Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. வீரம், விவேகம், விஸ்வாசம் இதெல்லாம் இருந்தும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு பிரச்னை..! - `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படம் எப்படி? அங்கே எல்லையில் பணியாற்ற வேண்டுமென்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஒரு ராணுவவீரன். அவனது முரட்டு குணமே அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. லட்சியத்திற்காக தனது குணத்தை மாற்றிக்கொள்கிறானா, அல்லது குணம்தான் முக்கியம் என லட்சியத்தை துறக்கிறானா என்பதுதான் `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படத்தின் ஒன்-லைன் என ஒரேயொரு லைனைச் சொல்ல ஆசைதான். என்ன செய்ய இதேபோல் படத்தில் ஆறேழு ஒன்-லைன்கள் இருக்கின்றன. `பசிச்சா நல்லா சாப்பிடுவேன், தூக்கம் வந்தால் நல்லா தூங்குவேன், கோபம் வந்தால் நல்லா அடிப்பேன்' என எடுத்ததெற்கெல்…

  2. திரை வெளிச்சம்: கதாநாயகனிடம் தப்பித்து... ‘கா’ படத்தில் ஆண்ட்ரியா கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! ஆண்களின் கைப்பாவையாக இருக்கும் தமிழ் சினிமாவில் அங்கொங்கொன்றும் இங்கொன்றுமாக முகம் காட்டி வந்த பெண் மையப் படங்கள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. முதல் பெண் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர், முதல் பாடலாசிரியர், முதல் ஒளிப்பதிவாளர் என்று கோடம்பாக்கத்தின் சினிமா வரலாற்றில் விரல்விட்டு சுட்டிக்காட்டப்படும் அளவிலேயே சுருக்கப்பட்ட பெண்கள், நடிப்பு என்று வருகிறபோது கதாநாயக பிம்பத்தைக் காப்பாற்றும் கறிவேப்பிலைக் கதாபாத்திரங்களில் மட்டுமே அதிகமும் எடுத்தாளப்பட்டிருக்கிறார்கள். கதாநாயகனுக்காக ஏங்கி அவனைக் காதலிப்பது, மணந்துகொண்டு …

  3. "நயன்தாரா, த்ரிஷா எடுத்த முடிவு சரிதான்!" - கீர்த்தி சுரேஷ் ''இந்தப் படத்துக்குப் பிறகு இனி சீரியஸாதான் நடிப்பீங்களானு கேட்கிறாங்க. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்துல நடிக்கிறேன், 'சண்டக்கோழி 2', 'சாமி 2' ஷூட்டிங் முடியிற ஸ்டேஜ்ல இருக்கு. அதேசமயம், 'நடிகையர் திலகம்' மாதிரி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் கிடைக்கிறது கஷ்டம். ரெண்டும் இருக்கட்டும்னுதான் நினைப்பேன்!" - 'சாவித்திரி' கேரக்டர் கொடுத்திருக்கும் உற்சாகம், கீர்த்தி சுரேஷ் முகம் முழுக்கத் தெரிகிறது. யெஸ்... கமர்ஷியல் கதைகளிலேயே பார்த்துப் பழகிவிட்ட கீர்த்தி சுரேஷை 'நடிகையர் திலகம்' மூலம் நாம் சாவித்திரியாகப் பார்க்கப்போகிறோம். "இன்றைய தலைமுறையினருக்கு நடிகை சாவி…

  4. '' என்ன இப்போ... நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும்... அதானே!?'' - கெளசல்யா தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்தவர் கெளசல்யா. விஜய், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர். தற்போது பெங்களூருவில் வசித்து வருபவர், கேரக்டர் ரோல்களில் நடித்துவருகிறார். "நீங்க கல்யாணத்துக்குத் தயாராகியிருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல் உண்மையா?" (சிரிப்பவர்) ''உங்களுக்கு நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும் அவ்வளவுதானே. சரி சொல்றேன். நான் கல்யாணத்துக்குத் தயாராகி இருப்பதாகவும், வரன் பார்த்துகிட்டு இருப்பதாகவும் வெளியான செய்தியை படிச்சேன். ஆனா, அது உண்மையில்லை. 'இந்த வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிக்க…

  5. 'பொன்னூஞ்சல் எரிநட்சத்திரம்’ ஷோபா! #ShobaMemories 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்....' இந்தப் பாடலின் வரிகளைப் படித்ததும் அநேகரின் நினைவில் நிழலாடுவது, நடிகை ஷோபாவின் முகம்தான். நெற்றியில் பெரிய பொட்டு, துருதுரு பார்வை, குழந்தைமை வழியும் சிரிப்புமே ஷோபாவை நினைவூட்டும் அடையாளங்கள். ஒரு கதாநாயகிக்கான இலக்கணங்களை மீறி, நம் பக்கத்து வீட்டுப் பெண்ணின் தோற்றத்தோடு, வெகு இயல்பான நடிப்பால் சினிமாவில் வலம்வந்தவர் ஷோபா. 1966-ம் ஆண்டு, சந்திரபாபு மற்றும் சாவித்திரி நடித்த, 'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாகத் திரைத்துறையில் நுழைந்தவர் ஷோபா. நாயகியாக, 'அச்சாணி', 'நிழல் நிஜமாகிறது', 'ஒரு வீடு ஒரு உலகம்'…

  6. பாலிவுட் வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதா? - மனம் திறக்கும் நடிகைகள் பகிர்க பாலிவுட்டில் நடித்து திரை நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்திய சினிமாவின் தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பை நோக்கி செல்கின்றனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநடிகை உஷா ஜாதவ் ஆனால் கனவை எட்ட அவர்கள் படும்பாடு ஒரு கெட்ட கனவாக மாறுகிறது. இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறும் பல நடிகைகளிடம் பேசியது பிபிசி. ஆறு ஆண்டுகளுக்கு முன், தன் பெற்றோரை சம்மதிக்க வைத்து சிறு கிராமத்தில் இருந்து பாலிவுட் கனவு…

  7. சினிமா செய்திகள்: பிரமாண்டமாக வெளியாக உள்ள 'காலா' பாடல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்த வார தமிழ் சினிமா உலகம் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் 'காலா'. ஆக்‌ஷன் பார்முலாவில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காலா படத்தை ஜூன் 7ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட…

  8. கமர்ஷியல் வேண்டாம்.. கதாபாத்திரம் போதும்: நடிகை மஹிமா நம்பியார் நேர்காணல் ‘என்னமோ நடக்குது’ படத்துலதான் நர்ஸ் கதாபாத்திரம் ஏற்று நடிச்சீங்க? இப்போ அடுத்தடுத்து வெளிவர இருக்கும் ‘ஐங்கரன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களிலும் நர்ஸ்தானாமே? என்று மஹிமா நம்பியாரிடம்கேள்வியோடு பேச ஆரம்பித்தால், ‘‘ஆமாம்.. அப்படித்தான் அமையுதுன்னு நானே ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லியிருக்கேன். எனக்கு எப்போதுமே திரில்லர் கதைகள் மீது தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில, கதாபாத்திரம் முழுக்க வித்தியாசமா இருந்ததால ஒப்புக்கொண்டேன். ‘ஐங்கரன்’ படத்தில் துறுதுறு நர்ஸ். ‘இரவுக்கு ஆயிரம் கண்…

  9. சினிமா விமர்சனம்: தியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் நாக ஷௌர்யா, சாய் பல்லவி, நிழல்கள் ரவி, ஆர்.ஜே. பாலாஜி, ரேகா, வெரோனிகா, ஆர்.ஜே. பாலாஜி, குமரவேல் இசை சி.எஸ். சாம் இயக்கம் விஜய். …

  10. ''விக்ரம் பிரபு... உங்க மேல அக்கறையோட ஒரு அட்வைஸ்!’’ - 'பக்கா’ விமர்சனம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டார்கள். பல நூறு கோடி ரூபாய் முதலீடு அந்தரத்தில் தொங்கியது. சொன்ன தேதிக்கு ரிலீஸ் செய்யமுடியாமல் படங்கள் முடங்கின. அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் க்யூப் போன்ற அமைப்புகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இத்தனையையும் கடந்து சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. ரீ-என்ட்ரி நல்லதுதான். ஆனால், 'பக்கா' போன்ற படத்தோடு கோலிவுட் திரும்ப ரீ-என்ட்ரி ஆகியிருக்க வேண்டாம். விக்ரம் பிரபு ஊர் ஊராகச் சென்று திருவிழாவில் பொம்மை விற்கும் 'பொம்மைக்கடை' பாண்டி. ஃப்ரேமில் தனியாக நின்…

  11. பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார். பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் தனது 87வது வயதில் இன்று காலமானார். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். ‘டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல் ஆகும் கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடி…

  12. சினிமாவில் அறிமுகமான சிவகுமாரின் மற்றொரு வாரிசு!!! நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான திருமதி பிருந்தா பின்னணி பாடகியாக திரைதுறையில் அறிமுகமாகியிருக்கிறார். கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் "மிஸ்டர் சந்திரமௌலி", திரு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு "விக்ரம் வேதா" புகழ் சாம் சி .எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், திருமதி பிருந்தா அவர்கள் கடவுள் வாழ்த்து பாடுவார் என்…

  13. சிவகார்த்திகேயன் முதல் அமுதவாணன் வரை..! ’ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை!’ தொடர்-1 ’நமக்கு மன ரீதியாக பல பிரச்னைகள் இருந்தாலும் கலக்கப்போவது யாரு ஷோ பார்க்கும் போது அது எல்லாமே மறந்து போயிடுது...’ என நம்மில் பலர் இதைச் சொல்லியிருப்போம். இல்லை, பிறர் சொல்லக் கேட்டிருப்போம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மட்டுமல்ல, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், அது இது எது என விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் எல்லாமே அதே ரகம்தான். இந்த நிகழ்ச்சிகள் எவ்வளவு ஹிட்டடித்ததோ அதே அளவிற்கு அதில் காமெடி செய்தவர்களும் பிரபலமாகியிருக்கிறார்கள். அப்படி பிரபலமானவர்கள், இந்த ஷோவிற்குள் எப்படி வந்தார்கள், வரும் போது எப்படி இருந்தார்கள் என்பதில் தொடங்கி இன்று…

  14. கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக கேங்ஸ்டர் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். #Nayanthara தென்னக திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இவரைத் தேடி வருகின்றன. நிவின்பாலி நாயகனாக நடிக்கும் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ மலையாள படத்தில், நிவின்பாலியுடன் நாயகியாக நயன்த…

  15. சினிமா செய்திகள்: இடைவெளிக்கு பிறகு நடிப்புக்கு திரும்பிய ஸ்ருதி ஹாசன்; ஆர்.ஜேவாக நடிக்கும் ஜோதிகா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்த வார கோலிவுட்சினிமா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். இடைவெளிக்கு பிறகு நடிப்புக்கு திரும்பிய ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் அஜித், விஜய், சூர…

  16. ஆர்யாவை திருமணம் செய்ய 7 ஆயிரம் பேர் விருப்பம்!! ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள 7 ஆயிரம் பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். நடிகர் ஆர்யா, 2005-ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்களாக முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். நான் கடவுள், அவன் இவன், வேட்டை, ராஜாராணி, கடம்பன் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கஜினிகாந்த், சந்தனத்தேவன் படங்களில் நடித்து வருகிறார். ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சில நடிகைகளுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை மறுத்தார். இந்த நிலையில் தனக்கு பெண் பார்ப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் …

  17. பிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே...! - - ‘மெர்க்குரி’ விமர்சனம் பாழடைந்த ஃபேக்டரி, அதில் மாட்டிக்கொள்ளும் ஐந்து இளைஞர்கள்... என ஹாலிவுட்காரர்கள் தேய்த்தெடுத்த ஒன்லைனை வைத்து கார்ப்பரேட் அராஜகத்துக்கு எதிராக `மெர்க்குரி' படத்தை இயக்கியிருக்கிறார், கார்த்திக் சுப்புராஜ். மெர்க்குரி கழிவுகளால் கேட்கும் திறன் மற்றும் பேசும் திறனை இழந்த இந்துஜா, சனத், தீபக், ஷஷான்க் மற்றும் அனிஷ் ஆகியோர் `ஹோப்' பள்ளியின் முன்னாள் மாணவர்கள். தங்களது அலுமினி மீட்டிற்காக ஒன்றுகூடும் இந்த ஐந்து பேரை, ஏன் பிரபுதேவா கொலை செய்யத் துரத்துகிறார், இவர்களுக்கும் பிரபுதேவாவிற்கும் என்ன சம்பந்தம்? என்பதை சமூக அக்கறை கலந்தும் கார்ப்பரேட…

  18. '' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்!'' - ஜெனிஃபர் கில்லி’ படத்தில் ‘புவி’ கதாபாத்திரம் மூலம் நம்மைக் கவர்ந்தவர் ஜெனிஃபர். தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஸ்டார் வார்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு விளையாடி வருகிறார். அவரோடு ஒரு ஜாலி கேலி இன்டர்வியூ. ``ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தப்போ என்னை பார்த்துட்டு பி.வாசு சார் அவருடைய படத்துல நடிக்கக் கேட்டார். வீட்டிலேயும் ஒத்துக்கிட்டு என்னை நடிக்க வைச்சாங்க. என்னுடைய முதல் படம் ‘கிழக்கு கடற்கரை’. அப்ப ஆரம்பிச்ச பயணம் இப்பவரைக்கும் தொடருது’’ என்றவர் சீரியல் பயணம் பற்றிப் பேசினார். ``சின்ன வயசுல பட…

  19. "காற்றின் மொழி"யில் பேச தயாராகும் ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் என தொடர்ந்து 3 வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு "காற்றின் மொழி" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பயணம், கௌரவம், உப்புக்கருவாடு, பிருந்தாவனம் என வரிசையாக தோல்விப்படங்களை கொடுத்த இயக்குநர் ராதா மோகன் மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து பணியாற்றும் படம் தான் காற்றின் மொழி. ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற "துமாரி சுலு" என்ற படத்தை "காற்றின் மொழி" என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வெற்றிப் பெறவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் ராதா மோகன். இந்த படத்தில் ஜோதிகா கதையின் நாயகியாகவ…

  20. இந்தியப் பெண்கள் குறித்து எனக்குப் பல கனவுகள் உண்டு: ப்ரியங்கா சோப்ரா! இந்திய நடிகைகளில் குறிப்பாக பாலிவுட் நடிகைகளிடையே செல்லுமிடமெங்கும் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டு நாளுக்கு நாள் சர்வதேச அளவில் கொண்டாடப் படும் நடிகைகளில் முக்கியமானவர் ப்ரியங்கா சோப்ரா. ஆரம்பத்தில் கல்விக்காக அமெரிக்கா சென்ற போது இவரது மாநிறத்தைக் காரணம் காட்டி இரண்டாம் தரமாக நடத்தப்பட்ட வேதனை இவருக்கு உண்டு. அப்போது அமெரிக்காவின் நிறவெறி கண்டு சுணங்கியவரை 2003 ஆம் ஆண்டில் வென்றெடுத்த உலக அழகிப் பட்டம் இன்று உச்சாணிக் கொம்பில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அன்று நிறத்தைக் காரணம் காட்டி ஒதுக்கிய அமெரிக்கர்கள்…

  21. சினிமா செய்திகள்: கலகலப்பை இழந்த சுந்தர், இந்தி மொழியாக்கத்தில் ஜோதிகா பகிர்க கோலிவுட்டில் இந்த வார சினிமா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைTWITTER/GVPRAKASH நாச்சியார் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த தும்ஹாரி சூலு (Tumhari Sulu) படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். அழகியதீயே, மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் ஜோதிகாவின் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான முதல்கட்ட வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்றுகொண்டிருக்கின்றன. அதிலும் நடிகர்கள் தேர்வில் இயக்குனர் மும்முரமாக இருக்கிறார். இந்த நிலையில் ஜோதிகாவின் …

  22. "வேலை சென்னையில; வீடு சென்னைக்கு வெளியில..." - 'டூ-லெட்' கதை சொல்கிறார், சந்தோஷ் நம்பிராஜன். Chennai: "நான் கவிஞர் விக்கிரமாதித்தனோட மகன். அப்பாவை வெச்சுத்தான் செழியன் சார்கிட்ட கேமரா உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். மனைவி, குழந்தைகள் எல்லாரும் சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டாங்க. அம்மா, அப்பா சென்னையில இருக்காங்க. சென்னைக்கும் சிங்கப்பூருக்கு அடிக்கடி பயணம் பண்ண வேண்டிய சூழ்நிலை. இடையிடையில சினிமா வேலைகளையும் பார்த்துட்டு இருக்கேன்." ஆர்வமாக நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், தேசிய விருது வென்ற 'டூ-லெட்' படத்தின் ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன். "கணவன்-மனைவி இரண்டு பேர் வீடுதேடிப் போறதுதான் 'டூ-லெட்' படக்கதைனு சொல்றாங்களே..." "20…

  23. தேசிய விருதுக்காக நன்றி சொல்லவில்லை : ’வெட்கப்படுகிறேன்’ - பார்வதி பார்வதி - நடிகை 65 - வது தேசிய விருதுகள் பட்டியலில் இடம்பெற்ற நடிகர் நடிகைகள் பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வரும் வேளையில் நடிகை பார்வதி தேசிய விருது கிடைத்ததற்காக நடுவர்களுக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார். மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை பார்வதிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தான் பெற்ற தேசிய விருது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பார்வதி தேசிய விருது கிடைத்ததற்காக தேசிய விருது தேர்வுக் குழுவினருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை எ…

    • 0 replies
    • 438 views
  24. ஏ.ஆர் ரஹ்மான், நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு தேசிய விருது! பகிர்க படத்தின் காப்புரிமைMOM ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் கடந்தாண்டு உருவான டு லெட் (TOLET) திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுடெல்லியில் 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக டு லெட் திரைப்படம் அறிவிக்கப்பட்டது. படத்தின் காப்புரிமைTO LET இயக்குநர் ஷேகர் கபூர் தலைமையிலான தேர்வு குழுவினர் அறிவிப்புகளை வெளியிட்டனர். சென்னையில் வாழ…

  25. மதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் புகைப்படம் வைரலாகிறது! டோலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் . இப்படம் தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் உருவாகிறது. தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் ‘நடிகையர் திலகம்’ என்று தமிழிலும் உருவாகிவருவது அனைவரும் அறிந்த செய்தி. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ‘சாவித்திரி’ கதாபாத்திரத்திலும், துல்கர் சல்மான் ஜ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.