Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் மனித உரிமை நிகழ்ச்சி நிரலுக்குள் சிறிலங்கா 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மற்றும் குழுவினர், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர். இதன் போதே, 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என…

  2. மகாசோன் படையணித் தலைவரைச் சந்தித்தார் ஞானசார தேரர் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளைத் தூண்டி விட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மகாசோன் படையணியின் தலைவர் மற்றும், செயற்பாட்டாளர்களை பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தேமம ஞானசார தேரர் சந்தித்துள்ளார். இன வன்முறைகளைத் தூண்டிய மகாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்டவர்கள் அனுராதபுர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் இருந்து திரும்பியவுடன், ஞானசார தேரர் அனுராதபுர சிறைக்குச் சென்று இவர்களைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். ஞானசார தேரரும், கண்டிக்குச் சென்ற பின்னரே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை…

  3. வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்; மைத்திரியின் அதிரடி நடிவடிக்கை வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நிஜமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படும் ஆளுநரை உடனடியாக இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில் முதன் முறையாக வடக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை நிஜமிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேல் மாகாண ஆளுநரான கே.சி. லோகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநராக நிஜமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்…

  4. நாளை திறக்கப்படுகிறது மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தை, 2016ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது. அதன்பின்னர், சிவில் விமானப் போக்குவரத்துக்கான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக 1400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் முனையம் நாளை பயணிகளின…

  5. அரச அதிபருக்கு நேரமில்லையோ? முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் முடக்கம்! கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிள் சிலருக்காக ஒதுக்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாது உள்ளன. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த உதவிகளை வழங்கும் ஏற்பாடு இடம்பெற்றது. ஒவ்வொரு முன்னாள் போராளிக்கும் 40 ஆயிரம் ரூபா வீதம் இந்த உதவியை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. எனினும் அரச அதிபருக்கு நேரமின்மை காரணமாக இந்த உதவி வழங்கப்படாது உள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் இந்த உதவிகள் வழங்க முற்பட்ட வேளையில் தேர்தல் காரணமாக உதவி வழங்கும் நிகழ்வு பிற்போட்டப்பட்…

  6. பண்ணை கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படுவதில்லை யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாக் கடற்கரை நகர அபிவிருத்தி அதிகார சபையால் 18 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது. இங்கு தினமும் குடாநாட்டிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தரும் பல நூற்றுக்கணக்கானோர் தமது பொழுதைக்கழிக்கின்றனர். எனினும் பண்ணைக் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படாமையால், அவற்றை சுற்றலாப் பயணிகள் …

  7. அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல : பந்துல சூளுரை (இராஜதுரை ஹஷான் ) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இனத்தின் அபிலாசைகளை அறிந்து செயற்பட வேண்டும். பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கில் கடந்த மூன்று வருடகாலமாக நிலையான அபிவிருத்திகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன நாட்டை பிரித்து இனங்களுக்கிடையில் மீண்டும் விரோதங்களை ஏற்படுத்தும் அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்திற்கு மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியத்துவம் கொடுக்காமல் தமது இனமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் கவனம் செலுத்துவதே அம்மக்களுக்கான அரசி…

  8. அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம்.! (ஆர்.யசி) நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்து வருகின்றமை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். எனினும் தீர்வுகள் குறித்து இணைந்து பயணிக்கும் செயற்பாட்டில் அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எஞ்சியுள்ள காலத்திலும் பொறுப்புக்களை நிறைவேற்றுவோம் எனவும் அரச தரப்பு கூறுகின்றது. நல்லிணக்கத்தை நடைமுறைபடுத்தும் செயற்பாட்டில் அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கண்டித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தை கடும…

  9. “பிரபாகரன் புத்திசாலி அல்ல” – என்கிறார் கோத்தா விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தான் கருதியதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவரிடம், போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுக்கள் ஏதாவது இடம்பெற்றதா, புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா? எனறு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அது நேரத்தை வீணடிக்கின்ற செயல் என்று இப்போதும் கருதுகிறேன். பிரபாகரனை ஒ…

    • 2 replies
    • 635 views
  10. ஜனாதிபதியை அரசியல் அனாதையாக்கும் நோக்கிலேயே நம்பிக்கையில்லா தீர்மானம் வருகிறது… ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியாக அனாதையாக்கும் நோக்கிலேயெ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், ஜனாதிபதியை மலினப்படுத்தும் நோக்கிலானது என சுட்டிக்காட்டியுள்ளது. ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த கட்டமாக ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்று கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்து அதன் ஊடாக ஜனாதிபதியை நிர்க்கதி நிலைக்குத் தள்ளும் வ…

  11. ஜனாதிபதி தேர்தலின் போது நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக மஹிந்த அறிவிப்பு… அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்காக நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்டதனைப் போன்றே தாம் ஜனாதிபதி தேர்தலிலும் நேரடியாக களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்ய உ…

  12. கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாட்­டில் எந்­த­வொரு மாற்­ற­மும் இல்லை!! கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாட்­டில் எந்­த­வொரு மாற்­ற­மும் இல்லை!! கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்­சி­கள் அந்­தந்த சபை­க­ளில் ஆட்சி அமைக்­க­வேண்­டும். ஆட்சி அமைக்­கும் கட்­சி­களே, மேயர், பிரதி மேயர், தவி­சா­ளர், உப தவி­சா­ளர்­க­ளைத் தீர்­மா­னிக்­க­வேண்­டும். அதற்கு ஏனைய கட்­சி­கள் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின…

  13. ரஷ்­யா­வுடன் சர்ச்­சைக்­கு­ரிய பாது­காப்பு ஒப்­பந்தம் குறித்துப் பேச்சு லியோ நிரோஷ தர்ஷன் ரஷ்ய உற்­பத்­தி­யான ஆழ்­கடல் போர்க் கப்­பலை கொள்­வ­னவு செய்யும் நோக்­கி­லான சர்ச்­சைக்­கு­ரிய பாது­காப்பு ஒப்­பந்தம் தொடர்­பி­லான பேச்சுவார்த்­தை­களை அர­சாங்கம் மீள ஆரம்­பித்­துள்­ளது. இலங்கை கடற்­ப­டைக்கு 158.5 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான ஜிபார்ட் 5.1 ரக ஆழ்­கடல் ரோந்துக் கப்பல் ஒன்றைக் கொள்­வ­னவு செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது. இந்தக் கொள்­வ­னவு தொடர்­பான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ர­வையில் கடந்த ஆண்டு சமர்ப்­பித்­தி­ருந்தார். இதற்கு அமை­வாக ரஷ்யா வழ…

  14. ஐ.நா.­ தொ­டர்­களில் பாகிஸ்தான் வழங்கும் உத­வி­க­ளுக்கு மைத்­திரி நன்றி தெரி­விப்பு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை கூட்­டத்­தொ­டர்­களின் போது பாகிஸ்தான் இலங்­கைக்கு வழங்­கி­வரும் ஒத்­து­ழைப்­புக்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாராட்­டி­யுள்ளார். பாகிஸ்­தா­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், பாகிஸ்­தா­னிய ஜனா­தி­பதி மம்னூன் ஹுசை­னுக்கும் இடை­யி­லான உத்­தி­யோ­க­பூர்வ சந்­திப்பு நேற்று சனிக்­கி­ழமை முற்­பகல் இடம்­பெற்­றது. இச்­சந்­திப்­பின்­போதே ஜனா­தி­பதி இப் பாராட்­டினைத் தெரி­வித்­த­தாக ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில்…

  15. இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்தும் பாகிஸ்தான் லியோ நிரோஷ தர்ஷன் இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு மற்றும் பொரு­ளா­தார இரா­ஜ­தந்­திர உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வது குறித்து பாகிஸ்தான் பிர­தமர் ஷஹீத் கான் அப்­பாஸி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பரந்­த­ளவில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இந்தப் பேச்­சுக்­களில் பிராந்­திய பொரு­ளா­தார மற்றும் பாது­காப்பு சவால்­களை எதிர்­கொள்­வ­தற்­கான இறுக்­க­மான உற­வு­களைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்­பதே இரு தரப்பு உற­வு­களின் முக்­கிய நோக்­க­மாக கருத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது . பாகிஸ்­தானின் 78ஆவது குடி­ய­ரசு தினத்தை முன்­னிட்டு இடம்­பெறும் நிகழ்­வு­களில் க…

  16. மாகாண சபைத்தேர்தல் செப்­டெம்­பரில்? விகி­தா­சார முறைக்கே கட்­சிகள் ஆத­ரவு எம்.சி.நஜி­முதீன் மாகாண சபைத்­தேர்­தலை எதிர்­வரும் செப்­டெம்பர் மாத­ம­ளவில் நடத்­து­வது குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்தி வரு­கி­றது. இதே­வேளை அத்­தேர்­தலை பழைய விகி­தா­சார முறையில் நடத்­து­வ­தற்கு அநே­க­மான கட்­சிகள் விருப்பம் தெரி­வித்து வரு­கின்­றன. கிழக்கு, வட­மத்­ திய மற்றும் சப்­ர­க­முவ மாகாண சபை­களின் பதவிக் காலம் நிறை­வ­டைந்­துள்­ளன. இவ்­வா­றான நிலையில் அம்­மா­காண சபை­களின் நிர்­வாகம் மாகாண ஆளு­நர்­க­ளிடம் பொறுப்­பாக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை இன்னும் சில மாகாண சபை­களின் பத­விக்­காலம் இவ்­வ­ருடம் நிறை­வ­டை­ய­வுள்­ளது. எனினும் சகல மாகாண சபை­க­ளுக்­கு­மா…

  17. இன்றைய அரச தொழில் வாய்ப்புக்கள்.! Published by RasmilaD on 2018-03-25 09:42:21 _ பதவி: முகா­மை­யாளர் (ஆளணி, நிர்­வாகம், சொத்­துக்கள் மற்றும் சேவைகள், பாது­காப்பு) நிறு­வனம்: கூட்­டு­றவு மொத்த விற்­பனை நிறு­வனம் விண்­ணப்ப இறு­திநாள்: 12.04.2018 _ பதவி: உள்­ளகக் கணக்­காய்­வாளர் நிறு­வனம்: உயர்­கல்வி மற்றும் விரை­வுப்­பாதை அமைச்சு விண்­ணப்ப இறு­திநாள்: 06.04.2018 _ பத­விகள்: பங்­களா கீப்பர், உதவி பங்­களா கீப்பர், பட­கோட்டி, இயந்­திர இயக்­குநர், கள உத­வி­யாளர் நிறு­வனம்: வன­…

  18. அரசியல் கட்சியாகிறது மகாசோன் படையணி அண்மையில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்ட சிங்களக் கடும்போக்குவாத அமைப்பான, மகாசோன் படையணி, அரசியல் கட்சியாக மாறவுள்ளது. தமது கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் கையளித்திருப்பதாக, மகாசோன் படையணியின் பேச்சாளர் ஒருவர் அனுராதபுரத்தில் தெரிவித்தார். ”எல்லா இனங்களுக்கும் அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் சிங்களவர்களுக்கு என்று எந்த அரசியல் கட்சிகளும் இல்லை. எனவே, சிங்களவர்களுக்கான புதிய அரசியல் கட்சியை, மகாசோன் படையணி மற்றும் ஏனைய சில அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கவுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரா…

  19. சிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, ரஷ்யாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராடர்களினால் கட்டுப்படுத்தப்படும், விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதி ஒன்றை விமானப்படைக்கு கொள்வனவு செய்வது குறித்தே, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி வருகிறது. S 300 மற்றும் Buk 27 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இதற்கான பரிசீலனையில் உள்ளன. இந்த ஏவுகணைகளை, விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். அத்துடன், இவை சில வகை வழிகாட்டல் (cruise) மற்றும…

  20. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் உட்பட நால்வர் கைது பொல்கஹாவெல பிரதேசத்தில் 50 லட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் அங்கவீனமுற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என விசேட அதிரடிப்படையினர் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அவர் கூறியுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.tamilwin.com/security/01/177907?ref=home-top-trending

    • 1 reply
    • 288 views
  21. மக்கள் நலச் சிந்தனையில் அயர்ச்சியற்ற உணர்திறன் அவசியம் மக்கள் நலச் சிந்தனையில் அயர்ச்சியற்ற உணர்திறன் அவசியம் ஆளுகை தொடர்­பான எண்­ணக்­க­ரு­வாக, பொருண்­மை­யு­டைய கரு­வி­யாகப் பேசப்­ப­டு­கின்ற ‘நல்­லாட்சி’ எனும் பதம் மக்களுக்குப் புதி­தா­ன­தொன் றல்ல.அது நாக­ரி­கம் என்ற பொது­மைக்கு உட்­பட்ட பழ­மைச் சிறப்­பு­டை­யது என்று சொல்­லப்­ப­டு­கி­றது. இதற்­கென தனித்­து­வ­மான வரை­யறை எது­வும் குறிப்­பி­டப்­ப­டாத போதி­லும்,உல­க…

  22. சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்துப் போராட்டம் சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்துப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் தமிழர் சமூக முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ் இளைஞர்கள் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கையெழுத்துப்போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் கருணை மனுக்களில் கையெழுத்து …

  23. நல்லிணக்கத்தை குழப்புவது வெளிநாட்டு சக்திகளே – மகிந்த குற்றச்சாட்டு சிறிலங்காவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுமே காரணம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் அருண் ஜனார்த்தனனுக்கு அளித்துள்ள சிறப்பு செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தவறான புரிந்துணர்வினாலேயே, 1950களில் சிறிலங்காவில் பிரச்சினைகள் தோன்றின. அதற்கு முன்னர் பிரச்சினைகள் இருக்கவில்லை. வெற்றிபெறுவதற்கும், மக்களின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இனவாத அரசியலை எளிதான வழியாக நோக்கிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளா…

  24. ஐ.தே.கவுடன் இணைந்து பயணிப்பது கடினமானது ஐ.தே.கவுடன் இணைந்து பயணிப்பது கடினமானது அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு தமக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமான விடயம். இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்த…

    • 2 replies
    • 435 views
  25. சுதாகரின் பிள்ளைகள் வட மாகாண ஆளுனரை சந்தித்தனர்!!! அரசியல் கைதியான ச. ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளும் இன்று அவர்களது உறவினர்கள் சகிதம் வட மாகாண ஆளுனரை சந்தித்து தந்தையின் விடுதலை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். கொழும்பில் ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பின் பொது ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளுடன் விசன் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு நிலைமையை எடுத்தியம்பியிருந்தனர். பிள்ளைகளினதும், உறவினர்களதும் செவிமடுத்த வட மாகாண ஆளுனர் ரெஜினோல் குரே இவ்விடயம் தொடர்பாக ஜனாபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவண செய்வதாக தெரிவித்தார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். http://www.virakesari.l…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.