Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம் காணாமல் போனோருக்கான பணியகம் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களை இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், முதலாவது கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெறவுள்ளது. இதையடுத்து, அடுத்து வரும் வாரங்களில் மாத்தறை, திருகோணமலை, முல்லைத்தீவு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக பிராந்திய ரீதியான கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன. காணாமல் போனோருக்கான பணியகத்தின் திட்டம், உபாயங்கள், தற்போதைய நிலைப்பாடு, தொடர்பாக விளக்கமளிக்கவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும், பரிந்துரைகளை தெரிவிப்பதற்கும்…

  2. பௌத்த விகாரைகளை அழித்து இந்துக் கோவில்களை கட்டியுள்ளார்கள்: சீறிச்சினந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்! வட மாகாணத்தில் பல தசாப்தங்களாக காணப்படுகின்ற பௌத்த புராதன சின்னங்கள் மீது இந்து கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்வைத்துள்ளது. வடக்கில் புத்தர் சிலைகளையோ அல்லது விகாரைகளையோ புதிதாக அமைப்பதற்கு அவசியமில்லை என்று தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்கட்சி, தெற்கில் கோவில்களையும், பள்ளிவாசல், தேவாலயங்களையும் அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்படாத போதிலும், வடக்கில் மட்டும் எதிர்ப்பு வெளியிடப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏ…

  3. நான் யுத்தக் குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை - இராணுவ தளபதி நான் யுத்த குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை எனவும் தெரிவித்துள்ள இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க தன்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு இராணுவம் ஆர்வமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இலங்கை இராணுவம் வெளிநாட்டு நடவடிக்கைகள் இயக்குநரகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதுஎன இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வெளியே இராணுவத்திற்கு உரிய ஆதரவு இல்லாததன் காரணமாக தனக்…

  4. பௌத்த விகாரை தொடர்பான விசாரணைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஓட்டுசுட்டான் பகுதியிலுள்ள 64 ஆவது படைப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த படைமுகாமின் பொறுப்பதிகாரியையும் இலங்கை இராணுவத் தளபதியையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விசாரணைகளுக்கு வருகை தருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கற்சிலைமடுப்பகுதியில் புதுக்குடியிருப்பு செல்லும் பிரதான வீதியில் தனியார் காணி ஒன்றில் 64 ஆவது படைப்பிரிவின் இராணுவ முகாம் அமைந்துள்ளது. அதில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனியார் …

  5. இராணுவத்தில் இணையுங்கள்!! இராணுவத்தில் இணையுங்கள்!! வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார். சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் நல்லவர்கள் எனினும் கடந்த 30 வரு…

    • 1 reply
    • 544 views
  6. “விழுந்து விழுந்து வாக்குக் கேட்கும் நாங்கள் வெற்றி பெற்றவுடன் மக்களை மறந்து விடுகின்றோம்” SLILG, UNDP நிறுவனங்களின் அனுசரணையுடன் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கிறீன் கிறாஸ் ஹொட்டேல் – யாழ்ப்பாணம் 11.05.2018 காலை 09.00 மணியளவில் பிரதம அதிதி உரை… இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக வருகைதந்திருக்கின்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே, விசேட விரிவுரையாளர்களே, உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களே, இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் இருந்துவருகைதந்திருக்கும் திரு.ஜயதிஸ்ச அவர்களே, பிரதே…

  7. வித்தியா படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு திடீர் இடமாற்றம்! மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார். மேலும், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்க…

    • 3 replies
    • 420 views
  8. தீர்வு விட­யத்தில் அக்­கறை வேண்டும் அர­சாங்­கத்­திடம் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் வலி­யு­றுத்தல் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கண்டால் மட்­டுமே நாட்டின் அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் வெற்­றி­கொள்ள முடியும். ஆகவே வெகு விரைவில் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதில் அர­ சாங்கம் அக்­கறை செலுத்த வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் சபையில் வலி­யு­றுத்­தினார். தமிழ் மக்­களின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக உரி­மை­களை புறக்­க­ணித்­து­வி­டலாம், அவற்றை ஒழித்­து­வி­டலாம் என எவரும் நினைத்­து­விடக் கூடாது. தமிழ் மக்­களை நிரா­க­ரித்த பயணம் ஒன்றை முன்­னெ­டுக்க முடி­யாது என்றும் அவ…

  9. மெது­மெ­து­வாக யதார்த்­த­மாகிவரும் எதிர்வு கூறல்!! கடந்த வரு­டம் யாழ்ப்பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் கோண்­டா­வி­லில் இடம்­பெற்ற ஒரு நிகழ்­வில் வைத்­துத் தெரி­வித்த முக்­கிய விட­யம் இன்று முழுக்க முழுக்க யதார்த்­த­மாகி வரு­வ­து­போன்று தென்­ப­டு­கி­றது. வட­மா­கா­ணத்­தின் உன்­ன­த­மான யாழ்ப்பாண பல்­க­லைக்­க­ழ­கத்தை நாம் சரி­யா­கப் பயன்­ப­டுத்த முடி­யாது போனால், தமிழ் மாண­வர்­கள் இரண்­டா­வது பட­ச­மா­கவே தொகை­யி­டப்­ப­டு­வார்­கள். இதுவே தற்­போது சாத்­தி­ய­மா­கப் போகி­றது. இப்­பொ­ழுதே அதன் சுவாத்­தி­யத்தை நாம் அனு­ப­விக்­கின்­றோம். தூர நோக்­கோடு எடுத்­தி­யம்­பி­ய­வர்­க­ளில் ஒரு­வர் ஒரு பேரா­சி­ரி­யர்! மற்­ற­வர் நாடா­ளு­மன…

  10. சிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரவில்லை – சரத் பொன்சேகா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தாம் மன்னிப்புக் கோரவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக சரத் பொன்சேகா கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த சரத் பொன்சேகா மற்றும் ஐதேக அமைச்சர்கள், அவரிடம் மன்னிப்புக் கோரியதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, “அண்மைய அரசியல் விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் முன்வைத்திருந்த திட்டம் ஒன்ற…

  11. நீதிபதிகளை நியமிக்காமல் இழுத்தடிக்கிறார் சிறிலங்கா அதிபர் – அஜித் பெரேரா மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சட்டம் நினைவேற்றப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போதியளவு நீதிபதிகளை நியமிக்க தவறி விட்டார் என்று, அமைச்சர் அஜித் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், “வழக்குகள் தாமதிக்கப்படுவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என்றும் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தாமதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு, மேலதிக உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்து சிறிலங்கா அதிபர் தமது கடமை மற்றும் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். …

  12. மூன்று எரிவாயு மின் திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி மூன்று திரவ இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. தேசிய பொருளாதாரச் சபையின் பரிந்துரைக்கமைய, அம்பாந்தோட்டையில், மூன்று இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைக்கப்படுவதற்கு அனுமதி கோரப்பட்டது. தலா 400 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின்திட்டங்கள் சீனா மற்றும் இந்தியாவின் உதவியுடனும், 500 மெகா வாட் திறன் கொண்ட மற்றொரு மின் திட்டம் ஜப்பானிய அரசின் உதவியுடனும் நிறுவப்படவுள்ளது. http://www.puthinappalakai.net/2018/05/11/news/30814

  13. டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிவு – 160 ரூபாவைத் தொடுகிறது அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. சிறிலங்கா மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி, 159.26 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது கடந்த செவ்வாய்க்கிழமை இருந்த நிலையை விட 30 சதம் குறைவாகும். இதற்கு முன்னதாக ஏப்ரல் 25ஆம் நாள், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி, 159.04 ரூபாவாக காணப்பட்டது. அதற்குப் பின்னர், சற்று வலுவடைந்திருந்த சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, தற்போது 159.26 ரூபாவாக சரிந்துள்ளது. http://w…

  14. இனப்பிரச்சினைக்கான தீர்வை இனியும் இழுத்தடிக்கக் கூடாது!! இனப்பிரச்சினைக்கான தீர்வை இனியும் இழுத்தடிக்கக் கூடாது!! புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­கள் தொடர்­பில் அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறிசே­ன­வின் கொள்கை விளக்க உரை­யில் ஒரு வச­ன­மே­னும் குறிப்­பி­டப்­ப­டாமை பெரும் ஏமாற் றத்­தை­ய­ளிக்­கின்­றது எனத் தெரி­வித்த சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரும் அமைச்­ச­ரு மான ரவூப் ஹக்­கீம், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை இனி­யும் இழுத…

  15. 4 அமைச்­சர்­கள் மீதும்- மேலும் விசா­ரணை!! 4 அமைச்­சர்­கள் மீதும்- மேலும் விசா­ரணை!! பதவி நீக்­கம் செய்­யப்­பட்ட வடக்­கு ­மா­காண முன்­னாள் அமைச்­சர்­கள் 4 பேர் மீதும் உள்ள குற்­றச்­சாட்­டுக்­களை சட்­ட ­ரீ­தி­யாக விசா­ரித்து, தண்­டனை வழங்­கு­வ­தற்­காக மேலும் ஒரு விசா­ரணை நடத்த வேண்­டும். அதற்­காக தலை­மைச் செய­லா­ள­ரி­டம் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ ளது என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். …

  16. அடுத்த கட்டம் என்ன ? தமிழர்­க­ளின் வாக்­கு­க­ளால் ஆட்­சி பீட­மே­றிய ‘நல்­லாட்சி’ அர­சின் தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனது கொள்கை விளக்க உரை­யில் தமி­ழர்­க­ளின் தலை­யில் மிள­காய் அரைத்து விட்­டுப் போயி­ருக்­கின்­றார். சிறி­ லங்­காத் தீவு சுதந்­தி­ர­ம­டைந்­தது முதல் சந்­தித்து வரும் இனப் பிரச்­சி­னைக்கு, தீர்வு காண்­ப­தற்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­காத – தொட்­டும் பார்க்­காத அரச தலை­வ­ரின் கொள்கை விளக்க உரை, முழுக்க முழுக்கச் சிங்­கள தேசத்­தின் நலன்­சார்ந்து, பொரு­ளா­தார சிக்­கல்­க­ளுக்கு விடை தேடும் வகை­யில் அமைந்­தி­ருந்­தது. நீண்ட – நெடிய போராட்­டத்­தால் பல லட்­சம் உயிர்­க­ளைப் பறி­கொ­டுத்து, இன்­ன­மும் சுதந்­தி­ரக் காற்­றைச் சுவா­சிக்க …

  17. காணி சுவீகரிப்பு தொடர்பாக கட்டுவனில் சுவரொட்டி!! காணி சுவீகரிப்பு தொடர்பாக கட்டுவனில் சுவரொட்டி!! பலாலி வானூர்தி நிலையத்துக்கான காணி சுவீகரிப்பு தொடர்பான தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது. பலாலி வானூர்தி நிலையத்துக்கான காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 38(A) யின் கீழ் 07.08.1987 ஆம் திகதி பிரிசுரிக்கப்பட்ட 465/14 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கு அமைவாக பலாலி வானூர்தி நிலைய விஸ்தரிப்புக்க…

  18. வடக்கு, கிழக்கில் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம்!! வடக்கு, கிழக்கில் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம்!! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இலங்கை இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது எனத் தெரியவருகிறது. அதனடிப்படையில், போரால் பாதிக்கப்பட்ட தனியார் இடங்களை விடுவிக்கும் போது அவற்றில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் வேறு இடத்தில் மீள அமைக்கப…

  19. முள்ளிவாய்க்கால்: மே 18-ஐ துக்க தினமாக கடைபிடிக்க இலங்கை வட மாகாண சபை தீர்மானம் பகிர்க முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மே 18 ஆம் தேதியை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் ப…

  20. ‘மே 18 துக்க நாளாக அனுஸ்டிக்கவும்’ -எஸ்.நிதர்ஷன் “இலங்கையில் இடம்பெற்ற மிகப் பெரும் தமிழின படுகொலை நாளான மே மாதம் 18 ஆம் திகதியை தேசிய துக்க நாளாக வடக்கு மாகாண சபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அந்நாளை அனைத்து மக்களும் அமைதியாக உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும்” என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்; ஊடக அமையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மே மாதம் 18 ஆம் திகதியை வடக்கு மாகாண சபை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. எனவே அன்றைய நாளில் அனைத்து தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும். இதற்க…

  21. கோதபாய ராஜபக்ஸவை இலங்கையில் கைது செய்ய முடியாது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கோதபாய ராஜபக்ஸவை இலங்கையில் வைத்து கைது செய்ய முடியாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர், தனக்கும் அது தெரியவில்லை எனினும் கோதபாயவை இலங்கையில் கைது செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் இதைப் பற்றி கேட்கும் போதுதான் தன்னை சிலர் திட்டுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த அமைச்சரவைக் காலத்திலும் கோதபாயவின் குற்றச் செயல்கள் தொடர்பில் கர…

  22. ஆயுதங்களால் வெற்றிகொண்ட “பனங்காட்டை” புத்திக்கூர்மையால் தமதாக்கும்படையினர்… ‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ எனும் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இராணுவத்தினரின் கண்டுபிடிப்புக்களை வடக்கு மக்களுக்கு பயன்பெற வைக்கும் நோக்கில் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்தக் கண்காட்சி இன்றும் நாளையும் நடாத்தப்படுகின்றது. யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்துள்ளார். இளைஞர்,யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் …

  23. இர­ணை­தீவில் பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் கடற்­ப­டை­யினர் வச­மில்லை எனினும் நில அளவை செய்­யப்­படும் என்­கிறார் காணி அமைச்சர் (எம்.எம். மின்ஹாஜ், ஆர்.யசி) இர­ணை­தீவு பகு­தியில் 6 ஏக்கர் காணியை கடற்­ப­டை­யினர் உப­யோகம் செய்­கின்­றனர். இந்த நிலப்­ப­ரப்பில் பொது மக்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் எதுவும் கிடை­யாது. எனினும் இங்கு பொது மக்­க­களின் காணிகள் உள்­ளதா என்­பது குறித்து நில அளவை செய்­யு­மாறு மாவட்ட செய­லா­ள­ருக்கு ஆலோ­சனை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அள­வையின் போது பொது மக்­களின் காணிகள் இருக்கும் பட்­சத்தில் இடம்­பெ­யர்ந்­த­வர்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்­வது குறித்து பர­சீ­லனை செய்­யப்­படும் என அர­சாங்கம் நேற்று…

  24. பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு கவலையளிக்கிறது – முதலமைச்சர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று (புதன்கிழமை) கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்புவிடுத்திருந்தார். எனினும் முதலமைச்சரின் அழைப்பை ஏற்பதில்லை எனவும் கலந்துரையாடலில் பங்கேற்பதில்லை எனவும் யாழ்ப்பாண பல்…

    • 3 replies
    • 863 views
  25. பாட­சாலை வர­லாற்றுப் பாட நூல்­களில் மறைக்­கப்­பட்ட தமிழர் வர­லாறு பாட­சாலை மாணவ, மாண­வி­ய­ருக்­கான வர­லாற்றுப் பாடம் முழு­மை­யற்­ற­தாக, நாட்டின் பண்­டைய உண்மை வர­லா­றுகள் மறைக்­கப்­பட்­ட­தாக, திரி­வு­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பாகப் பல­முறை சுட்­டிக்­காட்­டி­யதன் விளை­வாக பாரா­ளு­மன்­றத்தில் யாழ்ப்­பாண மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா கல்­வி­ய­மைச்­ச­ரிடம் இது தொடர்பில் வினா எழுப்­பி­யி­ருந்தார். அதைத் தொடர்ந்து கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்ணன் தலை­மையில் பல கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றன. அவற்றில் கல்வி அமைச்சு அதி­கா­ரிகள், தேசிய கல்வி நிறு­வக உயர் அதி­கா­ரிகள், கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.