Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மும்பை தாக்குதல் வழக்கில் பொதுமன்னிப்பு அளித்தால் அப்ரூவராக மாறத் தயார்: டேவிட் ஹெட்லி ஒப்புதல் டேவிட் ஹெட்லி | கோப்புப் படம் மும்பை நீதிமன்றம் மன்னிப்பு வழங்குவதாக இருந்தால், மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாறத் தயார் என அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்த டேவிட் ஹெட்லி, கடந்த 2006, 2007, 2008-ம் ஆண்டுகளில் மும்பையில் சுற்றுப்பயணம் செய்து, முக்கிய இடங்களை வீடியோவில் பதிவு செய்து, அவற்றை பாகிஸ்தானிலுள்ள லஷ்கர் தீவிரவாதிகளிடம் ஒப்படைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித…

  2. கந்தகார் விமாமன நிலையத் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 70ஆக அதிகரித்தது ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியிலுள்ள கந்தகார் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதி மீது தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 70ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 என ஆரம்பத்திலும், 37 என பின்னரும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பமைச்சால் தெரிவிக்கப்பட்டது. எனினும், தாக்குதல் களத்திலுள்ள அதிகாரிகளின் தகவலின்படி, குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தாக்குதல், முடிந்துவிட்டதாகக் கருதப்பட்டபோதும், அது தொடர்ந்தும் இடம்பெற்றவாறே காணப்படுகிறது. புதன்கிழமை இரவு…

  3. குடியேறிகளுக்கு எதிரான அதிரடியான கருத்துகளை சொல்லிவருபவர் டிரம்ப்.முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக வர முயற்சிக்கும் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, பல தரப்பிலிருந்தும் கண்டனங்களை ஈர்த்துள்ளது.அமெரிக்கா மீதான ஒரு வெறுப்புணர்வை பல முஸ்லிம்கள் பேணுவதாகவும், இந்த அச்சுறுத்தலுக்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறியும்வரை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கும் விழுமியங்களுக்கும் முரணானது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இவரது போட்டியாளரான குடியரசு கட்சியின் ஜெஃப் புஷ், இவர…

  4. பாரீஸ், எனக்கு தெரிந்து இருந்தால் ‘நானே கொன்று இருப்பேன்,’ என்று பாரீஸ் தாக்குதலில் அடையாளம் காணப்பட்ட 3-வது தீவிரவாதியின் தந்தை கூறிஉள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 13-ம் தேதி இரவு ஐ.எஸ். தீவிரவாதிகள் கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கம், உணவு–மதுபான விடுதிகள் என 6 முக்கிய இடங்களில் நடத்திய அதிபயங்கர தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 352 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 7 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலியாயினர். ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனிடையே பாரீஸ் நகரில் கோரத் தா…

  5. அகதிகள் படகு மூழ்கியதில் 6 குழந்தைகள் உட்பட பலர் பலி துருக்கி கடற்பரப்பில் அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில் 6 சிறுவர்கள் உட்பட பலர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் கிரீஸ் நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு ஒன்றே இவ்வாறு மூழ்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து 18 சிறுவர்கள் உள்பட 65 பேர் ரப்பர் படகு ஒன்றில் கிரீஸ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் படகு திடீரென கடலில் மூழ்கியுள்ளது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த துருக்கி கடற்படையினர் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 45 பேரை மீட்டுள்ளனர். எனினும் 6 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், அவர்களது உடல்களை கடற்படையினர் மீட்டனர். மற்றவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. கடந்…

  6. இஸ்லாத்தில் பாரிய பிரச்சினையுண்டு சீர்திருத்த வேண்டும்: அபொட் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட், இஸ்லாம் மீதான விமர்சனங்களை முன்வைத்துள்ளதோடு, அம்மதத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள டொனி அபொட், முஸ்லிம்களைச் சிறுமைப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்லாத்தில் காணப்படும் பாரிய பிரச்சினைகள் குறித்து மேற்கு, தொடர்ந்தும் மறுப்பில் காணப்படக்கூடாது எனத் தெரிவித்தார். பெரும்பாலான முஸ்லிம்கள், பயங்கரவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் நிலையில், சிலர், மதத்துக்கு எதிரானவர்களின் மரணத்தை நியாயப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்த…

  7. மும்பையில் ரூ. 4 கோடிக்கு ஏலம்போன தாவூத் இப்ராஹிம் ஓட்டல்! மும்பை: இந்திய அரசால் தீவிரமாக தேடப்பட்டு வரும் பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான மும்பை ஓட்டல் ஒன்று 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. தெற்கு மும்பையில் உள்ள பெண்டிபஜார் என்ற இடத்தில் 'ரவுனாக் அஃப்ரோஷ்' என்ற பெயரில் ரெஸ்ட்ரான்ட் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டல்தான் இன்று ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் பலரும் கலந்துகொண்ட நிலையில், முன்னாள் பத்திரிகையாளரான எஸ். பாலகிருஷ்ணன் என்பவர் 4.28 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டு, அந்த ஓட்டலை தன்வசமாக்கிக்கொண்டார். பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தான் ஏலம் எடுத்துள்ள இந்த ஓட்டலில் ஏழைகளுக்காக கல்வி மையம் ஒன்றை ஏற்படுத்த இ…

  8. ஆப்கான் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: 19 பேர் பலி ஆப்கானிஸ்தான் விமான நிலையம் ஒன்றில் தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குள் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. விமான நிலையத்திற்கு நுழந்த தலிபான்கள், ஆப்கான் இராணுவ அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை சேர்ந்த இராணுவ வீரர்கள் தங்கக் கூடிய குடியிருப்பு பகுதிகள் மீது நேற்றிரவு தாக்குதலில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற தலிபான் பயங்கரவாதிகளை விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை மீறி விமான ந…

  9. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவின் ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேறுகின்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! சமாதான ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்க கட்டுப்பாட்டுக்குத் திரும்புகிறது ஹோம்ஸ்! - பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி பத்து மாதங்களுக்கு முன்பே பிடிபட்டிருக்க வேண்டியவர்! அதென்ஸில் நடந்த அதிரடி சோதனையில் இருந்து அவர் தப்பித்தது பற்றிய பிபிசியின் பிரத்யேகத் தகவல்! - அத்துடன்.... பார்வையில்லாமலே லாவகமாக ஊசியில் நூல் கோர்க்கும் தான்சானியத் தையல்காரர்!

  10. மலேஷிய விமான நிலையத்தில் உள்ள 3 விமானங்களின் உரிமையாளர்கள் யார்? 'விமானங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாவிட்டால், அவற்றை விற்றுவிடுவதற்கு அல்லது அழித்துவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது' மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாட்டின் பெரிய விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்ற சொந்தம் கோரப்படாதுள்ள 3 விமானங்களின் உரிமையாளர்கள் அல்லது உரிமையாளரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடந்துவருகின்றது. இந்த போயிங் 747 ரக விமானங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாவிட்டால், அவற்றை விற்றுவிடுவதற்கு அல்லது அழித்துவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது என்று கூறி அந்நாட்டின் தேசிய நாளிதழில் விளம்பரம…

    • 5 replies
    • 969 views
  11. டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்' அமெரிக்க அதிபராக விரும்பும் டொனால்ட் ட்ரம்ப் முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் விடமாட்டேன் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் இதுவரை தெரிவித்திருக்கும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பத்து முக்கிய கருத்துக்கள் மற்றும் அவரது நம்பிக்கைகள்: 1. அமெரிக்க மசூதிகள் கண்காணிக்கப்படவேண்டும். தீவிரவாத…

  12. இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் [ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2015, 12:07.46 PM GMT ] இந்தோனேஷியாவில் 6.9 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தோனேஷியாவின் கிழக்கேஉள்ள அம்போன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அம்போன் தீவில் இருந்து தென் கிழக்கே 174 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கமானது பூமிக்கடியில் 75 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்களும் வெளியாவில்லை. http://www.tamilwin.com/show-RUmtzCTdSWlp0H.html

  13. பாரிஸ் தாக்குதல்: 3-வது தற்கொலை தாக்குதலாளியின் அடையாளம் தெரிந்தது பாரிஸ் தாக்குதல்களில் பலியான 130 பேரில் அனேகமானவர்கள் பட்டாக்லான் இசையரங்கில் நடந்த கொலைகளில் தான் உயிரிழந்தனர் பாரிஸில் கடந்த மாதம் பட்டாக்லான் இசையரங்கில் தாக்குதல் நடத்தியிருந்த மூன்றாவது தற்கொலை தாக்குதலாளியையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். வட-கிழக்கு பிரான்ஸில் உள்ள ஸ்த்ராஸ்போக் நகரைச் சேர்ந்த பெளத் மொஹமட் அக்காட் என்ற 23-வயது இளைஞனே அவர் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 2013-ம் ஆண்டில் தனது சகோதரனுடன் சிரியாவில் போரிடுவதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால், அவர் எப்போது பிரான்ஸுக்கு திரும்பினார் என்று தெரியவில்லை. மற்ற மூன்று தா…

  14. கலிபோர்னியாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பெண் தீவிரவாதி இந்தியாவை நோட்டமிட்டார்: அமெரிக்க நாளிதழ் தகவல் தஸ்பீன் மாலிக் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 14 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் பெண் தீவிரவாதி தஸ்பீன் மாலிக் இந்தியாவுக்கும் சென்றுள்ளார் என்று அந்த நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பெர்னார்டினோ நகரில் பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் ஓர் ஆணும் பெண்ணும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர். காரில் தப்பிச் சென்ற அந்த தம்பதியரை எப்பிஐ போலீஸார் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர். போலீஸ் வ…

  15. கனடிய டொலர், ரொறொன்ரோ பங்கு சந்தை, மற்றும் எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு நிலையில். Mohanay December 08, 2015 Canada கனடா-கனடாவின் டொலர் செவ்வாய்கிழமை மீண்டும் சரிவடைந்துள்ளது. நேற்றய தினம் 11வருடங்களின் பின்னர் மிகவும் குறைந்திருந்தது. ரொறொன்ரோ பங்கு சந்தையும் இரண்டு வருடங்களில் மிகவும் குறைந்த புள்ளிவிபரத்தை அடைந்தது. டொலர் 0.4சதத்தால் குறைந்து 73.6 சதங்கள் யு.எஸ். ஆக காணப்பட்டது. 2004லிருந்து மிக குறைந்த அளவு இதுவாகும். ஒரு வருடத்திற்கு முன்பு கனடிய டொலர் 87.4சதங்களாக இருந்துள்ளது. கனடாவின் எண்ணெய்-சார்ந்த பொருளாதாரம் டொலரின் வீழ்ச்சிக்கு ஒரு பகுதி காரணமென யு.எஸ். பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/537…

  16. கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இங்கிலாந்து இழக்கும் - ஆய்வு இங்கிலாந்து நாடு விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இழக்குமென்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. உலகில் இத்தாலிக்கு அடுத்தபடியாக மக்கள் சதவீதத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வசிப்பது இங்கிலாந்து நாட்டில்தான். தற்போது இந்த நாட்டில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயங்களை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இது குறித்து இங்கிலாந்து கிறிஸ்தவ ஆலயங்களின் தலைமை அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 150 பக்க அறிக்கையில், பல்வேறு காரணங்களால் இங்கிலாந்தில் பிற சமய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், அவர்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் கூட…

  17. இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் வருவதை தடைசெய்ய வேண்டும்! குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக வருவதற்கு முயலும் டோனல்ட் டிரம்ப்பின் கருத்துக்கு கண்டனம்! - அளவுக்கதிகமாகவும் அனாவசியமாகவும் பண்ணை விலங்குகளுக்கு ஊட்டப்படும் அண்டிபயாடிக் மருந்துகளால் பொதுமக்களின் அரோக்கியத்துக்கு பேராபத்து!பிரிட்டிஷ் அரசாங்கம் எச்சரிக்கை! - இயற்கை வழியில் பெறும் மின்சாரத்தை மட்டும் கொண்டு நமது அனைத்து மின் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். சும்மா சொல்லாமல் செய்தும் காட்டியுள்ளனர் - சும்பா தீவுவாசிகள்!

  18. புதுடெல்லி, நான் இந்திரா காந்தியின் மருமகள், யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார். நேஷனல் ஹெரால்டு செய்தி நிறுவனம் தொடர்பான வழக்கில் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் விசாரணை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இப்பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்புவதாகவும் கூறியது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நேஷனல் ஹெரால்டு வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே கோர்ட்டில் ஆஜராக கால அவகாசம் கோரி காங்கிரஸ் தலைவர் …

  19. சிரியன் அரசாங்க எதிர்ப்புக் குழுக்கள் சௌதியில் கூட்டம் சிரியன் கிளர்ச்சிக்காரர்களில் பல்வேறு தரப்புகளும் இதற்கு முன்னால் ஒன்றுகூடி பேசியதில்லை. சிரியாவில் மோதல்கள் ஆரம்பித்த நாலரை ஆண்டுகளில் முதல் தடவையாக அந்நாட்டின் அரசாங்க எதிர்ப்பு குழுக்கள் சௌதி அரேபியாவில் கூடுகின்றனர். அதிபர் அஸ்ஸத்தை பதவி அகற்றும் நோக்கில் சண்டையிட்டுவரும் பல்வேறு தரப்புகள் இதில் கலந்துகொள்கின்றனர். சிரியாவில் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் பட்சத்தில், ஒன்றுசேர்ந்து பேரம் பேசுவதற்கான கூட்டணி ஒன்றை அமைப்பது ரியாத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். ஃப்ரீ சிரியன் ஆர்மி குழுவில் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற உட்பிரிவுகளுக்கு…

  20. கொடூர கொலைகளும் முறையான நிர்வாகமும்: அம்பலமான ஐஎஸ் அமைப்பின் செயல்முறைகள் படம்: ராய்ட்டர்ஸ். அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி ஐஎஸ் அமைப்பை பைத்தியம் பிடித்த கொடூர அமைப்பு என்றும், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே காட்டுமிராண்டிகள் என்றும், பிரிட்டன் பிரதமர் கொலையை வழிபாடு செய்யும் அமைப்பு என்றும் வர்ணித்துள்ளனர். ஆனால் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இவற்றையெல்லாம் தாண்டியது என்பதே தற்போது வெளிவந்துள்ள செய்தியாகும். இது குறித்து 'தி கார்டியன்' ஊடகத்துக்கு கிடைத்துள்ள ஆவணங்களின் படி, ஐஎஸ் அமைப்பில் ஆட்சி அதிகாரிகள், சிவில் ஊழியர்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் இவர்களே மீன்பிடி தொழில் முதல் ஆடை ஒழுங்கு முறைகள் வரை அனைத்தையும் பற்றி விதிமு…

  21. சென்னை, மீண்டும் மழை வெள்ளம் நீடிக்க வாய்ப்பு இருப்பதால் சென்னை நகருக்கு பயணம் செய்வதை தள்ளி வைக்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அரசுகள் வேண்டுகோள் விடுத்து உள்ளன. தள்ளி வையுங்கள் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெள்ள நிலைமை காரணமாக தங்கள் நாட்டு மக்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்வதை தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டு உள்ளது. இது பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பாதுகாப்பு தூதரக பிரிவு விடுத்துள்ள பயண அறிவுறுத்தல் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மிகவும் கண்கூடாக தெரிகிறது. இதில் ஏராளமானோர் பலியாகியும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நகரில் உள்ள அடையாறு ஆறு, நிரம்ப…

  22. பிரான்ஸ் தேர்தலில் இனவாத கட்சி முன்னிலை பிரான்ஸ் மாகாண தேர்தலில் இனவாத கட்சியான தேசிய முன்னணி முன்னிலை பெற்றுள்ளது. பிரான்ஸில் 13 மாகாண சபை களின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக் கும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் தற்போதைய ஆளும் கட்சியான சோஷலிச கட்சியும் எதிர்க்கட்சியான யு.எம்.பி. ஆகியவை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இனவாத கட்சி என்று சித்தரிக் கப்படும் தேசிய முன்னணி முன்னிலை பெற்றுள்ளது. இப்போதைய நிலவரப்படி 6 மாகாணங்களை அந்த கட்சி கைப்பற்றியுள்ளது. அடுத்த கட்டத் தேர்தல் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. அந்தத் தேர்தலிலும் தேசிய முன்ன ணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக …

  23. கடந்த 11 மாதங்களில் ஒன்பதரை இலட்சம் அகதிகள் ஜேர்மனில் பதிவு [ Tuesday,8 December 2015, 04:27:24 ] ஜேர்மனியில் இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் ஒன்பது இலட்சத்து 60 ஆயிரத்திற்கு அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை ஒரு மில்லியனை விட அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குளிருடன் கூடிய காலநிலைக்கு மத்தியிலும் ஜேர்மனியை நோக்கிவரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என கூறப்படுகின்றது. இவ்வாண்டில் சுமார் 8 இலட்சம் புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக ஜேர்…

  24. 2016 ஆம் ஆண்டு மனிதாபிமான உதவிகளுக்கு 20 பில்லியன் தேவை; ஐ.நா [ Tuesday,8 December 2015, 04:31:16 ] எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள மனிதாபிமான உதவி செயற்பாடுகளுக்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. இவற்றில் ஐந்தில் இரண்டு பங்கு நிதி சிரியாவில் தொடரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 87 மில்லியன் மக்களுக்கு உடனடியான உதவிகள் தேவைப்படுவதாக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தலைமை அதிகாரி ஸ்ரீபன் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான மக்கள் சொந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.