Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தென்கொரியாவுக்கு மேலாக அமெரிக்கப் போர் விமானம் பறந்துள்ளது வடகொரியா கடந்தவாரம் நடத்தியிருந்த அணு குண்டு பரிசோதனைக்கு பதிலடியாகவே அமெரிக்கா தனது வான் தாக்குதல் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது அமெரிக்க போர் விமானம் ஒன்று தென்கொரியாவுக்கு மேலாக மிகவும் தாழ்வாக பறந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் குவாம் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட, அணு ஆயுதங்களை கொண்டுசெல்லக்கூடிய இந்த B-52 ரக போர் விமானத்துக்கு பாதுகாப்பாக அமெரிக்க மற்றும் தென்கொரிய போர் விமானங்களும் உடன் பறந்துள்ளன. வடகொரியா கடந்தவாரம் நடத்தியிருந்த அணு குண்டு பரிசோதனைக்கு பதிலடியாகவே அமெரிக்கா தனது வான் தாக்குதல் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது. ஹைட்ரஜன் குண்டு ஒன்…

  2. பாகிஸ்தானை சேர்ந்தவர் சையத் வாக்கர் அஷ்ரப். இவர் லாகூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி. இவர் பாகிஸ்தான் ராணுவ பயன்பாட்டுக்காக 10 ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள அதிநவீன ஆளில்லா விமானங்களை தயாரிக்கிற ஒரு நிறுவனத்துக்கு, சட்ட விரோதமாக ஆர்டர் வழங்கி உள்ளார். இவற்றின் விலை 3 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.2¼ கோடி). மேலும், அவர் பாகிஸ்தானில் இருந்து 2012-2014 இடையே அரிசோனா ஆளில்லா விமான உற்பத்தி கம்பெனிக்கு 62 ஆயிரம் டாலருக்கு அதிகமான பணத்தை (சுமார் ரூ. 41½ லட்சம்) மாற்றி உள்ளார். விமானங்களை ரகசியமாக வாங்கி, பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்லவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில் அவர…

  3. உலக நாடுகளுக்கெல்லாம் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்போது அந்த இயக்கத்தினர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் வேரூன்றி வருகின்றனர். பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் தங்கள் மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்று கூறி வந்தாலும், கடந்த ஆகஸ்டு மாதம் அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்த நாடு ரகசிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இஸ்லாமாபாத் நகர தலைவர் அமீர் மன்சூர், துணைத்தலைவர் அப்துல்லா மன்சூரி, சிந்து மாகாண தலைவர் உமர் கதியோ உள்ளிட்ட 40 பேர் சமீபத்தில் அங்கு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.…

  4. 2012 ஆம் ஆண்டு நள்ளிரவில் டெல்லியை நோக்கி ராணுவம் நகர்ந்தது உண்மையா? மன்மோகன் ஆட்சியின் போது இந்தியாவில் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் முயற்சித்தது உண்மை தான் என முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி நள்ளிரவு ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில முகாம்களில் டெல்லியை நோக்கி ராணுவத்தின் 3 படைபிரிவுகள் நகர்ந்ததாக சொல்லப்பட்டது. இது குறித்து அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ராணுவ புரட்சியா? என்று பெரும் கேள்வியும் எழுந்தது. இந்த விவ…

  5. சிரியாவில் அல்-கொய்தா சிறை மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்... 57 பேர் பலி! பெய்ரூட்: சிரியாவில் உள்ள அல்-கொய்தா சிறை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 57 பேர் பலியாகி உள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டம் முற்றியபோது முதல் மோதல் வெடித்தது, இதனையடுத்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பலர் உயிரிழந்து உள்ளனர். கடந்த செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து ரஷ்யா, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் பிற தீவிரவாத இயக்கங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் அல்-நுஸ்ரா மற்றும் ஐ.எஸ். இரண்ட…

  6. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை வெளியிட்ட பிரிட்டன் இணையதளம்! [Sunday 2016-01-10 09:00] தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை பிரிட்டன் இணையதளம் இன்று வெளியிட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தை சந்தித்த நாளில் (18-8-1945) நேதாஜியின் பயண…

  7. முறையான அனுமதி பெறாததால் சீனாவின் சிற்பி மா சேதுங்கின் சிலையை இடித்து தள்ளியது சீன அரசு. சீனாவின் சிற்பி என அழைக்கப்படும் மா சேதுங் 1893-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சீனாவில் ஹுனன் மாநிலத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த விவசாயக் குடிமகன் ஆவார். பள்ளிப்படிப்பை முடித்து பீகிங் பல்கலைக் கழகத்தில், நூலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது மன்னராட்சிக்கு எதிராக சன்யாட் சென் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும், கம்யூனிஸக் கொள்கைகளும் வேகமாகப் பரவின. அதன்பால் ஈர்க்கப்பட்ட மா சேதுங் பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்தார். 1935-ம் ஆண்டுக்குப் பிறகு, பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார் மா சேதுங். பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின்னர்…

  8. சவுதி- இரான் பதற்றம்: வளைகுடா நாடுகள் ரியாத்தில் கூடுகின்றன இரானுடன் உறவை முறித்துக் கொள்ளும்படி உறுப்புநாடுகளை சவுதி கோரலாம் சவுதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள பதற்றமான சூழல் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக வளைகுடா கூட்டுறவு பேரவையைச் சேர்ந்த 6 நாடுகளும் சவுதி தலைநகர் ரியாத்தில் கூடுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்னர் முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்றியதைத் தொடர்ந்தே, சுன்னி ஆதிக்க நாடான சவுதிக்கும் அதன் பகைநாடான ஷியா ஆதிக்கம் கொண்ட இரானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இரானுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்ட சவுதியின் நடவடிக்கையை வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் இன்னொரு உறுப்பு நாடு மட்டுமே பின்பற்…

  9. ஐதராபாத், ஐதராபாத் ஐஐடியில் முதலிடம் பெற்ற ஷிவா கரன் (25) என்ற மாணவர் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், முதுகலை படிப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், தனது அறையில் துக்கிலிட்டு ஷிவா கரண் தற்கொலை செய்துகொண்டதாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் செம்ஸ்டர் தேர்வில் தான் பெற்ற கிரேடால் மிகவும் மன அழுத்தத்தில் ஷிவா கரண் இருந்ததாக கூறப்படுகிறது. ஷிவ கிரண் அறையில் அவரை தவிர்த்து மேற்கொண்டு 2 சீன மாணவர்கள் தங்கியிருந்ததுள்ளனர். ஷிவா கரண் அறையில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்க வில்லை. இருப்பினும், இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கு தான் …

  10. விண்வெளித் துறையில் சாதனை படைக்க சீனா மும்முரம்: ஒரே ஆண்டில் 20 திட்டங்கள் விண்வெளித் துறையில் இந்த ஆண்டு புதிய சாதனை படைக்கும் நோக்கில், 20 விண்வெளித் திட்டங் களை நிறைவேற்ற சீனா முடி வெடுத்துள்ளது. இது குறித்து சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேஷன் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு தியான்காங் 2 விண்வெளி ஆய்வகம் மற்றும் ஷென்ஸோ 11 விண்வெளி ஓடத்தை விண்ணில் செலுத்த திட்டமிட் டுள்ளோம். மொத்தமாக இந்த ஆண்டு 20 விண்வெளித் திட்டங்கள் நிறைவேற்றப்படும். மேலும் பெலா ரஸ் நாட்டின் தொலைதொடர்பு செயற்கைகோளையும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே தியான்காங் 1 என்ற விண்வெளி ஆய்வகத்தை விண்ணில்…

  11. இந்தியா உடனான பேச்சு நடைமுறைகளை தடம்புரள அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் இந்தியா உடனான பேச்சுவார்த்தை நடைமுறைகளை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் தடம்புரளச் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை நடைமுறைகளை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் தடம்புரளச் செய்ய அனுமதிக்க மாட்டோம். பயங்கர…

  12. சீனாவின் மிகப் பிரபலமான ஆடையலங்கார நிறுவனம் ´மீட்டர்ஸ்போன்வே´யின் தோற்றுநரான பெரும்பணக்காரர் ஸூ செங்ஜியன் காணாமல்போயுள்ளார். சுயமாக முன்னேறியவரான தொழிலதிபர் ஸூவின் சொத்து மதிப்பு சுமார் நானூறு கோடி டாலர்கள் ஆகும். ஸுவைத் தொடர்புகொள்ள முடியாது இருப்பதால் தமது பங்குகளில் வர்த்தகம் செய்வதை நிறுத்திவைத்துள்ளதாக மீட்டர்ஸ்போன்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவில் போன மாதம் இன்னொரு பெரும் தொழிலதிபர் பல நாட்களுக்கு எங்கு போனார் என்று தெரியாமல் இருந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரிகள் அவரை விசாரணைக்காக கைதுசெய்துள்ளனர் என்று பின்னர் தெரியவந்தது. http://tamil.adaderana.lk/news.php?nid=75889

  13. வடகொரியாவுக்கெதிரான ஒலிபரப்புகளை தென்கொரியா மீளத் தொடங்கியது வடகொரியாவின் ஐதரசன் குண்டைச் சோதித்ததான அறிவிப்புக்கு பதில் நடவடிக்கையாக, ஒலிபெருக்கிகள் வழியாக வடகொரியாயாவுக்கெதிரான பிரசார ஒலிபரப்பை தென்கொரியா மீள ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, கடந்த காலங்களில் வடகொரியாவை ஆத்திரமூட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் வேளையிலும் ஜி.எம்.டி நேரப்படி 0300 மணிக்கும் ஒலிபெருக்கிகளுடான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்டு எல்லையுடன் அமைந்த 11 இடங்களில் இருந்து ஒலிபெருக்கிகளிலிருந்து ஒலிபரப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் கொரிய பொப்பிசை, செய்தி, வானிலை அறிக்கை, வடகொரியாவுக்கு எதிரான பிரசாரம் என்பன இடம்பெற்றுள்ளதாக தெர…

  14. உலகின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் மெக்ஸிகோவில் மீண்டும் கைது. January 9, 2016 5:58 am உலகின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னனாக அறியப்படும் ஜோகுயின் ‘எல் சப்போ’ குஸ்மன், மெக்ஸிகோ பொலிஸாரினார் நேற்று மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அதிக பட்ச பாதுகாப்புடைய சிறையில் இருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் குஸ்மன், தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் கடத்தலில் பிரபல்யம் வாய்ந்த சினாலோ கார்டெல் என்ற குழுவின் தலைவரான குஸ்மன், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடவையாகக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.இவர் நேற்று காலை வட மேற்கு மெக்ஸிகோவில் உள்ள லோஸ் மோசிச் நகரத்தில் அமைந்துள்ள போதைப் பொருள் தயாரிப்பு மையத்தில் நடத்தப…

    • 0 replies
    • 392 views
  15. எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 140 பேர் படுகொலை- மனித உரிமை கண்காணிப்பகம் [Saturday 2016-01-09 08:00] ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடு, எத்தியோப்பியா. ஆர்மினியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது அதிகாரப்பூர்வ கிறிஸ்தவ நாடு இதுதான். இந்த நாட்டின் தலைநகர், அடிஸ் அபாபா. விவசாய நிலங்களை கையகப்படுத்தி இந்த நகரத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒரோமியா பிராந்தியத்தில் பல நகரங்களில் இருந்து விளைநிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது. ஆனால் இந்த ஒரோமியா பகுதி, நாட்டின் மிகப்பெரிய இனமான ஒரோமா இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிற பகுதி ஆகும். தலைநகரத்தை விஸ்தரிப்பதற்காக இந்த ஒரோமியா …

  16. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் தலைவர் ஆதரவு! [Saturday 2016-01-09 08:00] அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புக்கால் நவாப் எம்.எல்.சி., ஆவார். இதுபற்றி நேற்று அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் ஒரு முஸ்லிம். ஆனால் ராமரை நான் மதிக்கிறேன் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்” என கூறினார். மேலும், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கிய உடனேயே ரூ.10 லட்சம் ரொக்கமும், ஒரு தங்க கிரீடமும் நன்கொடையாக வழங்குவேன்” என அறிவித்தார். அதே நேரத்தில் இ…

  17. ஜெர்மனியின் கொலோன்ஜே நகர் தலைமை பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம் [ Saturday,9 January 2016, 06:16:16 ] ஜெர்மனியின் கொலோன்ஜே நகர் தலைமை பொலிஸ் அதிகாரி Wolfgang Albers பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது நடந்த குற்றச்செயல்களைப் பொலிஸ் படையினர் கையாண்ட விதம் தொடர்பாக அவர் கடும் குறைகூறல்களுக்கு உள்ளானார். இதனையடுத்தே பொதுமக்களிடையே பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மீண்டும் நம்பிக்கையை பெறுவதற்காக 60 வயதான Albers பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 31 பேர் கைது ச…

  18. ஐஎஸ் இயக்கத்திலிருந்து விலக வலியுறுத்திய தாயை கொன்ற தீவிரவாதி இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள்: கோப்புப் படம் ஐஎஸ் இயக்கத்திலிருந்து வெளியேற வலியுறுத்தி வந்த தாயை அவரது மகனே பொதுமக்கள் மத்தியில் கொன்ற சம்பவம் சிரியாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் பணியாற்றும் பிரிட்டன் நாட்டு மனித உரிமை கண்காணிப்பு மையம் இதனை தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள அல் தபகா நகரைச் சேர்ந்தவர் இளைஞர் ஐஎஸ் இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். ராக்கா நகரில் வசித்து வரும் அவரது தாய் கைத்தொழில் செய்து பிழைத்து வருகிறார். இந்த நிலையில் தனது மகன் ஐஎஸ் இயத்தில் இருப்பதை எதிர்த்து அவரது தாய், தனது மகனுக்கு அவ்வப்போது…

  19. இன்றைய நிகழ்ச்சியில்… - முற்றுகையிடப்பட்ட யேமனிய நகர் ஒன்றில் அவதியுறும் மக்கள் பற்றிய பிபிசியின் நேரடித் தகவல். - கடும் வீழ்ச்சிக்குப் பின், லேசாகத் தலைதூக்கும் சீனப் பங்கு சந்தை. ஆனாலும் சீனப் பொருளாதாரத்தின் மீது மக்களின் நம்பிக்கையில் விழுந்த ஓட்டையை அடைக்க முடியுமா என்பது சந்தேகமே. - தொலைக்காட்சிகளை ஆக்கிரமிக்கும் தென்கொரியாவின் ஆண் சமையல்காரர்கள். அடுப்பங்கரையில் ஆம்பளைக்கென்ன வேலை என்ற சமூகப் பார்வையும் மாறுகிறது!

  20. மேற்குல நாடுகளுக்கு எதிரான நாசகார தாக்குதல்களுக்காக சாரதியற்ற வாகனங்களை உருவாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்­கு­லக நாடு­களில் தாக்­கு­தல்­களை நடத்தும் முக­மாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சாரதி இல்­லாமல் செலுத்­தப்­படக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்­கி­ வருவதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஐரோப்­பாவில் படு­கொலைத் தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்கும் முக­மாக விஞ்­ஞா­னி­க­ளையும் ஏவு­கணை நிபு­ணர்­க­ளையும் பணிக்கு நிய­மித்­துள்­ளனர். சிரிய ரக்கா நக­ரி­லுள்ள ஜிஹாதி பல்­க­லைக்­க­ழ­கத்தில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்­படும் பாரிய நாசத்தை விளை­விக்கும் நகரும் குண்­டு­க­ளாகப் பயன்­ப­டுத்தக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்கும் முயற்சி முன…

  21. பதான்கோட் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தானுடன் பேச்சு... மத்திய அரசு! புதுடெல்லி: பதான்கோட் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதைப் பொருத்தே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கரும், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் ஐஜாஸ் அஹமது செளத்ரியும், வருகின்ற 15-ம் தேதி இஸ்லாமாபாதில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள், பதான்கோட் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறும…

  22. லிபியாவில் பயங்கர குண்டுவெடிப்பு: 65 பேர் உயிரிழப்பு லிபியாவில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் சுமார் 65 பேர் கொல்லப்பட்டனர். வெடிகுண்டு சத்தம் சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. லிபியாவின் கிழக்கு நகரமான ஸ்லீதெனில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. வெடிகுண்டுகள் நிரப்பிய ட்ரக் பள்ளிக்குள் புகுந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு சுமார் 65 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை குறித்த அச்சம் நிலவுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த ராணுவ பள்ளி முன்னாள் லிபிய அதிபர் மம்மர் கடாஃபி காலகட்டத்தில் ராணுவ தளமாக வ…

  23. கொளுந்துவிட்டு எரியும் புதர்த்தீயினால் அவுஸ்திலேியாவில் 95 வீடுகள் நாசம் [ Friday,8 January 2016, 05:35:06 ] அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள புதர்பகுதிகளில் கொளுந்துவிட்டு எரியும் தீ காரணமாக இதுவரை 95 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ காரணமாக மூவர் காயமடைந்துள்ளதோடு, இதுவரை முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாதிருப்பதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் வரலாற்று நகரங்களில் ஒன்றான யாரூப் பகுதியிலுள்ள புதர்தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம் குறித்த நகரப்பகுதியில் 60 கிலோ மீற்றர் வான் பரப்பில் நிலைகொண்டிருக்கிறது. வேகமான பரவிவரும் தீயை கட்…

  24. பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு வெடித்தால் எப்படி இருக்கும்?(வீடியோ) வடகொரியா அண்மையில் நடத்திய ஹைட்ரஜன் குண்டு வெடிப்புப் பரிசோதனை, உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹைட்ரஜன் குண்டு வெடித்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடை தரும் வகையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி வைரலாகியிருக்கிறது. ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை செய்த நாடுகளின் பட்டியல் மற்றும் அது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்தும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/world/57345-hydrogen-bomb-video.art

  25. கத்தியுடன் வந்தவர் காவல் நிலையத்தில் சுட்டுக்கொலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல்நிலையத்துக்குள் கத்தியோடு நுழைய முயன்ற ஒருவரை, அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஷார்லி எப்தோ சஞ்சிகை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் நினைவு நாளின்போது இந்த தாக்குதல் நடந்திருக்கிறது வடக்குப் புறநகரான Guth Dhor இல் நடந்த இந்த சம்பவத்தின்போது, இரண்டு அல்லது மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடந்ததாக நேரில் கண்டவர் ஒருவர் கூறினார். போலி தற்கொலை அங்கியொன்றை அணிந்து வந்த அந்த நபர் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஷார்லி எப்தோ சஞ்சிகை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்ட ஓராண்டு நிறைவில் இந்த சம்பவமும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.