தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
ஜெ., கைரேகை பெற டாக்டருக்கு ரூ.5 லட்சம்? தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 2016 நவம்பரில், தேர்தல் நடந்தது. அப்போது, அ.தி.மு.க., பொதுச்செயலரான ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கக் கோரும் ஆவணத்தில், ஜெ., கையெழுத்துக்கு பதிலாக, அவரது கைரேகை வைக்கப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜிமுன்னிலையில், கைரேகை பெறப்பட்டதாக, அ.தி.மு.க., விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், பல ஆவணங்கள் சிக்கின. அதில், ஜெ., கைரேகை வைத்தார் என்பதை உறுதி செய்த, டாக்டர் ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
டெல்லி சாலையில் மண்சோறு சாப்பிட்டு தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம் Image captionஜந்தர் மந்தர் சாலையில் மண் சோறு டெல்லியில் கடந்த 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், தங்களது நூதனப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை மண்சோறு சாப்பிட்டனர். நேற்று திங்கட்கிழமை, பிரதமர் அலுவலகத்தில் மனுக்கொடுப்பதற்காக, காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்றனர். வெளியே வந்ததும், வாகனத்திலிருந்து குதித்த சில விவசாயிகள் தங்கள் ஆடைகளக் களைந்து நடுரோட்டில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல தொடர்ந்து அவர்கள் நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்…
-
- 0 replies
- 415 views
-
-
ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறு வந்த நிலையில், வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்தன. இதையடுத்து, அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் …
-
- 1 reply
- 477 views
-
-
‘அவசரம் காட்டியதால்தான் ஆபத்து!’ - தினகரனிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர்கள் ஆளும்கட்சி வட்டாரத்தை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை. 'எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகும், கார்டனில் உள்ளவர்கள் அவசரப்படுவதால்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது' என வெளிப்படையாகப் பேசியுள்ளனர் அமைச்சர்கள் சிலர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டு துண்டுகளாகிவிட்டது. சசிகலா தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். 'அ.தி.மு.கவின் ஒன்றரைக் கோடித் தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். அவகாசம் இருந்திருந்தால், அத்தனை பேரின் கையெழுத…
-
- 0 replies
- 583 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? - அதிரவைத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 'அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொகுதி காலியாக இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்தில் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது, ஆர்.கே.நகர்த் தொகுதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நாளை (ஏப்ரல்-12) நடப்பதாக இருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இந்நிலையில்,…
-
- 0 replies
- 281 views
-
-
இப்போது விஜயபாஸ்கர்... அடுத்த குறி எடப்பாடி, 29 அமைச்சர்கள்! 2016-ம் ஆண்டு, கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, தமிழகத்தை விட்டு இன்னும் நகரவில்லை. நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன் என்று பெரிய தலைகளை வாரிச்சுருட்டிய அந்தச் சூறாவளி, தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறையை அதகளம் செய்துள்ளது. இந்த ரெய்டுகளுக்குப் பின்னணியில் அரசியல் காரணம், அலுவல் காரணம் என்று இரண்டு காரணங்கள் உள்ளன. அரசியல் காரணங்கள்... அ.தி.மு.க என்ற கட்சியைவிட்டு சசிகலா குடும்பத்தினர் மொத்தமாக ஒதுங்கிவிட வேண்டும் என்பதுதான் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசின் ஒரே நோக்கம். இதற்கு ஒப்புக்கொள்ளாதவரை, சசிகலா குடும்பத்தையும் அந்தக் குடும்பத்…
-
- 0 replies
- 2.3k views
-
-
விஜயபாஸ்கருக்கு அடுத்த நெருக்கடி! கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை அதிரடி ஆய்வு! புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நடந்த அதே நேரத்தில் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை நடத்தினர். ஏற்கெனவே புதுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும…
-
- 0 replies
- 216 views
-
-
தடை? தேர்தலில் போட்டியிட தினகரனுக்கு தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காரணத்திற்காகவும், வரம்பு மீறி செலவு செய்ததற்காகவும், தேர்தலில் போட்டியிட முடியாமல், தினகரனை தகுதி நீக்கம் செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். வெற்றி பெற்றால் தான், அரசியல் எதிர்காலம் என்பதால், பணத்தை வாரி இறைத்தார்.சசிகலா மீதுள்ள அதிருப்தி காரணமாக, தினகரன் அணியினரின் பிரசாரத்திற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செருப்பு வீச்சு, தக்காளி வீச்சு போன்ற சம்பவங்க…
-
- 0 replies
- 454 views
-
-
பல கோடி பணம் எப்படி? அமைச்சரிடம் கிடுக்கிப்பிடி பல கோடி பணம் பட்டுவாடா மற்றும் தேர்தல் பேரம் தொடர்பாக, வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமாரிடம், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், எம்.எல்.ஏ., விடுதி உள்ளிட்ட, 38 இடங்களில், சமீபத்தில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதில், அவரது கணக்காளர் சீனிவாசன் வீட்டில் இருந்து, வாக்காளர்களுக்கு தலா, 4,000 ரூபாய் தரப்பட்ட பட்டியல் கிடைத்தது. அதன் மூலம், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன் மற்றும் முதல்வர் பழனிசாமி மூலமாக, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததது த…
-
- 0 replies
- 412 views
-
-
விஜயபாஸ்கர் உறவினர்கள் தங்கியுள்ள விடுதியிலும் ரெய்டு! ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகினர். விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கெனவே புதுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அவரின் உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் தங்கியிருந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை பூக்கடையில் உள்ள ஒரு விடுதியில் வ…
-
- 0 replies
- 480 views
-
-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வி: என்.ராம் சாடல் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது, தேர்தல் ஆணையத்தின் தோல்வியே எனறு மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வியே' ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து ராம் கூறுகையில், '' இடைத்தேர்தலை ரத்து செய்வது நல்ல விஷயமல்ல. ஆனால் , வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்'' என்று தெரிவித்தார். ''ஒரு வாக்குக்கு 4000 ரூபாய் வரை தரப்படுவ…
-
- 0 replies
- 376 views
-
-
ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... முடிவு யார் கையில்?! ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... நடக்காதா என்பது டெல்லியில் இன்று (08-04-17) மாலை நடைபெற உள்ள தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. மேலும், பணத்துடன் ஆர்.கே.நகரில் சிலர் பிடிபடவும் செய்தார்கள். ஆர்.கே.நகர் தேர்தலை பணமில்லாத் தேர்தலாக நடத்த வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் இருந்தாலும் பணம் கொடுப்பதைத் தடுக்கமுடியாமல் கையைப் பிசைந்து நின்றது. வாக்காளர்களுக்குப் பணம்வரும் வழிகளை எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து வந்த தேர்தல் ஆணையம், தமிழக அமைச்சர்கள…
-
- 12 replies
- 1.7k views
-
-
'தீபா கணவன் மாதவன் வந்திருக்கேன்' கடைசிநாள் பிரசாரக் காட்சிகள் ! #SpotReport #VikatanExclusive சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்றிரவு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக, அரசியல்கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்கள் என பகலிலும், இரவிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தத் தொகுதி மக்களுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்துள்ளது. துணை ராணுவப்படையினர் எங்கும் காணப்படவில்லை, கட்சிக் கொடிகள் இல்லை; வேட்பாளர்களை வரவேற்க மேளச் சத்தம் இல்லை; கரைவேட்டி கட்டியவர்களின் நடமாட்டம் இல்லை; வெளிமாவட்ட பதிவெண் க…
-
- 0 replies
- 481 views
-
-
‘தமிழகத்தில் இடைத்தேர்தல் அல்ல; பொதுத்தேர்தலே வரும்!’ - அமித் ஷா-வின் அடுத்த ஆபரேஷன் நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனில், வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளை எதிர்கொண்டுவருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ‘கடந்த 100 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை ஆய்வுகளின் அடிப்படையில் விஜயபாஸ்கர் வளைக்கப்பட்டிருக்கிறார். ஜூன் மாதம் வரையில் அமைச்சர்களுக்கு நிம்மதியான உறக்கம் வரப்போவதில்லை’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டை அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ‘நான் நிரபராதி. என் மீது எந்தக் குற்றமும் இல்லை’ என அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் கே.கே.மகேஷ் Share சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன். எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்? நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவத…
-
- 0 replies
- 1.2k views
-
-
கழகங்கள் இல்லா தமிழகம்... சீமானையும் வளைக்க துடிக்கும் இந்துத்துவா சக்திகள்- சிக்குவாரா? சென்னை: தமிழர் அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாள மீட்டெடுப்பு முழக்கங்களை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை 'இந்துத்துவாவாதி' என முத்திரை குத்தி தங்கள் பக்கம் இழுக்கத் துடிக்கிறது இந்துத்துவா சக்திகள். தந்தை பெரியாரின் பேரன்... பிரபாகரனின் தம்பி... மார்க்ஸின் மாணவன்... இதுதான் தொடக்க கால அரசியல் மேடைகளில் சீமான் தம்மைப் பற்றி பிரகடனம் செய்து கொண்டது. திராவிடர் இயக்க மேடைகளில் தொடக்க காலங்களில் பகுத்தறிவு பிரசாரம் செய்தார் சீமான். தலைகீழாக முயற்சி திராவிட அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக தமிழர் வாழ்வுரிமையை பேசும் அரசியலை முன்வைத்து வருகிறார் சீமான். தமிழகத்…
-
- 1 reply
- 504 views
-
-
சொந்தநாட்டு விவசாயிகளை நிர்வாணமாக்கி... சிங்களத்து வறட்சிக்காக ரத்தக் கண்ணீர் வடிக்கும் மோடி அரசு! டெல்லி: இந்திய தேசத்தின் குடிமக்களான தமிழகத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நிர்வாணமாக போராட்டம் நடத்தும் நேரத்தில்தான் இலங்கை வாழ் சிங்கள மக்களின் வறட்சியைப் போக்க 100 மெட்ரிக் டன் அரிசியை அனுப்புகிறதாம் தமிழர் விரோத மோடி தலைமையிலான பாஜக. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலே தமிழகத்துக்கு எதிராக பச்சை துரோகம்... படுபாதகங்கள்.. ஒன்றா இரண்டா... எத்தனை எத்தனை துரோகங்கள்? ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்திய பாஜக மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்றது. ஆண்டுகள் உருண்டோடின... துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கூட காவிரி மேல…
-
- 0 replies
- 676 views
-
-
உண்மையில் எதனை யாரை ரத்து செய்ய வேண்டும்...? : தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகள்! சென்னை ஆர்.கே. நகர்த் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து நண்பர் அன்பழகன் தன் முகநூலில் இவ்வாறாக ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறார். “ஒரு தேர்தலை நேர்மையாக நடத்த முடியவில்லை என்றால் கலைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தைத்தான்” என்று. அவரது கருத்து கொஞ்சம் அதட்டலாக, கடுமையானதாக இருந்தாலும்...இன்னும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் பலரின் எண்ண ஓட்டம் இதுதான். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு... கிர் காட்டில் வசிக்கும் ஒரே ஒரு வாக்காளரையும் வாக்களிக்க வைக்க மெனக்கெடும் தேர்தல் ஆணையம் என பெருமை பிதற்றிக்கொள்ளும் அதேவேளையில், அந்த அமைப்பால் ஒரு சிற…
-
- 1 reply
- 431 views
-
-
அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவு! - ஐ.டி-க்கு அல்வா கொடுக்க அதிரடி #VikatanExclusvie தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்குப் பிறகு, அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்களது ஆடிட்டர்மூலம் வருமான வரித்துறையினருக்கு அல்வா கொடுக்கும் வேலையில் மும்முரமாக சிலர் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. இதனால், வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறுத்திவிட்டு, அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதுபோல, ஓ.…
-
- 0 replies
- 476 views
-
-
வருமான வரித்துறை அலுவலகத்தில் அடுத்தடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆஜர்! சென்னை வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ம் தேதி அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் அவ…
-
- 0 replies
- 364 views
-
-
முதல்வர்,5அமைச்சர்களிடம் விசாரணை நடத்த... ரூ.89 கோடிக்கான மூலாதாரம் அறிய வரித்துறை மும்முரம் சென்னை, ஆர்.கே.நகரில், தினகரன் அணியினர், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் கொடுத்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், 89 கோடி ரூபாய்க்கான மூலாதாரம் அறிய, வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் ஐந்து அமைச்சர்களிடம் விசாரிக்க, சம்மன் அனுப்பப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தினகரன், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, பணத்த…
-
- 0 replies
- 196 views
-
-
சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்! பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை 31 நாட்களில் 28 முறை பார்வையாளர்கள் சந்தித்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சசிகலாவின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் தவிர, அவரைச் சந்தித்த ஒரே அந்நிய நபர், மகுன்டா சீனிவாசலு ரெட்டி. யார் இவர்... எதற்காக சசிகலாவைச் சந்திக்க வேண்டும்... என விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல் அதிர வைத்தது. சசிகலாவை இவர் சந்தித்ததற்கும், டாஸ்மாக் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான ஒரு முடிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது! சீனிவாசலு ரெட்டி ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஆந்திராவின் ஓங்கோல் தொகுதியின் எம்.பி-யாக இருந்திருக்கிறார். 2014-ம் ஆண்டில் ஆந்திரா இரண்டாகப் பி…
-
- 0 replies
- 525 views
-
-
நீட் நுழைவு தேர்வை உடனே தடை செய்ய வேண்டும்
-
- 0 replies
- 212 views
-
-
சென்னை அண்ணா சாலையில் உருவான திடீர் பள்ளம்: மாநகர பேருந்து, கார் கவிழ்ந்தது சென்னை அண்ணா சாலையில் இன்று திடீரென உருவான பள்ளத்தில் பேருந்தும், காரும் சிக்கி கவிழ்ந்ததில் சிலர் காயமடைந்தனர். சென்னை: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாக சாலையில் திடீரென பள்ளம் ஏற்படுவதும், அதில் இருந்து சிமெண்டு கலவை மற்றும் ரசாயன கலவை வெளியேறுவதும் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணா சாலையில் சர்ச் பார்க் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து ரசாயன …
-
- 6 replies
- 1.9k views
-
-
டைம்ஸ் நவ் தொலைகாட்சிக்கு மணிரத்னம் அளித்துள்ள முழு பேட்டியின், மூன்று நிமிட வீடியோ “முக.ஸ்டாலின் குறித்து மணிரத்னம்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் முதல் அரசியல் பேட்டி என்று பெயரிட்டு பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், மைல் கல்களில் இந்தி எழுதப்பட்டு வருவதற்கு தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்த கேள்விக்கு “அப்படி நடைபெறும்தான். சிறு குழுக்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்துவது நடைபெறக்கூடும்தான். ஆனால், நாம் அனைவரும் வலிமையுடன் அதனை எதிர்க்க வேண்டும். இந்த சிறுகுழுக்களுக்கு பயந்துகொண்டு, நம்முடைய ஓட்டுக்குள் நாம் சுருங்கிவிடக்கூடாது. நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்றால், உங்களது கருத்துக்கள் நியாயமானவையாக இருக்கிறது என்றால், உங்களது உரிமை…
-
- 0 replies
- 275 views
-