Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் சிறைச்சாலை நிர்மாணப் பணிகளை நிறுத்த முடிவு யாழ் சிறைச்சாலை வளாகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் `நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. அதன் பிரகாரம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை வளாகம் அனுமதி இன்றி அமைக்கப்பட்டது. அதற்கு யாரால் அனுமதி வழங்கப்பட்டது என்பது தெரியாத நிலையில், அங்கு தற்போது மேலதிக கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில…

  2. பதவி துறக்குமாறு- வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!! வடக்கு மாகாண அமைச்சரவையில் நெருக்கடி ஏற்பட் டுள்ள நிலையில் அதனை முன்னி றுத்தி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பதவி துறக்குமாறு அவருக்கு ஆலோசனை வழங்கும் நெருக் கமான சில தரப்புக்கள் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ள தாக அறியமுடிகின்றது. இதனூடாக மக்களின் அனுதாபங் களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்தத் தரப்புக்கள் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளபோதும், அந்த யோசனையை இதுவரையில் முதல மைச்சர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பால் வடக்கு மாகாண அமைச்சரவை மறுசீரமைக்க வேண் டிய நிலைக்குத் தள்ளப்…

  3. இந்தியா உறுதுணையாக நிற்கும் : 10,000 வீடுகள் விரைவில் நிர்மாணிக்கப்படும்; மலையக மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி (மஸ்கெலியா,அட்டன் நிருபர்கள் ) இலங்கைக்கு நான் கடந்த முறை வருகை தந்தபோது மலையக மக்களுக்கு வாக்குறுதியளித்தவாறு 10000 வீடுகள் மிக குறுகிய காலத் தில் நிர்மாணிக்கப்படும் என உறுதி கூறுகின்றேன். இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் மலையக மக்களின் முன்னேற்ற பாதையில் என்றும் உறுதுணையாக இருப்போம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவில் பிறந்து இலங்கையில் வாழ்ந்துவரும் மலையக மக்களுக்கு ஒரு புதிய எதிர்காலத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்திய , இலங்கையின் நட்புறவில் ஒரு புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ள…

  4. மனோவிடமிருந்து பறிபோகின்றது வடகிழக்கு வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி தலைமை அமைச்­சர் ரணில் விக் கி­ர­ம­சிங்க­வின் பணி­ய­கத்­தின் மேற் பார்­வை­யி­லும், கண்­கா­ணிப்­பி­லும், வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணத் தில் 25 ஆயி­ரம் வீடு­களை அமைக்­கும் பணியை மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடாக மேற்­கொள்­ளு­மாறு எதிர்க்­ கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் கடி­தம் அனுப்பி­யுள் ளார். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க­வுக்கு அனுப்­பிய கடி­தத்­தி­லேயே அவர் இந்­தக் கோரிக்­கையை முன் வைத்­துள்­ளார். கடந்த ஆண்டு வரவு – செல­வுத் திட் டத்­தில், வட கிழக்கு மாகா­ணங் களில் 50ஆயி­ரம் கல்­வீ­டு­களை அமைக்க அரச தலை­வ…

  5. முன்னாள் படையதிகாரிகளிடம் சிறிசேன தெரிவித்த இரகசியம் என்ன? விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் குறித்த வரலாற்றை மீள எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி சிறிசேன முன்னாள் முக்கிய அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார். ஜனாதிபதி சிறிசேன அந்த சந்திப்பின் ஆரம்பத்திலேயே அங்கு ஆராயப்படும் விடயங்கள் மிகவும் இரகசியமானவை என தெரிவித்துள்ளார். நாங்கள் இங்கு ஆராயப்போகின்ற விடயங்களை வெளியில் எவருடனும் பகிர்ந்துகொள்ள கூடாது என அவர் தெரிவித்துள்ளார். ஜன…

  6. காணிகள் விடுவிக்கப்பட்டதை கண்காணிக்கவே இங்கு வந்தேன் - திலக் மாரப்பன இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பாக கண்காணிக்கவே நான் இங்கு வருகை தந்தேன் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வவுனியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அங்கு வவுனியா, மன்னார் மாவட்டங்களின் அரச அதிபர்கள், இரு மாவட்டங்களினதும் பிரதேச செயலளார்கள் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக் கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது, …

  7. கூரையிலிருந்து பெண் கைதிகள் இறக்கப்பட்டனர்; நிலைமை சுமுகம் (இரோஷா வேலு) வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் சிறைக்கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்பாக கீழிறக்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வெலிகடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்குரிய சிறைக்காப்பாளரை (ஜெய்லர்) இடமாற்றம் செய்தமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்திய பெண் சிறைக்கைதிகள், அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரியும், வெளியிருந்து சிறைக்கைதிகளுக்கு கொண்டுவரப்பட்ட உணவுகளை மட்டுப்படுத்துவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, அவர்கள் தமது வழக்க…

  8. இலங்கையின் SOS சிறுவர் கிராமங்கள் யாழ்ப்பாண இளைஞர்களுக்கு தொழில்முறை கல்வியை தொடர வலுவூட்டல்.. நாட்டில் 30 வருட காலமாக நிலவிய சிவில் யுத்தம் காரணமாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முறையான கல்வி மற்றும் ஆளுமை அபிவிருத்திக்கான வாய்ப்பை கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் மத்தியில் வருமானமீட்டக்கூடிய வாய்ப்புகள் குன்றிக் காணப்படுகின்றன. SOS சிறுவர் கிராமங்கள் இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய தீர்மானித்திருந்ததுடன், குறைந்த வருமானமீட்டும் இளைஞர்களுக்கு தமது திறனை விருத்தி செய்து கொள்வதற்காக தொழில் பயிற்சி நிலையமொன்றை நிறுவி வழங்கியுள்ளது. யாழ்ப்பாண தொழில் பயிற்சி நிலையம் கடந்த ஜுன் மாதம் அங்குரார்ப…

  9. வெடுக்குநாறி மலைக்கு சென்றால் கைது செய்யப்படுவீர்; தொல்லியல் திணைக்களம் நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி பொலிஸார் ஊடாக கூறியிருக்கின்றது. இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், வெடுக்குநாறி மலையையும், அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியை நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ்வதற்காக சிலர் முயற்சித்தபோது மக்கள் கடுமையான எதிர்ப்பை …

  10. "சீனாவின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அவசியம் எமக்கில்லை" (இராஜதுரை ஹஷான்) மக்களின் ஆதரவு தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் உள்ளமையினால் சீனாவின் ஆதரவை கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவற்கான அவசியம் எமக்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமெரிக்காவை நாடியதை போன்று நாங்கள் கடந்த வாரம் பொது எதிரணியினர் ஆரம்பித்த அரசை கவிழ்க்கும் போராட்டத்திற்கு சீனாவை நாடவில்லை. சீனா எமது நாட்டு உள்ளக அரசியல் விவகாரங்களில் தலையிடவில்லை சீனாவின் ஆதரவை கொண்டுதான் மீண…

  11. மைத்­திரி வர முன்­ன­ரே மயி­லிட்­டியை விடு­வி­யுங்­கள் அமைச்­சர் விஜி­த­மு­னி­யி­டம் மாவை எம்.பி. வலி­யு­றுத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­வதற்கு முன்­னர் மயி­லிட்­டி­யில் மக்­க­ளின் எஞ்­சிய காணி­களை விடு­வித்து அவர்­கள் அங்கு குடி­ய­மர்­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்ய வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ராசா. மயி­லிட்­டித்­து­றை­முக அபி­வி­ருத்­திப் பணி­களை ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வ­ரும் 22ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­துக்க வருகை தர­வுள்­ளார். இது தொடர்­பில் ஆரா­யும் கலந்­து­ரை­யா­டல…

  12. மக்களுக்கு துரோகம் இழைத்தது மாகாணசபை

  13. சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க சிறப்பு போர் படைகள் நான்கு வாரப் பயிற்சி சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படையணிகளுக்கு அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர் படை அதிகாரிகள் அளித்து வந்த பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ், Flash Style 2018/01 பெயரில், திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர் படைகள் பயிற்சி அளித்து வந்தன. 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணியைச் சேர்ந்த 26 கடற்படையினர், மற்றும் சிறப்பு படகு படையணியைச் சேர்ந்த 36 கடற்படையினருமாக, மொத்தம் 62 சிறிலங்கா கடற்படையினருக்கு நான்கு வாரங்கள் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஜூலை 17ஆம் நாள் ஆரம்பிக்கப்ப…

  14. யாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ”வடக்கில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கு, காவல்துறையினரும், சிறிலங்கா படையினரும், தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய், போன்ற காவல்துறை பிரிவுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் மறைவிடங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, 29 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, ஏழு வாள்கள், எட்டு …

  15. சிறைக்கைதிகளுக்கான உடையில் ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகள் அணியும் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. ஞானசார தேரர் தற்போது சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் 5 ஆவது இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஒரு சிறை அதிகாரியும், இரண்டு சிறைக்காவலர்களும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகள் அணியும் ஆடையை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். சிறைக்கைதிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அணியும், காற்சட்டை மற்றும் மேலங்கியே ஞானசார தேரருக்கு…

  16. சம்பந்தனுக்கு சார்பான சபாநாயகரின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியாது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக எவரும், நீதிமன்றத்தை நாட முடியாது என்று நாடாளுமன்ற அவை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணி கோரி வந்த நிலையில், இரா.சம்பந்தனிடம் உள்ள அந்தப் பதவியை மாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், முன்னர் அனுர பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்த போது, நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சவால் விடுக்க முடியாது என்று தீர்ப்பளித்திருந்தார். எதிர்க்…

  17. மயிலிட்டி துறைமுக மீள்கட்டுமான திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார் மைத்திரி மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த யாழ். குடாநாட்டின் மிக முக்கியமான- பழைமைவாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், அண்மையில் விடுவிக்கப்பட்டது. வடக்கின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்து மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக மயிலிட்டி துறைமுக மீள்கட்டுமான திட்டம் ஆர…

  18. வீரமுனைப் படுகொலைகளின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. 1990 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றிருந்தது. சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்முறைகளினால், வீரமுனையும் அதனருகே இருந்த, வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாபிட்டி, சொறிக்கல்முனை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பலர், தங்களது குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோவில் மற்றும் வீரமுனை இராமகிருஷ்ண மிசனரி பாட…

  19. அரசியல் பிரவேசம் குறித்து மௌனம் கலைந்தார் குமார் சங்கக்கார! அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவத்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார அறிக்கை ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் பற்றி தெளிவுபடுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்களை மிகவும் கரிசனையுடன் வாசித்தேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் எனது அ…

  20. பால் பதனிடும் தொழில்ச்சாலை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் தொழில் தருணர் ஒருவரால் கட்டப்பட்ட முல்லை பால் பதனிடும் தொழில்சாலை திறப்பு நிகழ்வு தொழில்சாலையின் நிறுவுனர் சி.தவசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந்த முல்லை வலயக் கல்விப்பணிப்பாளர் உமாநிதி புவனராஜா வவுனியா கால்நடை சங்க தலைவர் கந்தசாமி உதவி தொழில் அபிவிருத்தி உத்தியேகத்தர் ச…

  21. யாழ் வாகன விபத்தில் இளைஞர் பலி யாழ் இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 27 வயதான நடராஜா பிரசன்னா என்பவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. எதிர்ப்பக்கம் வந்த காருடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவத்தில் எதிராக வந்த இன்னொரு மோட்டார் வண்டிச் சாரதியும் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் http://www.virakesari.lk/article/38362

  22. எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினர் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கையையும் அதன் உள்ளக வளங்களையும் பாதுகாப்பதற்குச் சேர்ந்து போராட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படப்போகின்றது என்பதை உணர்கின்றேன். …

    • 0 replies
    • 589 views
  23. கரை ஒதுங்கும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்! புத்தளம் கடற்கரையில் காலாவதியான மருந்துப் பொருட்கள் மற்றும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள் கரை ஒதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்துக் கழிவுப் பொருட்கள் ஆபத்தை தரக்கூடியவையா என்பது தொடர்பாக பிரதேச மக்களிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருட்களில், காலாவதியான மருந்துப் பொருட்கள், ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன்கள், ஊசி வகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கடந்த சில நாட்களாக புத்தளம் கடற்பரப்பில் கரை ஒதுங்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அ…

  24. மஹிந்தவுடன் சிறுபான்மை கட்சி தலைவர்கள்; வைரலாகும் புகைப்படங்கள் மாகாண சபைத் தேர்தலை, பழைய முறைமையில் நடத்துவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பான கூட்டம் ஒன்று கடந்த வியாழக்கிழமை(09) நாடாளுமன்ற கட்டட வளாகத்தினுள் இடம்பெற்றிருந்தது. இதில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களான, அமைச்சர் ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ம…

  25. சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நிதியை வழங்கவுள்ளது அமெரிக்கா சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு அதிகளவு பாதுகாப்பு நிதியை அளிப்பதற்கு வழி செய்யும், 2019ஆம் நிதியாண்டுக்கான 700 பில்லியன் டொலருக்கும் அதிகமான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார். சீனா, ரஷ்யாவுக்குப் போட்டியாக, அமெரிக்காவின் இராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே, இந்தப் பாரிய நிதி ஒதுக்கப்படவுள்ளது. பாரிய- பலமான இராணுவத்தைக் கட்டியெழுப்பும் அமெரிக்க அதிபரின் திட்டத்துக்கு அமைய, 716 பில்லியன் டொலர் பெறுமதியான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்துக்கு, அமெரிக்க பிரதிநிதிகள் சபையும், செனட் சபையும் அங்கீகா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.