Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by relish,

    வணக்கம் சிறுதொழில் முனைவோர் என்ற இணையதளம், தமிழ் மக்கள் ஆகிய நாம் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெரும் நோக்கொடும், புதிய தொழில் வாய்ப்பு, புதிய தொழில் நுட்பம், விவசாய நுட்பம், சந்தை நிலவரம், போன்றவைகளை ஒரே இடத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்ந்யூஸ்.ஆசியா குழுமதினால் தொடங்கப் பெற்றது ஆகும். இந்த தளத்தில் நீங்களும் பங்களிக்கலாம். எங்களுக்கு செய்திகளையும், கட்டுரைகளையும் அனுப்புங்கள். அது நம் தமிழ் சமூகத்திற்கு பயன்படுமே என்றால் நாங்கள் உலகத்திற்கு அதை கொண்டு சேர்க்கிறோம். “வாருங்கள் வளர்வோம்” என்று கூறி அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறோம். நன்றி. வேண்டுகோள்: எமது இணையத்தை தங்கள் தளத்தில் இணைக்க வேண்டுதல். Website url : http://…

  2. ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம்: சீமான் அதிரடி! தேனி: நான் முதல்வரானால் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குவேன் என்று தேனியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். வருகின்ற சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று தேனியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சீமான் பேசும்போது, ''130 கோடி தமிழன் இருந்தும், தனியாக வாழ ஒரு நாடு இல்லாமல் இருக்கிறோம். இந்த நிலைக்கு காரணம், இதுவரை நம் இனத்தின் தலைவன் ஒருவன் நம்மை ஆளாததே. இந்தியை எதிர்ப்பதுபோல் ஆட்சியை பிடித்த தி.மு.க., இந்தியை திணித்த காங்கிரசிடமே கூட்டணி வைத்தது. …

  3. சென்னையில் புறக்கும் ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்! (படங்கள்) சென்னை: சென்னையில் புறக்கும் ரயில் கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இன்று நண்பகல் 12.45 மணிக்கு பறக்கும் ரயில் புறப்பட்டு சென்றது. கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத…

  4. தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி, நான்கு கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி திருவாரூரில் திங்கள்கிழமை (அக். 5) முறைப்படி அறிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்."மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சிப் பயணம்' என்ற பெயரில், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை தொடங்கினார். முன்னதாக, அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக வர வேண்டாம் என்று அதிமுகவுக்கும், அதிமுக வரக் கூடாது என்று திமுகவுக்கும் தமிழக மக்கள் வாக்களிக்கின்றனர். இந்த 2 திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்று மக்கள் எண்ணுகின்றனர். இந்த மாயை…

  5. தற்கொலைக்கு முயற்சி செய்த சுரேஷ்குமார் மீது "தற்கொலை முயற்சி" மற்றும் "கொலை மிரட்டல்" ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சித்திரவதை முகாமிலிருந்து கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர் தமிழக காவற்துறையினர். எனினும், மேற்படி வழக்கை ஆராய்ந்த நீதிபதி "இடுப்பிற்குக் கீழ் இயங்காத ஒரு நபர் எவ்வாறு கொலை மிரட்டல் விட முடியும்" என்றும் "அவருக்கான உதவியாளரை நியமிக்காத பட்சத்திலேயே மனவிரக்தி அடைந்து தனது கையை அறுத்துக் கொண்டார்" எனவும் கூறிய நீதிபதி அவர்கள்.... " இவ்வாறானவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து நீதியைக் கேவலப்படுத்த வேண்டாம்" என்று கூறியதோடு மிகவும் கோபமடைந்த நீதிபதி அவர்கள் வழக்குப் பதிவு செய்த கைது ஆணையை நிராகரித்து ரத்து செய்தார். தமத…

  6. சென்னை விமான நிலையம்:' 54 ' நாட்அவுட்! சென்னை விமான நிலையத்தில் 54 வது முறையாக இன்றும் கண்ணாடி கதவு ஒன்று விழுந்து நொறுங்கியது. சென்னை விமானநிலையம் தினமும் லட்சக்கணக்கான பயணிகளை கையாண்டு வருகிறது. தென்னிந்தியாவின் வாயிலாக கருதப்படும் இந்த விமான நிலையத்தை நவீனமயமாக்கிய பிறகு தொடர்ந்து கண்ணாடிகள் கீழே விழுந்து உடைவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஒரு வித பயத்துடன்தான் நடமாடி வருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்குள் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பயணிகள் செல்வது போல கூட கேலிசித்திரங்கள் அவ்வப்போது வெளியாவதும் வழக்கமாகி விட்டது. எனினும் இந்த விஷயத்தில் விமான நிலைய அதிகாரிகள் மெத்தன போக்கால் கண்ணா…

  7. தமிழகத்தை மாறி,மாறி ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை. தமிழகத்தை சீரழித்து விட்டார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். என்னை குடிகாரன் என்று விமர்சிக்கும் அமைச்சர்கள் யாரேனும் என்னுடன் மருத்துவ பரிசோதனைக்கு உடன் பட தயாரா? என்றும் அவர் சவால்விட்டுள்ளார். சேலம் மாவட்டம், மேச்சேரியில் தே.மு.தி.க. சார்பில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்,தமிழகத்தில் வறுமை இன்னும் ஒழிய வில்லை. இதனால் தான் நான் மக்களின் வ…

  8. அகதிகள் முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்கள், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முகாம்களில் வசிக்காத அகதிகள் என்ற வகையில் காவல் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வரும் அனைத்து இலங்கை தமிழர்களுக்கும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர விரும்பும் இலங்கை தமிழர்களுக்கு வருமான வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பும் இலங்கை தமிழர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவல…

  9. இனஅழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை மறுத்து உள்நாட்டு விசாரணையை முன்னிறுத்தும் அமெரிக்கத் தீர்மானத்தைக் கண்டித்தும், சர்வதேச குற்றவியல் விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்தும், சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்பாக நேற்று பிரமாண்டமான கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் போது அமெரிக்கா மற்றும் இலங்கையின் தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ஆகியோரது உருவப் பொம்மைகளும் இதன் போது எரிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தீவில் தமிழீழ தேசத்துக்கு எதிராக சிறிலங்காதேசம் நடத்தியது, நடத்திக் கொண்டு இருக்கும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டுமென்று…

  10. நயன்தாரா வருகையால் சேலத்தில் தள்ளு முள்ளு; ஆம்புலன்ஸும் நிறுத்தம்! சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல துணிக்கடை ஒன்றின் 21-வது கிளையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கடையை திறந்து வைக்க நடிகை நயன்தாரா வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக இளைஞர்கள், ரசிகர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆயிரக்கணக்கில் திரளாக வந்திருந்தனர். மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க... இதனால் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு சுமார் 3 மணி நேரம் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது. கூட்ட நெரிசலில் அங்கு சென்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவியின் 3 சவரன் தங்க நகை பறிக்கப்பட்டது. மேலும் காவல் துறையினர் பொதுமக்கள் மீதும், பத்திரிக்க…

  11. சென்னை விமான நிலையத்தில் திமுக முன்னாள் எம்.பி.யிடமிருந்து கைதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பியாக இருந்தவர் ஜெயதுரை. இவர் இன்று காலை மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் எட்டு தோட்டாக்களுடன் ஒரு பிஸ்டல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விதிகளின்படி துப்பாக்கியை எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரிகள் கூறினர். பின்னர் அவரிடமிருந்து தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனால் கோபமடைந்த ஜெயதுரை உரிமம் பெற்றே துப்பாக் வைத்துள்ளதாகவும், எனவே துப்பாக்கியை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கூறினார். ஆனால் அதனை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர். பின்னர் தனது உறவினர் ஒர…

  12. ஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள்விகள்! வருங்கால தமிழக முதல்வராக கனவு காணும் அரசியல்வாதிகளில் உங்கள் கனவுதான் நனவாக வாய்ப்பு அதிகம். உத்தரபிரதேசத்தில் 45 வயதில் அகிலேஷ் யாதவ் முதல்வராகிறார். அங்கே அவரது தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறது. இங்கே உங்கள் தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறதோ இல்லையா உங்கள் தமையனுக்கு தட்டிக் கொடுக்கும் மனப்பக்குவம் நிச்சயமாக இல்லை. 'நமக்கு நாமே...' என்று ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கும் நீங்கள்' உங்கள் வீட்டில் இருந்து அதனை தொடங்குவதுதான் சரியானதாக இருக்கும். கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த உங்களுக்கு, துணை முதல்வர் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. நிச்சயமாக தமிழக வர…

  13. ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே படகு பழுதாகி கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பினர். கடந்த 21ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து பாஸ்கரன், மாரிமுத்து, சீனிபாண்டி உள்ளிட்ட 6 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, கச்சதீவு அருகே அவர்கள் சென்ற படகு பழுதானது. இதனை அடுத்து கரை திரும்பாத மீனவர்களை, சக மீனவர்கள் 3 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்டு அவர்களை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 1 மணி அளவில் ராமேஸ்வரம் துறைமுகம் வந்தடைந்தனர். கரை திரும்பிய மீனவர்கள் தங்களை மீட்ட இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு நன்றி தெரிவித்தனர். கடந்த 21 ஆ…

  14. 'லெக்கின்ஸ்' கட்டுரையும் இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு சேஞ்ச் வலைதளத்தின் ஸ்கிரீன் ஷாட். தமிழகத்தில் இருந்து வாரம் இருமுறை வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில், பெண்கள் லெக்கின்ஸ் அணிவது தொடர்பாக வெளியான கட்டுரைக்கும், அதில் இடம்பெற்ற புகைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெண்ணியவாதிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எதிராக ஆன்லைன் பிரச்சாரம் ஒன்றை அவர்கள் துவக்கியுள்ளனர். 'லெக்கின்ஸ் ஆபாசம் - எல்லைமீறும் இளசுகள்' என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்டர் பத்திரிகையில் அண்மையில் ஒரு கட்டுரை வெளியானது. அக்கட்டுரையில் லெக்கின்ஸ் அணிந்த பெண்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. சம்பந்தப்பட்ட பெண்களின் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும் அந்தப…

  15. நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்டெடுப்பு: உறங்காமல் காவல் காத்த சகாயம் டீம்! மதுரை மேலுரில் பி.ஆர்.பி நிறுவனம் நரபலி கொடுத்தததாக கூறப்படும் இடத்தில் இருந்து எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுடுகாட்டில் தோண்டும் பணி மலம்பட்டி சுடுகாட்டில் ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி, சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் முன்னிலையில், இன்று காலை 9 மணி முதல் 8 பேர் கொண்ட குழுவினர் உதவியுடன் சுடுகாட்டில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் பொக்லைன் உதவியுடன் அந்த இடத்தில் தோண்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்படி தோண்டும் போது சில தடையங்கள் அழிக்கப்படக்கூடும் என்பதால் மனிதர்களின் உதவியோடு அங்கு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, சுடுகாட்டில் சேவற்கொடியோன் அ…

  16. கோவை: தமிழர்களை அரணாக வைத்துக் கொண்டு, அவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் என்று கூறி சூட்டை கிளப்பி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். மறைந்த முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை நிறுத்திய மத்திய அரசை கண்டித்தும், அந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ''நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொடுத்தவர்கள் என்ற முறையிலும், நாட்டின் உயர்வுக்கு வழிவகுத்தவர்கள் என்ற முறையிலும் இந்திரா காந்தி, ர…

  17. வைகோ நல்ல தலைவர்தான்...ஆனால்? - ஓர் அலசல் ரிப்போர்ட்! அரசியல் கட்சி உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அல்லது தேவைப்படலாம். ஆனால், கட்சி உடைவதற்கு ஒரு சில காரணங்கள் போதும். பெரும்பாலான சமயங்களில் ஒரே ஒரு காரணமே கட்சி உடைவதற்கு காரணமாக இருந்து விடுகிறது. எதிலும், சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற தலைவர்களின் முனைப்புதான் கட்சிகள் பிளவை சந்திக்க காரணமாக அமைகிறது. தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கினால் இதனை நாம் உறுதி செய்துகொள்ள முடியும். தலைவர்களின் தன் முனைப்பால் நிகழ்ந்த பிளவுகள்! திராவிடர் இயக்கங்கள் பல பிரிவாய் சிதறி கிடப்பதற்குக்கூட தலைவர்களின் தன் முனைப்புதான் காரணமாய் அமைந்திருக்கிறது. மணியம்மை திருமணத்தை முன்னிட்டு பெரியாரிடம் இருந்து விலகி வந்தார் அண்ணா. அவரோடு …

  18. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– ’’தமிழ்நாடு அரசு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைத்திட அனைத்து சார் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் பணியை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வருகிறது. கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும் என்று 2014–2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்திட ஒருங்கிணைந்த கூவம் நதிசுற்றுச் சூழல் சீரமைப்புத் திட்டப் பணிகள் மூன்று கட்டங்களாக செயல்படு…

  19. ‘‘நான் ஒரு பெரியார்வாதி. தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் சுதந்திரம்’’ என்று பெரியார் பிறந்தநாள் விழாவில், குஷ்பு பேசினார். மகளிர் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடலில், பெரியார் பிறந்தநாளையொட்டி, ‘யுனெஸ்கோ’ பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் ‘மகளிர் கருத்தரங்கம்’ திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கை அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- நான் 29 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 13-ந்தேதி சென்னை வந்தேன். 29 ஆண்டுகளை திரும்பி பார்க்கும் போது பேர், பணம், புகழ் வரும் போகும் என்று தெரிந்தது. சாதித்தது என்ன? என்று திரும்பி பார்க்கும…

  20. போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்து, தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தமது வரவேற்பை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த வரவேற்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறிமுறையை மாத்திரம் முன்னெடுக்க அமெரிக்கா முயற்சி எடுத்துள்ளமை கண்டிக்கத்தது. இந்த நிலையில் இதற்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், தமது தீர்மானத்துடன் இசைந்துசெல்கிறது. எனவே இந்த விடயத்தை தாம் வரவேற்பதாக கருணாநிதி தெரிவித்துள்ள…

  21. இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கையில் நடந்த போர்குற்றத்தை விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என தீர்மானம் நிறைவேற்ற்றினார். பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.இந்த தீர்மானம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், காலத்தின் தேவை குறித்து இந்த தீர்மானம் இன்று தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்க…

  22. ஈழ மண்ணில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்றும், அக்குற்றத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க சர்வதேச போர்க்குற்ற விசாரனை வேண்டுமென்றும், உலகம் முழக்க வாழ்கின்ற ஈழ தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு வேண்டுமென்றும், ஒருவேளை ஈழ தமிழர்களின் உரிமைக்கு எதிராக அமெரிக்காவோ ஐ.நா வோ தவறு இழைக்குமானால் அவர்களுக்கு இந்தியா துணை போகக்கூடாதென்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவே முன்னின்று ஈழ தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க ஐ.நா வில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமெண்றும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரியாதைக்குறிய முதலமைச்சர் கொண்டு வந்திருப்பது உலகம் முழக்க வாழ்கின்ற தமிழர்களின் நெஞ்சத்தில் பெரு மகிழ்ச்சியை ஏற்ப்ப்டுத்தியிருக்கிறது.எங்கே முள்ளிவாய்க்காளோடு அவர்களி…

  23. இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்க மறுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு:- இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்து ஆறு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி (சுதந்திர தமிழீழ நாடு) கிடைக்கவில்லை.மாணவர்கள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழ் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் அரசியல் கோரிக்கையாக ஓங்கி ஒளித்துவரும் இந்த வேலையில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல, அது வெறும் மனித உரிமை மீறல் தான் எனக் கூறும் அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானத்தை தமிழ் மாணவர்கள் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.2013-ஆ ம் ஆண்டு போர்குற்ற விசாரனை என்றும், 2014-ஆம் ஆண்டு நடந்தது உ…

  24. இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, மே 17 இயக்கத்தால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் திகதி இடம்பெற்ற இம்முற்றுகைப் போராட்டத்தில் இதில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் முன்னணியின் தோழர்கள் பொழிலன் மற்றும் அரங்க குணசேகரன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வே.பொன்னையன், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அருணபாரதி மற்றும் தோழர்கள், தமிழர் விடுதலை கழகத்தின் சுந்தரமூர்த்தி மற்றும் தோழர்கள், தமிழர் விடியல் கட்சியின் பாபு மற்றும் தோழர்கள், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் சிவகாளிதாசன் மற்றும் தோழர்கள்…

  25. இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, தமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியாக இருந்து, தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கிற அமெரிக்காவை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டது. எந்த பொருளாதார நலனுக்காக தமிழீழ விடுதலையை அமெரிக்கா அழிக்கத் துடிக்கிறதோ, அந்த பொருளாதாரத்தை முடக்குவோம். அமெரிக்காவின் நிறுவனங்களான PEPSI, COCA COLA. KFC போன்றவற்றின் பொருட்களைப் புறக்கணிபோம். தமிழீழத்தில் நடந்ததும், நடப்பதும் இனப்படுகொலை. இனப்படுகொலைக்கான சர்வத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.