உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ரஷியா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தேவாலயத்தில் நடக்கவிருந்த தாக்குதலை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு தந்த தகவலின் உதவியால் தடுத்து நிறுத்தப்பட்டதாக, அமெரிக்கா மற்றும் ரஷிய தலைவர்கள் கூறியுள்ளனர். ஆங் சான் சூச்சி மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்? ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு காரணமானவர்கள், நீதியை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் ஐ.நா மனித உரிமை மீறல் கண்காணிப்பு குழுவின் செய்ட் ராட் அல் ஹுசைன் தீர்மானமாக உள்ளார். …
-
- 0 replies
- 368 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: விசாரணையில் முக்கிய திருப்பம் படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீட்டதாக கூறப்படுவது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர், அதிபர் டிரம்பின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை முறைகேடாகப்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகார மாற்றத்திற்காக டிரம்பிற்கு உதவியாக அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் குழுவுக்கு லாங்ஹோபர் எழுதிய கடிதத்தில் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால், முல்லரின் செய்தி தொடர்பாளர் "தேவையான குற்றவியல் நடைமுறை பின்பற்றப்பட்டதாக" கூறியுள்ளார். டிரம்ப்பின் அமெரிக்க …
-
- 0 replies
- 305 views
-
-
பிரஞ்சு சதுக்கத்தில் இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள்... பிரான்ஸ் அரசு நடத்திய நினைவஞ்சலி! Chennai: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ‘ஆர்ச் தி திரியோம்ப்’ என்ற நினைவிடத்தில், முதல் உலகப்போரில் பங்கு கொண்டு வீரமரணம் அடைந்த பிரான்ஸ் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நேற்று (16-12-2017) நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடல்கோ மற்றும் பிரான்ஸுக்கான இந்திய தூதர் வினய் மோகன் கெளத்ரா ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். இங்குள்ள நுழைவு வாயிலில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவு வாயிலுக்கு மற்றுமொரு சிறப்பு உண்டு. என்னவென்றால், போரில் பங்குகொண்டு உயி…
-
- 0 replies
- 382 views
-
-
பாகிஸ்தான்: தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் பலர் பலி படத்தின் காப்புரிமைREUTERS பாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவெட்டா நகரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மெதடிஸ்ட் தேவாலயத்தில் பிராத்தனைகள் நடந்துகொண்டிருந்த போது தாக்குதல் நடைபெற்றதாக இந்தப் பிராந்தியத்தின் உள்துறை அமைச்சர் சர்பராஸ் பக்டி உள்ளூர் ஊடகத்தில் கூறினார். இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தேவாலயத்தின் வாசலில…
-
- 0 replies
- 377 views
-
-
"8,000 தீயணைப்புத்துறை வீரர்கள், 104 மில்லியன் டாலர்கள்" : கலிஃபோர்னியாவின் மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுதான்! படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவின் சாண்டா பார்பரா பகுதியில் காட்டுத்தீ, மீண்டும் அதிகமாக பரவத்தொடங்கியதால், மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான புதிய ஆணையை கலிஃபோர்னியா அதிகாரிகள் அளித்துள்ளனர். 'தாமஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத்தீ, வடக்கிலிருந்து வரும் காற்றின் காரணமாக, பசிபிக் கடற்கரை பகுதியை அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கிடப்பட்டதிலேயே மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுவாகும். டிசம்பர் 4ஆம் தேதி முதல், இந்த காட்டுத்தீ ஆயிரம் சதுர கிலோமீட்டர் இடங்களை அழித்துள்ளது.இந…
-
- 0 replies
- 404 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அமெரிக்கா: சான்டா பவுலா நகரத்தில் மீண்டும் தோன்றிய தீப்பிழம்பு படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவில் சான்டா பவுலா நகரத்தில் பெரிய காட்டுத்தீக்கான அறிகுறிகள் மீண்டும் தென்படுவதால் அங்கிருந்து மக்கள் வெளியேற வே…
-
- 0 replies
- 463 views
-
-
கனடாவின் மிகப்பெரிய பணக்காரத் தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு கனடாவின் மிகப்பெரிய பணக்காரர்களான பேரி ஷெர்மன்,மற்றும் அவரது மனைவி ஹனி ஷெர்மன் ஆகியோர் இறந்து கிடந்தமை பெரும் புதிராக உள்ளது எனவும்; விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்வும் கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கனடாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான அபோடெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பேரி ஷெர்மன் தம்பதியினரே இவ்வாறு உயரிழிந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். இவர்களது உடலகள் கனடாவின் டொராண்டோ நகரின் வடகிழக்குப் பகுதியில் போர்வை ஒன்றில் சுற்றப்பட்டு அவர்களது வீட்டிலிருந்து அகற்றப்பட்டு, வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இறந்து …
-
- 1 reply
- 595 views
-
-
மனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் – கற்பனை அல்ல:- ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கற்பனை அல்ல என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். ஆனால், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்று மற்றொரு சாரார் கூறுகிறார்கள். கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே அவை என்று…
-
- 6 replies
- 1.2k views
-
-
இளவரசர் ஹேரி - மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைEPA Image captionஹேரி, செல்வி மார்கெலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த திங்களன்று அறிவித்தார் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது. இசை, பூக்கள், வரவேற்பற…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஆஸ்ரியன் பீப்பிள் பார்ட்டி தலைவரான செபாஸ்டியன் கூர்ட்ஸ் மற்றும், குடியேற்றத்திற்கு எதிரான சுதந்திரக் கட்சிக்கு தலைமை வகிக்கும் கிரிஸ்டியன் ஷ்ட்ராஹாவிற்கு இடையே, கூட்டணி ஒப்பந்தம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆஸ்ரியாவில் புதிய நிர்வாகத்தை உருவாக்குவதற்காக, அந்நாட்டு அதிபர், அவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை அதிபர் உறுதி செய்தால், 31வயதாகும், செபாஸ்டியன் கூர்ட்ஸ், உலகின் மிகவும் இளமையான தேசிய தலைவராவார். பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குட்சீன்ஸ்கீ மீது, எதிர்கட்சியினர் குற்றச்சாட்டிற்கான…
-
- 0 replies
- 406 views
-
-
வட கொரியாவின் முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை வட கொரியாவின் இரண்டாவது அதி சக்தி வாய்ந்த மனிதர் என ஒருசமயத்தில் விபரிக்கப்பட்ட உயர்மட்ட அதிகாரியொருவர் பொது வாழ்விலிருந்து காணாமல்போயுள்ளதாகவும் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் தலைவர் கிம் யொங் –உன் அண்மையில் மலைப் பிராந்தியமொன்றுக்கு விஜயம் செய்ததையடுத்து அவர் தனது ஆட்சித் துறையிலிருந்து ஆட்களைக் களையும் செயற்பாட்டை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தோற்றமெடுத்த நிலையிலேயே அந்த உயர்மட்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் ஹ…
-
- 0 replies
- 437 views
-
-
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு இந்தோனேஷியா நாட்டின் ஜாவா தீவில் இன்று அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. ஜகார்த்தா: நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியி…
-
- 0 replies
- 284 views
-
-
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணை அறிக்கை வெளியீடு, பப்புவா நியூ கினியா கடலுக்கடியில் சர்ச்சைக்குரிய திட்டம் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 237 views
-
-
பெத்லகேம் – ரமல்லாவின் ‘ பேராலய விளக்குகள் அணைக்கப்பட்டன’ நஸ்ரேத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ரத்து ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாக கருதப்படும் நஸ்ரேத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் அரபு நாடுகளில் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிறிஸ்துவர்களின் மிக முக்கிய புனிதத்தலமான, இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாக கருதப்படும் நஸ்ரேத…
-
- 0 replies
- 749 views
-
-
இளம் மாணவர்களின் உயிரைப் பறித்த சமிக்ஞை! பிரான்ஸில், பாடசாலைப் பேருந்து ஒன்றுடன் ரயில் மோதியதில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் தெற்குப் பிராந்தியமான பெர்பிக்னன் பகுதியில், 13 ? 17 வயதுடைய 20 மாணவர்களை ஏற்றியபடி பாடசாலைப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. வழியில் குறுக்கிட்ட புகையிரதப் பாதையை பேருந்து கடக்கையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது, குறித்த பேருந்தை ஒரு பெண் சாரதியே செலுத்திச் சென்றுள்ளார். மணிக்கு சுமார் எண்பது கிலோ மீற்றர் வேகத்தில் வந்த ரயில் பேருந்தில் மோதியதில், அதில் பயணம் செய்த மாணவ, மாணவியரில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டத…
-
- 0 replies
- 297 views
-
-
நெதர்லாந்தில் கத்தி குத்து! இருவர் பலி! பலர் படுகாயம்! நெதர்லாந்தில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் 2 பேர் பலியானதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்சார்டமில் உள்ள மாஸ்ட்ரிச் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று மாலை மக்கள் கூடியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் மேலும் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து குற்றவாளியை கைது செய்ததுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு அர…
-
- 0 replies
- 351 views
-
-
பிரெக்ஸிட் விவகாரம் தொடர் பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தோல்வியடைந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள பிரிட்டன் அந்த கூட்டமைப்பில் இருந்து வரும் 2019 மார்ச் 29-ம் தேதி வெளியேற உள்ளது. பிரெக்ஸிட் என்றழைக்கப்படும் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை யில் 18 மாத இழுபறிக்குப் பிறகு அண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் பிரிட்டனில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களில் ஒருவரான டொம்னிக் கிரீவ் நாடாளுமன்ற மக்களவையில் அண்…
-
- 0 replies
- 356 views
-
-
நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'தி இந்து தமிழ்' நாளிதழில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும…
-
- 0 replies
- 478 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு படத்தின் காப்புரிமைAFP சௌதி அரேபியாவை தாக்க ஏமன் போராளிகளுக்கு இரான் ஏவுகணைகள் வழங்கியதாக ஐ.நாவின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷியாவை எச்சரித…
-
- 0 replies
- 231 views
-
-
குஜராத்: வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகளில் பாஜக முன்னிலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் குஜராத் தேர்தல் இன்று நிறைவடைந்தது. குஜராத் மற்றும் இம்மாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை வரும் திங்கள் கிழமையன்று நடக்கவுள்ளது. இந்நிலையில் சில நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்…
-
- 1 reply
- 485 views
-
-
"ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து ஒரு மாதத்தில் குறைந்தது 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது. மியான்மர் அரசு 400 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது ஒப்பிட…
-
- 0 replies
- 517 views
-
-
ஒபாமாவின் அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கே தகுதியில்லாதவர் டிரம்ப் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான USA today , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடுமையான சொற்பிரயோகங்ளினூடாக விமர்சித்துள்ளது. பத்திரிகையின் தலையங்கம், மற்றும் விமர்சனத்தில், ஊழல் செனட்டர்களை ஆதரவாளர்களாக வைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்த பதவிக்கு சிறிதும் தகுதியில்லாதவர் எனத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின், அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கோ, முன்னாள் ஜனாதிபதி டபிள்.யு.புஷ்ஷின் காலனிக்கு பொலிஷ் (Shoe polish) போடுவதற்கும் கூட லாயக்கில்லாதவர் என அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரியில்…
-
- 0 replies
- 271 views
-
-
மியான்மர் வன்முறைக்கு இதுவரை ஆறாயிரத்து எழுநூறு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பலி, முகத்தை வைத்து தனி நபர்களை அடையாளம் காணும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 236 views
-
-
விஜய் மல்லையாவின் பிர்த்தானிய சொத்துக்களை முடக்க பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு: இந்திய வங்கிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் இங்கிலாந்தில் விஜய் மல்லையாவின், இந்திய மதிப்பிலான 10 ஆயிரம் கோடி ருபாய் சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக தொழில் அதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். அதில் 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதோடு பிரித்தானியாவிற்கு தப்பி சென்றார். தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும் அவர் அங்கு அவருக்கு சொந்தமான நிறுவனங்களையும், சொத்துக்களையும் பராமரித்து வருவதோடு சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் …
-
- 0 replies
- 326 views
-
-
அலபாமா தேர்தல்: டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி – ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி… அமெரிக்காவின் அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில். குடியரசுக் கட்சி வேட்பாளருமான ராய் மூரேவுக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் நடந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றுள்ளார். 25 ஆண்டுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூரேவுக்கு ஜனாதிபதி டிரம்ப் ஆதரவளித்த நிலையில், டக் ஜோன்ஸின் எதிர்பாராத வெற்றி, டிரம்பிற்கு விழுந்த அடியாகப் பார்க்கப்படுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இதனை மூரே ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். …
-
- 2 replies
- 576 views
-