தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
'குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன் #VikatanExclusive மதுபானக் கடைகளின் இழப்பை ஈடுசெய்வதற்காக, நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு எதிராக இன்று அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறது பா.ம.க. இன்று மதியம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் பா.ம.க பாலு. 'குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத்தான் மாநில அரசு விரும்புகிறது' என வேதனை தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டுவதற்காக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்…
-
- 1 reply
- 474 views
- 1 follower
-
-
ஜெ.வுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம்! உச்சநீதிமன்றம் முக்கிய தகவல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும்இ மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் செலுத்த வேண்டிய 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது குற…
-
- 5 replies
- 1.6k views
-
-
சசிகலா சந்திப்பில் விதிமீறல் சிறை துறை குட்டு அம்பலம் பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, பார்வையாளர்கள் விதிகளை மீறி சந்திக்க, சிறைத் துறை அனுமதித்துள்ள தகவல், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பிப்., 15ல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 'அன்று முதல், சசிகலாவை, யார் யார், எப்போது, எந்த நேரத்தில் சந்தித்து பேசினர்' என, பெங்களூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிறைத் துறை…
-
- 0 replies
- 463 views
-
-
"100 மடங்கு வேகத்துடன் போராடுவோம்".... நெடுவாசல் மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது! சென்னை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய போராட்டத்தை விட 100 மடங்கு வேகத்துடன் போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் எச்சரித்த நிலையிலும், அதைப் புறம் தள்ளும் வகையில் மத்திய அரசு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடவுள்ளது. 22 நாட்கள் மிகப் பெரிய வீரியத்துடன் நெடுவாசல் மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வந்தனர். ஜல்லிக்கட்டுக்காக வீரத்துடன் போராடியது போலவே விவசாயிகள், கிராமத்தினரின் இந்தப் போராட்டமும் மிகப் பெரிய ஆதரவைப் பெற்று நடந்தது. கடைசியில் பொன். ராதாகிருஷ்ணனை வைத்து அந்தப் போராட்டத்தைக் கலைத்தது மத்திய அரசு. மத…
-
- 3 replies
- 521 views
-
-
ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா வீடியோ! #VikatanExclusive இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுகவின் 3 அணிகள், பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் களம் காணும் இத்தொகுதியில் வேட்பாளர்கள் பரபரப்பாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்கள். இந்நிலையில் அதிமுக (அம்மா ) அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் அணி நேற்றுமுதல் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்யத்துவங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்தந்த பகுதிகளைப்பொறுத்து வாக்காளர்களுக்கு தலா 2000 முதல் 4000 வரை பணம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்தப் பகுதிக்கென ஒதுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அதிகாலையில் வீடுவிட…
-
- 1 reply
- 558 views
-
-
இலங்கை மீனவர்கள் 7 பேர் இந்தியாவில் கைது.! இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி, 5 ஆயிரம் கிலோ கிராம் மீனுடன் 7 இலங்கை மீனவர்களை, இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18734
-
- 0 replies
- 228 views
-
-
மிஸ்டர் கழுகு: ‘என்னமோ திட்டம் இருக்கு...’ ‘‘வெயிலுக்கு இதமாக தொப்பிகூட போட முடியவில்லை. ஆர்.கே. நகர் பக்கம் போனால், ஒருவித ‘எதிர்பார்ப்போடு’ நம்மைப் பார்க்கிறார்கள்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘எல்லா கெடுபிடிகளையும் மீறி, ஆர்.கே. நகரில் பணம் பாய்கிறதாமே?” என்றோம். ‘‘ஆமாம்! இடைத்தேர்தல் சோதனைகளும் கெடுபிடிகளும் இந்த அளவுக்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஆளும்கட்சி மிரண்டு போய்தான் இருக்கிறது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று படை பட்டாளங்களைக் குவித்திருந்தாலும், அவர்கள் தயங்கித் தயங்கியே வேலை செய்கிறார்கள். அவர்களிடம் வழக்கமான இடைத்தேர்தல் உற்சாகம் இல்லை. சென்னை போலீஸ் ஆணையர் கரன் சின்ஹா, தொகுதிக்கே வந்து நேரடி ஆய்வுகள்…
-
- 0 replies
- 964 views
-
-
கத்திக் குத்து, கலவரம், அதிகாலை 4 மணி! - ஆர்.கே.நகரில் படரும் ‘திடீர்’ அபாயம் #VikatanExclusive அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் பிரசார செயல்பாடுகளை, அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றன தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.' அதிகாலை நான்கு மணிக்குத்தான் பண விநியோகத்தைத் தொடங்குகின்றனர் தினகரனின் ஆட்கள். நேற்று பண விநியோகத்தைத் தடுத்ததற்காக தி.மு.க மாணவர் அணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. கலவர சூழலில் இருக்கிறது ஆர்.கே.நகர்" என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரன், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன…
-
- 0 replies
- 445 views
-
-
இவர்கள்தான் 'அலிபாபா 40 திருடர்கள்'!- பொன்.ராதாகிருஷ்ணன் விளாசல் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. களத்தில் நிற்கும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். லட்சக்கணக்கான பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக, சசிகலா அணியைச் சே…
-
- 0 replies
- 297 views
-
-
தினகரன், பன்னீர் அணியினர் சமூக வலைதளங்களில் மோதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கடும் போட்டி நிலவுவதால், சசிகலா அணியினருக்கும், பன்னீர் அணியினருக்கும் இடையே, சமூக வலைதளங்களில், மோதல் அதிகரித்துள்ளது. ஆர்.கே.நகரில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என, தினகரன் அணியினர் நினைத்த னர். அதற்கு மாறாக, பன்னீர் அணியினருக்கு, ஆதரவு அதிகமாக இருப்பது, அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பன்னீர் அணி நிர்வாகிகளை, கடுமையாக விமர்சிக்க துவங்கி உள்ளனர். விழா ஒன்றில், பன்னீர் அணியைச் சேர்ந்த, முன்னாள்அமைச்சர் பாண்டியராஜன், தி.மு.க., - எம்.பி., கனிமொழ…
-
- 0 replies
- 314 views
-
-
’என்னாது... 3 ஆயிரம் ரூபாய்தானா...!’ தினகரனுக்கு அதிர்ச்சியளித்த ஆர்.கே.நகர் ஆர்.கே.நகர்த் தொகுதி வாக்காளர்களுக்கு மூவாயிரம் ரூபாய் சசிகலா அணியினர் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. பணம் கொடுக்கச் சென்றவர்களிடம் இவ்வளவுதானா என்று சலிப்புடன் சிலர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் படுபிஸியாக உள்ளனர். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துக்கு ஓட்டு கேட்டுவருகின்றனர். வாக்காளர்களுக்கு வாக்குறுதியோடு அன்பளிப்பும் சில வேட்பாளர்கள் தரப்பிலிருந்து அள்ளி வீசப்படுகின்றன. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் கருணாம…
-
- 7 replies
- 1.4k views
-
-
இரட்டை இலை முடக்கத்தில்... ரஜினிக்கு மீண்டும் துளிர்விடுகிறதா அரசியல் ஆசை...?! 'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' என்ற கோஷம் மீண்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் வலுக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் அனுபவம் என்ற வார்த்தையைத்தான் இதுவரை தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்துவைத்திருக்கிறது. ஆனால் 'அரசியல் ஆசை அனுபவம்' என்ற புதிய வார்த்தையை கண்டுபிடிக்கப்பட்டது ரஜினிக்குப்பிறகுதான். 1995 ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடந்த சமயம், 'பாட்ஷா' படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. ரஜினியின் திரைவாழ்க்கையில் முக்கிய இடம்பெற்ற இந்த படத்தின் தயாரிப்பாளர் அன்றைக்கு அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன். உணர்ச்சிப் பூர்வமான மனிதரான ரஜினி மேடையில் ஆர்.எம் வீ…
-
- 1 reply
- 623 views
-
-
இந்திய மீனவர்களின் கோரிக்கை: கச்சைதீவை முற்றுகையிடப் போவதாக எச்சரிக்கை..! இந்திய மீனவர்களின் கோரிக்கையை இலங்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில், கச்சைதீவு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக மீனவ சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீனவ சங்க தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இன்று இடம்பெற்றுள்ள மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தின் போது பேசியுள்ள மீனவசங்க தலைவர்கள், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை …
-
- 0 replies
- 291 views
-
-
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் சதி: துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு தம்பிதுரை எம்.பி. படம்: எல். சீனிவாசன் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக ஓபிஎஸ் அணி மீது மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை புகார் கூறினார். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை தம்பிதுரை நேற்று சந்தித்து, ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அணியினர் பணம் பட்டுவாடா செய்வதாக புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு குந்தகம் விளைவிப்பதற்காகவே பல சதித்திட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு கட்சியின் மூன்றில் ஒரு பகுதியினர் பிரிந்து சென்…
-
- 0 replies
- 207 views
-
-
சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படலாமென வதந்திகள் கிளம்பியுள்ள நிலையில், ''பணப் பட்டுவாடா குற்றச்சாட்டை நம்பி, தேர்தலை ரத்து செய்யும் முடிவை எடுத்துவிட வேண்டாம்,'' என, லோக்சபா துணை சபாநாயகரும், சசிகலா அணியைச் சேர்ந்தவருமான, தம்பிதுரை, தலைமை தேர்தல் கமிஷனரிடம் மன்றாடி கேட்டுள்ளார். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஓட்டுகளை வாங்க, அரசியல் கட்சிகள் முயற்சிப்பது அதிகமாக நடப்பதாக, டில்லியில் ஒரு கருத்து நிலவுகிறது.தற்போது, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், அதே குற்றச்சாட்டுகளுடன், முக்கிய அரசியல் கட்சிகள், டில்லி தலைமை தேர்தல் கமிஷனை மொய்க்க துவங்கியுள…
-
- 0 replies
- 632 views
-
-
ஒரு லட்சம் ஓட்டு: தினகரன் அணி புது 'ரூட்டு' தொகுதி முழுவதும், பணத்தை வாரி இறைக்காமல், ஒரு லட்சம் வாக்காளர்களை மட்டும் தேர்வு செய்து, ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வீதம், 50 கோடி ரூபாய் செலவு செய்து, வெற்றியை வசப்படுத்த, தினகரன் அணியினர் முடிவு செய்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் தான், கட்சியையும், ஆட்சியையும், தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற, இக்கட்டான சூழலில், சசிகலா அக்கா மகன் தினகரன், இடைத்தேர்தலில் களமிறங்கி உள்ளார். பொது மக்களிடம் எதிர்ப்பு பலமாக உள்ளதால், வெற்றி பெறுவது கடினம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. சர்வே அனைத்திலும், தி.மு.க.,வுக்கும், பன்னீர் அணிக்கும் இடையே …
-
- 1 reply
- 423 views
-
-
ஜெ.,க்கு துரோகம் செய்த சசி குடும்பம் : பன்னீர்செல்வம் ஆவேசம் சென்னை, ''சசிகலா குடும்பத்தினர், அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், கபளீகரம் செய்து, ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துள்ளனர்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த, 1,500 நிர்வாகிகள், நேற்று பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சினிமா பாடலாசிரியர் சினேகனும், நேற்று, பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது, பன்னீர்செல்வம் பேசியதாவது: எம்.ஜி.ஆர…
-
- 0 replies
- 332 views
-
-
அரசியலுக்கு சரிப்பட்டு வருவாரா ரஜினி? சமூக வலை தளங்களில் விவாதம் 'ரஜினி ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டால் தான், அவரது ரசிகர்களுக்கு உண்மை புரியும்' என, 'தினமலர்' இணையதள வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' என, அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், 'அவர் அரசியலுக்கு வர வேண்டுமா; வேண்டாமா' என, சமூக வலை தளங்களில், பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது.இது குறித்து, 'தினமலர்' இணையதளத்தில் வாசகர்கள் கூறிய கருத்துக்கள்: பாவம் ரசிகர்கள் நிஜன் - சென்னை: போய் வேலைய பாருங்க; அவரு எப்போ வருவார்னு அவருக்கே தெரியாதுன்னு சொல்லியிருக்கார…
-
- 0 replies
- 355 views
-
-
‘சசிகலா பெயரை ஏன் தவிர்க்கிறார் தினகரன்?!’ - ஆர்.கே.நகர் கலவர நிலவரம் ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் நடந்து முடியும் வரையில், தொகுதி மக்களுக்கு நிம்மதியான உறக்கம் என்பது கேள்விக்குறிதான். ‘அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா பெயரைச் சொல்லாமலேயே தொகுதிக்குள் வலம் வருகிறார் தினகரன். கட்சித் தலைமையின் பெயரை மறைப்பது, சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துகிறது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தண்டையார்பேட்டையில், தினகரன் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் நேற்று வருமானவரித்துறை சோதனை நடந்தது. ‘பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக உறுதியான தகவல் வந்ததன் அடிப்படையிலேயே சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது. தே…
-
- 0 replies
- 356 views
-
-
வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சென்னை : தேச துரோக வழக்கில் வைகோவை 15 நாள் சிறைக்காவலில் வைக்குமாறு எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ல் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாக தேச துரோக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இன்று வைகோ கோர்ட்டில் ஆஜரானார். இவரை 15 நாள் நீதிமன்றகாவலில் வைக்குமாறு 13 வது குற்றவியல் நடுவர் மன்ற கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவிட்டார். இதனையடுத்து வைகோ இன்று புழல் சிறையில் அடைக்கப்டுகிறார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1744242
-
- 5 replies
- 559 views
-
-
பன்னீர்செல்வம் அணியில் இணைந்த ராஜகண்ணப்பன் திடீர் சபதம்! முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று இணைந்தார். அப்போது, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வெற்றி பெற்றவுடன், அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம்' என சபதம் எடுத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க. சசிகலா அணி- பன்னீர்செல்வம் அணி என்று பிரிந்தது. இதில், சசிகலா அணியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இருந்துவந்தார். இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு, ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திடீரென வருகைதந்தார். பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசிய அவர், அ.தி.மு.க புரட்சித்தலைவி …
-
- 0 replies
- 366 views
-
-
வேட்பாளர்களின் செலவுக் கணக்கு... ஆர்.கே. நகரில் இறுக்கும் தேர்தல் ஆணையம்...! தேர்தல் என்றாலே வாக்கு இயந்திரம், வேட்புமனு, வேட்பாளர், சின்னம், கட்சி, பிரசாரம் என்று பல விஷயங்கள் இருக்கும். தேசியக்கட்சி, மாநிலக்கட்சி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சை என்ற அடுத்தக் கட்ட விஷயங்களும் அங்கே காணப்படும். அடுத்ததாக சொல்வதென்றால், அது தேர்தல் ஆணையம்தான். தேர்தல் ஆணையம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போதெல்லாம் தவறாமல் நினைவில் வந்து விடுகிற பெயர் டி.என்.சேஷன். கட்சிக் கொடி கட்ட, போஸ்டர் ஒட்ட, கட்-அவுட் வைக்க, மைக் கட்டி பிரசாரம் செய்ய என்று அனைத்துக்கும் வேட்பாளர்கள் பயந்து நடுங்கிய காலகட்டம் அது. வாய்க்கு ரு…
-
- 0 replies
- 275 views
-
-
இலங்கை அகதியின் இதயம் ஹெலியில் பறந்தது விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம்,சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ஹெலிகாப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு வைத்தியர்கள் எடுத்துச் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 22) என்பவரின் உடலுறுப்புகளே இவ்வாறு தானமாக அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி அடையாளம் என்ற கிராமத்தின் அருகே இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த கிருபாகரன், வேலூர் சிஎம்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில், நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உ…
-
- 0 replies
- 446 views
-
-
மீண்டும் பதவியில் அமர்ந்த ராமமோகன ராவ்! - டெல்லி லாபியை வளைத்த பின்னணி தலைமைச் செயலகத்தில் வைத்தே ரெய்டு நடவடிக்கைக்கு ஆளான பெருமைக்குரியவர் ராமமோகன ராவ் ஐ.ஏ.எஸ். 100 நாட்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர், நேற்று தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக பணி அமர்த்தப்பட்டிருக்கிறார். ‘அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. சசிகலா தரப்பை வளைப்பதற்காக, அவரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டனர். தற்போது டெல்லி லாபி மூலம் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டார் ராமமோகன ராவ்’ என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயலர்களில் ஒருவராக இருந்த ராமமோகன ராவ், கடந்த 2016-ம் ஆண்டு சட்ட…
-
- 2 replies
- 956 views
-
-
சமையல் அறை பூட்டப்பட்டது: ‘களை’ இழந்த ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது வீடு வெறிச்சோடி காணப்படுவதாகவும், சமையல் அறை பூட்டப்பட்டு வெறும் வேலைக்காரர்கள் மட்டுமே அங்கு தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரது போயஸ்கார்டன் வீடு 24 மணி நேரமும் களை கட்டி இருக்கும். ஜெயலலிதாவின் தாய் சந்தியா ஆசையாக வாங்கிய இடம். தாயின் நினைவாக வேத…
-
- 0 replies
- 494 views
-