Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பரபரப்பான அரசியல் சூழலில்... அதிமுகவின் 122 எம்.எல்.ஏக்களும் சென்னைக்கு வர எடப்பாடி திடீர் அழைப்பு. தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் 122 எம்.எல்,ஏக்களும் நாளை சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 122 பேரும் நாளை சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வழியாக அழைப்பு விடுத்துள்ளார். நாளை சென்னை வரும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - தற்ஸ் தமிழ்.-

  2. இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் மீது வழக்குப் பதிவு! ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க் கொடி தூக்கியதை அடுத்து, அந்தக் கட்சி இரண்டாகப் பிரிந்தது. பிறகு, நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா, பன்னீர்செல்வம் அணிகள், தனித்தனியாகப் போட்டியிட்டன. இதையடுத்து, இரு அணியினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோர, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக, அ.தி.மு.க அம்மா அணியின் தினகரனிடமிருந்து ரூ. 5…

  3. பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறார்களா வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். இதன் பிறகு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். பன்னீர்செல்வம் அணியில் தற்போது 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும், 10 எம்.பி-க்களும் பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். குறிப்பாக, அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன் உள்பட முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் அவரது அணியில் உள்ளனர். அதேபோல், தியாகு, பாத்திமா பாபு , நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட நட்சத்திரப்…

  4. விஜயபாஸ்கரை வளைத்த வணங்காமுடிகள்! - ஐ.டி சோதனை பின்னணி 1 நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்புடன் வலம் வருகிறார்கள். இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக இருக்கிறார். "ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப் போகும் முன் தேடுதல் பணியில் மிகக் கவனமாக இருப்பார்கள். விஜயபாஸ்கர் விவகாரத்தில் ஆதாரங்கள் துல்லியமாகக் கிடைப்பதற்குக் காரணமே வருமான வரித்துறையின் இரண்டு அதிகாரிகள்தான்" என்கின்றனர் அதிகாரிகள். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முன்வைத்து ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க. கடந்த டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி வளைக்கப…

  5. நீதிமன்ற வளாகத்தில் கண்கலங்கிய வைகோ! 2009-ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விரைந்து முடிக்க, வைகோ கோரியிருந்தார். இதுகுறித்து, எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்திருந்த மனுவில், வழக்கை விரைவாக நடத்தவில்லை என்றால், தன்னைக் கைதுசெய்ய அவர் கோரியிருந்தார். குறிப்பாக, ஜாமீனில் வெளிவர விருப்பமில்லை என்று அவர் கூறினார். இதனால், அவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்றுடன், அவரது 15 நாள் காவல் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, அவர் எழும்பூர்…

  6. ஜெயலலிதாவின் வாரிசு யார்? ஆர்டிஐ அளித்த அதிரடி பதில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு சட்டப்படி வாரிசுதாரர் எவர் பெயரும் இதுவரை குறிப்பிடப்படவில்லை என்பதால் அவரது அத்தனை சொத்துக்களையும் மாநில அரசின் உடைமைகளாக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார். தகவல் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களையும் வெளியிடுபவர் சமூக ஆர்வலர் பாஸ்கரன். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுதாரர் என எவரையும் குறிப்பிடப்படவில்லை என்பதை அறிந்துள்ளார். இதனால் ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழகச் சொத்தாக அறிவிக்க வேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். …

  7. அமைச்சர்கள் கைது எப்போது? போலீஸ் அதிகாரிகள் மும்முரம் சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில், அமைச்சர் களை கைது செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஏப்., 7ல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, இடைத்தேர்தல் நடக்க இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்வதற்கான ஆதாரங்கள் சிக்கின. அப்போது, அமைச்சர்கள்காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், விஜயபாஸ்கர் வீட்டிற்குள்…

  8. மந்திரிகளின் சொத்துக்கள் பறிபோகிறதா? ஐ.டி. ரெய்டு பின்னணி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டில், இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்த ரூ. 89 கோடி கணக்குக்கான ஆவணம் சிக்கியது. இப்போது அதையும் தாண்டிய புதிய கணக்குகள் குறித்த தகவலால் அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் பணப்பட்டுவாடா புகார், தேர்தல் நிறுத்தம் என்பதைக் கடந்த தகவல் அது. ரெய்டின் போது, துணை ராணுவப்படை வீரர் தன்னைத் தாக்கியதாக, போலீசில் மந்திரி விஜயபாஸ்கரின் கார் டிரைவர் புகார் கொடுக்க, போலீசாரும் 'அமைச்சரின் கார் டிரைவராயிற்றே' என்று அந்தப் புகாரின் மீதான விசாரணையை அன்று வேகப்படுத்தினர். உள்துறை அமைச்சகம் வரையி…

  9. “நான் ஒதுங்கி போக மாட்டேன்”- மல்லுக்கட்டும் தினகரன்! அ.தி.மு.க-வை விட்டு தினகரனை வெளியேற்றும் திருவிளையாடல்களை அவரது அணியில் உள்ளவர்களே ஆரம்பித்துவிட்டனர். ஆனால், மன்னார்குடி உறவுகளிடம் கட்சியை விட்டு நான் ஒதுங்கி போகமாட்டேன் என்று மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளார் தினகரன். சசிகலா உறவுகளிடம் அ.தி.மு.க.வினர் காட்டிய பயமும், பவ்வியமும் இள்று காணமல் போய்விட்டது. சசிகலா உறவுகள் இனிமேல் அ.தி.மு.க.வில் கோலோச்ச வேண்டாம் என்ற கருத்துகள் பரவிவரும் நிலையில் சசிகலா உறவுகளுக்குள்ளும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. சசிகலாவினால் துணைப் பொதுச்செயெலாளராக அறிவிக்க தினகரன் கட்சி, ஆட்சி என இரண்டிலும் கோலோச்சுவதை பிற உறவுகள் விரும்பவில்லை. தினகரன் தனி ஆவ…

  10. அரசனை நம்பினால் புருஷனை காப்பாத்த முடியாது!

  11. சரத்குமாருக்காக நடந்த சடுகுடு ஆட்டம்! வருமானவரித் துறை ரெய்டு சூறாவளி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையே போட்டுத்தாக்கிவிட்டது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி போன்றவர்களுடன் நடிகர் சரத்குமாரும் கடும் சேதத்துக்கு ஆளாகி உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடந்தபோது, அவரிடம் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி, ‘நடிகர் சரத்குமாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?’ என்பதுதான். அதைத்தான், தன் பேட்டியில் குமுறித் தீர்த்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். அந்த அளவுக்கு சரத்குமாரை வருமானவரித் துறை அதிகாரிகள் குறிவைக்கக் காரணம் என்ன? ‘‘ சரத்குமார் தனது வழக்கமான ஆட்டத்தை, மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யோ…

  12. டெல்லியில் தமிழக விவசாயிகள் வளையல் உடைத்து, குங்குமம் அழித்து நூதன போராட்டம் தமிழக விவசாயிகள் தங்கள் கைகளில் அணிந்த வளையல்களை உடைத்தும், நெற்றியில் அணிந்த குங்குமத்தை அழித்தும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை நடத்தினர். புதுடெல்லி: தமிழக விவசாயிகள் கடந்த 34 நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் வெயில், குளிர், மழை என்று பாராமல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தள…

  13. சகிகலா புஷ்பாவின் புதிய சடுகுடு: நகைச்சுவையாகும் தமிழக முதல்வர் நாற்காலி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகம் அல்லோகலப் பட்டுக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கினால் அரசு இயந்திரம் இயங்குகிறதா என்ற கேள்வி எதிர்க்கட்சியினர் இடையே மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. தொட்டதெற்கெல்லாம் தெருவில் வந்து போராடவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு திட்டங்கள் வெறும் திட்டங்களாகவே மட்டும் உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலும் கட்சியை கைப்பற்றவும் மட்டுமே திட்டம் போட்டு அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த ஆளும் த…

  14. பி.ஜே.பி 'மிஷன் தமிழ்நாடு' - பன்னீர்செல்வம் பாணியில் எடப்பாடி பழனிசாமி! 'ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பார்கள். அப்படித் தமிழ்நாட்டில் ஆளும் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் களேபரங்களைவைத்து தமது அரசியல் கூத்தை அரங்கேற்றி வருகிறது பி.ஜே.பி. அ.தி.மு.க சின்னம் பறிப்பு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறை ரெய்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்று தொடர்ந்து யார்க்கர் பந்துகளாக வீசி டி.டி.வி.தினகரனை அலறவைத்து வருகிறது பி.ஜே.பி. அதனின் பழைய விக்கெட் பன்னீர்செல்வம் என்றால், அதன் லேட்டஸ்ட் விக்கெட் எடப்பாடி பழனிசாமி. எந்த முதல்வர் பதவிக்காக அ.தி.மு.க-வைப் பிளந்துகொண்டு பன்னீர் பிரிந்தாரோ, …

  15. சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்! சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், இன்று திடீரென மரணம் அடைந்தார். திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வயது 47. சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகன். இவரது மகன் மகாதேவன். மன்னார்குடியில் வசித்து வந்த மகாதேவன், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகாதேவனை உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது, போகும் வழியில் மகாதேவன் உயிரிழந்தார். அவரது உடல் தஞ்சாவூரில் உள்…

  16. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற, அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக் கும் முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, தினகரனை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், சசிகலா அணி, ஆட்சியை தக்க வைத்தது; ஆனாலும், குழப்பம் தொடர்கிறது. கட்சி இரண்டாக உடைந்ததில், இரட்டை இலை சின்னமும் பறிபோயுள்ளது. எந்த நேரமும் ஆட்சிக்கு ஆபத்து என்ற சூழ்நிலையும் நிலவுகிறது. ஒரு வேளை ஆட்சி கலைந்து, தேர்தல் வந்தால், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தும் வரை, கட்சியைக் காப்பாற்ற முடியாது என்பதை, சசிகலா …

  17. கணவரை... வீட்டை விட்டு விரட்டிய தீபா. தெருவுக்கு வந்த குடும்ப பிரச்சனை. குடும்பம் மற்றும் அரசியல் பிரச்சனை காரணமாக தீபா தனது கணவர் மாதவனை வீட்டை விட்டு விரட்டிவிட்டாராம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு அதிமுக தொண்டர்கள் பலர் வலியுறுத்தினர். இதையடுத்து சுபயோக சுபதினத்தில் அரசியலுக்கு வந்தார் தீபா. தீபா புதிய அரசியல் கட்சியை துவங்கினார். அதற்கு ஜெ. தீபா பேரவை என்று பெயர் வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளராக தனது கார் டிரைவர் ராஜாவையும், தலைவராக அவருடைய மனைவி சரண்யாவையும் நியமித்தது தொண்டர்களுக்கும், தீபாவின் கணவர் மாதவனுக்கும் பிடிக்கவில்லை. கட்சியின் முக்கிய பொறுப்பை எதிர்பார்த்து அது கிடைக்காததால…

  18. 'தமிழ்நாட்டில் மட்டுமா உங்களுக்கு நல்ல பெயர்?!' -தம்பிதுரையிடம் தகித்த மோடி இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் யுத்தத்தில் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். 'மத்திய அரசின் தொடர் நெருக்குதல்களைத் தணிக்கும்விதமாக, பிரதமரை சந்தித்துப் பேசினார் தம்பிதுரை. இந்த சந்திப்பில் பல விஷயங்கள் விளக்கப்பட்டாலும், கார்டன் சமாதானத்தை ஏற்கும் முடிவில் பிரதமர் இல்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அடுக்கடுக்கான சோதனைகளைச் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்தே, மத்திய அரசின் அதிரடிகள் தொடர்ந்து கொண்டே …

  19. தாலியறுத்து; ஒப்பாரி வைத்து தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் 33-வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று தாலியறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர்மந்தரில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக் கயிறு, எலிக் கறி, பாம்புக் கறி உள்ளிட்டவற்றை வைத்து போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், திடீரென்ற…

  20. 'இந்த 16 எம்.எல்.ஏக்களும் என் கட்டுப்பாட்டில்!' -கார்டனை கதிகலங்க வைத்த விஜயபாஸ்கர் 'தமிழக அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்குங்கள்' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிவருகின்றனர் மூத்த அமைச்சர்கள். ' டெல்லியின் கோபத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இது ஒன்றுதான் ஒரே வழி என தினகரனிடம் எடுத்துக் கூறியும், விஜயபாஸ்கரைக் காப்பாற்றும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது கார்டன்' என்கின்றனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மையமாக வைத்து, ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. கடந்த 7-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். இந…

  21. மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர் ‘‘வருமானவரித் துறை ரெய்டுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் நடக்க ஆரம்பித்திருக்கும் களேபரங்களு டன் வரவும்” என்று கழுகாருக்கு மெசேஜ் அனுப்பினோம். அடுத்த சில நிமிடங்களில் கழுகார் வந்துவிட்டார். ‘‘சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை மையம் கொண்டுதான் அ.தி.மு.க அரசியல் நடக்கிறது. அவருக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும் எதிராக ஒரு கோஷ்டியும் கிளம்பி இருக்கிறது. இந்தச் சூழ்நிலை, அ.தி.மு.க-வின் அடுத்த பிளவுக்குக்கூட அடித்தளம் அமைக்கலாம்’’ என்றார். ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டோம். ‘‘சசிகலா முதல்வர் ஆக வசதியாக ஓ.பன்னீர்செல்வத்தைப் பதவிவிலக முதலில் சொன்னதே விஜயபாஸ்கர் தான். ஜெயலலிதா மறைவுக்குப…

  22. மக்களை மதிக்காத அரசாங்கம் யாருக்கு வேண்டும்? மக்களின் குரலாக! - தங்கர் பச்சான்

    • 0 replies
    • 216 views
  23. “தமிழ்நாட்டை இந்தியா அழிக்க வேண்டும் என நினைக்கிறது”- இயக்குநர் கௌதமன்

    • 0 replies
    • 238 views
  24. வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகுமாறு தினகரனுக்கு நெருக்கடி:ஒட்டுமொத்தமாய் அனைவரும் பன்னீர் அணிக்கு மாற முடிவு? உங்களால் தான், கட்சி பிளவுபட்டது; ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சியை விட்டு நீங்கள் வெளியேறுங்கள்' என, தினகரனுக்கு எதிராக, அமைச்சர்கள் பகிரங்கமாக குரல் எழுப்பியுள்ளனர். 'அதை சொல்ல நீ யார்' என, தினகரன் பாய்ந்ததால், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கடுப்படைந்துள்ளனர். விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவியை பறிக்கும்படியும், அவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, அவர்கள் அனைவரும் பன்னீர் அணிக்கு மாறவும் தயாராகி வருவதாக தெரிகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதன…

  25. வருமான வரி சோதனையில் அத்துமீறி நுழைந்ததாக தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் | கோப்புப் படம். வருமான வரி சோதனையில் அத்துமீறி நுழைந்ததாக அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா அதிகம் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கிடைத்த தகவலின்பேரில், தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், அவரது உறவினர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், நண்பர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.