உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26892 topics in this forum
-
குடியேறிகள் நெருக்கடி: துருக்கி புதிய திட்டத்தை சமர்ப்பித்தது குடியேறிகள் நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்ற தனது புதிய திட்டத்தை, பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றுவரும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாட்டில் துருக்கி சமர்ப்பித்துள்ளது. மேலதிகமாக மூன்று பில்லியன் யூரோக்களை துருக்கி கோரியுள்ளதாக, ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஸ்குல்ஷ் தெரிவித்துள்ளார். அகதி தஞ்சம் மறுக்கப்பட்ட, துருக்கியர்கள் அல்லாதவர்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கும், தனது கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் துருக்கி முன்வந்துள்ளதாக பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரவிக்கின்றார். குடியேறிகள் விஷயத்தில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒர…
-
- 0 replies
- 370 views
-
-
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் வழக்கு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 12 சீனப் பயணிகளின் குடும்பத்தினர் பீஜிங் நகரில் வழக்கொன்றை பதிவு செய்திருக்கிறார்கள். காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.370 விமானத்தின் சிதைந்த ஒரு பகுதி என கருதப்படும் ஒரு துண்டு தங்கள் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ள நீதிமன்றங்கள் உதவ வேண்டும் என்று அந்தக் குடும்பங்கள் கூறுகின்றன. சர்வதேச ஒப்பந்தங்களின்படி, விமான விபத்துக்களில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க, விமான விபத்து நடந்த நாளிலிருந்து, இரண்டு ஆண்டுகள் அவகாசம் உண்டு. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், எம்…
-
- 0 replies
- 351 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்காவும் தென்கொரியாவும் மிகப்பெரிய கூட்டு இராணுவ ஒத்திகையை நடத்துகின்றன. பதிலடியாக தாறுமாறான அணுத்தாக்குதல் நடத்துவோம் என்கிறது வடகொரியா! - மேற்கு பால்கன் பகுதியினூடான குடியேறிகளின் வழியை மூட ஐரோப்பிய தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்படியானால் இடையில் அகப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கானோரின் நிலை என்ன? - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் 'முள்ளந்தண்டு வடத்துக்கு' நிபுணர்கள் சிகிச்சை வழங்க அவர் கால்களை பயன்படுத்த தொடங்கியுள்ளார். இப்போது அவ்வாறு பாதிக்கப்பட்ட மேலும் இருவரை தேடி, குணமாக்க மருத்துவர்கள் முயல்கிறார்கள்.
-
- 0 replies
- 274 views
-
-
துனீசிய லிபிய எல்லையில் மோதல்:`இஸ்லாமியவாத தீவிரவாதிகள் 21 பேர் கொல்லப்பட்டனர்' லிபியாவுடனான துனீசிய எல்லையில் துனீசிய காவல் படையினர் உசார் நிலையில் உள்ளனர் லிபியாவுடனான துனீசியாவின் எல்லைக்கு அருகில் தாக்குதல் ஒன்றை நடத்திய 21 இஸ்லாமியவாத போராளிகளை தமது படையினர் கொன்றுள்ளதாக, துனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பென் கார்டன் நகரில் உள்ள படை மற்றும் காவல்துறையினரின் முகாம்களை தீவிரவாதிகள் இலக்குவைத்த போது, பொதுமக்களில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லிபியாவை தளமாக கொண்டுள்ள இஸ்லாமிய அரசு குழு போராளிகள் எல்லையை கடந்து துனீசியாவினுள் வரக் கூடும் என்ற கவலை அண்மைக் காலமாக இருந்து வரும் நிலையில், துனீசிய பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வை…
-
- 0 replies
- 271 views
-
-
'எவராலும் எதனாலும் வெள்ளை மாளிகை வாழ்க்கைக்கு தயாராக முடியாது' எனக் கூறிய நான்சி ரீகன் மரணமானார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் மனைவியும் முன்னாள் முதற் பெண்மணியுமான நான்சி ரீகனிற்கு மறைவிற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார். நான்சி ரீகனின் பெருமைக்குரிய முன்னுதாரனத்திலிருந்து நன்மையடைந்துள்ளதாக ஓபாமாவும் அவரது மனைவியும் குறிப்பிட்டுள்ளனர். நான்சி ரீகன் எவராலும் எதனாலும் வெள்ளை மாளிகை வாழ்க்கைக்கு தயாராகமுடியாது என எழுதியிருந்தார். அவர் தெரிவித்தது மிகச்சரியான விடயம், எனினும் அவரது பெருமைக்குரிய முன்னுதாரனம் காரணமாக எங்களால் இந்த விடயத்தில் நன்மையடைய முடிந்தது என ஓபாமா தம்பதிகள் குறிப…
-
- 0 replies
- 327 views
-
-
சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக பெண்கள் உருவெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பெண் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் முதல் தேசிய மாநாடு தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி பேசியதாவது:தொழில்நுட்பரீதியாகவும் அனைத்து விஷயங்களும் தெரிந்தவர்களாக பெண்கள் உயர்வடைய வேண்டும். சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநிதியாகவும் உருவாக வேண்டும். நமது அரசு நடைமுறைகளில் ஏற்படுத்தும் சிறு மாற்றங்கள் மட்டும் இதற்குப் போதாது. அடிப்படையில் இருந்தே மாற்றங்கள் தொடர்ந்து நிகழ வேண்டும். உங்களை (பெண் மக்கள் பிரதிநிதிகள்) நீங்களே மிகத் திறமைசாலிகளா…
-
- 0 replies
- 214 views
-
-
சிட்னியில் தாக்குதல்: ஒருவர் பலி: இருவர் காயம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் புறநகர்ப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில், மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மற்றைய இருவரும் காயமடைந்தனர். - See more at: http://www.tamilmirror.lk/167610/%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE-#sthash.5zWQkMUx.dpuf
-
- 0 replies
- 414 views
-
-
The political world mourned Nancy Reagan on Sunday, with Republican presidential candidates current and former honoring the former first lady and calling her death the end of an influential era in the party. http://www.cnn.com/2016/03/06/politics/nancy-reagan-dies-political-reaction/index.html
-
- 0 replies
- 285 views
-
-
-
- 0 replies
- 563 views
-
-
"குழந்தைகளுக்கு வன்முறையைப் பழக்குகிறது ஐஎஸ்" இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளிடம் தங்களது சித்தாந்தத்தைப் புகுத்திவருவதாக ஐ.நா. சார்ந்த அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. குழந்தைகளை தங்களைவிட தூய்மையானவர்களாக ஐஎஸ் பயிற்சியாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் அவர்களை அடுத்த தலைமுறை பயங்கரவாதிகளாகவும் தற்கொலைப்படை தாரிகளாகவும் உளவாளிகளாகவும் மாற்ற அந்தக் குழு முயல்கிறது. தாங்கள் நிறைவேற்றும் கொலைகளை அந்தக் குழந்தைகளைப் பார்க்கச் செய்வதன் மூலமும் துண்டிக்கப்பட்ட தலைகளை வைத்து கால்பந்து விளையாடச் செய்வதன் மூலமும் வன்முறைக்கு அந்தக் குழந்தைகளைப் பழக்குவதாக சில்ரன் ஆஃப் இஸ்லாமி…
-
- 0 replies
- 422 views
-
-
சிரியாவில் யுத்த நிறுத்தம் அமுலிலுள்ள பகுதிகளில் 135 பேர் பலி [ Sunday,6 March 2016, 06:19:58 ] சிரியாவில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு வாரகாலத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்திவரும் இடங்கள் உள்ளிட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்படாத இடங்களில் 552 பேர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரியா அமைதி பேச்சுவார்த்தைகள் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் சற்று முரண்பாடுகளுடன் இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவுக்கான தூதுவர் ஸ்டீபன் தே மிஸ்துரா தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 379 views
-
-
கிரேக்க எல்லையில் சிக்கியுள்ள குடியேறிகள் மஸிடோனியாவுடனான கிரேக்கத்தின் எல்லையில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் சிக்கியுள்ள நிலையில், அங்கு அவசரகால நிலை ஒன்றை அறிவிக்குமாறு, கிரேக்கத்தின் வடக்கு பகுதியின் ஆளுனர் ஒருவர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார். ஐடோமினி எல்லைக்கு அருகில் உள்ள குடியேறிகளின் கூடாரங்கள் அங்குள்ள நிலைமையை, ஒரு மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி எனவும் அவர் வர்ணித்துள்ளார். கிரேக்கத்திலிருந்து மஸிடோனியாவிற்குள் செல்ல தினந்தோறும் அனுமதிக்கப்படும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது. தற்போது எல்லையை கடந்து செல்வதற்கு, மிக சிறிய அளவிலான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களே அனுமதிக்கப்படுகின…
-
- 0 replies
- 594 views
-
-
துருக்கியின் மிகப் பெரிய பத்திரிகையான Zaman (ஜமான்), அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படுவதாக, நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் காவல்துறையினர் அந்தப் பத்திரிகை அலுவலகத்தை சோதனையிட்டுள்ளனர்.காவல்துறையினர் Zaman பத்திரிகை அலுவலகத்தை சோதனையிட்டுள்ளனர்அந்த ஊடகம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. வெள்ளிக்கிழமையைன்று பத்திரிகை அலுவலகத்தின் வெளியே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீச்சியடித்தும் அவர்களைக் கலைப்பதற்கு காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களில் ஒருவர், `தாம் ஊடக சுதந்திரத்திற்காக சண்டையிட போவதாக' எழுதப்பட்ட பதாகை ஒன…
-
- 0 replies
- 292 views
-
-
குடியரசு வேட்பாளர்களின் ‘யோகா’ விவாதம் அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்கள் பங்கேற்ற நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் ‘யோகா’ முக்கிய இடம்பிடித்தது. பாக்ஸ் செய்தி சேனல் சார்பில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்கள் டோனால்டு டிரம்ப், மார்கோ ரூபியோ, டெட் குரூஸ், ஜான் கேசிக் ஆகியோர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி டெட்ராய்ட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் 4 வேட்பாளர்களும் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். ‘டோனால்டு டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்’ என்று மார்கோ ரூபியோ குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த டோனால்டு, கடந்த 2012 அதிபர் தேர்தலின்போது ஒபாமாவிடம் மிக மோசமாக தோல்வி அடைந் தவ…
-
- 0 replies
- 324 views
-
-
ஏமன் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 இந்திய நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர். ஏமன் நாட்டில் உள்ள ஏடெனில் செயல்பட்டு வரும் ஒரு முதியோர் இல்லத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுற்றி வளைத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை சுட்டுக் கொன்றனர். பின்னர் அந்த இல்லத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் அந்த முதியோர் இல்லத்தில் இருந்த 4 இந்திய நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி…
-
- 0 replies
- 324 views
-
-
அய்லான் மரணம்: இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை! துருக்கியில் 3 வயதுச் சிறுவன் அய்லான் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்புக்குக் காரணமான அகதிகள் படகு விபத்து தொடர்பாக, 2 பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஏஜியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் அய்லான் குர்தி, அந்தச் சிறுவனின் சகோதரன், தாய் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். துருக்கியின் பொத்ரும் நகரில் கரையொதுங்கிய அய்லானின் படம், ஊடகங்களில் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்…
-
- 0 replies
- 429 views
-
-
6 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா: அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை வடகொரியா முன்னர் நடத்திய ஏவுகணை சோதனை. (கோப்புப் படம்) அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கொரிய தீபகற்ப கடல் பகுதியில் 6 ஏவுகணைகளை வடகொரியா நேற்று ஏவியது. அவை கடலில் விழுந்து வெடித்துச் சிதறின. கடந்த 2006-ம் ஆண்டில் வடகொரியா அணுகுண்டு சோத னையை நடத்தியதால் அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை பொரு ளாதாரத் தடைகளை விதித்தது. கடந்த ஜனவரி 6-ம் தேதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோத னையை வடகொரியா நடத்தியது. இதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோத னையை வடகொரியா நடத்தியது. …
-
- 0 replies
- 427 views
-
-
உலகின் அனைத்து நவீன கண்டுபிடிப்புகளின் பின்னனியிலும், இந்தியர்கள் மூளையாக செயல்பட்டுள்ளதால், 'உலகளவில் இந்தியரின் மூளையே சிறந்தது' என, திருச்சி என்.ஐ.டி., விழாவில், ஆந்திர கவர்னர் நரசிம்மன் தெரிவித்தார். திருச்சி என்.ஐ.டி.,யில் முன்னாள் மாணவர்களை கவுரவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி, இயக்குனர் சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன் கலந்து கொண்டு, என்.ஐ.டி.,யில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது: நாட்டில், என்.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கழகங்களில் பயிலும் மாணவர்கள், நாட்டில் உணவுப் பாதுகாப்பு, மனித குல மேம்பாடு, கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உ…
-
- 0 replies
- 325 views
-
-
`எஃப்.பி.ஐ. ஆப்பிளை நிர்பந்திப்பது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் கொலையாளி ஒருவரின் கைத்தொலைபேசியை 'அன் லாக்' செய்யும்படி ஆப்பிள் நிறுவனத்தை எஃப்.பி.ஐ. நிர்ப்பந்திப்பது, பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் என, ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சில, ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளன. அப்படி ஒரு தொழில்நுட்பம் எஃப்பிஐக்குக் கொடுக்கப்பட்டால், லட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என செய்த் ராட் அல் உசைன் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், அமேசன் அமெரிக்காவின் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளன. …
-
- 1 reply
- 471 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவர ஐநா வாக்களித்து சில மணி நேரத்தில் அதற்கு பதிலடியாக வடகொரியா கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. - பிரேசில் பொருளாதாரம் கடந்த வருடத்தில் அது மூன்று புள்ளி எட்டு வீதத்தால் சுருங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. - சீன அரசாங்கம் விசித்திரமான மற்றும் மேற்கத்திய பாணி கட்டிடங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருகிறது. புதிய கட்டிடங்கள் தேசிய கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டுமாம்.
-
- 0 replies
- 311 views
-
-
கிரீஸில் 30,000 அகதிகள் பரிதவிப்பு ஐரோப்பிய நாடுகள் தங்களது எல்லைகளை மூடியிருப்பதால் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அகதிகள் கிரீஸ் நாட்டில் பரிதவித்து வருகின்றனர். சிரியா, இராக், ஆப்கானிஸ் தானில் இருந்து ஆயிரக்கணக் கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி, கிரீஸ் நாடுகளின் தீவுகளில் கரை யேறும் அவர்கள் அங்கிருந்து நடைபயணமாக ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ஆனால் அண்மைக் காலமாக அகதிகளால் ஐரோப் பிய நாடுகள் பல்வேறு இன்னல் களை சந்தித்து வருகின்றன. கடந்த 2015 நவம்பரில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தி 130 பே…
-
- 1 reply
- 489 views
-
-
MH370 விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு : அமெரிக்கா அறிவிப்பு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி 12 ஊழியர்களுடனும் 227 பயணிகளுடனும் மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி பயணித்த எம் எச் 370 விமானம் காணாமல் போயிருந்த நிலையில் அதன் பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவில் இருந்து குறித்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போயிங் 777 என்ற ரக விமாமொன்றின் பாகமொன்றை ஆபிரிக்க நாடான மொஸாம்பிக்கில் கண்டெடுத்ததாக மலேஷியாவும் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த பாகம் எம் எச் விமானத்தினுடையது என்பதற்கு உயர் சாதகத்தன்மைகள் காணப்படுவதாக எம் எச் 370 விமானமும்…
-
- 2 replies
- 557 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவர ஐநா வாக்களித்து சில மணி நேரத்தில் அதற்கு பதிலடியாக வடகொரியா கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. - பிரேசில் பொருளாதாரம் கடந்த வருடத்தில் அது மூன்று புள்ளி எட்டு வீதத்தால் சுருங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. - சீன அரசாங்கம் விசித்திரமான மற்றும் மேற்கத்திய பாணி கட்டிடங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருகிறது. புதிய கட்டிடங்கள் தேசிய கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டுமாம்.
-
- 0 replies
- 307 views
-
-
சட்டவிரோத பொருளாதார குடியேறிகளுக்கு ஐரோப்பாவில் இடமில்லை' பொருளாதார காரணங்களுக்காக, சட்டவிரோத குடியேறிகளாக ஐரோப்பாவினுள் வர வேண்டாம் என, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் நேரடி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். சட்டவிரோத பொருளாதார குடியேறிகளுக்கு ஐரோப்பாவில் இடமில்லை மனிதக் கடத்தல்காரர்களை நம்பக்கூடாது எனத் தெரிவித்த அவர், பணத்தையும் உயிரையும் அவர்கள் பணயம் வைக்கக்கூடாது என கேட்டுக் கொண்டார். சட்டவிரோத குடியேறிகள் இனிமேல் கிரேக்கத்தை கடந்து செல்ல முடியாது என, ஏதென்சில் பேசியபோது டஸ்க் தெரிவித்தார். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள், பிற ஐரோப்பிய நாடுகளுடனான தங்கள் எல்லைகளை தன்னிச்சையாக மூடக்கூடாது என…
-
- 0 replies
- 393 views
-
-
முதன்முதலாக பாகிஸ்தான் செல்கிறார் போப் பிரான்சிஸ்! இஸ்லமபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்று, போப் பிரான்சிஸ் இந்த ஆண்டு இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானுக்கு வருமாறு போப் பிரான்சிஸ்-க்கு, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தை, கடந்த மாதம் வாட்டிகனுக்கு சென்ற அப்போதைய பாகிஸ்தானின் ஒரேயொரு அமைச்சர் கம்ரான் மைக்கேல், போப் பிரான்சிஸிடம் வழங்கினார். இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட போப் பிரான்சிஸ், நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சக வட்டாரங்கள், ''போப் பிரான்ஸிஸ் பாகிஸ்தான் வரு…
-
- 0 replies
- 421 views
-