பிரச்னை வரும்' என்…
-
- 0 replies
- 446 views
-
-
மிஸ்டர் கழுகு: ஸ்லீப்பர் செல்களாக 10 அமைச்சர்கள் மன்னார்குடி முதல் தலைமைச் செயலகம் வரை ஒரு சுற்று வந்தபிறகு லேண்ட் ஆனார் கழுகார். ‘‘எல்லா குழப்பங்களும் சென்னையில் நடந்து கொண்டிருக்க... மன்னார்குடியில் உமக்கு என்ன வேலை?” எனக் கழுகாரைச் சீண்டினோம். ‘‘மன்னார்குடிதான் அனைத்துக்கும் அடித்தளம். அடிபட்ட பாம்பாகத் துடிக்கிறார் திவாகரன். தினகரனை விட ஆத்திரத்தின் உச்சத்தில் இருப்பது திவாகரன்தான். அவர்தான் ஆரம்பத்திலிருந்தே, அணிகளின் இணைப்புக்காக இரண்டு பக்கமும் பேசிக் கொண்டிருந்தவர். அவரோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொண்டிருந்தார்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அப்போதெல்லாம் இணைப்பு நடக்கவில்லை. திவாகரனிடம்…
-
- 0 replies
- 1.9k views
-