Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்குப் பயணம் சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு, ஒன்பது நாட்கள் பயணமாக இன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கடந்த வியாழக்கிழமை கொழும்பில் உள்ள ஹில்டன் விடுதியில், சீனத் தூதுவர் செங் ஷியுவான், வரவேற்பு உபசாரம் ஒன்றை அளித்தார். அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரைக் கொண்ட இந்தக் குழுவினர், சீனாவின் பீஜிங் நகருக்கும், குவாங்டோங் மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். கன்ரன், சென்ஷென், ஹுய்சோ நகரங்களுக்கும், துறைமுகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும், இவர்கள்…

  2. கடற்படையின் உழவு இயந்திரம் மோதி முன்னாள் போராளி பலி! இலங்கை கடற்படைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் மோதியதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையரான 42 வயதுடைய அடைக்கலம் கொன்சலஸ் என்ற முன்னாள் போராராளியே இவ்வாறு பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியபோது பூநகரி சங்குப்பிட்டியில் எந்தவிதமான சமிக்ஞைகளும் இன்றி நின்ற கடற்படையின் உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட கம்பியில் மோதி, தடுமாறிய நில…

  3. சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.! சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58 ஆம் நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். எனவே பொதுமக்கள் சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்கள் கைவசமிருந்தால் உடனடியாக அருகிலுள்ள வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும். …

  4. கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கை (எம்.எம்.மின்ஹாஜ்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கக் கூடிய பலம் எம்மிடம் உள்ளது. இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பர் என கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு குறித்து எமக்கு எந்தவொரு அச்சமும் இல்லை. எமது வெற்றியாகும் உறுதியாகும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வினவிய ப…

  5. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்ல அனுமதியோம் ஜெனிவாவிலிருந்து நாடு திரும்பிய பைசர் முஸ்தபா தெரிவிப்பு (எம்.மனோசித்ரா) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையின் விடயங்களை கொண்டு செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். சர்வதேசமோ அல்லது வெளித்தரப்பினரோ எமது நாட்டின் நீதித்துறைக்குள் பிரவே சிக்க முடியாது. இவ்விடயம் இலங்கை அரசியல் யாப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது அனைவரும் அறிந்த விடமாகும். எனவே உள்நாட்டு நீதித்துறையில் சர்வதேசத்தின் தலையீட்டினை இலங்கை ஒரு போதும் அனுமதிக்காது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின்…

  6. ஆட்­சியை வீழ்த்தும் இர­க­சிய சதித்­திட்டம் அரங்­கே­று­கின்­றது அர­சாங்­கத்தை பாது­காக்க வேண்­டிய கட்­டா­யத்தில் உள்ளோம் என்­கிறார் சம்­பிக்க (ஆர்.யசி) ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து ஆட்­சி­யினை வீழ்த்தும் பாரிய சதித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் பின்­ன­ணியில் தனிப்­பட்ட நோக்­கங்கள் உள்­ளன என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு மஹிந்த ராஜபக் ஷவை ஆத­ரிக்கும் ஒரு குழு­வினர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்குள் செயற்­பட்டு வரு­கின்­றனர் எனவும் அவர் குறிப்­பிட்டார். பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை…

  7. அட்டன்–டிக்­கோயா நகர சபைக்­கான தலைவர் தெரிவில் : பெரும் குழப்பம் சீட்­டி­ழுப்பின் மூலம் இ.தொ.கா.வின் பாலச்­சந்­திரன் தலை­வ­ராக தெரிவு (மஸ்­கெ­லியா நிருபர்) அட்டன் – டிக்­கோயா நகர சபையின் புதிய தலைவர் மற்றும் உப­த­லைவர் தெரிவில் நேற்று பெரும் களே­பர நிலை ஏற்­பட்­டது. ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தரப்­பு­க­ளுக்கு இடையில் எழுந்த கடு­மை­யான வாய்த்­தர்க்கத்தில் கூச்சல், குழப்பம் ஏற்­பட்­ட­துடன் இறு­தியில் பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்டு பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந் ­தன. எவ்­வா­றெ­னினும் தலைவர் பத­விக்­கான தெரி வில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பில் ஐக்­கிய தேசி யக்கட்சி மற…

  8. வல்வெட்டித்துறை நகர சபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்கிறது? வல்வெட்டித்துறை நகர சபையிலும் எந்தக் கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ பெரும்பான்மையைப் பெறாத நிலையில், நகர சபையின் தலைவர், உப தலைவரைத் தெரிவுசெய்வதற்கான கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆட்சியமைப்பதற்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஒரு மாதத்துக்கு முதல் ஆரம்பித்த நிலையில் இச்செய்தி எழுதும் வரையிலும் தீர்க்கமான முடிவேதுமில்லாது தொடர்ந்த வண்ணமிருந்தன. இதில், 17 உறுப்பினர்களைக் கொண்ட நகர சபையில் ஏழு உறுப்பினர்களை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆட்சியமைப்பதற்கு மேலும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு …

  9. உதயங்க வீரதுங்க டுபாயில் மீண்டும் கைது – கொழும்புக்கு கொண்டு வருவதற்கு முயற்சி ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் நேற்றுக்காலை அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்தியாலங்கார இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளனர். இதையடுத்து, உதயங்க வீரதுங்கவை சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைப்பது தொடர்பாக, டுபாய் அதிகாரிகளுடன் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு …

  10. கண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞன் மரணத்தில் மர்மம்? கண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தெல்தெனிய அம்பாலை பிரதேசத்தைச் சேர்ந்த குமாரசிங்க எனும் இளைஞர், கடந்த பெப்ரவரி 22ம் திகதி குடிபோதையில் இருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட அவரது மரணத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரம் காரணமாக சுமார் 900 கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. …

    • 2 replies
    • 737 views
  11. வடக்கு, தெற்கு வித்­தி­யா­சம் அண்­மை­யில் நடந்து முடிந்த உள்ளூ­ராட்சி சபைத் தேர்­தலை அடுத்து, புதிய அர­ச­மைப்பு தொடர்­பான முயற்­சி­கள் அனைத்­தும் கிடப்புக்குப் போய்­விட்­டன. அது தொடர்­பான வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டம் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றியோ, புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களோ எது­வும் நடை­பெ­று­வ­தாக இல்லை. புதிய அர­ச­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது, முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச அணி அத­னைக் கடு­மை­யாக எதிர்த்­தது. அது மட்­டு­மல்ல அந்த அறிக்­கையை உரு­வாக்­கு­வ­தில் முழு­மை­யான பங்­க­ளிப்­பைச் செய்த சிறி­லங்கா சுதந்­தி­ரக் க…

  12. இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்த 2 ஆவது ரோந்துக்கப்பல் இலங்கை வந்தது (ஆர்.யசி) இலங்கை கடற்படையின் கடலோர பாதுகாப்பு பணித் தேவைக்காக கோவா (Shipyard Limited (GSL) இல் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாம் கடல்வழி ரோந்துக்கப்பல் (AOPV) இன்றுகாலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இவ்வாறு வந்தடைந்த ரோந்துக்கப்பலை இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். இந்த கரையோர பாதுகாப்பு கடற்படையின் சமீபத்திய கப்பல், தளபதி சமன் பெரேரா மற்றும் 18 அதிகாரிகளும் 100 கடற்படை உறுப்பினர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, கடற்படைத் தளபதிகளின் தலைமை பணிப்ப…

  13. தெகிவளை-கல்கிசையைக் கைப்பற்றி தங்காலையில் ஏமாந்த மகிந்த அணி ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய தெகிவளை-கல்கிசை மாநகரசபையின் முதல்வர் பதவியை சிறிலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ள அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான தங்காலை நகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி முதல்வர் பதவியைப் பிடித்துள்ளது. தெகிவளை-கல்கிசை மாநகரசபையின் முதல்வர் பதவிக்காக இன்று காலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சிறிலங்கா பொதுஜன முன்னணி நிறுத்திய நாவலகே ஸ்ரான்லி டயஸ் வெற்றி பெற்றார். அவருக்கு 23 வாக்குகள் கிடைத்தன. ஐதேக நிறுத்திய முதல்வர் வேட்பாளர் சுனேத்ரா ரணசிங்கவுக்கு 21 வாக்குகளே கிடைத்தன. அதேவேளை பிரதி முதல்வர் பதவிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்…

  14. விற்பனை செய்யப்பட்ட மண்ணிலிருந்து மனித எலும்புத்துண்டுகள் மீட்பு ? மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்கும் பணி இடம் பெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த கட்டிடம் உடைக்கப்பட்டு தோண்டப்பட்டுவரும் மண் மன்னாரில் உள…

  15. சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரும் பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் (எம்.எப்.எம்.பஸீர்) டுபாயில் இருந்தவாறு இலங்கையில் பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் வலையமைப்பை வழி நடாத்துவதாக கூறபப்டும் பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந் நிலையில் இந்த அரசியல் புகலிட கோரிக்கை தொடர்பில் கடந்த ஒரு மாதகாலமாக மதூஷ், தேவையான ஆவணங்களை தயார் செய்து குறிப்பிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்பு புலனயவுத் துறை விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தனது சகோதரன் மர்மமான முறையில் க…

  16. முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்!! யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதி, முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் கடைபெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளது. …

  17. ஆளும் கட்சியாக இல்லாத போதிலும் முதல்வர் ஊடாக மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுப்போம்… நாங்கள் ஆளும் கட்சியாக இல்லாத போதிலும் , முதல்வர் ஊடாக மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் மு. ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் இன்றைய அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவுக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எதிர்வரும் காலங்களில் எமது கட்சி கோட்பாட்டின் பிரகாரம் மக்கள் நலன் சார்ந்த சகல விடயங்களுக்கும் நாங்கள் பூரண ஆதரவு வழங்கி மக்களுக்கு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் நாங்கள் ஆளும் கட்சி…

  18. சாவகச்சேரி மேயர் பதவிக்கு மும்முனைப் போட்டி!! சாவகச்சேரி மேயர் பதவிக்கு மும்முனைப் போட்டி!! சாவகச்சேரி நகர சபைக்கான மேயர் தெரிவு இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு மும்முனைப் போட்டி நிலவும் என்று தெரியவந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும்பான்மை பெற்றுள்ள அந்தச் சபையின் மேயர் பதவிப் போட்டிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈ.பி.டி.பியும் போட்டியிடவுள்ளன. அதனால் அங்கு மும்முனைப் போட்டி நடக்கும் என்று தெரிகின்றது. http://newuthayan.com/stor…

  19. கிளிநொச்சியில் பயங்கரவாத அழிவுச் சின்னம் என பேணப்பட்ட நீர்த்தாங்கி அகற்றப்படுகிறது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் நகர மத்தியில் யுத்தகாலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்தாங்கி உடைக்கப்பட்டு வருகிறது. கடந்த அரசின் காலத்தில் குறித்த நீர்த்தாங்கி பயங்கரவாத அழிவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது அகற்றப்பட்டு வருகிறது. நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான காணியில் வீழ்த்தப்பட்ட நீh்த்தாங்கி யுத்தகால சின்னமாக அரசினால் பேணப்பட்டு வந்த நிலையில் தறபோது அது அகற்றப்படுகிறது. குறித்த காணி ஜந்து மாதங்களுக்கு முன் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு கையளிக்கப்பட்ட நிலையில் …

  20. “சிங்களே”யும், “மஹாசோன் பலகாய” வும் இணைகின்றன… கடும் சிங்கள பௌத்த இனவாத கொள்கைகளை உடைய சிங்களே மற்றும் மஹாசோன் பலகாய ஆகியன இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளன. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் மஹாசோன் பலகாய அமைப்பிற்கு நேரடித் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மஹாசோன் பலகாயவும் சிங்களே இயக்கமும் கூட்டாக இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளன. தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ளும் நோக்கில் கட்சி பதிவொன்றுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம…

  21. யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்க ப்பட்டமை காரணமாக, இலங்கையின் ஜனாதிபதியால், யாழ்ப்பாணத்துக்குச் சென்று உரையாற்ற முடிகிறது எனத் தெரிவித்துள்ள, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் தலைவர் கோட்டாபய ராஜபக்‌ஷ, “இன்று அது (யாழ்ப்பாணம்), சுதந்திரமானதொரு நாடு” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு, நேற்று (25) அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, கொலைகளைப் புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்படுவது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது பதிலளித்த அவர், “தவறெதனையும் நான் செய்யவில்லை என எனக்குத் தெரியும்; சரியானதையே நான் …

  22. கூட்டமைப்பின் ஆதரவைப்பெற திண்டாடும் அரசியல் கட்சிகள் (ரொபட் அன்டனி) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரேர ணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்குகளைப் பெறும் தீவிர முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. விசேடமாக அரசியல் கட்சிக ளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இந் நாட்களில் அடிக்கடி இடம் பெற்று வருவதுடன், பேச்சுவார்த்தைகள் தீர்க்கமானதாக அமைந்திருக் கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியானது பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவும் வாக்குகளைப் பெறும் நோக்கில் அரசியல் காய் நகர்த்தி வ…

    • 2 replies
    • 445 views
  23. ஆனந்தசுதாகரனை விடுவிக்க வேண்டி அஸ்கிரியபீட தேரரிடம் மனு கையளிப்பு! அரசியல் கைதியானஆனந்த சுதாகரனை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிவன் பவுண்டேசன் நிறுவுநர் வேலாயுதம் கணேஸ்வரன் கண்டி அஸ்கிரியபீட மகாநாயக்க தேரரிடம் நேற்றையதினம்(25-04-2018) மனு ஒன்றை கையளித்துள்ளார். சிறைக்கைதியான ஆனந்த சுதாகரனனின் மனைவி நோய்வாய்ப்பட்ட நிலையில் அண்மையில் மரணமடைந்தார். இதனால் அவருடைய இரண்டு பிள்ளைகளும் தாய் இல்லாமலும் தந்தை இருந்தும் இல்லாத நிலையில் காணப்படுகின்றனா். இந்த நிலையில் அவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு அவா்களின் தந்தையின் விடுதலை அவசியாமாகவுள்ள நிலையில் ஆனந்த சுதாகரனை …

  24. தமிழை சீரழிக்கும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை – சீ.வீ I இலகு தமிழ்ப் பாவனை என்ற பெயரில் தமிழ் மொழியை சீரழிக்கும் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய இளைய தலைமுறையினரில…

  25. சத்தியபிரமாண நிகழ்வில் தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட நபர் (படங்கள்) இலங்கை கம்னியூஸ்ட் கட்சியில் போட்டியிட்டதற்கு தான் வெட்கப்படுவதாக தெரிவித்து நபர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை கம்னியூஸ்ட் கட்சி போட்டியிட்டது. இந்த கட்சியில் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு போனஸ் பட்டியலில் இருந்த வேட்பாளர் ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் ஏ.பி. கணபதிபிள்ளை முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்யவிருந்த நிகழ்வில் அதே கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் இடையூறு விளைவித்துள்ளனர். இந்த பதவி பிரமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.