Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தோடு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தேமுதிக கடந்த 2004ம் ஆண்டு துவங்கப்பட்டது. கட்சி தற்போது 9வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த 9வது ஆண்டு கொண்டாட்டம் இன்று மாலை தூத்துக்குடியில் நடக்கிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் மைத்துனர் சுதீஷ், குடும்பத்தாருடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இது குறித்து தேமுதிக மூத்த நிர்வாகி கூறுகையில், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதாலேயே விஜயகாந்த் திருப்பதி கோவிலுக்கு சென்றார். சுதீஷ் தனது பிறந்தநாளையொட்டி சாமி கும்பிட விஜயகாந்துடன் சென்றார். மற்றபடி கோவிலுக்கு சென்றதற்கு வேறு எந்த…

  2. தஞ்சாவூர்: தமிழகத்தில் லோக்சபா தேர்தலின் போது 3வது அணி அமைய வாய்ப்பு உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என இரு அணிகள் உறுதி. அத்துடன் 3 வது அணி அமையவும் வாய்ப்புள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது. மாநிலங்களில் மாநிலக் கட்சிகள், இடதுசாரி கட்சிகள் வலுவாக உள்ளன. இதனால் மாநிலக் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் இணைந்து 3வது அணியை அமைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. தேர்தலுக்கு முன்போ, பின்போ மூன்றாவது அணியுடன் இணைந்து கூட்டு அமைச்சரவை அமையலாம். தமிழகத்துக்கு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வந்தால் கூ…

  3. இலங்கை கடற்பரப்புக்குள் செல்ல வேண்டாமென இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை! இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறுவதை தவிர்க்குமாறும், அவ்வாறு செல்லும் போது உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமெனவும் தமிழக பொலிஸார் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், கடலோர மாவட்ட மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு கடற்பிராந்தியத்தில், மீன் பிடிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என கோரி இராமேஷ்வரம் மீனவர்கள் கடந்த ஒ…

  4. மத்திய அமைச்சராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்? அதிமுக இரு அணிகளும் இணைய பேச்சு நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் ஆவதாக செய்தி வெளியாகியுள்ளன. தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு அதிமுக இரு அணிகளும் இணைய பேச்சு நடத்த முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கடந்த ஒரு மாதத்தில் முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் பிரதமர் நரேந்திர மோடியை 3 முறை சந்தித்துப் பேசின…

  5. தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் பிரச்னை தீருமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது மாநில அரசு. ஆனால், மின் துறையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதா? தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2014ஆம் ஆண்டு டிசம்பரில் கடைசியாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது (2017ஆம் ஆண்டில் மிகச் சிறிய அளவில் மின் கட்டணம் திருத்தப்பட்டது). ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்…

  6. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 2 சூட்கேஸில் ஆவணங்களை சமர்பித்த அப்போலோ நிர்வாகம்..! ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை அப்போலா நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். முன்னதாக ஜெயலலிதாவுக்கு 75 நாள்களாக அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்த முழுவிவரங்களை விசாரணை ஆணையம், அப்போலோ நிர்வாகத்திடம் கேட்டிருந்தது. இந்தநிலையில், இ…

  7. சென்னை பருவநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை: மாநகரின் ஒரு பகுதி மூழ்கப் போகிறதா? தீர்வு என்ன? நந்தினி வெள்ளைச்சாமி & பிரசாந்த் முத்துராமன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சென்னை மாநகராட்சி, பருவநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கடல் மட்ட உயர்வால் சென்னையில் ஒரு பகுதி மூழ்கும் என்றும், குடிசைப்பகுதிகள் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்புகளைக் கையாள்வதற்காக சி40 கூட்டமைப்பு, நகர்ப்புற மேலாண்மை மையம் (Urban M…

  8. திருப்பூர்: ரஜினி படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தாமல் புதிய கட்சியைத் தொடங்குகின்றனர் அவரது ரசிகர்கள். திருப்பூர் மற்றும் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கட்சிக்கு கொடி மற்றும் பெயரையும் தேர்வு செய்துள்ளனர். திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்எஸ் முருகேஷ் என்பவர்தான் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் 25 ஆண்டு கால கோரிக்கை. சில முறை ரசிகர்களே ரஜினிக்காக கட்சி ஆரம்பித்ததும், அவர்களை ரஜினி விலக்கி வைத்ததும் நடந்திருக்கிறது. இந்த முறை ரஜினி அரசியலுக்கு வந்தே…

  9. ஈழப் போராட்டம் தொடர்பில் கருணாநிதி செய்தது என்ன? on: August 08, 2018 Print Email ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் பாத்திரம் துரோகத்துடன் தொடங்கி துரோகத்துடனேயே முடியப் போகிறது. தமிழகத்தில் போராளி இயக்கங்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. இந்திய உளவுத்துறை இயக்கங்களை பிரித்து வைத்து கையாள சதிகளை முடுக்கி விட்டிருந்த போதும் அதற்குப் பலியாகாமல் இயக்கங்கள் ஓரளவு கருத்துடன்பாடுடன் இயங்கிய காலம் அது. அந்த நேரத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் போராளி இயக்கங்களின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கிலும் அவர்களுக்கு பொருளாதார உதவ…

  10. தமிழகத்தில் தீவிர மூளை காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... தமிழகத்தில் மூளை காய்ச்சல், தீவிர மூளை காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மாநில கேன்சர் இன்ஸ்டிடியூட் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர், மத்திய அரசின் சுகாதார நலத்திட்ட…

  11. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியுற்றது குறித்து திமுக தலைவர் கலைஞர் அறிக்கை: ’’இன்னொரு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒருவர் தோல்வியடைவது கண்டு, மகிழ்ச்சி கொள்வது நாம் பின்பற்றி வரும் நாகரிகத்திற்கு ஏற்புடையதல்ல எனினும், நமது தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை மிருகத்தனமாக வேட்டையாடிய ராஜபக்ஷேயின் தோல்வி நமக்கு ஒருவகை நிறைவையே தரு கிறது என்பதால் வரவேற்கலாம். இந்தத் தோல்வியின் மூலம் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இனப் படுகொலைக்கும், மனித உரிமை மீறல் களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் தக்க தண்டனை தரப்படும்போது தான் இயற்கை நீதி முழுமை பெறும். கடந்த காலங்களில் எல்லா சர்வாதிகாரிகளுக்கும் நேர்ந்த தவிர்த்திட இயலாத முடிவு சரித்திரத்தின் சாகாத படிப்பினையா…

  12. ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை வலியுறுத்தி அ.தி.மு.க மீண்டும் கடிதம் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு அ.தி.மு.க அரசு மீண்டும் கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளது. ஏற்கனவே, எழுவரையும் விடுதலை செய்யுமாறு தீர்மானம் ஒன்றை வலியுறுத்தி தமிழக அரசு ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தது. ஆனால், அதற்கு இன்னும் உரிய பதிலை ஆளுநர் வழங்காதமையால், தமிழக அரசு சாபில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்…

  13. பட மூலாதாரம்,FACEBOOK/COMMUNIST PARTY OF INDIA (MARXIST) 21 அக்டோபர் 2023, 02:15 GMT சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரித் தலைவரான என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட தமிழ்நாடு ஆளுநர் மறுத்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும் மூத்த இடதுசாரி தலைவருமான என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முடிவெடுத்திருக்கும் நிலையில், அது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு உயர் கல்…

  14. [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. இது சிலருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.] தருமபுரியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் அவர். அவரது பெற்றோர் விவசாயக் கூலிகளாக வேலை செய்கிறார்கள். ஆன்லைன் விளையாட்டில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், நாளொன்றுக்கு 18 மணிநேரம் அதை விளையாடும் அளவுக்குச் சென்றுள்ளது. விளைவு, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளார். "என்னையே நான் வெறுக்கிறேன். மொத்தமாக வீணா போயிட்டேன். நான் இருந்து என்ன ஆகப் போகிறது?" என சக நண்பர்களிடம் பேசி வந்தவர், இரண்டு முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். "அந்த மாணவர், உளவியல் ரீதியான முரண்பாடுகளுக்கு (conflict) ஆட்பட்டிருந்தார். மனச்சோர்வு மருந்துகளை…

  15. 30 JAN, 2025 | 02:19 PM மதுரை: திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரிய வழக்கில் முகாமின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் 555 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடும்பங்களில் 943 ஆண்கள் 800 பெண்கள் 289 குழந்தைகள் என 2000-க்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்கள் கடந்த 2002-ம் ஆண்டு முதல் மிகச் சிறிய அளவிலான ஆஸ்பெட்டாஸ் போட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். தற்போது 520-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடந்துள்ளது. முழுமையாக மின்சாரமும் வழங்கப்படுவதில்லை. இதனால் ம…

  16. ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட் அ.தி.மு.க.வில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ ஸ்டார் அந்தஸ்தில் இருப்பார்கள். ஆனால் முதல் முறையாக ஓ.பி.எஸ், நத்தம், எடப்பாடி, வைத்தி, பழனியப்பன் என்று ஐவர் அடையாளம் காட்டப்பட்டனர். இது எப்படி நிகழ்ந்தது என்பதும், இதன் பின் விளைவு எப்படியிருந்தது என்றும் மனக் குமுறலோடு கொட்டித் தீர்க்கின்றனர் ஒரு காலத்தில் கட்சியில் கோலோச்சி நின்றவர்கள். ஐவரணியின் குட்டுக்கள் உடைந்ததின் பின்னணியில், மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ''அப்ரூவர்'' ஆன கதையும் உள்ளது. திகில், திருப்பங்களுடன் நமக்கு கிடைத்த தகவல்களை அப்படியே இங்கு தருகிறோம்.... டான்சி வழக…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதிய வகைகள் அதிக விளைச்சல் தரும் என அரசு கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், கரிகிபதி உமாகாந்த் பதவி, பிபிசிக்காக 9 ஜூன் 2025, 02:37 GMT சமீபத்தில் இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் புசா டிஎஸ்டி அரிசி -1 வகை, புசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஒரு அங்கமான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதே போல் டிஆர்ஆர் 100 அரிசி (கமலா) வகை ஹைதராபாத்தின் ராஜேந்திர நகரில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. "இந்த இரண்டு புதிய வகை விதைகள் 20 சதவிகிதம் வரை விளைச்சலை அதிகரிக…

  18. தொலைக்காட்சி நேர்காணலிலிருந்து வைகோ பாதியில் வெளியேறியது ஏன்...செய்தியாளர் விளக்கம்! சென்னை; சமூக வளைத்தளங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க முடியும் என்பது தான் எனது கேள்வியாக இருந்தது என்று வைகோவை நேர்காணல் செய்த பத்திரிக்கையாளர் ஏ.எல் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது அவரை நேர்காணல் செய்த பத்திரிக்கையாளர் கண்ணன்.' வைகோ அணியை அதிமுகவின் பி டீம் என்றும் அவர் வாக்குகளை பிரிப்பதற்காக ஜெலலிதாவிடமிருந்து 1500 கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பதாகவும் வலைதளங்களில் பேசப்படுவதாக குற்றஞ்சாட்டினார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த வை…

  19. சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி 'அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர வைக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். 'களத்தில் சீமானை அவ்வளவு எளிதாக முதல்வர் புறக்கணித்துவிடவில்லை' எனவும் ஆச்சர்யப்படுத்துகிறார்கள் அவர்கள். " நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. 'தமிழனை தமிழனே ஆள வேண்டும்' என்ற ஒற்றைக் கோஷத்தோடு சீமான் களமிறங்குகிறார். அவரது முழக்கம் எடுபடுமா? என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால், இதுவரையிலும் சீமான் முன்னெடுத்த எந்தப் போராட்டத்தையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?…

  20. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் இந்தியத் தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் தலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவிருப்பதாகவும் அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 7,000 கோயில்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி பத்தாம் தேதியன்று மக்களவையில் பேசிய பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங், இந்தியத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யவிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் 3,691 நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத…

  21. அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு September 6, 2025 12:42 pm தமிழ்நாட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் காலவகாசம் விதித்துள்ள நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் காலவகாசம் வழங்கியிருந்தார். இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செங்கோட்டையன், அதி…

  22. ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். ராமேசுவரம் அருகே மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் கவிராஜ் (27). முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்கள் மலைச்செல்வம் (30), மணிகண்டன் (31). நண்பர்களான மூவரும் மண்டபம் முகாம் பகுதிக்குள் நேற்று இரவு மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கவிராஜின் தலையில் சுத்தியலால் மலைச்செல்வன் தாக்கினார். படுகாயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கவிராஜ் உயிரிழந்தார். இது தொடா்பாக மண்டபம் போ…

  23. காப்பாற்ற போராடிய வனத்துறை... காயம் எப்போது ஏற்பட்டது..? பரிதாபமாக உயிரிழந்த யானை...

  24. மதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை மதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி வீழ்ந்துவிட்ட ஓர் இனம் தன் நிலையிலிருந்து மேல்நோக்கி முன்னேறி எழ வேண்டுமாயின் அது தன் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். நம் முன்னவர்களின் புகழ்மிக்க வரலாற்றைத் தேடிப் போற்றுவதன் மூலமே நம்மை நாம் தேற்றிக்கொள்ளவும், இழிநிலையிலிருந்து மேம்படுதற்கான உந்துதலையும் பெற முடியும். வரலாற்றைத் தொலைத்து விட்ட எந்த ஓர் இனமும் வாழாது; வளராது! எனவே ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு மூ…

  25. ஜெயா இல்லாத சசி இனி என்ன செய்வார்? 80 களில் ஜெயலலிதா அ.தி.மு.க வுக்கு தமிழகம் முழுதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான் முதன்முறையாக சசிகலாவின் அறிமுகம் கிடைக்கிறது. மைலாப்பூரில் ஒரு சாதாரண வீடியோ கவரேஜ்& லெண்டிங் லைப்ரரி வைத்திருந்த சசிகலா நடராஜனுக்கு அந்த தேர்தல் பயணம் முழுக்க ஜெயலலிதாவின் உடனிருந்து அவரது பிரச்சாரப் பேச்சுகளை கவரேஜ் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இப்படித்தான் ஆரம்பமானது இவர்களது நட்பு. பின்னர் அது விருட்சமாக வளர்ந்து சின்னம்மா இல்லாமல் ‘அம்மா’ இல்லை எனும் நிலையை வெகு சீக்கிரத்திலேயே அடைந்தது. ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கையில் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.