உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
நேபாளத்தின் நெருக்க நண்பன் சீனா! நேபாள அரசியலில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சீனா. இரு நாடுகளுக்கும் இடையில் பொதுவான அம்சமாக இருக்கும் மதம் கலாச்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்த நினைக்கிறது இந்தியா. மத்திய அரசில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே நேபாளத்தின் மலை மாவட்டங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் இந்து உணர்வைப் பரப்ப ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் சார்பு அமைப்புகளும் முயற்சி செய்கின்றன. கோரக்நாத் ஆலயத்தின் தலைமைப் பூசாரியாகக் கருதப்படும் யோகி ஆதித்யநாத்தை உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் வேகம் பெ…
-
- 0 replies
- 369 views
-
-
150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி? படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption150 ஆண்டுகளாக கத்தாரை ஆட்சி செய்யும் அல்-தானி குடும்பம் பாரசீக வளைகுடாவின் 'சீரழிந்த குழந்தை' என்று கத்தாரை சிலர் குறிப்பிடுகிறார்கள். கடந்த 150 ஆண்டுகளாக கத்தாரை ஆட்சி புரியும் அல்-தானி குடும்பம், 'அண்டை நாட்டினருக்கு தொல்லை கொடுக்கும் குடும்பம்' என்றும் சிலர் சொல்கிறார்கள். கத்தார் தனது அண்டை நாடுகளுடன் ஒரு ராஜாங்கரீ தியான சிக்கலை தற்போது எதிர்கொண்டுள்ளது. செளதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து போன்ற நாடுகள், கத்தார் மீது சில புகார்களை எழுப்பியதோடு, ராஜாங்க உறவுகளையும் துண்டித்துவிட்டன. தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவி…
-
- 0 replies
- 600 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டுமா, நீடிக்க வேண்டுமா என்று மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு (பிரெக்ஸிட்) நடந்ததால், பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து கன்சர்வேடிவ் (டோரி) கட்சியைச் சேர்ந்த டேவிட் கேமரூன் விலக நேர்ந்தது. அவருக்குப் பிறகு பிரதமர் பதவியில் அமர்ந்த தெரசா மே, தன்னுடைய அரசியல் நிலையை வலுப்படுத்திக்கொள்வதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். இது அவர் எதிர்பார்த்தபடி வெற்றியைத் தருவதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வலுவைக்கூட எட்ட முடியாமல் செய்துவிட்டது. தெரசா எப்படியோ பிரதமராகப் பதவியில் தொற்றிக்கொண்டிருக்கிறார். மூன்று மாதங்களுக்குள் மூன்று பயங்கரவாதத் தாக்குதலை பிரிட்டன் சந்தித்துள்ளது. சமீப காலங்களி…
-
- 0 replies
- 453 views
-
-
லண்டனின் வடக்கு பகுதியில் இருக்கும் மசூதி ஒன்றிற்கு அருகில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். இது ஒரு "பெரிய சம்பவம்" என போலிசார் தெரிவிக்கின்றனர். செவன் சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள ஃபின்ஸ்பரி பார்க் மசூதிக்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் நேரப்படி இரவு 12.20 மணிக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டனர் என பெருநகர போலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் இஸ்லாமிய கவுன்சில், அந்த வேன் "வேண்டுமென்றே" வழிபாட்டாளர்கள் மீது மோதியதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பலர் ரமலான் நோன்பை முடித்துவிட்டு தொழுகைக்காக வந்தவர்கள் என நம்பப்படுகிறது. லண்டன் அவசர …
-
- 1 reply
- 443 views
-
-
போர்த்துகலில் இடம்பெற்ற காட்டுத் தீ விபத்தில் 62 பேர் பலி போர்த்துக்கலில் இடம்பெற்ற காட்டுத் தீ விபத்தில் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான காட்டுத் தீ விபத்து இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பாரிய அனர்த்தம் காரணமாக போர்த்துக்கல் நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர் சிறுமியரும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றுக் கணக்கான தீயணைப்புப் படையினர் பல வழிகளில் தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மிகப் பெரிய துயரச் சம்பவம் இதுவென பிரதமர் அன்டன…
-
- 0 replies
- 347 views
-
-
கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா? இறையாண்மை மிக்க அரபு நாடான கத்தார், செளதி அரேபியா தலைமையில் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகளால் முன்னுதாரணமற்ற பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES தொடர்ச்சியாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருவது , பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கத்தார் மீது பொருளாதார மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கத்தார் இந்த இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது. இதனால் தற்போது, வான்பரப்பு அதற்கு மூடப்பட்டுள்ளது, இறக்குமதிகள் எல்லைப் பகுதியில் நிற…
-
- 0 replies
- 447 views
-
-
இரான் பெண்கள் புதன்கிழமை தலையில் வெள்ளைத்துணி அணிவது ஏன்? புதன்கிழமைகளில் பெண்கள் தலையில் வெள்ளைத்துணி அணியும் முறையைக் கட்டாயப்படுத்துகின்ற ஒரு சட்டத்திற்கு எதிரான புதியதொரு சமூக ஊடகப் பரப்புரை இரானில் வேகமாக பரவி வருகிறது. படத்தின் காப்புரிமைMY STEALTHY FREEDOM எதிர்ப்பை வெளிப்படுத்துவதன் அடையாளமாக, தலையில் வெள்ளைத் துணியை அல்லது வெள்ளைத் துண்டை அணிந்து தங்களின் புகைப்படங்களையும், காணொளிகளையும் #whitewednesdays (#வெள்ளைபுதன்கிழமைகள்) என்ற ஹேஸ்டாக்கை பயன்படுத்தி இரான் பெண்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பரப்புரை, கட்டாய ஆடைமுறைக்கு எதிரான ஆன்லைன் இயக்கமான 'மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்' என்பதை நிறுவிய மஷிக் அலிநஜத்…
-
- 1 reply
- 567 views
-
-
அமெரிக்க யுத்தக்கப்பல் - பிலிப்பைன்ஸ் கொள்கலன் கப்பல் மோதி விபத்து : 7 பேரைக்காணவில்லை அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூ.எஸ்.எஸ். பிற்ஸ்கிரல்ட் என்ற யுத்தக்கப்பலே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது 7 அமெரிக்க கடற்படைவீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்தானது யப்பானின் யொகுஷ்கா கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காணாமல்போக கடற்படையினரைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Tags http://www.virakesari.lk/article/20959
-
- 1 reply
- 336 views
-
-
ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்முட் கோல் காலமானார் பெர்லின்: ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெ ல்முட் கோல் காலமானார் கடந்த 1982 முதல் 1998 வரையில் இப்பதவியில் இருந்துள்ளார். கடந்த சில காலமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கிழக்கு மேற்கு என இரண்டாக பிரிந்திருந்த ஜெர்மனியை ஒருங்கிணைக்க பாடுபட்டுள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1791979
-
- 1 reply
- 455 views
-
-
உளவுபார்ப்பதற்கான மேற்குலக தொழில்நுட்பம் மத்திய கிழக்கில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு உதவுகிறதா? பிபிசியின் புலனாய்வுச் செய்தி; லண்டன் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரிப்பு! உயிரிழந்த சிலரை அடையாளம் காண முடியாமலே போகலாமென காவல்துறை எச்சரிக்கை மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இசை பயிற்றுவிக்கும் இஸ்ரேலிய இசைக்கலைஞர் குறித்த சிறப்புச் செய்தி தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 285 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் கத்தியுடன் ஒருவர் கைது பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கத்தியுடன் உலாவிய நபரொருவரை பிரித்தானியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அண்மைக்காலங்களில் லண்டனில் இடம்பெற்ற இருவேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டதையடுத்து பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20956
-
- 0 replies
- 250 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டார் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி கடந்த மே மாதம் 28 ஆம் திகதி சிரியாவில் வைத்து கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=92451
-
- 1 reply
- 892 views
-
-
ஒட்டுமொத்த தமிழர்களை கண்கலங்க வைத்த நவீனின் மரணம் ; கொலையின் உள்நோக்கம் என்ன? மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புக்கிட் குளூக்கோர், ஜாலான் காக்கி புக்கிட் என்ற இடத்தில் உணவு வாங்க சென்றிருந்த நவினையும் அவருடைய நண்பர் பிரவினையும் ஐவர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்து தாக்கியது. குறித்த கும்பலில் நவின் படித்த பாடசாலையின் முன்னால் மாணவர்கள் இருவர் இருந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பிரவின் கடுமையான காயங்களுடன் தப்பியோவிட்டார். குறித்த குழுவினரிடம் சிக்குண்ட நவீன் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலமாக தாக்கப்பட்டுள்ளார். பின்னர் வைத்தியசாலையில் ஐந்து நாள்கள் கோமாவிலேயே இருந்த பின்னர் நவினின் சுயநினவுக்கு வராமலேயே மூளைச் சா…
-
- 1 reply
- 648 views
-
-
லண்டன் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்திக்காததால் விமர்சனம் மேற்கு லண்டனில் உள்ள க்ரீன்பெல் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த தீ விபத்தில் இறந்த அனைவரையும் அடையாளம் காணமுடியாமல் போகக்கூடும் என லண்டன் காவல்துறையின தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP/NATALIE OXFORD 17உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் டஜன் கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். தீ விபத்து நடந்த கட்டத்தைப் பார்வையிட்ட பிரதமர் தெரீசா மே அங்கு குடியிருந்தவர்களை சந்திக்காதது பற்றி அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட லண்டன் நகர மேயர் சாதிக் கான், தீ விபத்து தொடர்பான பொதுவிசாரணையை நடத்த தேர்வுசெய்யப்பட்டுள்ள நீ…
-
- 0 replies
- 343 views
-
-
ஆர்மேனிய இனவழிப்பு ஈழத்தமிழர்களுக்கு கற்றுத்தரும் படிப்பினைகள் 101 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் ஆர்மேனிய இன அழிப்பை மறுத்து வரும் துருக்கி படுகொலை செய்யப்பட்ட ஆர்மேனியர்களின் எண்ணிக்கையை வலுவாக குறைத்து காட்டுவதுடன் குறித்த மரணங்களுக்கு வேறு கற்பிதங்களைக் கூறிவருகிறது. இதற்கு எதிராக ஆர்மேனியா மக்கள் உலகளாவிய ரீதியில் போராடிவருகின்றனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியதாலோ ஆர்மேனிய இன அழிப்பை மேற்குறித்த நாடுகளோ சபைகளோ ஏற்று அங்கீகரிக்வில்லை. மாறாக, ஆர்மேனிய மக்களின், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனிய மக்களின் இடைவிடாத, சோர்ந்து போகாத, பரம்பரை பரம்பரையான, விலைபோகாத போரா…
-
- 0 replies
- 342 views
-
-
லண்டனின் நேற்று அதிகாலை அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அடுத்து அங்கு கட்டப்பட்டிருக்கும் அதே போன்ற கட்டிடங்களுக்கான தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பிபிசியின் சிறப்பு பார்வை, கட்டார் மீதான அண்டைநாடுகளின் தடை நடவடிக்கை பாலஸ்தீனத்தையும் பாதிக்குமா? மற்றும் பாலஸ்தீனத்துக்காக துடிக்கும் இஸ்ரேலிய இசைக்கலைஞரின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 271 views
-
-
வரும் திங்கள்கிழமை உலகையே அதிர வைக்கும் முடிவு வெளியிடப்படுகிறது.. நாசா அதிகாரபூர்வமாக அறிவிப்பு..! 9 mins ago பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் மட்டும் தனியாக இல்லை என்பதை நிரூபிப்பதற்கான முதல் தடயங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ தேடி வருகிறது. சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களில் உயிரினம் வாழக்கூடிய அம்சங்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கிறதா என்பதை கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி கொண்டு ‘நாசா’வின் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள். உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியப்படக் கூடிய பல கிரகங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போன்ற வேறு கிரகங்கள் உண்டா? அந்த கிரகங்களில் மனிதர்களைப் போன்ற …
-
- 2 replies
- 833 views
-
-
வளைகுடா இரண்டுபட்டால் இந்த நாட்டுக்குதான் கொண்டாட்டம்! வளைகுடா நாடுகள் கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவினை துண்டித்துள்ள நிலையில், அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 36 எப்-15 ரக போர் விமானங்களை அந்நாட்டுக்கு வழங்குகிறது. வளைகுடாவில் எண்ணெய் வளமிக்க குட்டி நாடான கத்தார், தீவிரவாதிகளுக்கு உதவி புரிவதாகவும் ஈரான் நாட்டுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதாகவும் கூறி சவுதி, பஹ்ரைன், அமீரகம் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டுடனான ராஜ்ஜிய உறவினைத் துண்டித்துள்ளன. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிற இஸ்லாமிய நாடுகளும் விரைவில் கத்தார் நாட்டுடன் தூதரக உறவினை முறித்துக் கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், அமெரிக்கா 36 எப்…
-
- 6 replies
- 674 views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் பலி அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கேலிஸை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். குண்டடிப்பட்ட ஸ்கேலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடியரசுக் கட்சியை சேர்ந்த லூசியானா பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கேலிஸ், விர்ஜினியா மாகாணத்தில் பேஸ்பால் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது உதவியாளர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர், திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதில் ஸ்கேலிஸ் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு குண்டடிப்பட்டது. …
-
- 0 replies
- 264 views
-
-
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மோசமான தீயில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர் – இது குறித்த பிபிசியின் நேரடிச் செய்திகள், அத்துடன் வங்கதேச நிலச்சரிவில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 354 views
-
-
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு 52.75 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம் பப்புவா நியூ கினியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மானுஸ் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1900 அகதிகளின் உளநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று விக்டோரியா உ…
-
- 0 replies
- 206 views
-
-
கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் ? டாம் கீட்டிங்நிதி, குற்றம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் மையம் கத்தாரை , சௌதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகள் தனிமைப்படுத்திய சர்ச்சை, அந்த எரிவாயு வளமிக்க நாடு , மத்தியக்கிழக்கு பகுதியின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளிலிருந்து வருகிறது. படத்தின் காப்புரிமைREUTERS கத்தாரின் `தன்வழி சார்ந்த` வெளியுறவுக் கொள்கை பற்றி கத்தாரின் அண்டை நாடுகள் அதிருப்தி தெரிவித்திருப்பது இது முதல் முறை அல்ல - கத்தாருடன் அந்த நாடுகள் தங்கள் ராஜீய உறவுகளை 2014ல்கூட ஒன்பது மாதங்களுக்குத் துண்டித்திருந்தன. இஸ்லாமியவாத …
-
- 0 replies
- 410 views
-
-
லண்டனிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ பிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் உள்ள தொடர் மாடிக் குடியிருப்பு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது. 24 தொடர் மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 200 இற்கும் மேற்பட்ட தியணைப்புப் படையினர் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர். http://newsfirst.lk/ta…
-
- 23 replies
- 2.5k views
-
-
பிரிட்டனில், கான்சர்வேட்டிவ் கட்சியும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியும் நிலைத்த, நீடித்த அரசாங்கத்தை எவ்வாறு அமைக்கப்போகின்றன என்பது குறித்த பிபிசியின் சிறப்புப் பார்வை. ரஷ்யாவில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய எதிர்க்கட்சி தலைவர் அலக்ஸே நெவால்னிக்கு முப்பது நாட்கள் சிறைத்தண்டனை. நெதர்லாந்தின் கடற்கரையோரமாக நூற்றுக்கணக்கான நாஜிக்களின் பதுங்கு குழிகளும், சுரங்கங்களும் எப்படி வந்தன என்பது பற்றிய குறிப்புகள்.
-
- 0 replies
- 250 views
-
-
பில்லியன் பவுண்டுகள் பற்றி கனவு கண்டு கொண்டிருங்கள்; எதையும் நிரூபிக்க முடியாது: விஜய் மல்லையா லண்டன் கோர்ட்டில் மல்லையா ஆஜராக வந்தார். | படம்.| ராய்ட்டர்ஸ். ரூ.9,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கிய விஜய் மல்லையா லண்டனில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய போது கோர்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறும்போது ‘பில்லியன் பவுண்டுகள் என்று நீங்கள் கனவு கண்டு கொண்டேயிருங்கள்’ என்றார். “நான் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன், தொடர்ந்து மறுப்பேன். நான் எந்த நீதிமன்ற விசாரணையிலிருந்தும் நழுவவில்லை, என்னுடைய தரப்புக்கான நியாயத்திற்கு போதுமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் ஊடகங்களிடம் இது பற்றி…
-
- 2 replies
- 425 views
-