Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், கனடாவுக்கு வந்த முஹமத் மற்றும் ஆஃப்ரா பிலான் தம்பதியர் முற்றிலும் ஒரு புதிய நாட்டில், தங்களின் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். படத்தின் காப்புரிமைAFRAA BILAN Image captionகுழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'வுடன் ஆஃப்ரா பிலான் சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரை சேர்ந்த இத்தம்பதியர் மற்றும் இவர்களின் மகள் நயா மற்றும் மகன் நேல் ஆகியோர் கடும் பனிக்காலத்தில் மான்ட்ரல் நகருக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். கனடாவுக்கு வந்த மற்ற சிரியா அகதிகளை விமான நிலையத்தில் வரவேற்றது போல, இவர்கள் வந்த போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்கவில்…

  2. வெடிகுண்டுக்கு அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு பாப்பாண்டவர் கண்டனம் அமெரிக்க ராணுவம் போரில் பயன்படுத்திய மிகப்பெரிய அணு வெடிகுண்டுக்கு, அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அந்த பெயரை கேட்ட போது தான் மிகவும் கேவலமானதாக உணர்ந்ததாக வத்திகானில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார். ஒரு தாய் உயிர் மட்டுமே கொடுப்பார் எனவும் எனினும் இது மரணத்தை மட்டுமே கொடுக்கின்ற இந்தக் குண்டை தாய் என அழைக்கின்றோம் எனவும் கவலை வெளியிட்டுள்ள அவர் உலகில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என கேள்வியு…

    • 3 replies
    • 540 views
  3. ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல் : வெற்றி பெறப்போவது யார் ? படத்தின் காப்புரிமைREUTERS Image captionமுன்னாள் முதலீட்டாளர் இமானுவேல் மக்ரோங் மற்றும் தீவிர வலதுசாரி தேசியவாதி மரைன் லெ பென் ஃபிரான்ஸில் முன்னெப்போதுமில்லாத வகையில் நடைபெற்ற பிரசாரங்கள் நாட்டை பிரித்திருக்கும் நிலையில், அங்குள்ள வாக்காளர்கள் தங்களுடைய அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இரண்டாம் சுற்று போட்டியின் மையமாக, 39 வயதான முன்னாள் முதலீட்டாளரான இமானுவேல் மக்ரோங், தீவிர வலதுசாரி தேசியவாதியான 48 வயதான மரைன் லெ பென் எதிர்த்து களம் காண்கிறார். வெளிநாடுகளில் வாழக்கூடிய ஃபிரெஞ்சு குடிமக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழக்கூடியவர்கள் வாக்களிக்க தொடங்கிவிட…

    • 6 replies
    • 873 views
  4. தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளில் 82 பேர் விடுதலை வட கிழக்கு நைஜீரியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் 276 பாடசாலை சிறுமிகள் கடத்தப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 82 பேரை போகோ ஹராம் குழுவை சேர்ந்த இஸ்லாமியவாத தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பரிமாற்றம் மூலம் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக பள்ளி சிறுமிகள் விடுவிக்கப்பட்டனர். நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ஆய்வு குழு முடிவு நைஜீரியாவில் போகோ ஹராம் அமைப்பை தோற்கடிப்பதில் இருக்கும் கடும் சவால் விடுவிக்கப்பட்ட சிறுமிகளை இன்று (07) அதிபர் ம…

  5. நாடு கடந்த அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் விழா: [Sunday 2017-05-07 19:00] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் நிகழ்வு வருடாந்த இரவு விருந்துபசார நிகழ்வுடன் சனிக்கிழமை ஏப்ரல் 22ம் திகதி ரொறோன்ரோவில் உள்ள ஸ்காபொரோ மாநாட்டு நிலையத்தில் மிகச்சிறப்பான முறையில் நடந்தேறியது. 'தந்தை செல்வா ஞாபகார்த்த விருது' திரு ஈழவேந்தன் அவர்களுக்கும், 'மாமனிதர் துரைராஜா ஞாபகார்த்த விருது' கலாநிதி சேவியர் பெர்னான்டோ அவர்களுக்கும், 'நெல்சன் மண்டேலா ஞாபகார்த்த விருது' தென்னாபிரிக்க மனித உரிமைச் செயல்பாட்டாளரான யஸ்மின் லூயில்ஸ் ஸூகா அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தந்தை செல்வ…

    • 0 replies
    • 497 views
  6. வடகொரியாவுக்கு எதிராக சதி? அமெரிக்க பிரஜை கைது தங்கள் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு அமெரிக்க பிரஜையை வடகொரியா கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவடகொரியாவுக்கு எதிராக சதி? அமெரிக்க பிரஜை கைது பியூஎஸ்டி என்றழைக்கப்படும் பியோங்யாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த கிம் ஹாக்-சாங், கடந்த மே 6-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டதாக கேசிஎன்ஏ செய்தி ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பியூஎஸ்டி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த கிம் சாங்-டக் உள்பட மூன்று அமெரிக்க ப…

  7. காதலால் நேர்ந்த அசம்பாவிதம்; அமெரிக்கவாழ் இந்தியக் குடும்பம் சிதறியது அமெரிக்கவாழ் இந்தியர் ஒருவரும் அவரது மனைவியும் அவர்களது மகளின் முன்னாள் காதலனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நரேன் பிரபு சிலிக்கன் வெலி பகுதியில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரி. அவரும் அவரது குடும்பமும் சென் ஜோஸ் நகரில் வாழ்ந்து வந்தனர். இவர்களது மகள் வேறொரு மானிலத்தில் வாழ்ந்து வருகிறார். நரேனின் மகளுக்கும் மிர்ஸா டட்லிக் (24) என்ற இளைஞனுக்கும் இடையில் காதல் முளைத்தது. எனினும், கடந்த வருடம் இந்தக் காதல் பிரிவில் முடிந்தது. இதனால் கோபம் கொண்ட மிர்ஸா, நரேனின் மகளைப் பழிவாங்க நினைத்…

    • 0 replies
    • 496 views
  8. ஆப்பிள் நிறுவனம் ஆந்திராவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை தனது அமெரிக்க பயணத்தின் மூலம் சந்திரபாபுநாயுடு அதிகரிக்கச் செய்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் 5க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கு அவர் செல்ல உள்ளார்.பல்வேறு தொழில் அமைப்பினருடனும் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு நேற்றைய சந்திப்பின் போது இன்னோவா சொல்யூசன்ஸ், ஐ-இன்க் உள்ளிட்ட 5 மென்பொருள் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். இதன் மூலம…

  9. அழகுப் போட்டிகளில் ஒல்லியான அழகிகள் பங்கேற்க ஃபிரான்ஸ் தடை படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் அழகுப் போட்டிகளில் ஆரோக்கியமில்லாத உடல் மெலிந்த மாடல்களை ஈடுபடுத்த தடைவிதிக்கும் சட்டம் சனிக்கிழமை முதல் ஃபிரான்ஸில் அமலாகியுள்ளது. உயரத்திற்கு ஏற்ற எடையை குறிக்கும் பாடி மாஸ் இண்டெக்ஸ் (பி எம் ஐ )குறித்தும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பற்றியும் மருத்துவர் ஒருவரின் கையொப்பமிட்ட சான்றிதழை மாடல்கள் சமர்பிக்க வேண்டும். உணவு கோளாறுகளை எதிர்த்துப் போராடுவதே இதன் முக்கிய நோக்கம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்…

  10. நீங்கள் விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்படுமா? தெரிந்துகொள்ளுங்கள் 10 புதிய தகவல்களை! படத்தின் காப்புரிமைGOOGLE இந்தியாவில் விமான பயணத்தின் போது தவறாக நடந்துகொள்பவர்கள் குறித்த புதிய விதிகளை மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்த 10 முக்கியத் தகவல்களை பார்ப்போம் : 1. உடல் சைகைகள், வாய்மொழி துன்புறுத்தல் மற்றும் நிதானமில்லாத போதை ஆகியன சீர்குலைக்கும் நடத்தையில் முதல் நிலையாகும். 2. பிடித்து தள்ளுவது, எட்டி உதைத்தல் மற்றும் பொருத்தமற்ற முறையில் தொடுவது அல்லது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட உடல் ரீதியான தவறான நடத்தைகள் இரண்டாம் நிலையாகும். படத்தின…

  11. அந்தஸ்தை இழக்கிறதா ஆங்கிலம்? பிரெஞ்சுக்கு மாறிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption''ஐரோப்பாவில் ஆங்கில மொழி தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது'' இத்தாலியில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாட் ஜக்னர், "ஐரோப்பாவில் ஆங்கில மொழி தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது" என்று கூறினார். பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனது உரைகளை பிரெஞ்சு மொழியில் வழங்குவதாக அவர் கூறினார். தனது மொழி தெரிவுக்கான காரணத்தை விளக்கிய அவர், "மெதுவாக ஆனால் நிச்சயமாக ஐரோப்பாவில் ஆங்கிலம் முக்கியத்துவத்தை இழந்து வரு…

  12. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பின் முதல் வெளிநாட்டுப் பயண அட்டவணை தயார்: - எந்த நாடுகள் தெரியுமா? [Friday 2017-05-05 15:00] அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயண அட்டவணை தயாராகியுள்ளது. அதன்படி இஸ்ரேல், வாடிகன், சவுதி அரேபியாவுக்கு அவர் செல்லவிருக்கிறார்.இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே அவர் இந்தப் பட்டியலில் உள்ள இடங்களுக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் ட்ரம்பின் வெளிநாட்டுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.முன்னதாக நேற்று ஜனாதிபதி ட்ரம்ப் பாலஸ்…

    • 0 replies
    • 324 views
  13. உலகில் அதிசக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா! [Friday 2017-05-05 15:00] உலகின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா அதை அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளது.ரஷ்யா ஏற்கனவே Satan என்னும் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்து வெளியிட்டு உலக நாடுகளை மிரள செய்தது.இந்நிலையில், Satan 2 என குறிக்கும் வகையில் RS-28 Sarmat என்னும் உலகின் கனமான மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணையை தயாரித்து வருகிறது. Sarmat ஏவுகணை இதுவரையில்லாத அளவில் 11,000 மைல்கள் போகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த ஏவுகணை பிரான்ஸின் ஒரு பகுதியையே அழிக்கும் அளவுக்கு திறன் கொண்டதாகும்.தொழில்நுட்பத்தை பொருத்தவரைய…

    • 0 replies
    • 301 views
  14. சீனா தயாரித்த முதல் பயணியர் விமானத்தின் வெள்ளோட்டம் சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது பெரிய பயணியர் விமானம், அதனுடைய முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளது. போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய விமானச் சந்தையில் நுழைவதற்கு சீனாவின் அதிகரித்துள்ள அபிலாஷையின் முக்கிய அடையாளமாக சி919 விமானம் பார்க்கப்படுகிறது சர்வதேச விமான சந்தையில் கால்பதிக்க எண்ணியுள்ள சீனாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. போயிங் மற்றும் ஏர்…

  15. பாகிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொள்ள தயாராகி வரும் இந்திய ராணுவத்தினர்: - எல்லையோர மக்களுக்கு எச்சரிக்கை [Friday 2017-05-05 15:00] பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொள்ள இந்திய ராணுவத்தினர் தயாராகி வரும் நிலையில், எந்நேரத்திலும் ராணுவத்தினர் இத்தாக்குதலை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காஷ்மீரில் இந்தியா–பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைகளை குறிவைத்து தானியங்கி ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளால் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் கடந்த மே 1 ஆம்…

  16. மினரல் வாட்டர் கேனை கொண்டு சிறுநீர் கழிப்பிடம் உருவாக்கிய தமிழர்கள்: - குவியும் பாராட்டுக்கள் [Friday 2017-05-05 15:00] தமிழ்நாட்டில் காலி வாட்டர் கேனை வைத்து சிறுநீர் கழிக்கும் யூரின் பேஷனை அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 97 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இங்குள்ள சிறுநீர் கழிப்பறை மாணவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்துள்ளது. சிறுநீர் வெளியேறும் வசதி அந்த கழிப்பறையில் இல்லாததால் அதன் துர்நாற்றம் பள்ளி வகுப்பறை வரை வீசி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.இதற்கு தீர்வு காண மு…

    • 0 replies
    • 440 views
  17. பிரித்தானியாவுடனான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு ஜேர்மனிய அதிபர் அழைப்பு : பிரித்தானியாவுடன் சிறந்த நல்லுறவுகளை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் நியாயமானதும் ஆக்கபூர்வமானதுமான பேச்சுவார்த்தைக்கு ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுகையில் ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் சிறந்த நல்லுறவுகள் பேணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஹம்பேர்க்கில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேர்க்கல் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்போது உள்ள…

  18. கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல சி.ஐ.ஏ சதி -வடகொரியா குற்றச்சாட்டு அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் தென் கொரியாவின் உளவாளிகள் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைக் கொல்ல சதி செய்ததாக வட கொரியா குற்றம் சாட்டியிருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்கா மற்றும் தென் கொரிய ஏஜெண்டுகள் வட கொரியத் தலைவரான கிம் ஜோங்-உன்னை கொல்லத் திட்டமிட்டுள்ளதாக வட கொரிய தேசிய ஊடகங்கள் கூறியுள்ளன. வடகொரிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய புலனாய்வு முகமையின் ஆதரவு பெற்ற "பயங்கரவாதக் குழு", உயிரியல் இரசாயனப் பொருள் கொண்டு தாக்குதல் நடத்துவதற்காக வட கொரியாவுக்குள் நுழைந்திருப்பதாகத் தெ…

  19. இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில்.. • இன்றோடு முடியும் பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சாரம்; அடுத்த அதிபர் முன்னாள் வங்கி அதிகாரியா? அதிதீவிர வலதுசாரியா? • விண்ணில் பறந்தது சீனாவின் முதல் உள்ளூர் தயாரிப்பு வர்த்தக விமானம்; ஆனால் சர்வதேச சந்தையில் இவை எடுபடுமா? • கேமெரா பொறுத்தப்பட்ட செயற்கைக்கை; பார்க்கும் பொருட்களை எடுக்கவல்ல கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

  20. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சார நாள் ========================================= பிரான்ஸின் அரசியலை தலைகீழாக புரட்டிப் போடும் உக்கிரமான தேர்தல் பிரச்சாரம் இது. ஞாயிறன்று வாக்கெடுப்புக்கு முன்னதாக அந்த நாட்டு வாக்காளர்களிடம் தமது கோரிக்கையை முன்வைக்க அதிபர் வேட்பாளர்களுக்கு இது இறுதி வாய்ப்பு. முன்னணியில் திகழ்வதாக கருதப்படும் மையவாத சுயேச்சை வேட்பாளர் இமானுவல் மெக்ஹோனுக்கு மேலும் ஒரு உற்சாகமாக, அறுபத்தியிரண்டு வீத வாக்குகளை பெற்று போட்டியாளர் தேசியவாத மரின் லு பென்னை அவர் தோற்கடிப்பார் என்று கருத்துக்கணிப்புகள் கூருகின்றன. பிபிசியின் காணொளி. BBC

  21. மனித இனம் உயிருடன் வாழவேண்டுமென்றால் பூமியை துறந்து, வேறு கிரகங்களை நோக்கி 100 வருடங்களுக்குள் செல்லவேண்டுமென பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டிபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார். மேலு உலகில் ஏற்படும் மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து வரும் ஹாக்கிங், கரும் துளை ஆய்வின் மூலம் காலத்தை வெல்லும் சூட்சுமத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தற்போது உலக இருப்பு தொடர்பான ஆவணப்படமொன்றை உருவாக்கியுள்ளார். குறித்த காணொளியினுடாக இன்னும் 100 வருடங்களில் பூமி மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை கொண்டிருக்காது என தெளிவுபடுத்தியுள்ளார். அத்தோடு குறித்த ஆவணப்படத்தினுடாக, உலக சனத்தொகை பெருக்கம், தொற்றுநோய் பரவல்கள், வளங்கள் இழக்கப்படுகின்றமை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் அழ…

    • 2 replies
    • 485 views
  22. தனது உயிரைப் பறித்த போரின் இறுதி தருணத்தை பதிவு செய்த ராணுவ புகைப்படக்காரர் ஆப்கன் போரில் மரணமடைந்த ஹில்டா கிளேடன் எடுத்த கடைசி புகைப்படம் | படம்: ஏபி அமெரிக்க ராணுவ பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது இறுதி தருணத்தின் போது எடுத்த புகைப்படம் நான்கு வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ புகைப்படக் கலைஞர் ஹில்டா கிளேடன் (22), கடந்த 2013 ஆம் ஆண்டு ஆப்கனின் லக்மான் மாகாணத்தில் ஏற்பட்ட பீரங்கிக்குண்டு வெடிவிபத்தில் மரணமடைந்தார். கிளேடனுடன் ஆப்கனை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களும் பலியாகினர். பீரங்கி குண்டுவெடிப்பில் கிளேடன் விபத்துக்குள்ளான போது அவரது கேமராவில் அவர் எடு…

  23. வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு வடகொரியாவுடன் சுமூகமான உறவுகளைப் பேண விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவுடன் நட்புறவை பேண விரும்புவதாகவும் சீனாவின் நிலைப்பாடு தெளிவானதும் தொடர்ச்சியானதுமாகும் எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார். கொரிய பகுதியில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தி வரு…

    • 0 replies
    • 245 views
  24. சோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி சோமாலியாவில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான Abas Abdullahi Sheikh என்ற அமைச்சரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் அரசாங்கப் படையினர் தவறுதலாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் மொகடிஸூவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவயது புகலிடக் கோரிக்கையாளரான Abas Abdullahi Sheikh கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அல் கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சோமாலியாவில் குழப்ப…

    • 0 replies
    • 335 views
  25. மே 24-இல் போப் பிரான்சிஸ் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. ரோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.