Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரஷ்யாவிடம் இருந்து... இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது... அதிகரித்துள்ளது! ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள குறிப்பில், ”இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் 4 கோடி பரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. அதேநேரம் இந்தியாவிற்கு தினமும் 50 இலட்சம் பரல் கச்சா எண்ணெய் தேவையில் அதில், 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது வரை ஐஓசி, எச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்களை விட காட்டிலும் ரிலையன்ஸ் அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இந்த நிறுவனம் ஜூன் காலாண்டு வரை தேவைக்காக 1.5 …

  2. பட மூலாதாரம், ANI 2 மணி நேரங்களுக்கு முன்னர் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் நடுத்தர தூர அக்னி-பிரைம் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா புதன்கிழமை முதல் முறையாக ரயிலில் இருந்து ஏவியது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இந்த ஏவூர்தி (launcher) ரயில் தண்டவாளங்களில் இயங்கும், அங்கிருந்து ஏவுகணையை ஏவ முடியும். இது 2,000 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை ஏவுகணை ஆகும். இந்த சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), மூலோபாய படைகள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரிப்பதில் இது முக்கிய பங்காற்றும் என்று டிஆர்டிஓ குறிப்பிட்டுள்ளது. இந்த …

  3. இந்திய டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானி எச்சரிக்கை Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 02:32 PM எதிர்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான சேதத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்ஐ) கணித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், அந்நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 45,000- கடந்துள்ளது. தொடர்ந்து இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், அசாம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் நிலநடுக்…

  4. இம்ரானின் கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை! பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம் ஆண்டு தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்முறையாக இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தார். இதனைத் தொடர்ந்து, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில…

  5. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்! இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நாடாளுமன்ற கூட்டத்தொரில் சுமார் 26 சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை வங்கி சீர்த்திருத்தச் சட்டத்தின் கீழ் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1251934

  6. ரஷ்யாவிடம் இருந்து... போர் துப்பாக்கிகளை, கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்! ரஷ்யாவிடம் இருந்து 70 ஆயிரம் AK 203 ரக போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழரை இலட்சம் பெருமதியான குறித்த துப்பாக்கிகளை கொள்வனவு செய்தவற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசு மட்டத்தில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் கோர்வாவில் துப்பாக்கிகளை தயாரிக்க இந்தோரஷ்யன் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் கட்டமாக 70 ஆயிரம் AK 203 ரக துப்பாக்கிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/20…

  7. சட்டவிரோதமாக பகிரப்படும் அணுஆயுத தொழில்நுட்பம் குறித்து இந்தியா வலியுறுத்து! அணுஆயுத மூலக்கூறுகள், அது தொடர்பான தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம் குறித்து இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், அணு ஆயுதங்களின் வலையமைப்புகள், அதன் விநியோக முறை, மூலக்கூறுகள், தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அணு ஆயுதமற்ற …

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது (கோப்பு படம்) கட்டுரை தகவல் எழுதியவர், தில்நவாஸ் பாஷா பதவி, பிபிசி செய்தியாளர் 18 ஆகஸ்ட் 2023, 10:09 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அமெரிக்க டாலருக்கு பதிலாக பரஸ்பர நாணயத்தில் இருதரப்பு வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. மத்திய கிழக்குப்பகுதியில் எண்ணெய் உற்பத்தி நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்திடம் இருந்து இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந…

  9. 6 மணி நேரங்களுக்கு முன்னர் நாட்டில் பெரும்பாலான அரசுகள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறியுள்ளார். பிபிசி உடனான சிறப்பு நேர்காணலில் பேசிய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இந்த மாதிரியான அழுத்தங்கள் 1950 முதலே இருந்து வந்துள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த 1975ஆம் ஆண்டு முதல் 1977 ஆண்டு வரையான காலத்தைக் குறிப்பிட்டுப் பேசிய சஞ்சய் கிஷன் கவுல், அப்போது நீதித்துறை மீது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் அவர் பகிர்ந்தார். பேச்சு சுதந்திரம் குறித்துப் பேசிய நீதிபதி சஞ்சய், அது ஒரு சமூகப் பிரச்னை என்று கூறினார். பிபிசியுடனான இந்…

  10. வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு! வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி 19 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு, ‘வேளாண் பெருமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வக…

  11. ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்! ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15) அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 48 மணி நேரத்திற்குள் யூனியன் பிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தொ…

  12. 28 JUN, 2024 | 02:17 PM இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் தெரிவித்துள்ளார். சமீபகாலாமாக இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான மதமாற்றத் தடைச் சட்டம், வெறுப்புப் பேச்சு, அவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் தெரிவித்துள்ளார். சர்வதேச மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையை வெளியிட்டுப் பேசிய ப்ளிங்கென் தெரிவித்ததாவது.. ” இந்தியாவில், சிறுபான்மையினரின் மதச் சுதந்திர…

  13. சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது – சவுத்ரி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிரித்துள்ளதாக விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார். விமானப்படையின் 89 ஆவது ஆண்டு விழா தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்திய விமானப்படை விமானங்களும், முழு அளவில் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உஷார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ரஃபேல் விமானங்களும், அப்பாச்சி ரக ஹெலிகொப்டர்களும் விமானப்படையில் இணைத்தது, இந்தியாவின் போர் திறனை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1243185

  14. பெரியார் சொன்னபோது மறுத்த சமூக நீதி பாதையை காங்கிரஸ் இப்போது கையில் எடுக்க என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 7 மார்ச் 2023, 05:05 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வில் பல முற்போக்கான சமூக நீதித் திட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்வைத்திருக்கிறது. கட்சியின் முந்தைய தடுமாற்றங்களில் இருந்து விலகி, புதிய பாதையைத் தேர்வு செய்கிறது காங்கிரஸ். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்…

  15. கொரோனா தொற்றின் காரணமாக... 40 இலட்சம், இந்தியர்கள்... உயிரிழப்பு! கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதனை மத்திய அரசு மறைப்பதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில், ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை எனவும், இன்னமும் பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா காலத்தில் அரசின் அலட்சியத்தால் உயிரிழந்தது 5 இலட்சம் பேர் கிடையாது எனத் தெரிவித்த அவர், 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். …

  16. Published By: NANTHINI 13 NOV, 2023 | 03:58 PM காலநிலை மாற்றம் காரணமாக உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அதிகமான சிறுவர்கள் முகங்கொடுத்து வருவதாக ஐ.நா சபை இன்று (13) தெரிவித்துள்ளது. அதன்படி, உலகின் மற்ற பிராந்தியங்களை விடவும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கை, நேபாளம், மாலைத்தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட 347 மில்லியன் சிறுவர்கள் அதிக தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக ஐ.நா. சிறுவர்கள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. வெள்ளம், வறட்சி, மோசமான வானிலை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்…

  17. காஷ்மீர்: ஜனநாயகத்தின் கடைசி தூணும் சரிந்துவிட்டது! பிரேம் சங்கர் ஜா மதச்சார்பற்ற, பல இன–கூட்டாட்சித் தத்துவம் கொண்ட இந்திய ஜனநாயகத்தின் மீது கடந்த பத்தாண்டுகளாகப் பிரதமர் நரேந்திர மோடியும், பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இடைவிடாமல் நடத்திவரும் தாக்குதல்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் தயாராக இருக்கும் என்ற மக்கள் அமைப்புகளின் நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் அடுத்தடுத்து பல தீர்ப்புகளை அது வழங்கிவந்தது; அந்தத் தீர்ப்புகள் யாவும் ‘இதற்கு முன்னால் ஒன்றுமில்லை’ என்று சொல்லும் அளவுக்கு காஷ்மீர் மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து தந்த அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை 2019 ஆகஸ்ட் 5இல் ரத்துசெய்தது தொடர்பாக அளித்துள்ள சமீபத்திய தீர்ப்பு அமைந்திருக்…

  18. பட மூலாதாரம்,MACARTHUR FOUNDATION & SHAILAJA PAIK படக்குறிப்பு, பேராசிரியர் ஷைலஜா பாயிக் கட்டுரை தகவல் எழுதியவர், விநாயக் ஹோகடே பதவி, பிபிசி செய்தியாளர் 6 அக்டோபர் 2024, 04:37 GMT "நாங்கள் வசித்த பகுதியில் தண்ணீர் வசதி இருக்காது. கழிவறைகள்கூட இல்லை. எங்கள் குடியிருப்புகளைச் சுற்றி குப்பை மேடுகள் சூழ்ந்திருக்கும். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய அந்தக் காலகட்டத்தைப் பற்றிய நினைவுகள் இன்னமும் என்னை நிலைகுலைய வைக்கிறது.” 'கழிவறை வசதிகூட இல்லாமல் இருந்த நகர்புற குடிசைப் பகுதியில் இருந்து அமெரிக்காவில் பேராசிரியராக' பணியில் அமர்ந்தார் ஷைலஜா பாயிக். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை. தற்போது ம…

  19. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு முறையீடு Published By: RAJEEBAN 21 FEB, 2023 | 11:07 AM குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டிக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 59 பேர் கருகி உயிரிழந்தனர். குஜராத்தில் மதக் கலவரம் ஏற்பட இந்த சம்பவம் வழிகோலியது. ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனை யும் விதிக்கப்பட்டது. மேல்முறை யீட்டு வழக்கில் 31 பேர் தண்டிக் கப்பட்டதை குஜராத் உயர் நீதி மன்றம் உறுதி செய்தது. எனினும் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. …

  20. சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இந்தியாவின் குரலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிரொலிக்கிறார்கள் - இந்தியப் பிரதமர் மோடி புகழாரம் 10 Jan, 2023 | 06:31 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17 ஆவது பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இதன் போது , 'சுரக்ஷித் ஜாயேன் பிராஷிக்ஷித் ஜாயேன் என்ற நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். மேலும் 'ஆசாதி கா அம்ரித் மகோத்ஸவ்'- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு’ என்ற கருப்பொருளில் முதலாவது டிஜிட்டல் கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார். வட…

  21. ஷேக் ஹசீனாவின் வீட்டை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்! பங்களாதேஷில் எதிர்ப்பாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்ப வீட்டையும், அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களின் வீட்டையும் நாசப்படுத்தி, தீ வைத்து எரித்தனர். கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அவரை வெளியேற்றியதில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஹசீனா இந்தியாவில் இருந்து சமூக ஊடகங்கள் மூலம் நாட்டிற்கு உரையாற்றுவார் என்ற செய்தியால் இந்த அமைதியின்மை ஏற்பட்டது. 20 ஆண்டுகளாக பங்களாதேஷின் பொறுப்பில் இருந்த 77 வயதான ஹசீனா, ஒரு சர்வாதிகாரியாகக் முத்திரை குத்தப்பட்டார். இந்த நிலையில் புதன்கிழமை (06) மாலை எதிர்ப்பாளர்கள் டாக்காவில் அமைந்துள்ள ஹசீனாவின் மறைந்த…

  22. தலைநகர் டெல்லியில், காலை 5.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறவேண்டுமெனில், ‘நிலநடுக்கத்தின் மையம் (epicentre)’ டெல்லி தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு அருகில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த ஸ்ரீஜன் பால் சிங், நிலநடுக்கத்தின் மையப்பகுதி டெல்லியில் இருந்ததால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அதற்குமுன் இதற்குமுன் இதுபோன்ற நிலநடுக்கத்தை உணர்ந்ததில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயத்தில், டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரி…

  23. ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கு முயற்சி! ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஹிந்தி மொழியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கூறியிருந்த நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) 12ஆவது உலக ஹிந்தி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற பிறகு ஊடகங்களுக்கு கூறுகையில், ”யுனெஸ்கோ அமைப்பில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில் வெளிய…

  24. யஷ்வந்த் சின்ஹா: குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிப்பு 21 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யஷ்வந்த் சின்ஹா முன்னாள் பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சித் தல…

  25. பாகிஸ்தான் குண்டு வெடிப்பை 'இந்தியா ஆதரிக்கும் குழு நடத்தியது' - ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு பட மூலாதாரம், Getty Images 11 நவம்பர் 2025, 13:08 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார். "நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.