Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஸ்ரேயாவுடன் மோதல் இல்லை- திரிஷா கிரீடம் படத்தில் அஜீத் ஜோடியாக ஆரம்பத்தில் ஸ்ரேயா நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த வாய்ப்பு திரிஷாவுக்கு கிடைத்தது. ஸ்ரேயாவுக்கு வந்த வாய்ப்பை நீங்கள் பறீத்தீர்களா...? அல்லது அவர் வேண்டாம் என்று கைவிட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா? என்று திரிஷாவிடம் கேட்டபோது. அஜீத்துடன் கிரீடம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தானாக வந்தது. இதைப்பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு படத்தின் கதை சிலருக்கு பிடித்திருக்கும் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இந்த படத்தின் கதை எனக்கு நன்றாக பிடித்திருக்கிறது. எனவே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வேறு காரணம் எதுவும் இல்லை. ஸ்ரேயா எனது நெருங்கிய தோழி. இதுபோல் என் …

    • 0 replies
    • 842 views
  2. Started by pepsi,

    Thiruvilaiyaadal Arampam - watch Online http://www.oruwebsite.com/movies/thiru1.html

  3. நகைக்கடை திறப்பு விழாவிற்கு போன நயன்தாராவும் கோபிகாவும் ரசிகர்களின் அன்புப்பிடியில் சாறு பிழியப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் செகந்தராபாத் அருகில் உள்ளது குக்கட் பள்ளி. இங்கு புகழ்பெற்ற ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடைக்கு போட்டியாக அதன் எதிர்புறம் சமீபத்தில் ஜவுளி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்காக நடிகை கோபிகா அழைக்கப்பட்டிருந்தார். இதனையறிந்த, எதிர் ஜவுளி கடை நிர்வாகமும் நயன்தாராவை அழைத்து விழா நடத்த ஏற்பாடு செய்தது. இரு நிகழ்ச்சிகளுமே ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட, நடிகைகளை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். முதலில் நயன்தாரா வந்த கார் வந்தது. உடனே ரசிகர்கள் காரை சூழ்ந்து கொண்டு நயன்தாராவை அன்பு சிறையிட்டனர். கா…

  4. படத்தின் பெயர் 'அடாவடி.' பெயருக்கேற்ப கொஞ்சமாவது அடாவடி இல்லாமல் இருந்தால் எப்படி? சத்யராஜ் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில் மனநிலை மருத்துவமனையிலிருந்து வெளியே வருகிறார். நேராக பிள்ளையார் சிலையருகே சென்று, "நல்லவர்களை விட்டு விட்டு அநியாயம் செய்பவர்களுக்குதான் அருள் புரிவாயா?"என டயலாக் பேசுகிறார். சத்யராஜ் நக்கல் பேர்வழி ஆயிற்றே... அத்துடன் நிற்காமல், "அதனாலதான் உன்னை கடல்ல கரைக்கிறாங்க"என்று கூறி பிள்ளையாரை பெயர்த்து பக்கத்திலிருக்கும் கிணற்றில் போடுகிறார். இந்தக் காட்சியை நீக்கினால்தான் சான்றிதழ் என சண்டி செய்கிறது சென்ஸார் போர்டு. சென்ஸார் இந்தப் படத்தில் ஆட்சேபிக்கும் இன்னொன்று பாடல் காட்சி. 'திண்டுக்கல்லு பூட்டு, திருப்பிப் போட்டு மாட்டு...'என்ற அந்த …

  5. நடிகர்களின ரசிகர்கள் தங்கள் தலைவர்களை பில்டப் செய்து சொல்லும் வாசகங்கள் பல உண்டு. அதில் ஒன்று, 'தலைவர் வந்து நின்றால் போதும் படம் நூறு நாள்!' உண்மை! 'ஆழ்வார்' படத்தில் அஜித்தை பார்க்கும் போது, சும்மா திரையில் வந்து போனாலே படம் பிய்ச்சுக்கும் என்று தோன்றுகிறது. படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜனும் இதையே கூறுகிறார். "பட பூஜை போஸ்டரில் அஜித் சாமி கும்பிடும் ஸ்டில்லைப் பார்த்து பாராட்டாதவர்கள் இல்லை. அப்போதே 'ஆழ்வார்' ஒரு வெற்றி படம் என தீர்மானித்து விட்டேன்." அழகுக்கு ஆபரணம் தேவையில்லை என்றாலும் அஜித்தை மேலும் அட்டகாசமாக காட்ட காஸ்ட்யூமில் காசை அள்ளி வீசியிருக்கிறார்கள். அதிலும் பாடல் காட்சிகளில் இன்னும் விசேஷம். குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் எடுக்கப்…

  6. புதிய திரைப்படம் நெஞ்சில் சில் சில் http://oruwebsite.com/movies/nenjil1.html

    • 0 replies
    • 982 views
  7. பிறந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் சரியாக தனது குழந்தையை பார்க்கவில்லையாம் நடிகர் பிரஷாந்த். குழந்தையை பார்ப்பது ஒரு தந்தையின் உரிமை. அதனை நிலைநாட்ட நேற்று குடும்பநல நீதிமன்றத்துக்கு தனது வக்கீலுடன் வந்தார் பிரஷாந்த். பிரஷாந்தின் மனைவி கிரகலட்சுமி கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்கிறார். என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என கடந்த மாதம் 24-ந் தேதி கோர்ட்டுக்கு போனார் பிரஷாந்த். அவரையும் அவர் மனைவியையும் ஒன்றாக பேச வைத்தார் நீதிபதி. ஆனால், பலன் பூஜ்யம்! இந்நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றம் வந்தார் பிரஷாந்த். வாரத்திற்கு இருமுறை பொது இடத்தில் வைத்தாவது என் மகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க வந்தவர் திடீரென தனது மனதை மாற்றிக் கொண்டார். …

  8. Started by kirubakaran,

    சிரபுஞ்சியில் வெயில் அடித்தால் எப்படியிருக்கும். அப்படியொரு அபூர்வமாய்... காதல் உள்ளிட்ட அத்தனை உறவுகளின் உன்னதங்களை உயில் எழுதி வைத்திருக்கும் படைப்பு இது. தலைப்பு வெயில் என்றாலும் பல காட்சிகளில் கண்கள் என்னவோ சிரபுஞ்சியாய் மாறுவதை எந்த கைக்குட்டை கொண்டும் தடுத்துவிட முடியாது. கால் சட்டை பருவத்தில் அப்பாவால் கண்டிக்கப்படும் பசுபதி (முருகேசன்) வீட்டை விட்டு வெளியேறி வெளியூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்கிறார். வயது வளர வளர போஸ்டர் ஒட்டும் வேலையில் ஆரம்பித்து ஆபரேட்டர் வேலை வரை உயர்த்தப்படும் பசுபதியின் வாழ்க்கையில் திடீரென முளைக்கிறது காதல் அத்தியாயம். தியேட்டரின் எதிரே இருக்கும் டீக்கடைக்காரிரன் மகளுக்கும் (பிரியங்கா) பசுபதிக்குமிடையே காதல் வெள…

  9. தமிழ் சினிமாவை புரிஞ்சுக்கவே முடியவில்லை. வெற்றிலை குதப்பி கஞ்சா விற்றபோது சங்கீதாவுக்கு கிடைக்காத வரவேற்பு கொழுந்தனை காமப் பார்வை பார்த்தப் பிறகு கிடைத்திருக்கிறது. பிரச்சனையை கிளப்பிய 'உயிர்' படத்துக்குப் பிறகு மூன்று முக்கியப் படங்களில் நடிக்கிறார் சங்கீதா. இதில் இரண்டில் சங்கீதாதான் ஹீரோ - ஹீரோயின் எல்லாம். முதல்படம் 'காசு'. 'உயிர்' படத்தைப் போல இதிலும் கொஞ்சம் வில்லங்கமான வேடமாம். இரண்டாவது 'தனம்.' சேலை கட்டி தனத்தில் சங்கீதாவைப் பார்ப்பதே பரவசம். இளையராஜ சுவாமிகள் (அப்படிதான் விளம்பரப்படுத்துகிறார்கள்) இசையமைக்கிறார். இவை இரண்டுக்கும் பிறகு சங்கீதா நடிக்கும் படம் 'இவன் யாரோ.' அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோ, மாதவன். க்ரைம் த்ரில்லரான இ…

  10. இடைவிடாத படப்பிடிப்பு... இடையிடையே இலியானா தொந்தரவு... அனைத்தையும் மறந்து ரிலாக்ஸ் பண்ண மம்மியுடன் வெளிநாடு போகிறார் த்ரிஷா. 'கிரீடம்' படத்தில் அஜித்துடன் பிஸியாக நடித்து வருகிறார் த்ரிஷா. படப்பிடிப்பு தொடர்ந்து நடிப்பதால் மம்மியைகூட பார்க்க முடியவில்லையாம். 'கிரீடம்' படத்தில் இவருக்கு கல்லூரி மாணவி வேடம். அஜித்துக்கு? இப்போதைக்கு அது சஸ்பென்ஸ். இலியானாவும், எம்.எம்.எஸ்.சும்.தான் த்ரிஷாவின் பிரதான எதிரிகள். "நான் பீல்டுக்கு வந்து நாலஞ்சு வருஷமாச்சு. இந்த காலகட்டத்துல யார் யாரோ வந்திட்டுப் போய்ட்டாங்க. இலியானா எனக்கு போட்டினு சொல்றாங்க. சீக்கிரம் அவங்களுக்கும் போட்டிக்கு ஆள் வந்திடுவாங்க." ஏறக்குறைய சாபம் கொடுப்பதுபோல் சொல்கிறார். தனது ஆபாசப் படங்க…

    • 3 replies
    • 1.3k views
  11. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை நமீதாவின் வீட்டுக்கு அவரது அண்ணன் குடும்பத்தினர் வந்துள்ளனர். அண்ணனின் ஒரு வயது மகள் யாஷியுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார் நமீதா. பின்னர் அவளை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மேலே அவளை அமர வைத்து பிஸ்கெட் ஊட்டினார். அப்போது தான் கையில் வைத்தி ருந்த மிகவும் சிறிய அளவுடைய செல்போனை காரின் மேல் வைத்தார். அவரது கையில் பிஸ்கெட் இருந்ததாலோ என்னவோ 10-க்கும் மேற்பட்ட காக்கைகள் அங்கு வந்தன. அவைகள் நமீதா வைத்திருந்த பிஸ்கெட்டுகளை லபக் செய்ய அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தன. அவற்றைப் பார்த்து யாஷி கை தட்டி சிரித்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்ததும் நமீதா குஷியா னார். யாஷியை கையி…

  12. கை முளைத்து கால் முளைத்து வந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைத்தது சோனியா அகர்வால் கழுத்தில் செல்வராகவன் போட்ட மூன்று முடிச்சு. 'காதல் கொண்டேன்' படத்தின்போதே செல்வாவும் - சோனியாவும் ஒருவரையொருவர் காதல் கொண்டார்கள். இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர் என செய்திகள் கசிந்துகொண்டே இருந்தது. இதனிடையே கடந்த மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற காசிப்புகள் கப்சிப் ஆனது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் காலை 8.30 மணியிலிருந்து 10 மணிவரை முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. சரியாக 8.25 மணிக்கு மணமக்கள் மேடைக்கு வர சம்பிரதாய சடங்குகள் ஆரம்பமானது. பொன்நிற பட்டுப்புடவை, ஒட்டியாணம், நெற்றிச்சுட்டி, கை…

  13. ‘பெரியார்’ படப் பாடல் பதிவு. ‘‘கடவுளா... நீ கல்லா? மேலோர் என்று சிலரைப் படைத்து, கீழோர் என்று பலரைப் படைத்த கடவுளா நீ... கல்லா?’’ வைரமுத்துவின் தீத்தமிழுக்கு இசைப் பந்தம் ஏற்றிக் கணீரென்று பாடிக் காட்டுகிறார் வித்யாசாகர். ஆன்மிகம் கமழும் அவரது ‘வர்ஷாவில்லா’ இசைக் கூடத்தில் பரவியது கறுப்பு நெருப்பு. ‘‘பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பவன் நான். ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்று மனதார நம்புகிறவன். ஆனால், பெரியார் என்ற மாமனிதரை மதிக்கிறேன். சாதி மறுப்பில் தொடங்கி பெண்ணடிமைத்தனம் வரை அத்தனைக்கும் புது ரத்தம் பாய்ச்சிய அவரது துணிவுக்கு தமிழ்ச் சமூகம் என்றென்றைக்கும் கடமைப்பட்டி ருக்கிறது. அவரது வாழ்க்கைக் கதைக்கு இசை அமைப்…

    • 0 replies
    • 1.3k views
  14. பெயரளவிலான நடவடிக்கைகளால் தமிழ் மொழிக்கு ஒரு பயனும் இல்லை - ந. கவிதா தி பவர் ஆப் ரெட், ட்வின்ஸ், டீச்சர், ப்ளை - இவையெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா? நமது தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள்தான். முதல்வர் கருணாநிதி தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு வரிவிலக்கு என்று அறிவித்திருக்காவிட்டால் சிவப்பதிகாரம், ரெண்டு, வாத்தியார், ஈ ஆகிய படங்கள் இந்தப் பெயர்களில்தான் வந்திருக்கும். வரிவிலக்கின் விளைவாகத் திரைப்பட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தமிழ்ப் பெயர்களைத் தேடித் தேடித் தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொண்டிருக்கிறார்கள

  15. வன்முறையை ரசிப்பது எப்படி? தொலைக்காட்சித் தொடர்கள் கற்றுத் தருகின்றன - இளமதி "ஆனந்தம் முடியும்போது வீட்டுக்காரர் வருவாரு. 'சொர்க்கம்' போடும்போது மதிய சாப்பாட்டுக்குப் பிள்ளைங்க வருவாங்க. செய்தி போடும்போது சாப்பிடுவோம்" என்று ஒவ்வொரு அன்றாட நிகழ்வையும் தொலைக்காட்சித் தொடர்களின் நேரத்தோடு இணைத்து நிகழும் உரையாடல்களைக் கேட்டிருப்போம். பெண்களின் அன்றாட வாழ்வில் இந்தத் தொடர்களுக்கு அப்படியொரு பங்கு இருக்கிறது. "அந்த அபிய ஜெயில்ல வச்சே கதைய முடிச்சிடணும். எனக்குப் போட்டியா அவ தொழில்ல தலைகாட்டக் கூடாது." "சி.ஜே.வ நான் கல்யாணம் பண்ணியே தீருவேன். அதுக்காக செல்விய என்ன வேணாலும் பண்ணுவேன்"... என்று நாம் பார்க்கும் தொடர்கள் பழிவாங்கும் மனநிலையில் வெளிப்படும் …

    • 0 replies
    • 931 views
  16. 'பசித்தாலும் புலி புல்லை திண்ணாது...' பழமொழிக்கு லேட்டஸ்ட் சொந்தக்காரராகியிருக்கிறார் சிம்ரன். மும்பையில் குடும்பமும் குட்டியுமாக செட்டிலான பிறகு சிம்ரனை பற்றிய கதைகள் கோலிவுட்டில் கால் முளைக்கத் தொடங்கிவ இரண்டாவது நாயகியாக நடிக்கிறார், வடிவேலுக்கு ஜோடி சேர்கிறார், ராஜசேகர் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் கசிந்தது. இதற்கு சிம்ரனின் பதிலென்ன? என்று யோதித்தபோது கும்பிடப்போன தெய்வமாய் குறுக்கே வந்து நின்றார் சிம்ரன். "இப்போ நான் சென்னைக்கு விளம்பர படத்திற்காக வந்திருக்கிறேன். நான் இல்லாத நேரத்தில் ஏதேதோ செய்திகள் வந்துள்ளது. அதிலெல்லாம் உண்மையில்லை. தெலுங்கில் 'ஒக்க மகாடு' படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறேன…

  17. சும்மா சொல்லக்கூடாது... உண்மையிலேயே புயல்தான்! 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' மீண்டும் ஹீரோவாகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் பெயரை கேட்டால் பெரிய நடிகர்களுக்கே பொறாமை வரும். இம்சை அரசனுக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கலாமா வேண்டாமா என வடிவேலுக்கு டபுள் மைன்ட். அதை சிங்கிளாக்கியவர் ரஜினி. தொடர்ந்து ஹீரோவாக ஜாமாய்ங்க என்று ரஜினி சொன்னதை வேதவாக்காக எடுத்திருக்கிறார் வடிவேலு. 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'. இதுதான் அடுத்து வடிவேலு நடிக்கப் போகும் படம். புராணத்தையும் நவீனத்தையும் இழுத்து கோர்த்திருக்கும் கதைதான் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'! முதல் படத்தில் இரண்டு வேடத்தில் வடிவேலு. இந்தப் படத்தில் அதை முறியடிக்கிறார். புதிய படத்தில் அவருக்கு நான…

  18. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியது. 'தனக்கு வரப்போகும் கணவனிடம் பெண்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்?' இதுதான் கேள்வி. ஆச்சரியப்படுவீர்கள். அழகையோ, ஆரோக்கியத்தையோ, குணத்தையோ பெண்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் முதல் எதிர்பார்ப்பு டபுள் பெட்ரூம் ப்ளாட். இரண்டாமிடம் கார். மோட்டார் சைக்கிளும், செல்போனும் மூன்றாவது நான்காவது இடங்கள். மொத்தத்தில் 'பண' அந்தஸ்தை வைத்தே 'மண'மகனை தேர்ந்தெடுக்கிறார்கள் இன்றைய பெண்கள். ஐஸ்வர்யாராயின் திருமண கருத்துக் கணிப்பிலும் பிரதிபலித்திருக்கிறது இந்த அந்தஸ்து மோகம். மும்பை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், புனே போன்ற பெரு நகரங்களில் அபிஷேக் - ஐஸ் திருமணம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இருவரின் பொருத்த…

  19. அண்மையில் வெளியாகிய ஆணிவேர் திரைப்படம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறது. அத்திரைப் படத்தில் மாணவி கிருஷாந்தியாக நடித்து பார்வையாளர்களின் கண்களை எல்லாம் பனிக்க வைத்த நடிகை நீலிமா அவர்களை வஜ்ரம் என்ற இதழுக்காக பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக அதனைத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். - : உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் நீலிமா, நீங்கள் எப்படி தமிழ்த் திரையுலகில் அறிமுக மானீர்கள்? நீலிமா : நான் 1993ல் தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானென். என் அப்பா ஒரு எழுத்தாளர். - : நீங்கள் ஆணிவெர் என்ற திரைப்படத்தில் மாணவி கிருஷாந்தியாக நடித்திருக்கின்றீர்கள். ஆணிவெர் திரைப்படம் …

  20. தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் தூள் கிளப்புகின்றன. அன்னதானங்கள் பொறி பறக்கின்றன. ஸ்பீக்கர்கள் அனைத்திலும் ரஜினி படப் படப்பாடல்கள்! புரிந்திருக்கும்... இன்று ரஜினியின் 57-பிறந்தநாள் ரசிகர்களை ஏமாற்றி இந்த முறையும் தலைமறைவாகிவிட்டார் ரஜினி. எங்கு இருக்கிறார்... யாருடன் இருக்கிறார்...? அது சஸ்பென்ஸ்! ரஜினிக்கு பிடித்த கடவுள் ராகவேந்திரர். ரஜினி மன்ற அகில இந்திய தலைவர் சத்ய நாராயணா ரஜினிக்கு இஷ்டமான கர்நாடக மாநிலம் மந்த்ராலயத்திலுள்ள ராகவேந்திரர் கோயிலுக்கு கிளம்பிச் சென்றுள்ளார். ரஜினி பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை செய்யவும் 'சிவாஜி' வெற்றியடையவுமே இந்த யாத்திரை. சென்னை தி. நகர் ராகவேந்திரர் கோவில், வடபழனி முருகன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை…

  21. Started by kirubakaran,

    'தாய்மார்களின் பேராதரவுடன்', 'இளைஞர்களின் எழுச்சியில்', 'அனைவரும் விரும்பும் ஆல் கிளாஸ் படம்'. தினசரியை பிரித்தால் கண்ணில் தென்படும் சினிமா விளம்பரங்கள் இவை. சமீபகாலமாக இதில் மாற்றம். 'தமிழில் ஒரு உலக சினிமா', 'தமிழில் ஒரு ஈரானிய படம்' என்று இந்த விளம்பர வாசகங்கள் பரிமாணம் பெற்றிருக்கின்றன. தமிழக தாய்மார்களையும், இளைஞர்களையும் பின்னுக்கு தள்ளிய உலக சினிமாவிலும், ஈரானிய சினிமாவிலும் அப்படி என்ன விசேஷம்? இவற்றின் சிறப்பம்சம் என்ன? தமிழ் சினிமாவுக்கும் இவற்றுக்கும் உள்ள ஆதார ஒற்றுமைகள் வேற்றுமைகள் என்னென்ன? தமிழ் சூழலில் புதிதாக முளைத்திருக்கும் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க வந்திருக்கிறது 'உலகசினிமா' புத்தகம். இதன் ஆசிரியர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். …

  22. http://sinnakuddy1.blogspot.com/2006/12/blog-post_11.html

  23. தேனி சுற்றுவட்டாரங்களை ஒன்றுவிடாமல் சலித்தெடுத்து 'திருமகனை' உருவாக்கி வருகிறார் இயக்குனர் இரத்னகுமார். எஸ்.ஜே. சூர்யாவையும் மீராஜாஸ்மினையும் மொத்தமாக மாற்றி படமாக்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். 'கிழக்கு சீமையிலே', 'கருத்தம்மா'க்கு கதை எழுதியது இவர்தான். லஞ்ச்சை முடித்துவிட்டு குட்டித்தூக்கம் போட்ட இயக்குனரைத் தட்டினோம். 'என்னாப்பு.... கதை கேட்க வந்துட்டீங்களோ...' கிராமத்து மணம் கமகமக்க ஆரம்பித்தார். "நாம் மறந்துபோன உறவுகளின் பிரிவும், இருக்கின்ற உறவுகளின் அறியப்படாத அழகும் பின்னப்பட்ட கதைதான் 'திருமகன்.' வாழந்து கெட்ட ஒரு பணக்காரனுக்கும், புதுசா பணம் பார்த்த ஒருவனுக்கும் ஏற்படுகிற நட்புதான் கதைக்கரு. இதுல வாழ்ந்து கெட்ட …

  24. பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா- அபிஷேக் திருமணம் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அவர்கள் திருமணம் நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாவுக்கு மாங்கல்ய தோஷம் இருந்ததால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில், மற்றொரு முன்னணி நடிகர் ஹிருத்திக்ரோஷனுடன் முத்தக்காட்சியில் ஐஸ்வர்யா நெருக்கமாக நடித்ததால் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை நிராகரிக்கும் வகையில், நேற்று முன்தினம் இரு குடும்பத்தினர் முன்னிலையில், பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மாங்கல்ய தோஷத்துக்கு பரிகார பூஜை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற வேண்டிய திரு…

  25. ஐஸ்வர்யா ராய் திருமணம் ஐஸ்வர்யா ராய் திருமாலின் அம்சத்தை மணக்கிறார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.