Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உதயமாகிறது அம்மா திராவிட முன்னேற்ற கழகம் அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் "அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை,அதற்குள் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பதவி ஏற்கச்சொல்லி எம்.எல்.ஏ க்கள் ,அமைச்சர்கள் என்று பல்வேறு நபர்கள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பொதுச்செயலாளர் பதவி ஏற்கச்சொல்லி வற்புறுத்தி வருவதாக செய்திகள் வருகிறது.இந்த வேலையை சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டமிட்டுபரப்பி வருகிறார். இதில் மேல்மட்ட நபர்களுக்கு பதவியை தக்க வைக்க இப்படி சசிகலாவிடம் சரணடைந்து விடுகிறார்கள்.ஆனால் தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை.இதனால் பல்வேறு மா…

  2. 'வாரிசாக யாரை அறிவித்தார் ஜெயலலிதா?!' -தகிக்கும் ஜெ,.அண்ணன் மகள் தீபா அ.தி.மு.கவுக்குத் தலைமை ஏற்க வருமாறு சசிகலாவிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர் கட்சியின் சீனியர்கள். ' கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலை உங்களால்தான் நிவர்த்தி செய்ய முடியும்' என கட்சி நிர்வாகிகள் அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான ஆலோசனைகளில் தீவிரமாக இருக்கிறார் சசிகலா. அதேநேரம், ' முதலமைச்சர் மரணமடைந்த மூன்றே நாட்களில் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்தும் சொத்துக்கள் குறித்தும் பேசுவது சரிதானா?' என வேதனையோடு பேசுகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெ…

  3. பொதுச்செயலாளர் யார்? இழுபறியில் அ .தி.மு .க. அ.தி.மு.க.வின் அதி­கார மைய­மாக இருந்த அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ரான ஜெய­ல­லிதாவின் மர­ணத்தின் பின்னர் அடுத்த பொதுச் செய­லாளர் யார் என்ற கேள்வி கடந்த சில நாட்­க­ளாக அ.தி.மு.க. தொண்­டர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் மத்­தியில் காணப்­பட்­டது. அ.தி.மு.க. தொண்­டர்­க­ளிடம் மட்­டு­மன்றி, தமி­ழகம் மற்றும் அகில இந்­திய ரீதியில் ஒரு எதிர்ப்­பார்ப்பும் நில­வி­யது. அ.தி.மு.க. யாப்பின் படி அந்தக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ருக்கே சகல அதி­கா­ரங்­களும் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. புதி­ய­வர்­களை சேர்ப்­பது, நீக்­கு­வது, அமைச்­சர்­களை நிய­மிப்­பது, நீக்­கு­வது, தேர்­தலில் போட்­டி­யி­டு­வது, மாவட்ட…

  4. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அவரின் மரணம் குறித்து இன்று வரையிலும் பல்வேறு மர்மங்கள் நீடித்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக ஜெயலலிதாவின் உயிரிழப்புக்கு அவரின் நெருங்கிய தோழியான சசிகலாவே காரணம் எனவும், அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார், அவரின் கால்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதற்கு வைத்தியசாலை உள்ளிட்ட தரப்புகள் மறுப்பு வெளியிட்டு வந்தமையும…

  5. அதிமுக பொதுச் செயலாளர் இன்னும் முடிவாகவில்லை: பொன்னையன் பொன்னையன் | கோப்புப் படம்: வி.கணேசன் அதிமுக மிகப் பெரிய கொள்கைக் கோட்டை. அதைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த உள்ள பொதுச் செயலாளார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பொன்னையன் கூறியதாவது: ''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்படுகின்றன. அவை உண்மையற்ற செய்தி. அவை எல்லாம் வதந்தியே. அவற்றில் துளியும் உண்மையில்ல…

  6. நிரப்ப முடியாத இடைவெளியில் நீடிக்கப்போவது யார் ? ஜெய­ல­லி­தா­வுக்கு அடுத்து அ.தி.­மு.­க.வின் தலைமை யார் ..-? எதிர்­பார்ப்­புடன் நாடே காத்­தி­ருக்­கின்­றது. ஜெய­ல­லி­தாவின் வெற்­றி­டத்தை நிரப்ப கூடிய வகையில் அ.தி.மு.க.வில் எவரும் இல்­லாத போதிலும் அதன் அடுத்த தலை­மையை ஜெய­ல­லி­தாவின் நிழ­லா­கவும் உற­வா­கவும் கடை­சி­வரை இருந்த அவ­ரது தோழி சசி­கலா கைப்பற்­றக்­கூடும் என்­பதே அனை­வ­ரது ஊக­மா­கவும் உள்­ளது. ஆயினும் , அ.தி.மு.க. தலைமை அரி­ய­ணையில் ஜெய­ல­லி­தாவின் தோழி சசி­கலா அமர்த்­தப்­ப­டு­வாரா அல்­லது நிரா­க­ரிக்­கப்­ப­டு­வாரா என்ற விவாதம் வீதி­தோறும் நடை­பெற்­று­வ­ரு­கின்­றது. அ.தி.மு.க.வில் தன்­னி­க­ரில்லா தலை­வ­ராக விளங்­கிய ஜெய­ல­லி­தாவின் மறை­வ…

  7. பொதுச் செயலாளர் பதவிக்கு எம்.ஜி.ஆர் வைத்த ‘செக்’! - சீனியர்களை வளைக்கும் சசிகலா போயஸ் கார்டனில் கட்சியின் சீனியர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் சசிகலா. 'அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு எதிரான மனநிலை உள்ளவர்களை சமாதானப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன" என்கின்றனர் அ.தி.மு.க. நிர்வாகிகள். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அ.தி.மு.கவில் அதிகாரம் பொருந்திய பொதுச் செயலாளர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் சசிகலா. இரண்டாவது நாளாக நேற்றும் போயஸ் கார்டனில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். 'தன…

  8. கடைசி ஆசையை நிறைவேற்றாத சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் நினைவு திரும்பியிருக்கிறது. அப்போது, மருத்துவர்களிடம், நான் இங்கே வந்து எத்தனை நாள் ஆகிறது? என்று கேட்டாராம். டாக்டர்கள் அதற்கு பதில் சொன்னவுடன், 'ஐய்யோ..இவ்வளவு நாள் ஆகிவிட்டதா? மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? உடனே என் புகைப்படத்தையும், அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்' என்றாராம். இதை யாரிடம் சொல்வது என்று குழம்பிப்போன டாக்டர்கள், அந்த அறையை விட்டு வெளியே வந்து சசிகலா தரப்பினரிடம் சொல்லியிருக்கிறார்கள். 'சரி... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். 'இப்போதுதான் அனுதாபம் கூடிக்கொண்டிருக்…

    • 23 replies
    • 4.1k views
  9. அதிமுகவை வசப்படுத்த தீவிர முயற்சி: வெல்லப் போவது பாஜகவா? காங்கிரஸா? - காய் நகர்த்தும் தலைவர்கள் கோப்பு படம் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரு மான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியை வசப்படுத்த காங்கிரஸும், பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் 75 நாட்களாக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு காலமானார். அவரது மரண அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 31 அமைச் சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது. செல்வாக்கு மிக்க ஜெயலலிதாவின் …

  10. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 70 நாட்களுக்கு மேலாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது 68வது வயதில் இன்று இரவு காலமானார். இந்நிலையில். போயஸ்கார்டன் இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறவுள்ளதாகவும், பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், நாளை மாலை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லட…

  11. ஏழைகள், பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி புகழஞ்சலி ஏழைகள், பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், "ஜெயலலிதாவின் மறைவு ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது. அவரது மறைவு, இந்திய அரசியலில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. குடிமக்களுக்கு நெருக்கமான ஜெயலலிதா, ஏழைகள் - பெண்களின் நலன் மீது அக்கறை கொண்டு எப்போதுமே தூண்டுகோலாகத் திகழ்பவர். இந்தத் துயர்மிகு தருணத்தில், தமிழக மக்களுக்காக பிரார்த்திக்கிறேன். இந்தப் பேரிழைப்பைத் தாங்கக் கூடிய வல்லமையை அவர்களுக்குத் தருமாறு ஆண்டவனை வேண்டுகிறேன். பல தருணங்க…

  12. ஜெயலலிதா இறந்த பின் எழுந்துள்ள சர்ச்சை- எரிப்பதா , புதைப்பதா? எரியூட்டுவதா, புதைப்பதா ? இறந்தவர்களின் உடலை அகற்ற இரு வழிகளுமே மனித நாகரீகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிகள் தான் என்றாலும் , டிசம்பர் 5ம் தேதி காலமான , தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல், அடக்கம் செய்யப்பட்டது இந்திய ஊடகங்ளில் ஒரு பேசு பொருளாகிவிட்டது. எரித்தல், புதைத்தல் - இறந்த பின்னும் ஜெயலலிதா குறித்த சர்ச்சை பிராமண குலத்தில் பிறந்தவரான ஜெயலலிதாவை அவரது குல வழக்கப்படி தகனம் செய்திருக்கவேண்டும்; அடக்கம் செய்தது அந்த சமூகப் பழக்கத்தை மீறியதாகும் என்று இந்த ஆசாரங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் வாதிடுகின்றனர். ``அவர் பிராமண ஐயங்கார் குடும்பத்தைச் சேர…

  13. இணைய களம்: மறைந்தவர்களும், மக்களின் நம்பிக்கையும்... கோப்புப் படம்: தி இந்து (ஆங்கிலம்) விநாயக முருகன் ஒருவர் இறந்ததும் உடனே அவரை விமர்சனம் செய்யலாமா என்று சில நண்பர்கள் நேற்று வருத்தப்பட்டார்கள். அதனால், இந்தப் பதிவை எழுத வேண்டியுள்ளது. இன்று என்னவெல்லாம் நடக்கிறதோ, அதைவிடப் பன்மடங்குக் கூத்துகள் எம்ஜிஆர் இறந்தபோது நடந்தன. உண்மையில், எம்ஜிஆர் அமெரிக்காவிலேயே இறந்துவிட்டார் என்றும், அவரை அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள் என்றும், பிறகு அவரைப் போலவே இருக்கும் ஒரு சினிமா டூப்பை அழைத்துவந்து சில நாட்கள் வைத்திருந்து, பிறகு சொத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவரைக் கொன்றுவிட்டார்கள் என்றும் ஒரு …

  14. அதிமுகவை யார் வழி நடத்துவது?- தமிழக அமைச்சர்கள் ஆலோசனை சென்னை போயஸ் கார்டனில் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வெளியே வரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | படம்: ம.பிரபு போயஸ் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் சசிகலா, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவை வழி நடத்தப் போவது யார் என்பதை முடிவு செய்ய, 2-வது நாளாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அதிமுக பொதுச் செயலாளரா கவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி…

  15. மாறன் சகோதரர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத சஞ்சார் நிகம் லிமிட்டடின் (பிஎஸ்என்எல்) உயர்தொழில்நுட்ப தொலைத்தொடர்பு வசதிகளை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சிபிஐயின் முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இரண்டு தலைமை பொது மேலாளர்கள், தயாநிதிமாறனின் கூடுதல் தனிச் செயலர், ஒரு தனியார் தொலை…

  16. ‘ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெ,.அண்ணன் மகள்?’ - சசிகலா எதிர்ப்பின் அடுத்த திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவர் தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 'முதல்வர் இடத்தில் தீபாவை அமர வைப்பதற்காக, அவருடைய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில், அவரைச் சந்திப்பதற்காக இரண்டு முறை முயற்சி செய்தார் அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கொந்தளித்தவர், மருத்துவமனை வாசலிலேயே ஆவேசமாகப் பேசினார். கடந்த 6-ம் தேத…

  17. அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை பிடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், ஜெய லலிதாவின் தோழி சசிகலா, சமரசம் செய் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தனக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய வர்களுக்கு, கட்சியில் புதிதாக துணைச் செயலர் பதவியை உருவாக்கி வழங்கவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டை யனுக்கு மந்திரி சபையில் இடம் தரவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மறைந்த ஜெயலலிதா வகித்த பொதுச் செயலர் பதவி, அ.தி.மு.க.,வில் காலியாக உள்ளது. கட்சியில் அதிகாரம் மிகுந்த பதவி என்பதோடு, பொதுச் செயலராக வருபவர், முதல்வராக வர வாய்ப்பு அதிகம் என்பதால் அப்பதவியை பெற போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்ததும், உடனடியாக முதல்வரை தேர்…

  18. போயஸின் திடீர் செல்லப் பிள்ளை தீபக் ஜெ., சொத்துக்கள்; பகீர் திட்டங்கள் சென்னை: ஜெயலலிதா மறைந்து விட்டார். அவர் இதுவரையில் சேர்த்து வைத்த சொத்துக்கள் என்னாகும் என்பது குறித்த விசாரணைகள் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக துவங்கி உள்ளது. குறிப்பாக, அவர் இத்தனை நாட்களும் வாழ்ந்து வந்த போயஸ் தோட்டம் என்னாகும் என்பது குறித்த சிந்தனை பலரது எண்ணங்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., உள் வட்டாரங்களை நன்கு அறிந்தவர்கள் கூறியதாவது: சிறுதாவூர் மற்றும் பையனூரில் உள்ள பங்களாக்கள், போயஸ் தோட்டம், கோடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் உள்பட பல்…

  19. அஞ்சலி சொல்லக் கூட ஆண்மை இல்லையா...! முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவரின் பிறந்த நாளாகட்டும், தேர்தல் வெற்றி ஆகட்டும், சிறைக்கு போய் திரும்பினாலும் பல நாளிதழ்கள் பக்கம் பக்கமாய் வாழ்த்து விளம்பரங்கள் போட்டு திணறிடிப்பார்கள். தங்கத் தலைவி, புரட்சித்தலைவி, அம்மா, நிரந்தர முதல்வர் என ஆயிரம் ஆயிரம் அடைமொழிகளில் பேப்பரை நனைத்திருப்பார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா தயவில் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் தான். இதை ஏன் இப்போது பதிவிடுகிறேன் என்றால்... அப்பேர்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றோடு 48 மணி நேரத்தை தாண்டி விட்டது. 5ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு அவர் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப…

  20. ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள் - தொடர் 1 செல்வி ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வந்து, தன்னுடைய ஆளுமைத்திறனை வெளிப்படுத்தினார். மக்களால் முதல் பெண் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர். 1999-ல் இருந்து கட்சிக் கூட்டங்களுக்கோ, இதர விசேஷங்களுக்கோ எப்போது சென்றாலும் தன் கட்சியின் செயல்பாடுகள் பற்றியும், எதிர்க்கட்சி செய்யும் தவறுகள் பற்றியும் குட்டிக்கதைகளாகச் சொல்ல ஆரம்பித்தார். அந்தக் கதைகள், நீதிக்கதைகளாகவும், புராணக்கதைகளாகவும், தழுவியக் கதைகளாகவும் இருக்கும். அவர், இதுபோல் 100-க்கும் மேற்பட்ட கதைகளைச் சொல்லியிருக்கிறார். அதில் சிறந்த 10 கதைகளின் தொகுப்பை இங்கே தொடர்களாகப் பகிரவிருக்கிறோம். இத…

  21. “ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களில் உடன் இருந்தவர்களை விசாரிக்க வேண்டும்!” ஆவேச சசிகலா புஷ்பா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா-வின் மரணத்தில், சந்தேகமிருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பலவித சந்தேக கணைகளை வீசி வருகின்றனர். இதில், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பேசிய ஆடியோ வாட்ஸ் அப் ஒன்றும் வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்த ஆடியோவில் இருக்கும் குரல் அவருடையதுதானா என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், (8-12-16) கோவையில் அதனை அவர் உறுதி செய்துள்ளார். ஜெயலலதாவின் மரணத்தில் சந்தேகம்! ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில், எங்களுக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஜெயலலிதாவை ஒருமுறைகூட நேரில் காட்டவில்லை. ஒரு …

  22. சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகிவிட்டதா? இந்தியாவின் மிக துணிச்சலான மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகலா நடராஜன். அவருக்கு வயது 60. ஜெ., மறைவுக்கு பிறகு அடுத்தது என்ன என்பது குறித்து : ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால் பிடிக்க முடியாது - ஞாநி சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகுமா? தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சசிகலா, கள்ளர் என்னும் பலம் பொருந்திய பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தமிழக அரசின் …

  23. அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்! சல்லடைப்போட்டு தேடும் நிபுணர்கள் சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வாரு அறையாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையால் ஊழியர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. உடல் நலக்குறைவால் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு கிரீஸ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நாளில் இருந்தே ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகள் அவ்வப்போது எழுந்தது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ஆவேசமும், பதற்றம் நிறைந்து காணப்பட்டது. இதனிடையே…

  24. தேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்! நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பதிவுப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி: நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் கடும் பீதி அடைந்துள்ளன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும், அதன்படி அந்தக் கட்சிகள் தேர்தலில் பெறும் வாக்கு சதவீதம் வெற்றி பெறும் இடங்கள் ஆகியவற்றை பொறுத்து மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சிகள…

  25. ஆட்டத்தை தொடங்கினார் சசிகலா... போயஸ் கார்டனில் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அதிரடி ஆலோசனை! சென்னை போயஸ் கார்டனில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அடுத்த பொதுச்செயலர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை கையில் எடுத்திருக்கும் சசிகலா அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுகவின் எதிர்காலம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைக்க சசிகலா வெளிப்படையாக அரசியல் களத்துக்கு வர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேரடி அரசியல் இல்லை? ஆனால் உடனடியாக நேர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.