Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக்க பெர்னி சாண்டர்ஸ் ஆதரவு அமெரிக்க அதிபர் தேர்தலில், தனது போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக்க, பெர்னி சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளார். பரப்புரையில் ஒன்றாக தோன்றிய ஹிலாரி கிளிண்டன் மற்றும் சாண்டர்ஸ் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், ஹிலாரி வெற்றி பெறுவதை உறுதி செய்ய தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வதாக சாண்டர்ஸ் தெரிவித்தார். அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதை தடுப்பது மிகவும் முக்கியம் என்றும் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு செனட்டர்க…

  2. ஆஸ்திரேலியாவில் சிறுவனை தூக்கி பறந்து செல்ல முயன்ற கழுகு மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது. அலிஸ் ஸ்ப்ரிங்ஸ் டெசர்ட் பார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த பெரிய கழுகு பயத்தில் அலறிய அந்த சிறுவனின் தலையின் மேல் தனது நகங்களை பதித்ததை கூட்டத்தினர் ஸ்தம்பித்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர். இதை நேரில் பார்த்தவர்கள் அந்த பறவை, அச்சிறுவனை ஒரு சிறிய விலங்கைப் போல தூக்கிச் செல்ல முயன்றதாக கூறுகின்றனர் . ஆறிலிருந்து எட்டு வயதானவனாக கருதப்படும் அச்சிறுவன், முகத்தில் ஒரு லேசான வெட்டுக் காயத்துடன் உயிர் பிழைத்…

  3. தெரெஸா மேவின் முதல் சவால்: ஏங்கலா மெர்கல் கருத்து பிரட்டன் பிரதமராக பதிவியேற்கவிருக்கும் தெரெஸா மே எதிர்கொள்ளும் முதல் சவால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் எவ்வகையான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பதே என ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். அனைத்து உறுப்பு நாடுகளும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் ஏற்படும் சேதம் குறைக்கப்பட வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் வரப்போகும் முடிவு லண்டனைச் சார்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெரெஸா மே வரும் புதன் கிழமையன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியை விட்டு விலகும் டேவிட் கேமரன் தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டினார். …

  4. இத்தாலியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 20 பேர் பலி தெற்கு இத்தாலியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். பாரியின் வடமேற்கு நகரான ஆண்டிரியாவில் அருகில் உள்ள ஒற்றை தண்டவாளத்தில் இந்த இரண்டு ரயில்களும் மோதிக் கொண்டன. மீட்பு பணியாளர்கள், சிக்கியுள்ள பயணிகளை மீட்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என கொரோட்டோ நகரின் மேயர் மாசிமோ மாசிலி தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் மருத்துவமனைகள் ரத்த தானம் செய்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, முன் பெட்டிகள் முழுமையாக அழிந்துள்ளதாகவும், குறைந்தது…

  5. ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான இராக்கின் போருக்கு உதவும் வகையில் அமெரிக்கா மேலும் 560 படையினரை அனுப்பவுள்ளது. பாக்தாத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்ட்டர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிரான நடவடிக்கையின் கவனம், நாட்டின் வட பகுதியில் உள்ள, அதன் கோட்டையான மொசூலின் நகரை நோக்கித் திரும்புகையில், அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு படைகள் ஐ.எஸ் வசமிருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கய்யாரா விமான தளத்தை திரும்ப கைப்பற்றின.. அது மொசூல் நகரை திரும்ப கைப்பற்ற பயன்படும் மையங்களில் ஒன்றாக செயல்படும் என கார்ட்டர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளுக்கான தளவாட ஆதரவுகளை அமெரிக்கர்கள் வழங்குவா…

  6. இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயரில் உள்ள ஆபாச நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு பெரும்பாலான மக்கள், பொதுவாக்கெடுப்பில் வாக்களித்ததால், அங்கு பிரதமராக இருந்த கேமரூன் பதவி விலக நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். இந்த இரட்டை பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய இரண்டு பேர் இருந்தன…

  7. பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்கிறார் பிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்பார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருக்கிறார். பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகும் தெரெஸா மே ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரெஸா மே இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவி விலகும் கேமரன் மே அம்மையார் மட்டுமே இன்னும் போட்டியில் எஞ்சியிருக்கும் ஒரே தலைவர். அவருடன் போட்டியிலிருந்த மற்றொரு பெண் வேட்பாளரான, ஆண்டிரியா லெட்சம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகு…

  8. பிரிட்டன் வெளியேற்றம்-'பேச்சுவார்த்தைகள் கடினமாக இருக்கும்' , ஏங்கலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பிரிட்டன் குறித்தான பேச்சுவார்த்தைகள் கடினமானதாக இருக்கும் என ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல் கூறியுள்ளார். கிழக்கு ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு அரசியல் பேரணியின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரிட்டனின் புதிய பிரதமர் அதிகாரபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற கேட்டுக் கொண்டதற்கு பிறகுதான் முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என மெர்கல் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தனக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் எடுத்து கொண்டு, தேவை இல்லாதது என்று நினைப்பதை ஒதுக்கிவிட முடியாது என்று கடந்த ஞாயிறு இரவு நடந்த ஒரு தொலைக்காட்சி பேட்ட…

  9. ஐநா பாதுகாப்பு கவுன்சில், தெற்கு சூடானுக்கு கூடுதலாக ஐநா அமைதிப் படையினரை அனுப்ப முடிவெடுத்தால், அப்பகுதியில் உள்ள நாடுகள் அவ்வாறு அனுப்பத் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.பொதுமக்கள் மீதும் மற்றும் ஐ.நா வளாகங்களிலும் தாக்குதல் நடத்தினால் அது போர் குற்றம் புரிவதற்கு ஒப்பாகும் என பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. தெற்கு சூடானில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில், அமைதிப்படையைச் சேர்ந்த இரு சீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.தெற்கு சூடான் எல்லை பகுதியை ஒட்டிய தனது எல்லையில், தனது படையினரை உகாண்டா அனுப்பியுள்ளது. இச்சூழலில், IGAD என்று அழைக்கப்படும் அரசாங்கங்களுக்கு இடையிலான மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த…

  10. தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று பிரதமர் மோடி கென்யா அதிபரிடம் வலியுறுத்தினார்.ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தனது பயணத்தின் நிறைவாக கென்யா நாட்டுக்கு சென்றார். தலைநகர் நைரோபியில் உள்ள அதிபர் மாளிகையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிபர் உஹிரு கென்யாட்டாவை அவர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் 2 தலைவர்களின் முன்னிலையில் 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக, ராணுவ மற்றும்…

  11. சோமாலியாவில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 22 பேர் பலி சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவுக்கு தென்மேற்கே உள்ள இராணுவ முகாம் மீது நேற்று அல்-சபாப் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். குறித்த தாக்குதலில் 10 இராணுவ வீரர்களும், 12 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தாங்கள் நடத்திய இந்த தாக்குதலில் 30 வீரர்கள் பலியானதாக அல்-சபாப் அமைப்பு தெரிவித்தது. எனினும் தங்கள் தரப்பில் பலியானோர் குறித்து அவர்கள் வெளியிடவில்லை. இராணுவத்திற்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரமாக சண்டை நடந்தது. இறுதியில் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றமை குறிப்பிடத்…

  12. இராக் போர் சட்டவிரோதம்! முன்னாள் பிரதமர் டோனி பிளேரை குறைகூறுகிறது பிரிட்டன் அறிக்கை இராக் மீது படையெடுப்பது என்ற முடிவு தொடர்பாக வெளியான பல்வேறு தகவல்களை விசாரித்த சர் ஜான் சில்காட் தலைமையிலான குழுவின் முக்கியக் கண்டுபிடிப்பு, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எழுதிய தனிப்பட்ட முறையிலான ஒரு கடிதம்தான். 2002 ஜூலையில் எழுதிய அந்தக் கடிதத்தில் பிளேர் குறிப்பிட்டிருக்கிறார், ‘நான் உங்களுடன் இருப்பேன் - எது நடந்தாலும்’ என்று! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட 2001 செப்டம்பர் 11 முதல் பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் பதவ…

  13. ஈராக் மற்றும் சிரியாவின் பொது வீதிகளில் படுகொலைகள் மட்டுமே செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்களை மகிழ்வித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக வெளி உலகை நம்ப வைக்கும் பணியில் அந்த அமைப்பு தற்போது களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சிரியாவின் நினிவே மண்டலத்தில் அமைந்துள்ள தல் அஃபர் பகுதியில் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் பொருட்டு அப்பகுதி மக்களை கட்டாயப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மக்கள் அவர்களின் குணம் அறிந்து உயிர் மீது கொண்ட ஆசையில் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்க சென்றுள்ளனர். …

  14. இன்றைய நிகழ்ச்சியில் * தெற்கு சூடானில் மீண்டும் சண்டை வெடித்தது; உலகின் இளம் தேசத்தின் வலுவற்ற சமாதானம் தாக்குப்பிடிக்குமா? * அமெரிக்காவில் அதிகரிக்கும் போராட்டங்கள்; இரண்டு கருப்பினத்தவர் மற்றும் ஐந்து காவலர் கொலைகளால் உருவான இனமோதல் அதிகரிப்பு. * ஜப்பான் தேர்தலில் ஷின்சோ அபேவின் ஆளும் கூட்டணி அமோக வெற்றி; அமெரிக்க நிர்பந்தத்தால் சேர்க்கப்பட்ட சமாதான சட்டப்பிரிவு அரசியல் சட்டத்திலிருந்து அகற்றப்படுமா?

  15. அங்காராவின் ‘புதிய நகர்வுகள்’ பிராந்தியத்தில் ஏற்படும் ‘அதிர்வுகள்’ – ஸகி பவ்ஸ் (நளீமி) sri 4 days ago கட்டுரை 11 Views துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை புதியதொரு தளத்திலிருந்து புறப்படத் தயாராகியுள்ளதனை அவதானிக்க முடியும். கடந்த நான்கு வருடங்களாக அர்தோகான் அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் நியாயமாக அங்காராவை பாதித்துள்ளமை யதார்த்தமானது.பிராந்திய அரசியல் மாற்றங்களை கையாள்வதற்கான அதன் இயலுமையை பாரியளவில் அவை வீழச்சியடையச் செய்துள்ளன. குறிப்பாக, வலுச்சமநிலை மிக்க நாடுகளுடனான முறுகல் நிலை –எகிப்து, ரஷ்யா, ஈராக் – துருக்கியை நினைத்ததை விட படுகுழிக்குல் ஆழ்த்தி விட்டதென்றே கூறலாம். பிராந்திய அரசியல் தொடர்பாக யாருடன் இணைந்து எத்தகைய …

    • 0 replies
    • 304 views
  16. மரக்கன்று நடுவதில் உலக சாதனை படைக்க உள்ள உத்தர பிரதேச மாநிலம் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை ஒன்றை நடத்தி முடிக்க நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இந்தியா மாநிலமான உத்தர பிரதேசம். இதற்காக, மாநிலம் முழுக்க 50 மில்லியன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த சாதனை முயற்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். மாலை நேரத்தில் வெளிச்சம் குறையும் போது இந்த பணி தடைப்படாமல் செயல்பட மண்ணெண்ணெய் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பாம்புக்கடியை சமாளிக்கும் வகையில் விஷ முறிவு மருந்தும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கால நிலை தொடர்பான உச்சி மாநாட்டில் இந்தியா அளித…

  17. பிரிட்டனின் அடுத்த பிரதமராக தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார் தெரஸா மே மற்றும் ஆண்ட்ரியா லீட்சும் இன்னும் சில மணி நேரங்களில் அல்லது வரக்கூடிய நாட்களில் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் உள்துறை அமைச்சர் தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார். தெரஸா மேவை எதிர்த்து களத்தில் நின்ற எரி சக்தி அமைச்சர் ஆண்ட்ரியா லீட்சும் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு புதிய தலைவர் மிக அவசரமாக நியமிக்கப்பட வேண்டும் என்ற தேசிய நலனுக்காக இந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக ஆண்ட்ரியா லீட்சும் தெரிவித்துள்ளார். இச்சூழலில், பிரிட்டனின் இரண்டாவது பெண் பிர…

  18. சியோல், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்ட அடுத்த நாள் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடகொரியா, உலக நாடுகளின் ஏகோபித்த எதிர்ப்பையும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டில் இருந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிபயங்கர ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி உலக அரங்கை அந்த நாடு அதிர வைத்தது. வடகொரியாவின் அத்துமீறிய செயல்களால் கடும் அதிர்ச்சி அடைந்த ஐ.நா. பாதுகாப்பு க…

  19. ஜேர்மனியில் ஏற்பட்ட கலவரத்தில் 120 பொலிஸார் காயம் ஜேர்மனியில் கடந்த மாதம் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து பொலிஸிற்கு எதிராக தலைநகர் பெர்லனில் இடதுசாரி அமைப்புகள் நேற்று மேற்கொண்ட போராட்டத்தில் தீடீரென ஏற்பட்ட மோதலினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை நடந்தது. அதில் 3500 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் போது திடீரென வன்முறை வெடித்தது. இதில் பங்கேற்றவர்கள் போத்தல்கள், கற்கள் மற்றும் தீப்பந்தங்களை கொண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அப்பகுதியில் வீதியில் …

  20. ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவனாக திகழ்ந்த பர்கான் முசாபர் வானி, பாதுகாப்பு படையினரால் நேற்று மாலை காஷ்மீரில் அவன் பதுங்கியிருந்த கிராமத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில், இரண்டு கூட்டாளிகளுடன் முசாபர் வானி உயிரிழந்தான். தீவிரவாதி பர்கான் முசாபர் வானி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, காஷ்மீர் போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. தீவிரவாதி வானியின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். 2010-ம் ஆண்டு அவனும், அவனது சகோதரன் காலித்தும் வீட்டை விட்டு வெளியேறி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தனர். 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த துப்பாக்கி சண்டையில் காலித் கொல்லப்பட்டான்…

  21. மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றபோது மாயமான கேரள இளைஞர்கள் 20 பேர் ஐஎஸ்ஸில் இணைந்தது உறுதியானது: மாநில உளவுத் துறை அறிக்கை ஐஎஸ் இயக்கத்துக்கு எதிரான போராட்டம். | கோப்புப் படம் கேரளாவில் இருந்து மாயமான 20 இளைஞர்களும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக உளவுத் துறை உறுதி செய்துள்ளது. அதேசமயம் அம்மாநிலத்தை சேர்ந்த மேலும் பல இளைஞர்கள் ஐஎஸ்ஸில் இணைந்திருக்க கூடும் என்ற தகவலும் வெளியாகி இருப்பதால் அச்சம் எழுந்துள்ளது. கேரளாவின் காசர்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் திடீரென மாயமாகினர். ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்களது நிலை என்னவானது என்பது குறித்து தகவ…

  22. ஈகுவடோரில் சற்றுமுன்னர் இரு பயங்கர நிலநடுக்கங்கள் : பதற்றத்தில் மக்கள் தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் சற்றுமுன்னர் பாரிய இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈகுவடோரின் வடமேற்கு பகுதிகளான குயினிண்ட் மற்றும் முயிஸின் ஆகிய பகுதிகளிலேயே 5.9 மற்றும் 6.2 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சில இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஈ…

  23. ஹூஸ்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் விலங்கிடப்பட்ட கைதிகள் சிறையினை உடைத்து கொண்டு வெளியே வந்து மாரடைப்பினால் உயிருக்கு போராடிய சிறை காவலர் ஒருவரை காப்பாற்றியுள்ளனர். போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் இயங்கி வரும் அந்த சிறையில் 8 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்து வந்துள்ளார். அவர் இன்று நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தபடி கைதிகளிடம் நகைச்சுவை செய்து கொண்டும் பேசி கொண்டும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் நெஞ்சு வலியினால் திடீரென சரிந்து விழுந்துள்ளார். கைதிகள் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் அங்கு ஒருவரும் இல்லை. அதேவேளையில், கைதிகளில் ஒருவர் சிறையின…

  24. அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் என அவரது மகன் சபதமேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. துபாய்: அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த 'நேவி சீல்' என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஒசாமாவின் பிரேதத்தை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இந்நிலையில், தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் பழிக்…

  25. தெற்கு சூடானில் ராணுவத்தினருக்கும் முன்னாள் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.நேற்று முன் தினம் தெற்கு சூடானின் 5-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை யொட்டி, அந்நாட்டின் துணை அதிபர் ரீக் மாஷரும் (முன்னாள் கிளர்ச்சியாளர்), அதிபர் சல்வா கிர்ரும் சந்தித்தனர். அப்போது, அவர்களுடைய பாதுகாவலர்களுக்கு இடையே திடீரென்று துப்பாக்கிச் சண்டை மூண்டது. அதைத் தொடர்ந்து, முன்னாள் கிளர்ச்சியாளர்களும், தெற்கு சூடான் ராணுவத்தினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில், 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=161255&category=WorldNews&lan…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.