Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாணத்தில் இந்திய குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதான குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது - அரசாங்க தகவல் திணைக்களம் வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை வட மாகாணத்தின் கிராமமான நெடுங்கேணியில் குடியமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமமான நெடுங்கேணியில் குடியமர்த்தியுள்…

  2. மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலிய செல்ல முயன்ற 88 இலங்கையர்கள் கைது சட்டவிரோதமான முறையில் படகு மூலம் மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேர் சர்வதேச கடற் பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். இலங்கையில் இருந்து விமானமூலம் மாலைதீவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் கடலில் சென்ற இவர்களை நேற்று திங்கட்கிழமை, அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. http://www.virakesari…

  3. 10 வயது சிறுமியை சவுதிக்கு அனுப்பிய ஆசாமி சிக்கினார் : ரிஸானாவையும் இவரே அனுப்பியுள்ளார் : அதிர வைக்கும் தகவல்கள் (எம்.எப்.எம்.பஸீர்) சவுதி அரே­பி­யாவில் மரண தண்­ட­னைக்கு உள்­ளான சிறுமி ரிஸானா நபீக்கை போலி ஆவ­ணங்கள் ஊடாக வெளி­நாட்­டுக்கு அனுப்­பிய நபர், கிண்­ணியா பகு­தியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு­வரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் சவுதி அரே­பி­யா­வுக்கு அனுப்­பிய குற்­றச்­சாட்டில் குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். போலி ஆவ­ணங்­கள் ஊடாக கடவுச்சீட்டை தயா­ரித்து சிறுமி ஒரு­வரை வெளி­நாட்­டுக்கு அனுப்­பி­யமை தொடர்பில் தண்­டனை சட்டக் கோவையின் 360 ஈ, குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 45 (2) ஆம…

  4. இந்தியாவுடன் ஒட்டிக் கொள்ளும் ஆர்வத்தில் மகிந்த – ‘தி ஹிந்து’ செவ்வியில் ஒப்புக் கொண்டார் 2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்றும், தாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்று முன்மொழியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அந்தப் பொறிமுறை, 2008-9 காலப்பகுதியில், விடுதலைப் புலிகளுடனான போரின் போது, இந்திய- சிறிலங்கா உறவுகளை ஒருங்கிணைப்பதற்காக, இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்,வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர்…

  5. ''இலங்­கையின் அடுத்த ஜனா­தி­பதி வந்­துள்ளார்'' மஹிந்த ராஜபக்ஷ “இலங்­கை யின் முன்னாள் ஜனா­தி­பதி என்­ப­து டன், எதிர்­கால ஜனா­தி­ப­தி­யாக வர­வுள்­ளவர்” என்று இந்­திய பார­திய ஜனதா கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­துள்ளார். மஹிந்­தவின் புது­டில்லி விஜயம் குறித்து அவர், தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளி­யிடும் போதே இவ்­வாறு குறிப்­பிட்­டுள் ளார். இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­ப­தியும், அடுத்த ஜனா­தி­ப­தி­யா­கவும் வர உள்­ளவர், விராட் இந்­துஸ்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் கலந்­து­கொள்ள புது­டில்லி வந்­துள்ளார். நாளை பொதுக்­கூட்­டத்தில் உரை யாற்றவுள்ளார்” என அவர் குறிப் பிட்டுள்ளார். h…

  6. கடனை மீளச் செலுத்த முடியாத தமிழ் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளிவந்தது புதிய குற்றச்சாட்டு!! கடன்சுமையால் சிக்கித் தவிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நுண் நிதிக் கடன்களை வழங்கிவரும் வங்கிகளின் பணியாளர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி ஹுவான் பெப்லோ கடும் கவலை வெளியிட்டார். தற்கொலைகளுக்கும் வழி வகுத்துள்ள நுண்நிதிக் கடன்களை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெண்கள் உட்பட பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில்இ சில கடன்களை இரத்துச் செயவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. எனினும் சிறிலங்கா…

  7. காங்கேசன்துறையில் பரபரப்பு – மனித எலும்புக் கூடு மீட்பு!! காங்கேசன்துறை தொடருந்துத் தண்டவாளத்துக்கு அருகில் 4 மாதங்கள் கடந்த மனித எலும்புக் கூடு ஒன்று சற்றமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது. தண்டவாளத்துக்கு 100 மீற்றர் தூரத்தில் எலும்புக் கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதும ஆணின் உடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர். நீதவான் வருகை தந்த பின்னர் எலும்புக் கூடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். https://newuthayan.com/story/10/காங்கேசன்துறையில்…

  8. ஆதரவு கோரினார் தவிசாளர்- “ கப் சிப்பான“ உறுப்பினர்கள்!! நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்படட பகுதிகளில் கட்டப்படும் சட்ட விரோத கட்டடங்களை இடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தருவீர்களா என தவிசாளர் கேட்ட்ட போதும் சபை உறுப்பினர்கள் பின்னடித்தனர். நல்லூர் பிரதேச சபையின் அமர்வு சபா மண்டபத்தில் நேற்று தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் சபை உறுப்பினர்கள் சட்ட விரோதமாக கட்டடங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே தவிசாளர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.அவர் அங்கு தெரிவித…

  9. யாழில் ஆயுதங்களுடன் கடத்தப்பட்டது பொலிஸாரின் வாகனம் கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். சம்பவத்தையடுத்து பெருமளவு பொலிஸார் தென்மராட்சிப் பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வாகனத்தை தேடும் பணியில் இராணு…

  10. கொக்­குத்­தொ­டு­வா­யில்- 5 படகுகளுடன் தெற்கு மீனவர்கள் கைது!! முல்­லைத்­தீவு, கொக்­கு­ளா­யில் சட்­ட­வி­ரோ­த­மாக மீன்­பி­டி­யில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் தெற்கு மீன­வர்­கள் 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். 5 பட­கு­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. சாலைக்­கும், பேப்­பா­ரைப்­பிட்­டிக்­கும் இடைப்­பட்ட பகு­தி­யில் தெற்கு மீன­வர்­கள் மறைந்­தி­ருந்து தொழில் செய்­கின்­ற­னர் என்று கிடைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய முல்­லைத்­தீவு மாவட்ட கடற்­றொ­ழில் நீரி­ய­வ­ளத் திணைக்­க­ளத்­தி­ன­ரும், கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளும் எடுத்த முயற்­சி­யில் இவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கொக்­கு­ளா­யில…

  11. வாள் வைத்திருந்தவருக்கு 6 மாத சிறை தண்டனை வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் தொடுத்த வழக்கிலேயே இந்தத் தண்டனைத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. கோப்பாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றின் சூழலில் வாள் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை சிறுவன் ஒருவன் எடுத்து சுழற்றியுள்ளார். சிறுவன் வாள் சுழற்றும் காட்சியை கைபேசியில் காணொலி எடுத்த அயலவர் ஒருவர், அதனை கோப்பாய் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார். அந்தக் காணொலியை வைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், வாள் வைத்திருந்த சிறுவ…

  12. ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது வட மாகாண சபையின் ஆயுட் காலம் வடமாகாண சபையின் ஆயுட் காலம் ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாகாணசபையின் இறுதி அமர்வு எதிர்கூரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெறவுள்ளது என அவைத் தவைர் சீ,வி.கே சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், வடமாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்னும் மீதமாக 2 அமர்வுகள் இருக்கின்றன. இதற்கமைய இறுதி அமர்வு 23 ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது. அன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன…

  13. இடி அமீன் போல இருக்கிறார் – சிறிலங்கா இராணுவத் தளபதியை தாக்கும் பொன்சேகா சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, இடி அமீன் போலத் தோற்றமளிக்கிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவத்தை மறுசீரமைத்தல் மற்றும், மீள நிலைப்படுத்தல் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்து வருகிறார். தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த முனைகிறார் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், தேச…

  14. பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று அமைச்சரவையில் முன்வைத்தார். இந்தச் சட்டரைவில் கூறப்பட்டுள்ள மூன்று விடயங்கள் தொடர்பாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச எடும் எதிர்ப்பை வெளியிட்டார். இதனால் அமைச்சரவையில் கடுமையான வாக்குவாதங்களும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இறுதியில், இந்த சட்டவரைவு மீது நடத்தப்படும் குழு நிலை விவாதத்தின் போது திருத்தங்களை முன்வைப்பது என்…

  15. இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்ளது. விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானமொன்று இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பேர்த்திலிருந்து இலங்கை சென்றுள்ளது. கடந்த ஆறு வருடகாலத்திற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் இவர்களில் சிலரி…

  16. சீன மொழி கற்க இலங்கை பொலிஸ் குழு சீனா விஜயம்! இலங்கையில் சீன சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு உதவும் வகையில், இலங்கை பொலிஸார் சீன மொழி கற்க உள்ளனர். குறித்த கற்கைகளுக்காக இலங்கை பொலிஸ் குழு ஒன்று பீஜிங்கிற்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸார் சீன கல்விக்காக தேர்வு செய்யப்பட்டனர். பொலிஸாரின் அடிப்படைச் சீன மொழி அறிவு, நாட்டில் உள்ள சீனர்களுக்குப் பெரிதும் உதவும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் சுற்றுலா சந்தையில் சீனா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இவ்வாண்டில் தற்போது வரை சுமார் ஒரு லட்சத்துக்கு 90 ஆயிரம் சீனர்கள் இங்கு பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிட…

  17. வடக்கில் ரூ. 46.4 பில். முதலீட்டில் 35 திட்டங்கள் இலங்கை முதலீட்டு சபையின் பங்களிப்பில் வட மாகாணத்தில் முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு முதலீட்டு சபையின் பங்களிப்புடன் வட மாகாணத்தில் 6 ஆடைத் தொழிற்சாலைகள் 8,000 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளதுடன், இவற்றில் சுமார் 7,917 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு மேலதிகமாக, 15 செயற்றிட்டங்கள் வெவ்வேறு துறைகளில் முதலிடப்பட்டுள்ளதுடன், இவற்றில் 837 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த முதலீடுகளின் பெறுமதி 16,293 மில்லியன் ரூபாயாக அமைந்துள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக, 2 புதிய திட்டங்கள் வணிக செயற்பாடு…

  18. அனைத்து தமிழர்களையும் அதிருப்தியடைய வைத்த ஈழத்து வாழ் இளைஞர்களின் செயல்! ஓவியாவின் இலங்கை வருகை; தடுமாறும் ஈழத்து தமிழ் இளைஞர்கள்: எங்கே செல்கிறது தமிழினம்! நடராசா ஜெயகாந்தன். இலங்கையில் கடந்த காலங்களில் தமிழர்கள் பல ஒடுக்குமுறைகளை சந்தித்த வேளையில் அந்த காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் மக்களுக்காக, பல தமிழ் இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தது, அந்த இயக்கங்களில் தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவுகளையும் பெற்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 35 வருடங்களாக தனி நாட்டு கோரிக்கையை முன்னெடுத்திருந்த நிலையில் எந்த தீர்வும் பெற முடியாத சூழ்நிலையில், ஈழத்து தமிழ் மக்களின் பிரட்ச்சனைகளை உலகிற்கு அறியவைத்து ஜக்கிய நாடுகள் சபையின் முற்றத்திற்கு கொண்டு சென்ற நிலையில், கடந்த 2009-ம் ஆண…

  19. சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதம் இருக்கும் ஆயுததாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறைக்கைதி ஒருவர் உண்ணாவிரதம் இருந்துள்ளார். குறித்த கைதி ஏன் உண்ணாவரதம் இருந்தார்? அந்தக்கைதி யார்? போன்றவற்றை எமது செய்திப்பிரிவு ஆராய்ந்தபோது பல திடுக்கிடும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது அண்மையில் இரண்டு மதக் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக காத்தான்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முகமட் ஹூசைன் என்ற நபரை கொக்கட்டிச்சோலை தமிழ் பிரதேசத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர். தற்போது அவ…

  20. பாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்!! மாகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நினைவு கூரப்பட்டது. நல்லூர் அரசடி வீதியில் உள்ள பாரதியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மாகாணசபையினர் , மாவட்ட செயலர் ,அரச அதிகாரிகள், மாணவர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/story/14/பாரதியாரின்-நினைவு-தினம்-யாழ்ப்பாணத்தில்.html

  21. “அரசியல்வாதிகளே எம்மை ஏமாற்றாதீர்”: பருத்தித்துறையில் வியாபாரிகள் போராட்டம் தற்போது மேல்மாடியில் இயங்கி வரும் பருத்தித்துறை மரக்கறிச்சந்தையைப் பொருத்தமான இடத்திற்கு மாற்றித்தரக் கோரி பருத்தித்துறைச் சந்தை வியாபாரிகள் நேற்றைய தினம் தமது வியாபார நடவடிக்கைகளைக் நிறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் “அரசியல்வாதிகளே எம்மை ஏமாற்றாதீர்”, “நகரசபையே தேர்தல் நேர வாக்குறுதிகளை நிறைவேற்று”, “நகரசபையே வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்று”, “மரக்கறிச் சந்தையை கீழ்த்தளத்திற்கு மாற்று”, “வியாபாரிகளின் பிழைப்பில் மண் போடாதே” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கிக் கட…

  22. இலங்கையின் அரசியலமைப்பை மீறிய சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு- மைத்திரி- ரணிலின் எதிர்வினை என்ன? அமெரிக்கா, ஜப்பான். இந்தியா ஒரே நேர்கோட்டில் பயணம் 1 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி பாராட்டியுள்ளார். இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி எனவும் அவர் தனது ருவீட்டர் தளத்தில் கூறியுள்ளார். புதுடில்லியில் ஹிந்துஸ்த்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் இந்திய- இலங்கை உறவுகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். சம்பந்தனை உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றக் குழு புதுடில்லியில்…

  23. வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலும் 20 கோடி ரூபாவை வழங்கியது ஜப்பான் இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத் திட்டம் SKAVITA Humanitarian Assistance and Relief Project (SHARP) மற்றும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு Mines Advisory Group (MAG) ஆகியவற்றுக்கு மொத்தமாக 1,249,997 அமெரிக்க டொலர்களை ( ஏறத்தாழ 20 கோடி இலங்கை ரூபா) வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான மானிய ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா, SHARP அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஓய்வுபெற்ற லெப். கேணல் வீ.எஸ்.எம்.சரத் ஜயவர்தன மற்றும் …

  24. ஐ.நா. கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு: இலங்கை வடமாகாண சபை கோரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் பற்றித் தீர்மானிப்பதற்காக தமிழர் பகுதியான இலங்கை வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை வடக்கு மாகாண சபை கோரியுள்ளத…

  25. கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக தீயணைப்பு பிரிவு உருவாக்கம்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் முறையாக தீயணைப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 97 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சிக்கான தீயணைப்பு பிரிவு இன்று அங்குராபர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இன்று (11-09-2018) மாலை மூன்று மணிக்கு கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருக்கில் அமைக்கப்பட்ட மாவட்ட தீயணைப்பு பிரிவின் அலுவலகமும் தீயணைப்புக்குரிய வாகனங்கள் உள்ளிட்டன உத்தியோகபூர்வமாக கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கிளிநொச்சி பொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.