Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by pepsi,

    http://www.lovetack.com/comedy_videos.html

    • 0 replies
    • 872 views
  2. 'உன்னைத்தேடி' படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா. 'பூப்பறிக்க வருகிறோம்', 'வெற்றிக்கொடிக்கட்டு', 'ஐயா', 'சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் மாளவிகாவை புகழின் உச்சிக்கு உயர்த்தியது 'வாளமீனுக்கும்....' பாடல்தான். தற்போது 'சபரி', உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் மாளவிகா கடந்தமாதம் சுமேஷ்மேனன் என்ற காதலனை மீடியாக்களுக்கு அறிமுகப்படுத்தி கல்யாண தேதியையும் அறிவித்தார். அதன்படி மாளவிகா-சுமேஷ்மேனன் திருமணம் நேற்று நடந்தது. இதற்காக பெங்களூர் ராணுவ வீரர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஏ.எஸ்.சி. சென்டர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மதியம் 12.15 மணியளவில் மணமேடைக்கு வந்தனர் மணமக்கள். ரோஜா நிற பட்டுப்படவையில் முக்காடு போட்டிருந்த ம…

  3. கமலுக்கு சாதனையாளர் விருது மும்பையிலுள்ள யுஎப்ஓ டிஜிட்டல் சினிமா நிறுவனம் கமல்ஹாசனுக்கு விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான வாழும் சாதனையாளர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது. http://www.tamilvanan.com

  4. சிம்புவுடன் நடிக்க மாட்டேன்: நடிகை பாவனா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதையடுத்து வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தற்போது பரத்துடன் கூடல் நகர், மாதவனுடன் ஆர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாவனா நடிகர் சிம்புவுடன் நடிக்க மாட்டேன் என்ற பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- சிம்புவுடன் நான் நடிக்கப்போவதாக அவர் பத்திரிகைகளில் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன். சிம்புவுக்கு இப்போது ம…

  5. பட்டக்காலிலேயே படும் என்பதற்கு 'நான் கடவுள்' பிரச்சனை நல்ல உதாரணம். ஹீரோ மாற்றம், தயாரிப்பாளருடன் டிஸ்யூம் என படம் ஆரம்பிப்பதற்கு முன்பே பலவித தடுமாற்றத்திற்கு உள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தியது பாலாவின் 'நான் கடவுள்.' ஒரு வழியாக பஞ்சாயத்துக்கள் தீர்க்கப்பட்டு காசிக்கு ஷுட்டிங் போனார் பாலா. இரண்டு வார காலம் நான்ஸ்டாப்பாக போய்க்கொண்டிருந்த படப்பிடிப்புக்கு மீண்டும் ஒரு பிரச்சனை நங்கூரம் போட்டுள்ளது. படப்பிடிப்பு நின்றதால் நாயகன் ஆர்யா, வீட்டில் உட்கார்ந்து பாலாவின் போனுக்காக காத்திருக்கிறாராம். நாயகி பாவனாவும், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனும் வேறொரு படத்துக்கு கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளானர். பாலா என்ன செய்கிறார்? அறநிலைய துறைக்கு தினமும் நடையாய் நடந்துகொ…

  6. திரிஷாவிடம் சிம்பு சரண்! அத்தனை ஹீரோயின்களும் சொல்லி வைத்தது போல நடிக்க முடியாது என்று கூறி விட்டதால் வெறுத்துப் போன சிம்பு, இப்போது திரிஷாவிடம் போய் கால்ஷீட் கேட்டு நிற்கிறாராம். ஒரு நேரத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏற்பட்ட அதே கதி இப்போது சிம்புவுக்கும் வந்துள்ளது. லொள்ளு பிளஸ் கில்மா நாயகனாக வலம் வந்தவர் சூர்யா. படு வேகமாக முன்னுக்கு வந்த அவருக்கு அன்பே ஆருயிரே படத்துக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. கூட நடித்த நடிகைகளுடன் பலமாக கிசுகிசுக்கப்பட்டதாலும், அவரே அந்த கிசுகிசுக்களைப் பரப்புவதாக கூறப்பட்டாலும், இன்ன பிற இம்சைகளாலும், அவருடன் ஜோடி சேர நடிகைகள் மறுக்க ஆரம்பித்தனர். திருமகன் படத்திற்கு ஒரு ஆள் கூட கிடைக்காமல் ரொம்பவே நொந்து போயிருந்…

  7. இந்திரலோகத்தில் நா.அழகப்பன். இந்தப் படத்தில் வடிவேலுவின் சம்பளம் இரண்டு கோடி ரூபாயாம். புது புது இளம் நாயகிகளாகப் பார்த்து தேர்வு செய்து கடலை போடுகிறார் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து எப்போதும் பிஸியாகவே உள்ளார் வடிவேலு. அடுத்து வரப்போகும் அவரது படம் இந்திரலோகத்தில் நா.அழகப்பன். இந்தப் படத்தில் வடிவேலுவின் சம்பளம் இரண்டு கோடி ரூபாயாம். கோடம்பாக்கத்தை கலக்கும் தற்போதைய பரபரப்புச் செய்தி இந்த 2 கோடி. இதைத் தொடர்ந்து, புது புது இளம் நாயகிகளாகப் பார்த்து தேர்வு செய்து கடலை போடுகிறார் வடிவேலு. என்ன வடிவேலு, நீ இப்படி மாறிட்டே என்று பழக்கமான சீனியர் நடிகர்கள் யாராவது கேட்டால் பட்டென்று அவர் கூறும் பதில் என்ன அண்ண…

  8. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படம் தெலுங்கில் சமீபத்தில் இயக்குநர் முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் சூப்பர் ஹிட் படமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இதனால் கவரப்பட்ட ரஜினி கடந்த வாரம் இயக்குநர் முருகதாசை அழைத்துக் கொண்டு மும்பை சென்றார். அங்கு புதிய படம் தொடர்பாக அவர்கள் நீண்ட ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முருகதாஸ் இயக்க உள்ள இந்த படத்தை ஆர்.எம்.வீரப்பனின் ஸ்ரீசத்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான சூட்டிங் 2008 ம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. விடுப்பு : Viduppu.com

  9. அஜித் அவதாரமாயிட்டார்னு ஊரெல்லாம் பேச்சு. நல்ல மனுஷனாச்சே எப்படி இந்த மாதிரி கெட்டுப் போனார்னு ஓடிப்போய் அடிச்சுப் பிடிச்சு ஆழ்வார் படத்துக்கு டிக்கெட் வாங்கி உள்ளப் போனா... ஏண்டா வந்தோம்னு ஆகிப் போச்சு. என்ன வெவகாரம்னுதானே கேட்கிறீங்க? கொஞ்சம் விலாவரியா சொல்ல வேண்டிய சமாச்சாரம் இது. ஆழ்வார்ல அஜித்துக்கு 'களை' பிடுங்கிற வேலை. அதாவது சமுதாயத்துல களையா இருக்கிற ரவுடிகளை போட்டுத் தள்றது. அதுவும், ராமர் கிருஷ்ணர்னு விஷ்ணுவோட அவதார மேக்கப் போட்டு சைக்கிள்ல காத்து பிடுங்கிற மாதிரி ஆயுசை பிடுங்கிடறார். அஜித்தை இப்படி எமதர்மனா மாத்துனதுக்கு இயக்குனர் ஷெல்லா அழகா ஒரு கதை சொல்றார். கதாகாலேட்சபம் பண்ற சாது ஒருதரம் தெரியாதத்தனமா, எல்லா பயப்புள்ளைகளும் கடவுள்தான்டான…

  10. Started by வானவில்,

    இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம். தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது. குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்…

  11. கோயில் கட்டுறது ஒருத்தன் கும்பாபிஷேகம் நடத்துறது இன்னொருத்தன் என்றால் கோபம் வரும்தானே! இதோ பருத்திவீரன் கண்களில் இப்போது கோபம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் வசூலில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறது 'பருத்திவீரன்'. தான் நடித்த முதல் படமே இப்படி வெற்றி கோலோச்சும் சந்தோஷத்தில் இருந்த கார்த்தியின் மகிழ்ச்சியில் மண் அள்ளி போட்டிருக்கிறது திருட்டு விசிடி. படம் வெளியான இரண்டு தினங்களிலேயே பருத்திவீரன் திருட்டு விசிடி பிள்ளையார் கோயில் பிரசாதம்போல எளிதாக கிடைக்கிறதாம். இதனை கேள்விப்பட்ட கார்த்தி, கண்களில் கோபம் கொப்பளிக்க கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரில், "பருத்திவீரன் திருட்டு விசிட…

  12. வைரமுத்துவின் வார்த்தையில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கிறது -சினேகன் சீறல்! இந்த வருடம் Ôஹிட்Õ அடித்ததில் ஏக குஷியாக இருக்கிறார் பாடலாசிரியர் சினேகன். போக்கிரியில் Ôமாம்பழமாம் மாம்பழம்...Õ விற்றவர் இவர்தான். பருத்தி வீரனில் அத்தனை பாடல்களும் சினேகன்தான்! கைபேசியில் வருகிற அத்தனை அழைப்புகளும் பருத்திவீரன் பாடல்கள் பற்றியேதான் பேசுகின்றன. Ôரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார்Õ என்கிற சினேகனுக்கு ஏற்கனவே சிரித்த முகம்! இப்போது, இன்னும்...இன்னும்....! தினமும் ஜிம்முக்கு போகிறார். என்னவென்றால் ஹீரோ என்கிற அடுத்த அவதாரத்திற்குதானாம்! அட....! மனிதனுக்கு Ôதான்Õ என்ற அகங்காரம்தான் இருக்க கூடாது. அதைதான் Ôநான்Õ என்ற அகங்காரம் இருக்க கூடாது என்று திரித்து சொல்லிவிட்டார்கள். தமிழில் …

  13. சைக்கோ...சபலிஸ்ட்...கேவலமான பிறவி... -எஸ்.ஜே.சூர்யா மீது மாளவிகா பாய்ச்சல் நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களில் நடித்து பெண்கள் அமைப்பிடம் ஏகப்பட்ட Ôஅர்ச்சனைÕகளை வாங்கி கட்டிக் கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. சினிமாவுக்கு வெளியே இருப்பவர்கள் இவருக்கு செய்த அர்ச்சனைகள் போதாது என்று சினிமாவுக்குள்ளேயிருந்தும் Ôஅர்ச்சனைÕ வர ஆரம்பித்திருக்கிறது இப்போது! வியாபாரி என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் நமீதா. மற்றவர் மாளவிகா. இந்த அழைப்பிதழிலேயே தன் சில்மிஷத்தை காட்டியிருந்தார் சூர்யா. குளித்துவிட்டு டவலோடு வருகிற நமீதாவின் பின்புறத்தை டேப் உதவியால் அளவெடுப்பது போல இருந்தன அந்த படங்கள். இந்த காட்சிக்கான டயலாக் என்ன தெரியுமா? முன் புறத்தையும…

  14. கமலை படமெடுக்கும் அக்ஷரா! -வாரிசுகளால் பெருமைப்படும் அப்பாக்கள்! ரஜினியின் பாபா படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் தன் வீடியோ கேமிராவில் பதிவு செய்திருந்தார் அவரது மகள் ஐஸ்வர்யா. அந்த படம் எப்படி உருவானது என்பதை தனி வீடியோ தொகுப்பாக போடவும் திட்டம் வைத்திருந்தார் அவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த வீடியோ தொகுப்பு வெளியிடப்படவே இல்லை. அது போலவே தன் அப்பா கமல் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பை வீடியோவில் படம் பிடித்து வருகிறார் அக்ஷரா! பத்து கெட்டப்புகளில் தோன்றும் கமல், மேக்கப்புக்காக செலவிடும் நேரம், சிரமம் எல்லாவற்றையும் ஷ§ட் பண்ணுகிறாராம். இதுவாவது வீடியோ பதிவாக வெளிவருமா? அதிருக்கட்டும்.... கமலின் மற்றொரு மகள் ஸ்ருதி இசையை முறையாக படித்து வருகிறார். தமிழில் …

  15. தமிழுக்கு வரும் ஜெமினி மகள்! பாலிவுட்டின் செக்ஸ் சிம்பலாக பல காலம் கலக்கிய காதல் மன்னன் ஜெமினி கணேசன் அழகு மகள் ரேகா, வயது போன காலத்தில் தமிழில் நடிக்க வருகிறார். அந்தக் காலத்து கனவுக் கன்னிகளில் முக்கியமானவர் ரேகா. ஜெமினியின் மகளான இவர் இதுவரை தமிழில் ஒரு படத்தில் கூட தலை காட்டியதில்லை. பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ரேகா. ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா என பெரும் தலைகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்த காலத்தில் தனது பாணியில் ரசிகர்களை தக தக்க வைத்தவர் ரேகா. கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம், பிரபல இயக்குநர்கள், சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ரேகா. பாலிவுட்டில் படு பிரபலமாக இருந்தபோதிலும், கோலிவுட்…

  16. நான் சேகரித்த சினிமா ஞானம் அழிந்து போய்விட கூடாது! பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா Ôசினிமா பட்டறைÕ என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் சென்னை சாலிகிராமத்தில் இந்த சினிமா பள்ளி செயல்பட ஆரம்பிக்கும். 40 ஆண்டுகளாக நான் சினிமாவில் சேகரித்த அனுபவமும், ஞானமும் என்னோடு அழிந்து போக கூடாது. அதற்காகதான் இந்த சினிமா பட்டறையை துவங்கியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் பாலுமகேந்திரா. இங்கு ஒளிப்பதிவு, டைரக்ஷன், நடிப்பு ஆகிய மூன்று துறைகளுக்கான வகுப்புகளை முதல் கட்டமாக துவங்க இருக்கிறார்களாம். எல்லாமே ஒரு வருட படிப்பு என்று கூறும் இயக்குனர், இது குருகுலம் போல் செயல்படும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார். …

  17. காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தியை மறுத்திருக்கும் நந்திதா சினிசவுத்துக்கு சுடச்சுட பேட்டியளித்திருக்கிறார். வீட்டை எதிர்த்துக்கொண்டு ஒளிப்பதிவாளரை நந்திதா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக நமது இணைய தளத்தில் நேற்று செய்தி வெளியிட்டோம். செய்தி வெளியான சில மணி நேரங்களில் நந்திதாவிடமிருந்து போன் வர நறநறக்க ஆரம்பித்துவிட்டார். 'உண்மையை சொல்லுங்க அம்மணி.. அப்படியே போடுகிறோம் செய்தியை' என்றதும் ரிலாக்ஸாக பேச ஆரம்பித்தார். "இதுவரை நான் 25 படங்களில் நடித்திருக்கிறேன். 2005-ல் 'ஈசல்' என்ற குறும்படத்தில் நடித்தேன். அந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த காசியுடன் அப்போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் என்னை காதலிப்பதாக காசி சொன்னார். எனக்கு…

    • 0 replies
    • 762 views
  18. வாட் இஸ் யுவர் நேம்? என்று கேட்டால்கூட சிரிப்பையும் சிணுங்கலையும் வெளிப்படுத்தும் சிரிப்பழகி லைலா. தனது கன்னக்குழியழகில் தமிழ் சினிமா ரசிகர்களை தடுமாறி விழவைத்த லைலா, கடந்த வருடம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலேயே கல்யாணம் கட்டிக்கொண்டு மும்பையில் குடிபுகுந்தார். பால் கணக்கில் ஆரம்பித்து கணவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போடுவதுவரை முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்ட லைலா விரைவில் அம்மா ஸ்தானத்தையும் அடையப்போகிறாராம். இப்போது அவர் சிலமாத கர்ப்பமாக இருக்கிறாராம். குழந்தையின் ஆரோக்கியம் கருதி ஆறுமாதம் வரை லைலாவை ஒய்வெடுக்க சொல்லி டாக்டர் அறிவுறுத்தியிருக்கிறாராம். லைலா மீண்டும் நடிக்க வேண்டுமென்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு லைலாவின் பதில் எ…

    • 0 replies
    • 776 views
  19. எ°ஜே.சூர்யா போட்ட ஆட்டம்-அதிர்ச்சியில் உறைந்த டைரக்டர் கலைப்புலி தாணு தயாரிப்பில் எ°.ஜே.சூர்யா, மாளவிகா, மீராஜா°மின், ப்ரீத்தி வர்மா, கார்த்திகா என பலர் நடிக்க டைரக்டர் ரத்னகுமார் இயக்கிய "திருமகன்" பட விவகாரத்தில் ஆபாச காட்சிகளை சேர்க்கமாட்டேன் என்று சொன்ன டைரக்டருக்கு எதிராக எ°.ஜே.சூர்யாவும் தாணுவும் களமிறங்கி மோதிக்கொண்டார்கள். இதனால் ரத்னகுமார் பெயரையே தாணு இருட்டடிப்பு செய்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தோம். தாணு மீதும் எ°.ஜே. சூர்யா மீதும் தயாரிப்பாளர் சங்கத்திலும் இயக்குநர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்திருந்தார் ரத்னகுமார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இந்தப் பிரச்சினையை கை கழுவிவிட்டது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி இயக்குநர்கள் சங்க செயற்குழு கூட்டத்த…

  20. சிம்பு சிக்குவாரா நயன்தாராவும் சிம்புவும் காதலித்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி பெரிய பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இதனால் சிம்புவுடன் பழகிய மற்ற நடிகைகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். சிம்புவும் நயன்தாராவும் நெருங்கி உறவாடும் இந்தப் படம் துபாயில் எடுக்கப்பட்டிருக்கிறது. துபாயில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தெலுங்கு பிரபலங்களும் தமிழ் பிரபலங்களும் போயிருந்தார்கள். அப்போது சிம்புவின் ஆட்டத்தை ரசிக்க நயன்தாராவும் போயிருந்தார். அங்கு தங்கியிருந்த இடத்தில் தான் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுத்தது யார்? இந்தக் கேள்விக்கு விடை தேடி கோலிவுட்டை துளாவினோம். …

  21. சிபிக்காக சத்யராஜ் செய்த முதலீடு! சினிமாவில் என்னதான் பெரிய நடிகரின் வாரிசாக இருந்தாலும் தனிப்பட்ட திறமை இருந்தால் தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதற்கு இங்கே நிறைய உதாரணங்களை சொல்லலாம். அந்த வகையில் சத்யராஜின் வாரிசு சிபியும் ஒருவர். இருபத்தி ஐந்து வருஷமாக சினிமாவில் இருக்கும் சத்யராஜ் "வல்லவனுக்கு வல்லவன்" படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்ட பிறகு படம் தயாரிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். தன் வாரிசுக்காக அந்த கொள்கையை தளர்த்தி அவர் எடுத்த படம்தான் "லீ". மொத்த படத்துக்கும் செய்யப்பட்ட செலவு மூன்று கோடியே இருபது லட்சம் ரூபாய். ஆனால் படம் ரிலீஸாகும் போது வியாபாரம் செய்த வகையில் சத்யராஜின் கைக்கு திரும்பி வந்த பணம் ஒரு கோடியே இருபது லட்சம் மட்டும…

  22. இயக்குநர் அமீர் கொடுத்த வாழ்க்கை! கிட்டத்தட்ட முப்பது படத்துக்குமேல் ஹீரோவாக நடித்து ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகர் சரவணன். நடுவில் தப்பான சில படங்களால் மொத்தமாக வீட்டில் உட்காருகிற நிலைமைக்கு ஆளாகி விட்டார். அப்படி இருந்தவருக்கு நடுவில் கிடைத்த வாய்ப்பு நந்தா. அதிலும் கூட பாலா அவரை சரியாக பயன்படுத்தவில்லை. இதை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் அமீர் நான் படம் பண்ணும் போது நல்ல வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக கூப்பிடறேன் என்று சொல்லியிருந்தாராம். அதை மனதில் வைத்துக் கொண்டு பருத்தி வீரன் படத்தில் ஹீரோ கார்த்தியின் சித்தப்பா கேரக்டர் ஒன்றைக் கொடுத்தார். படம் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஊரிலிருந்து... …

  23. அக்பர் பீர்பால் User name: lovetack.com Password: oruwebsite.com http://oruwebsite.com/movies/tamil_kids_videos/kathai1.html

    • 8 replies
    • 2.1k views
  24. யாருமே விரும்பியோ விரும்பாமலோ தம் வாழ்வியலில் கடக்கவேண்டிய கடைசி அத்தியாயம் இந்த முதுமை.முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், கழிந்து போன பந்தங்களையும் அது தேடி ஓடுகின்றது என்று. அதுதான் "மனசினக்கரே" படத்தின் அடி நாதம், முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/03/blog-post.html

    • 0 replies
    • 933 views
  25. ஏப்ரலில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி மே மாதம் நிறைவடைகிறது. பிறகு போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள். ஜுன் - ஜுலையில் திரைக்கு வந்துவிடும் கமலின் 'தசாவதாரம்!' கமலுக்கும் சரி தமிழ் திரையுலகுக்கும் சரி இது மற்றுமொரு திரைப்படம் அல்ல, ஒரு சாதனை! உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் ஒரே படத்தில் பத்து வேடங்களை இதுவரை ஏற்று நடித்ததில்லை. 'தசாவதாரம்' அதனை உடைக்கிறது. இதில் கமலுக்கு பத்து வேடங்கள். படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே 'தசாவதாரம்.' இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கம…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.