Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்ட அந்த இரண்டு பாரதிய ஜனதாவினர் இவர்கள்தானா? சுப்பிரமணியன் சுவாமி... தமிழகத்தில் ஊழல்குற்றச்சாட்டு காரணமாக ஒவ்வொரு முறை அதிரடியாக ஆட்சிமாறும் நேரத்தில் எல்லாம் அதன் பின்னணியில் இருக்கும் பெயர். 1992-ல் டான்சி நிலபேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தவர்களில் ஒருவர். 1995-ல் அதே ஜெயலலிதாவுக்கு எதிராக நிலக்கரி ஊழல் வழக்கு, 1996-ல் சொத்துக்குவிப்பு வழக்கு என தொடர்ச்சியாக ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குகள் போட்டவர் சுப்பிரமணிய சுவாமி. இருபது வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களுரு தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்…

  2. இறாலுக்கு ஆசைப்பட்டு எம்.எல்.ஏ வை தப்பிக்க வைத்த குண்டர்கள்! - கூவத்தூர் ரிசார்ட் உள்ளிருந்து விகடன் நிருபர்! ஓ.பி.எஸ். கூடாரத்துக்குத் தப்பிவந்த எம்.எல்.ஏ-க்களில் மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வருகை, தமிழக அரசியல் களத்தை வேறு வடிவத்துக்கு மாற்றியுள்ளது. ‘மாறுவேடத்தில் தப்பி வந்தேன்’ என்றும், ‘என்னைக் கடத்தினார்கள்’ என்றும் புகார்கொடுத்து பரபரப்பைக் கிளப்பிவருகிறார். கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ தப்பிவந்தது எப்படி? அந்தத் திக்... திக் நிமிடங்கள்.... ‘‘13-ம் தேதி இரவு 11 மணிக்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது விடாமல் எனது செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களின் வேலை பளு காரணமாகத் தெரிய…

  3. ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு சசிகலா பெயருக்கு மாற்றம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஐதராபாத்: முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சொத்துக்கள் வாங்கினார். அவர் தன் வருமானத்துக்கு அதிகமான முறைகேடாக சொத்து சேர்த்ததாக வழக்கு, தொடரப்பட்டு, 21 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதாவின் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயல…

  4. சசிகலாவை கலாய்த்து மீம் போட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை - அ.தி.மு.க. ஐ.டி பிரிவு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம் வெளியிட்ட 180 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி தெரிவித்துள்ளது. சென்னை: அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்று சரண் அடைவதற்கு முன்னதாக ம…

  5. இன்று மாலை எடப்பாடி பதவியேற்பு சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1712038 15 நாளில் பெரும்பான்மையை நிருபிக்க எடப்பாடிக்கு உத்தரவு சென்னை: அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் 15 நாளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1712036 முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி! தமிழகத்தில் ஆட்சியமைக்கு…

  6. 'அடுத்த முதல்வர் யார்?' கவர்னர் சப்போர்ட் யாருக்குத் தெரியுமா? தமிழக அரசியல் தகிப்பு இன்னும் அடங்கவில்லை.! துரோகம், ஆதரவு, தீர்ப்பு, சிறை... என்று அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்துவரும் தமிழக அரசியல் இப்போது, 'தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?' என்ற கட்டத்தில் வந்து நிற்கிறது. தமிழகத்தின் காபந்து முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 7-ம் தேதி ஜெ. சமாதியில் திடுதிப்பென்று வந்தமர்ந்து தியானத்தில் மூழ்கியதில் ஆரம்பித்த அரசியல் பரபரப்பு இப்போதுவரையிலும் தொடர்கிறது. 'முதல்வராக அமரவைத்து அசிங்கப்படுத்தினார் சசிகலா' என்று அவர் பற்றவைத்த நெருப்பின் சூடு தாளாமல், உடனடியாக அவரை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கியடித்தார் சசிகலா. அடுத்தடுத்து ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அ…

  7. மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வராததால் ஓ.பன்னீர்செல்வம் கலக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 9 பேரை தவிர வேறு யாரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர் செல்வம் கலக்கம் அடைந்துள்ளார். சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவால் முதல்- அமைச்சராக 2 முறை அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், 3-வது முறையாகவும் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் முதல்- அமைச்சர் ஆனார். ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செய…

  8. ஆட்சியமைக்க அழைப்பு வருமா? - ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் சந்திப்பு அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளதால், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: தமிழக அரசியல் களம் உச்சகட்டமான பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தா…

  9. பிப்.16-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஆளுநர் மாளிகை | படம்: ம.பிரபு. 'இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு, குடும்ப அரசியலுக்கு வாய்ப்பில்லை'- இப்படியெல்லாம் அறியப்பட்டதுதான் அதிமுக. ஆனால், இன்று அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் சசிகலாவின் குடும்பத்தினர் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் தலைமையில் ஓரணியினர் பிரிந்திருக்கின்றனர். சசிகலா தலைமையை ஏற்றுப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூவத்தூரிலேயே காத்திருக்கின்றனர். ஆளுநரோ, எத்தனை பேர் எத்தனை முறை சென்று பார்த்தாலும் எந்த முடிவும் அறிவிக்காமல் இருக்கிறார். இதுவரை அவரது மவுனத்துக்கு சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாகக் கூறப்பட்டது.…

  10. ஹலோ ஆளுநர் அலுவலகமா..! பெண் ஊழியரை பதற வைத்த போன்கால் (ஆடியோ) தமிழக அரசியல் சூழ்நிலையில் அடுத்த பரபரப்பாக ஆளுநர் அலுவலகத்துக்கு சென்ற தொலைபேசி அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உருவாகிய அதிகாரப்போட்டியால் கட்சித் தொண்டர்களும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு இயந்திரம் முழுமையாக செயல்படவில்லை. இந்த களேபரத்தில் சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியேற்ற போலீஸார் நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அலுவலகத்துக்கு போன் அழை…

  11. என்னை பொருத்தவரை ஜெயலலிதா என்பவர்.. சொல்கிறார் சசிகலா

  12. அதிரடி தீர்ப்பால் ஆடிப்போன அமைச்சர்கள்!: அடுத்து உருளப்போவது யார் தலை? கோவை:வருமானத்துக்கு அதிகமாக, முறை கேடான வழிகளில் சொத்து குவித்திருக்கும் தமிழக அமைச்சர்கள் பலரும், ஊழலுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் ஆடிப்போய்உள்ளனர். சட்டத்தின் பிடியில் சிக்கி, அம்மாவும், சின்னம்மாவுமே அல்லோலப்பட்டு விட்ட நிலையில், தங்களின் கதி என்னவாகுமோ என்ற அச்சம், இப்போதே அவர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தில், 1991 - 96ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய…

  13. செங்கோட்டையனை ஓரங்கட்டிய சிஷ்யன் :ஏறிய ஏணியை எட்டி உதைத்த 'எடப்பாடி' செங்கோட்டையனிடம் அரசியல் கற்று, அவர் மூலம், கட்சியில் படிப்படியாக வளர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது, செங்கோட்டையனை ஓரங்கட்டி, முதல்வர் பதவியை கைப்பற்ற உள்ளார். அ.தி.மு.க.,வில் சீனியர், எட்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், கொங்கு மண்டல கவுண்டர் சமுதாயம் மற்றும் இதர சமூக மக்களிடமும் செல்வாக்குள்ளவர், கோபி தொகுதியை சேர்ந்த செங்கோட்டையன். கடந்த, 1991 - 96ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 2011ல் மீண்டும் அமைச்சராக்கப்பட்டாலும், ஓரே ஆண்டில், ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையனுக்கு, ஜெ., மறைவுக்கு பின் தான், முக்க…

  14. ஆளும் அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பு ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு அதிகரிப்பு அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பதால், தமிழகத் தில், ஜனாதிபதி ஆட்சி வருவதற்கான சூழல் அதிகரித்து உள்ளது. அ.தி.மு.க.,வினர், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவாளர்கள் தனியாகவும் உள்ளனர். இதில், பன்னீர்செல்வத்திற்கு, ஒன்பது, எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஆனாலும், 'சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' என, கவர்னரை சந்தித்து, பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். அதே நேரம், சசிகலா சிறைக்கு போய் விட்ட தால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சட்டசபை கட்சி தலைவராக, சசி…

  15. ரூ.1 கோடி 'அவுட்' சொகுசு விடுதியில் 8 நாட்கள் இதுவரை ரூ.1 கோடி 'அவுட்' கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, 'கோல்டன் பே' சொகுசு விடுதியில், எட்டு நாட் களாக தங்கியிருக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கு, இதுவரை, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகி உள்ளது. சசிகலா ஆதரவாளர்களாக கருதப்படும், 110-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள், 8ம் தேதி முதல், காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துார் கடலோர விடுதியில், தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, 35 அறைகள் உள்ளன. அவற்றுக்கு, 5,500, 6,600 மற்றும், 9,900 ரூபாய் என, மூன்று வகை கட்டணங்கள் உள்ளன. உத்தேசமாக, 7,500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தாலும், வரிகள…

  16. போயஸ் தோட்டத்தை விடக் கூடாது; தினகரனுக்கு சசிகலா அறிவுறுத்தல் ஜெயலலிதாவுக்குப் பின், அவர் வகித்த போயஸ் தோட்டத்தை நிர்வகித்து கொண்டிருந்தார் சசிகலா. தற்போது அவர் ஜெயிலுக்குப் போய்விட்ட சூழ்நிலையில், போயஸ் தோட்டத்தை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. யாருக்கு செல்லும்? இது குறித்து போயஸ் தோட்டத்து வட்டாரங்களில் கூறியதாவது: ஜெயலலிதா பெயரில் இருக்கும் போயஸ் தோட்டம் இல்ல பராமரிப்பை, இது நாள் வரையில் சசிகலா கவனித்து வந்தார். ஜெயலலிதா இறந்து போன நிலையில், போயஸ் தோட்டம் இல்லம் யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., வட்டாரத்திலு…

  17. கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! குன்ஹா தீர்ப்பு முழு விவரம் இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம் வரை நீதிபதியின் தீர்ப…

  18. குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க முடியாது.. படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க முடியாது!! on: பெப்ரவரி 15, 2017 சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அரசு நிதியில் அவருக்கு நினைவிடம் அமைக்க முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், அவருக்கான சிறை தண்டனை மட்டும் விலக்கிக்கொள்ளப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். இதற்காக அவரது சொத்துக்களை விற்று அபராதத் தொகையை அரசு வசூலிக்க வேண்டும் என்று நீதி…

  19. பெங்களூர் சிறை வளாகம் முன்பு அதிமுகவினர் மோதிக் கொண்டது ஏன்? பெங்களூர் சிறை வளாகம் முன்பு அதிமுகவினர் மோதிக் கொண்டது தொடர்பாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம முன்பு சசிகலா ஆதரவாளர்களின் கார்கள் சில திடீரென தாக்கப்பட்டன. இதன் பரபரப்பு பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கோர்ட்டில் சரணைடந்தனர். இதற்காக சசிகலா உள்ளிட்டோர் கார் மூலமாக சென்னையிலிருந்து பெங்களூரு கிளம்பி வந்தனர். அவர்களுடன் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்தனர். சிறை வளாகம் வந்…

  20. ஸ்ட்ரெச்சரில் ஜெயலலிதா... வழி நெடுக ரத்தம்! தொடரும் அப்போலோ மர்மங்கள் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு என்ன நடந்தது, அதற்கடுத்து அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களிலும் என்ன நடந்தது என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களில் 73 நாட்கள், அங்கேயே இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். இவர் இப்போது அதிரடியான பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதற்கு முன்பாக, அந்த இரவில், அவருடைய வீட்டில் ஏதோ வாக்குவாதம் நடந்துள்ளது. அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் கீழே விழுந்துள்ளார். தூக்கிவ…

  21. சசிகலாவைப் பற்றி நிறைய தெரியும்.. இளவரசியைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சிக்குங்க! on: பெப்ரவரி 15, 2017 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் போயஸ் தோட்ட இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இளவரசி சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார். அவருக்கு 4 சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர் சசிகலாவின் அண்ணன் மனைவியாவார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டள்ள முதல்வர் ஜெயலலிதா தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ரத்த சொந்தங்கள். போயஸ்கார்டனுக்குள் இளவரசி வந்தது ஒரு சோகமான நிகழ்வினால்தான். சசிகலாவின் அண்ணி சொத்துக்குவிப்பு வழக்கின் 4வது குற்றவாளியாகச…

  22. ‘என்ன செய்யப் போகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ - திகில் கிளப்பும் டெல்லி மூவ் சட்டசபைக் குழுத் தலைவராக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. 'எம்.எல்.ஏக்கள் தொகுதிக்குள் செல்லும் வரையில் ஆளுநர் எந்த உத்தரவும் பிறப்பிக்க வாய்ப்பில்லை. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அடுத்து, பெங்களூருவுக்குப் பயணப்பட இருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. புதிய துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் டி.…

  23. சசிகலாவின் மூன்று சபதங்கள் இவை தான்! பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சரணடையப்போகும் சசிகலா, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அப்போது மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார். ’சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன்’, என சசிகலா சபதம் ஏற்றுக் கொண்டதாக அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய சின்னம்மா சபதம் ஏற்றார். — AIADMK (@AIADMKOfficial) February 15, 2017 http://www.vikatan.com/news/tamilnadu…

  24. எதிர்பார்த்தது உள்ளாட்சி...வரப் போகுது சட்டசபை தேர்தல்: ஸ்டாலின் சூலூர் : உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் சட்டசபை தேர்தலே வரும் நிலை ஏற்பட்டுள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அற்ப ஆயுள் அரசு : கோவை மாவட்டம் சூலூரில் திமுக.,வின் மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் இடைக்கால அரசே உள்ளது. இது நிலையான அரசு கிடையாது. இவர்களுக்கு மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ சிந்தனை இல்லை. அதிமுக.,வில் உருவாகி உள்ள 2 அணியில் எந்த அணி, அடுத்து ஆட்சி அமைத்தாலும் அது அ…

  25. அதிமுக அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து கருப்பசாமி பாண்டியன் திடீர் விலகல்! அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கருப்பசாமி, ’என் ஆதரவாளர்களுடன் கலந்து பேசிவிட்டு அடுத்த முடிவை அறிவிப்பேன். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் அழைத்தால் ஏற்பேன். ஆளுநர் சசிகலாவை பதவி ஏற்க அழைப்பதற்கு தாமதப்படுத்தியது நல்லது தான். இல்லையென்றால் ஆறு நாள் முதல்வராக இருந்துவிட்டு, குற்றவாளியாக சிறை சென்றிருப்பார்’,என்றார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.