தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
மக்கள் நலன்கருதி உண்மை வெளியிடப்பட வேண்டும் இ ன்று தமிழக மக்களிடம் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரிடமும் எழுந்திருக்கும் ஒரே கேள்வி, தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்படி இருக்கிறார், என்பதுதான். ஆனால், பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உண்மையான நிலைமை என்னவென்பதை ஆதாரபூர்வமாக பொறுப்பு வாய்ந்தவர்கள் இதுவரை வெளிப்படுத்தாததால் அனைவரும் குழப்பத்திலும், சந்தேகத்திலுமே இருக்கின்றனர். பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன. அப்பலோ வைத்தியசாலை தலைவர் டொக்டர் பிரதாப் சி. ரெட்டி ஒன்று சொல்கிறார். அ.தி.மு.க. முக்கியஸ்தர்களான பொன்னையன் மற்றும் சி.கே.சரஸ்வதி போன்…
-
- 0 replies
- 393 views
-
-
கார்டன் திரும்புகிறாரா முதல்வர் ஜெயலலிதா?! - அப்போலோ அலர்ட் 'அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் ஆகலாம்' என்ற தகவலால் கார்டன் வட்டாரத்தில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. ' முதல்வர் வீடு திரும்புவது குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 57 நாட்களைக் கடந்து, நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். ' காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைபாடு' என தொடக்கத்தில் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு, நுரையீரல் தொற்று, சிறுநீரகத் தொற்று என அடுத்தடுத்த சிரமங்களுக்கு ஆளானார். இதையடுத்து, முதல்வருக்கு சிகிச்…
-
- 3 replies
- 560 views
-
-
காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள் திருப்பரங்குன்றம் நிலவரப்படி காலை 9.30 மணி நிலவரப்படி 18% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. தஞ்சை தொகுதியில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சையில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது இதனால் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. அரவக்குறிச்சி வாக்குச்சாவடியில் 96 வயதான ஒரு பாட்டி ஓட்டளிக்க வந்திருந்தார். புதுச்சேரி, நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் 9.11 மணி நிலவரப்படி 18.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. http://www.vikatan.com/news/politics/72853-people-coming-to-vote.art
-
- 2 replies
- 587 views
-
-
சாதா திருடர்கள் மாட்டும் போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு திருடனைப் பிடி என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல் கலாம் கனவு கண்ட, இயக்குநர் ஷங்கர் கிராபிக்ஸாக செய்து பாரத்த இந்தியக் குடிமகன் என்று மக்களும் அதை மெய்மறப்பார்கள், ஆதரிப்பார்கள். அம்பானி, அதானி, டாடா போன்றோர் ஸ்பெஷல் திருடர்கள் என்பதால் அவர்களெல்லாம் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தை இயக்குபவர்கள், வெளிப்படையாக பேசமாட்டார்கள். சினிமா உலகம் இன்னும் பழைய சென்டிமெண்டுகளில் முக்குளிப்பதால் அங்கே நட்சத்திரங்களுக்கு அறிவு கம்மி. நவம்பர் 8 அறிவிப்பு வந்த உடனேயே, “புதிய இந்தியா பிறக்கட்டும், ஜெய் ஹிந்த்” என்று ரஜினி, மோடியின் க…
-
- 1 reply
- 917 views
-
-
மை வச்சா மட்டும் போதாது... நாமம் போடுங்க... பச்சை குத்துங்க- சில யோசனைகள் சென்னை : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து மூட்டை மூட்டையாக கறுப்பு பணத்தை சேமித்து வைத்திருந்தவர்கள் பலருக்கும் தூக்கம் தொலைந்து போனது. வீட்டுக்காரருக்கு தெரியாமல் சேர்த்து வைத்திருந்த சில ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றுவது என்ற யோசனையிலேயே சமையலில் உப்பு போட மறந்து விடுகின்றனர். மாமியாருக்குக் கூட தெரியாமல் பணத்தை மாற்ற வேண்டுமே என்று பரபரப்பில் இருப்பவர்களுக்கு மத்தியில் தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது மத்திய அரசு. கூட்டம் கூட்டமாக வங்கி வாசலுக்கு படையெடுத்து வருபவர்களை தடுக்க என்ன செ…
-
- 10 replies
- 5.2k views
-
-
பிரதமருடன் அ.தி.மு.க எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க எம்.பி.க்கள் இன்று திடீரென சந்தித்து பேசினர். கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கடையினர் நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர்கள் தினேஷ், அரவிந்தன் காயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா- இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி அளித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …
-
- 0 replies
- 385 views
-
-
கோப்புப் படம்: நாகர கோபால். ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உதவி மையம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் சந்தேங்களுக்கு / கேள்விகளுக்கு விளக்கும் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பின்வரும் தொடர்பு எண்களை அணுகலாம்: 044 25381390/ 25381392 என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவி…
-
- 11 replies
- 1k views
-
-
ஜெயலலிதா வீடு திரும்புவதில் தாமதம் ஏன்?- அப்போலோ அப்டேட்ஸ்! முதல்வர் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 55 நாட்கள் கடந்து விட்டன. அக்டோபர் 29-ம் தேதி தீபாவளி தினத்தன்றே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடுவார். தீபாவளியை போயஸ் கார்டன் வீட்டில் கொண்டாடுவார் என்றெல்லாம் ஊடகங்களிலும் பரவலாக தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா வீடு திரும்ப ஏதுவாக, அவரது வீட்டில் சிறப்பு மருத்துவ வசதிகளுடன் கூடிய அறை உருவாக்கப்பட்டுள்ளது. லிப்ட் வசதி அதற்கேற்ப செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. தொடக்கத்தில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டாலும், இங்கிலாந்து டாக்டர் அப்போலோவுக்கு வருகை த…
-
- 2 replies
- 833 views
-
-
துப்பாக்கி சூட்டில் மீனவர்கள் காயம்: இலங்கை கடற்படை அட்டூழியம் காரைக்கால், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், காரைக்காலைச் சேர்ந்த தினேஷ், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். காயம் அடைந்த தினேஷ், அரவிந்தன் ஆகியோர் ஜிப்…
-
- 0 replies
- 349 views
-
-
‘கார்டன் திரும்புவதை எப்போது உறுதி செய்வார் ஜெயலலிதா?!’ -தவிக்கும் அப்போலோ; கலங்கும் சசிகலா அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 55 நாட்களாக தங்கியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ' முதல்வர் உடல்நிலையில் ஏற்ற, இறக்கம் இருப்பதால் கார்டன் திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். தமிழக முதல்வர் ஜெயலலிதா நோய்த் தொற்றின் காரணமாக, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை வாசலில் தொண்டர்களின் வழிபாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பெயல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால், நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டார் ஜெயலலித…
-
- 0 replies
- 428 views
-
-
‘தமிழ்நாட்டிலேயே புலிகளுக்குப் பயிற்சி’ “ஜூலை 1983 தமிழர் எதிர்ப்புக் கலவரங்களின் பின்னர், தமிழ் நாட்டுக்கு தமிழ் அகதிகள் வருகையும் தமிழ் நாட்டு அரசாங்கத்துக்குத் தெரியக்கூடியதாக அதன் அனுசரணையுடன் தமிழ் கிளர்ச்சியாளர்கள் பயிற்றுவித்தலும் தொடங்கியது. இந்த வகையில், தமிழ் நாட்டின் நடவடிக்கைகள் இந்தியாவின் நலனுக்கு ஏற்றதல்ல என புதுடெல்லி உணர்ந்த வேளையில்தான், 1984இல் இந்திய தேசிய புலனாய்வு முகவரங்கள், அவர்களின் பயிற்சித் திட்டங்களைத் தொடங்கின” என, “ஒப்பரேஷன் பவான்: IPKF உடன் விமானப்படையின் வகிபாகம்” எனும் தனது நூலில், முன்னாள் விமானப்படை தளபதி பாரத் குமார் கூறியுள்ளார் என, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ…
-
- 1 reply
- 643 views
-
-
'மறுபிறவி எடுத்துள்ளேன்' - முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருக்கும் மக்கள் அதிமுக-வுக்கு வாக்களிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவர் மேலும், 'அதிமுகவின் வெற்றியை தனது வெற்றியாகக் கருதி ஓட்டளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனது உடல்நலம் குறித்து அவர்,'மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன். இறைவனின் அருளால் விரைவில் வீடு திரும்புவேன். சீக்கரமே முழு உடல்நலம் பெற்று வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன். ஓய்வு நான் அறியாதது, உழைப்பு என்னை நீங்காது. மக்களின் அன்பு இருக்கும் வரை எனக்கு எந்த குறையும் இல்லை' என்றுள்ளார். …
-
- 1 reply
- 847 views
-
-
பிரச்சினைகளை மறக்க வைத்த 500, 1000 ரூபா நாணயத் தாள்கள் இ ன்றைய நிலையில் தமிழகம் மற்றும் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகப் பிரதானமாக பேசப்படுவது 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியாகாதென்று பிரதமர் மோடி அறிவித்ததாகும். அடுத்தது அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவர் தோற்கடிக்கப்பட்டு, அதிரடியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாகும். இந்த இரண்டு விடயங்களும் தான் தமிழகத்தின் நகரம், கிராமம் மற்றும் பட்டித்தொட்டியெல்லாம் பேசப்படும் விடயமாக உள்ளன. இந்த விடயங்கள் தமிழகத்தின் உள்ளக அரசியல் மற்றும் பொதுப் பிரச்சினை…
-
- 0 replies
- 461 views
-
-
வந்தவாசியில் ரூ.2000 ஜெராக்ஸ் கொடுத்து சரக்கு வாங்கி ஏமாற்றிய குடிமகன்!வந்தவாசி: மூன்று நாட்களாகவே புழக்கத்தில் உள்ள புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்து டாஸ்மாக்கில் 2 குவாட்டர் வாங்கிவிட்டு மீதி பணத்தையும் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார் குடிமகன் ஒருவர். இதனால் டாஸ்மாக் ஊழியரை போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி இந்தியன் வங்கி கிளையில்,மருதாடு டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஒருவர் நேற்று காலை வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை செலுத்தினார். பணத்தை வாங்கிய வங்கி அலுவலர் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை ஆய்வு செய்துள்ளார். அப்போது, சந்தேகப்படும்படியாக இருந்த புதிய 2000 ரூபாய் நோட்டை தனியாக எடுத்து ஆய்வு செய்துள்ளார். …
-
- 0 replies
- 726 views
-
-
-
- 0 replies
- 530 views
-
-
தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் மீண்டும் அனுமதி: டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம் தனி வார்டில் இருந்த முதல்வர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரண மாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலை யில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரின் ஆலோ சனையின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு தொடர்ந்து பிசியோ தெரபி சிகிச்…
-
- 1 reply
- 569 views
-
-
தமிழகத்தில்... "மீத்தேன் வாயு" எடுக்கும் திட்டம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு. தமிழகத்தில், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிகமாக இருப்பதாக கூறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதற்கு நடுவேயும், குத்தகை அடிப்படையில் நிலங்களை அரசு கையகப்படுத்தி வந்தது. ஆனால் போராட்டங்களால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் நில கையகப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்த நிலையில், டெல்லியில…
-
- 0 replies
- 923 views
-
-
மக்கள் ஏன் ஓட்டுக்கு பணம் வாங்குகிறார்கள் .? அரே வெள்ளைய தேவா முக்கியமான கேள்வி இது ..? சமீபத்தில் தேர்தல் நடக்க இருக்கும் தஞ்சாவூர் அரவகுறிச்சியில் .இன்றே புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக பிடிக்கபட்டதாக செய்திகள் வருகின்றன .. ஆரம்பிக்கவே இல்லை அதற்குள்ள அலபறை !! அவனவன் பேங்கு முன்னால் லைனில் நிக்கறான் .. இவனுங்களுக்கு மட்டும் எப்படி ..? எப்படி இருந்தாலும் ஆட்டைய போட போகிறார்கள் நாம முன்கூட்டிய வாங்கி வச்சி கொள்ளுவம் என்ற் மனநிலை.. புண்ணியம் சேர வழி .. இந்த திருட்டு பயல்கள் இயற்றிய சட்டத்தின் படி இன்கம் ரேக்ஸ் குடுத்தால் அது உரியவர்களுக்கு சேர்ந்ததா ? என்பது மிகபெரிய கேள்விகுறி .. கேட்டால் எங்களின்ட காசில் ரோடு போடுறாஙக்ளாம் .. உண்மையிலே கிந்தியாவ…
-
- 2 replies
- 660 views
-
-
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டு, வங்கிப் பணிகளும் ஒரு நாள் நிறுத்தப்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், வரும் சனிக்கிழமை (நவம்பர் 12) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13 ஆகிய இரண்டு தினங்களும் இந்தியா முழுவதும் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த இரண்டு தினங்களும் முழுமையான சேவைகளை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சுங்கக் கட்டணம் இடைநிறுத்தம் இதனிடையே, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை வரும் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை இடைநிறுத்தி வைக்க அரசு மு…
-
- 0 replies
- 375 views
-
-
தண்ணீரின்றி கருகிய பயிர்கள்.. காவிரி டெல்டாவில் இதுவரை 5 விவசாயிகள் மரணம்.. தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மரணம் தொடர்கதையாகி வருகிறது. அடுத்தடுத்து அதிர்ச்சியில் விவசாயிகள் மரணமடைந்து வருகின்றனர் கருகிய நெற்பயிரைக் கண்டு மரணமடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜீவாதாரமே விவசாயம்தான். ஜூன் மாதம் வரவேண்டிய காவிரி நீர் வராத காரணத்தால் கடந்த சில மாதங்களாக குறுவை பொய்த்துப் போக, காலம் தாழ்ந்து வந்த காவிரி நதிநீரை நம்பி சம்பா பயிரிட்டனர். வடகிழக்குப் பருவமழை கை கொடுக்கும் என்று நம்பிய நிலையில் மழையும் இன்னும் சரிவர பெய்யவில்லை. கடன்வாங்கி பயிரிட்ட நெற்பயிர்கள் கருகியதுதான் மிச…
-
- 1 reply
- 587 views
-
-
'எங்கள் ஆதரவு விஜயகாந்துக்கே....!' - வைகோவை ஓரம் கட்டுகிறதா மக்கள் நலக் கூட்டணி? தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தைப் பற்றி வைகோ தெரிவித்த கருத்துக்கள் மக்கள் நலக் கூட்டணிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. 'மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் விஜயகாந்த் கேட்டால், அவரை நாங்கள் ஆதரிப்போம்' என்கின்றனர் வி.சி.க மற்றும் இடதுசாரிகள். தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு வருகின்ற நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. ' தேர்தலில் போட்டியிட விரும்புகிறோம்' என சி.பி.எம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தாலும், மக்கள் நலக் கூட்டணியின் இதர தலைவர்களிடம் இதற்கு…
-
- 2 replies
- 699 views
-
-
அம்மா.... அப்போலோ... அ.தி.மு.க.... ரத்தத்தின் ரத்தங்களின் மனநிலை!? #JVBreaks (வீடியோ!) ஜெயலலிதாவின் அப்போலோ வாசம் 40 நாட்களைக் கடந்துவிட்டது. அரசு இயந்திரம் வழக்கம்போலச் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அமைச்சர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், தொண்டர்களின் மனநிலை என்ன தெரியுமா ? ரத்தத்தின் ரத்தங்கள் தெளிவாக இருக்கிறார்களா அல்லது தங்களது தலைமை பற்றித் தெரியாமல் இருக்கிறார்களா ? ஒருபக்கம், காவடி... பால்குடம்... மறுபக்கம், அலகு குத்துதல்... மண்சோறு... என தங்களது பிரார்த்தனைகளை ஆரம்பித்துவிட்டார்களே? இவைதானே கர்நாடக நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு விசாரணையின்போதும் நடந்தது. இதில் என்ன வித்திய…
-
- 0 replies
- 506 views
-
-
ஜெ. சுகவீனத்தால் கவலை... நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் கவலையில் இருந்த நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். பின்னர் அவர் அரசியலில் குதித்தார். கடந்த 1998ல் திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ராமராஜன் எம்.பி., ஆனார். தொடர்ந்து அதிமுகவில் அவர் உறுப்பினராக உள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சென…
-
- 1 reply
- 527 views
-
-
இந்தியனும் நாங்களும் அண்ணன் தம்பிகளாம் ? உணவு பாதுகாப்பு சட்டம் தமிழர் வாழ்வில் அரிசி இல்லாத ஒன்று நினைத்து பார்க்க இயலாது. இந்த அரசியலுக்கு வருவம். அதாவது நாம இங்க நெல்லை விளைவிப்பமாம் .இவனுங்க மத்திய அரசு வாங்கிட்டு போய்விடுவார்களாம்.. கேட்டால் மத்திய தொகுப்பாம் அதை அரிசியாக மாற்றி சட்டீஸ்கருக்கு சலுகை விலையில் கொடுப்பார்களாம்..இங்க தமிழக அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழைக்களுக்கு அதாங்க ரேசன் கார்டு மூலம் கொடுக்க கூடிய அரிசிக்கு கிலோ ஒன்று ரூபாய் 22 என்று எங்களிடம் வாங்கி நீங்கள் உங்களின்ட ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்க என்கிறது கிந்திய அரசு .. அதாவது தேனை எடுப்பவன் ஒருத்தன் நக்கி தின்பவன் இன்னோருத்தன்.. கேட்டால் நாம் அனைவரும் கிந்தியர்கள் சகோதர்கள் ஒ…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் 'தலையாட்டாத' மாநில முதல்வர்களென தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சிலரைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அந்த வகையில் ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்து வந்த மத்திய அரசின் மின்சார சீர்திருத்தத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஜெயலலிதா இல்லாத அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதையே இது சுட்டிக்காட்டுக…
-
- 0 replies
- 462 views
-