Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கெஹலிய ரம்புக்வெலவின் மகன் அதிரடியாகக் கைது! இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல இலங்கைக் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. புதி…

  2. கண்டியில் வன்முறை தாக்குதல்! பெண் ஒருவரின் அட்டகாசம்! சிசிரிவி காணொளி அம்பலம் கண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய பதற்ற நிலை தணிந்து தற்போது இயப்பு நிலை ஏற்பட்டுள்ளது. கண்டியின் சில பகுதிகளில் ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவம் காரணமாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது. மூன்று நாட்களாக தொடர்ந்து மேற்கொண்ட இனவாத தாக்குதல் காரணமாக கண்டி மாவட்டம் மொத்தமாக செயலிழந்திருந்தது. தற்போது அமைதி நிலை ஏற்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அதில் ஆண்களுடன் இணைந்து பெண்ணொருவர் பள்ளிவாசலை உடைக்கும் காட்சி அடங்க…

  3. அரசியல் சுயநலத்திற்காக மக்களை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுயநலத்திற்காக மக்களை பகடைக்காய்களாக்குவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் கையாளப்படுமானால் இனவாத பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளியெறிந்துவிடமுடியும். இனரீதியான, மதரீதியான வன்முறைகளை தூண்டுபவர்கள் சரியான முறையில் இனங்காணப்பட்டு கைதுசெய…

  4. அரபு நாடுகள் கடும் அதிருப்தி! ஐ.நாவில் இலங்கைக்கு சிக்கல் இலங்கையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் அரபு நாடுகள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க அந்த நாடுகள் தீர்மானித்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கொழும்பிலுள்ள அதன் தூதுவர்களூடாக முழுமையான விவரங்களைத் திரட்டிவரும் இந்த நாடுகள், ஐக்கிய…

  5. கண்டியில் நீக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம் ! கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். கண்டி மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் கடந்த நாட்களாக நிலவிய குழப்பநிலையை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக அங்கு பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த பகுதிகளில் நிலவும் இயல்பான சூழ்நிலை காரணமாக மீண்டும் கண்டி நீர்வாக மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கபடாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/31505

  6. இன்று இந்தியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர் – அங்கிருந்து ஜப்பானுக்குப் பயணம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தியா, மற்றும் ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணங்களை இன்று ஆரம்பிக்கவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் ஆகியோரின் அழைப்பை ஏற்று, அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்றும் நாளையும், அவர் புதுடெல்லியில் அரசுமுறைப் பயணமாக தங்கியிருப்பார். இந்தப் பயணத்தின் போது, இந்திய அரசியல் தலைவர்களை சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

  7. இருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.! நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், முகநூல், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை ஆகிய குறித்த சமூக வலைதளங்கள் உள்ளடங்குவதாகவும், இது குறித்து கண்காணிப்புகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/31364

  8. அன்று அப்பாவித் தமிழ் மக்களுக்கு நடந்தது இன்று முஸ்லீம் மக்களுக்கு நடக்கின்றன….. இவ் வாரத்தையக் கேள்வி தற்போது தெற்கில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றியது. கேள்வி: கிழக்கு மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் நடைபெற்று வரும் வன் செயல்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? பதில்: இவ்வாறான வன் செயல்கள் இலங்கையில் புதிதல்ல. பெரும்பான்மையினத்தினர் சிறுபான்மையினத்தினர் மீது கட்டவிழ்த்து விடும் வன் செயல்களே இவை என்பதிலும் பார்க்க நான் வேறு கோணத்தில் இருந்தும் பார்க்கின்றேன். குற்றம் புரிந்தவர்களை அல்லது குற்றம் புரிந்ததாகச் சந்தேகப்படுபவர்களை சமுதாயமானது, நீதி, சட்டம் போன்றவற்றின் கண் கொண்டு…

  9. பல்கலைக்கழக தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான செய்திக்குறிப்பு பத்திரிகைக் குறிப்பு (09.03.2018) இன்று கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1. 12.03.2018 திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதென்றும் 2. நாடு முழுவதிலுமுள்ள போதனா வைத்தியசாலைகள் தவிர்ந்த மருத்துவபீடங்களில் வழங்கி வரும் சேவைகள் திங்கட்கிழமை முதல் முடிவுக்கு கொண்டுவரப்படுவதென்றும் 3. எதிர்வரும் 14.03.2018 புதன்கிழமை நண்பகல் முதல் பல்கலைக்கழக பீடங்களில் இடம்பெற்றுவந்த நீர்வழங்கல் பராமரி…

  10. பசிலை சந்தித்த ஐ.நா உயர் அதிகாரி – ராஜபக்சக்கள் மீது திரும்பும் அனைத்துலக கவனம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் உயர் அதிகாரி ஒருவர் ,சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அரசியல் விவகாரங்களுக்கான உதவித் தூதுவர் ஜெப்ரி பெல்ட்மனுடன் கொழும்பு வந்துள்ள, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான, தலைவர் மேரி யமாசிட்டா, நேற்று முன்தினம் பசில் ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இதன்போது தற்போதைய அரசியல் போக்குகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பசி…

  11. 2 குண்டுகள் மீட்கப்பட்ட விவகாரம்: வீட்டுரிமையாளரின் சடலம் மீட்பு ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், துஷாரா ஆரையம்பதி, காங்கேயனோடை, எல்லை வீதியில் இரண்டு வீடுகளிலிருந்து, நேரம் குறித்து வெடிக்கக்கூடிய இரண்டு குண்டுகள், கடந்த புதன்கிழமை (07) மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த வீட்டின் உரிமையாளர், சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று (09) மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரையம்பதியைச் சேர்ந்த 28 வயதுடைய அருள்ராஜ் ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும…

  12. கண்டியில் கள நிலவரங்களை பார்வையிட்ட பிரதமர் உள்ளிட்ட குழு!!! கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். கண்டியின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர், தாக்குதல் நடத்தப்பட்ட மற்றும் சேதங்களுக்கு உள்ளாகிய வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டனர். கள நிலவரங்களை விசாரித்த பிரதமர் ரணில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார். http://www.virakesari.l…

  13. யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு யாழ்ப்பாண முஸ்லீம்கள் இன்று கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை, கண்டி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தக் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/74585.html

  14. வன்முறையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை இதுவரை 146 பேர் கைது; சூத்திரதாரிகள் 10 பேருக்கும் 14 நாள் தடுப்புக்காவல் (எம்.எப்.எம்.பஸீர்) கண்டி மாவட்டம் எங்கும் இடம்பெற்ற இன ரீதியிலான வன்முறைகளை திட்டம் தீட்டி அரங்கேற்றியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ''மகசொஹொன் பலகாய''வின் தலைவர் அமித் வீரசிங்க, சிங்கள தேசிய சக்தியின் பிரதானி சுரேந்ர சுரவீர மற்றும் பிக்கு ஒருவர் உள்ளிட்ட 10 பேரிடம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று 4 ஆம் மாடியில் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசரகால சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் ஒப்புதலுடன்…

  15. ஜெனிவா செல்கிறது அரசாங்க தூதுக்குழு (ரொபட் அன்­டனி) ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் எதிர்­வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை இலங்கை குறித்த முத­லா­வது விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் இலங்­கையின் சார்பில் ஜெனி­வா­வுக்­கான நிரந்­தர வதி­விட பிர­தி­நிதி பங்­கேற்று உரை­யாற்­றுவார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதே­போன்று எதிர்­வரும் 21 ஆம் திகதி நடை­பெறும் இலங்கை குறித்த இரண்­டா­வது விவா­தத்தில் இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரிகள் மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும் இந்த கூட்­டத்­தொ­டரில் இலங்­கையின் சார்பில் பங்­கேற்­க­…

  16. பாதுகாப்புக்கு மத்தியில் ஜும்ஆத் தொழுகை முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில் நேற்று ஜும்ஆத் தொழுகை இராணுவம் மற் றும் பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தியில் நடத்­தப்­பட்­டது. அத்­துடன் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மூடப்­பட்­டி­ருந்­த­துடன் பாட­சா­லை­களில் மாண­வர்­களின் வரு­கையும் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தது. நாட்டில் கடந்த சில தினங்­க­ளாக அமை­தி­யின்மை நில­விய பின்னர் நேற்று வெள்ளிக்­கி­ழமை, ஜும்ஆத் தொழு­கைக்கு முஸ்­லிம்கள் கூடு­வ­தனால் அமை­தி­யின்மை ஏற்­ப­டலாம் என அச்சம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்தது. அத்­துடன் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­ப­டலாம் எனவும் எதிர்­பார்க்­கப்­பட்­டத…

  17. அனைத்து குடி­மக்­க­ளி­னதும் பாது­காப்பை உறு­தி­ப்ப­டுத்த அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும் : சர்­வ­மதப் பேரவை சட்டம் ஒழுங்கை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டிய அதி­கா­ரிகள் எதிர்­வரும் காலங்­களில் அனைத்து குடி­மக்­க­ளி­னதும் பாது­காப்பை எது­வித பார­பட்­ச­மு­மின்றி நடை­மு­றைப்­ப­டுத்த முன்­வ­ர­வேண்டும். அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­படும் பிரச்­சி­னை­களை ஊட­கங்கள் மிகவும் பொறுப்­புடன் வெளி­யி­ட­வேண்டும் என சர்­வ­மதப் பேரவை தெரி­வித்­தது. நாட்டின் பதற்ற சூழ்­நிலை தொடர்­பாக செய்­தி­யாளர் சந்­திப்­பொன்றை சர்­வ­மதப் பேரவை நேற்று கொழும்பில் அமைந்­துள்ள இலங்கை மகா­போதி சங்­கத்தில் நடத்­தி­யது.இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வி…

  18. சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் ; இரு மாணவர்கள் சி.ஐ.டி.யினரால் கைது இனங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இரு பாடசாலை மாணவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று முன் தினமும் நேற்றும் ஹோமாகம, கொள்ளுப்பிட்டி பகுதிகளில் வைத்து அவர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஹோமாகமவில் கைது செய்யப்பட்ட மாணவனுக்கு 17 வயது எனவும் கொள்ளுப்பிட்டியில் நேற்று காலை கைது செய்யப்பட்டவருக்கு 18 வயது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர…

  19. ஜனாதிபதியை சந்தித்தார் ஐ.நா. அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச் செயலாளர் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையிலான தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்காக வருடாந்தம் இடம்பெறும் இம்முறை விஜயமாக நான்காவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey Feltman) இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இலங்கையின் ஜனநாயகம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய ஜெப்ரி பெல்ட்மன் இதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து …

  20. கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறிலங்காவுக்கு ஜப்பானிய கடற்படை உதவும் சிறிலங்காவின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, ஜப்பானிய கடற்படை முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜப்பானிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானா, உறுதியளித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அட்மிரல் கட்சுரோஷி கவானா நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இந்த உறுதிமொழியை வழங்கினார். சிறிலங்கா அதிபரின் வதிவிடத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் சிறிலங்கா கடற்படையினருக்கு ஜப்பானில் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்குமாறு சிறிலங்கா அதிபர்…

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அணியுடன் கைகோர்ப்பு? சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரும், ஆதரவாக கையெழுத்திடவுள்ளார். கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட இணங்கியுள்ளார் என்றும் கூட்டு எதிரணியின் …

  22. யாழ் வீதிகளில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணிகளில் ( கோப்புபடம்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். யாழில் கடந்த ஒரு சில வருடங்களாக இராணுவத்தினர் முகாம்களில் முடங்கி இருந்தனர். அதனை தொடர்ந்து யாழில் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையால் நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழில் துவிசக்கர வண்டிகளில் இராணுவத்தினர் வீதி சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை…

  23. முஸ்­லிம்­களின் துன்பம், வலியை எம்மால் உணர முடி­கின்­றது.! தமிழ் மக்­களின் உரி­மைக்­காக வழங்கும் அழுத்­தங்­களை போன்று முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­க­ளையும் கவ­னத்தில் கொண்டு இம்­முறை ஜெனிவா தீர்­மானம் அமைய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற உணர்வில் எமது உரி­மைக்­காக இணைந்து போரா­ட­வேண்­டிய காலம் வந்­துள்­ளது என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். அடக்­கு­மு­றை­களின் கொடு­மை­யினை அனு­ப­வித்­த­வர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்­கு­மு­றையை எம்மால் உணர முடி­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார். நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில்…

  24. சாரதியைத் தாக்கிய தென் மாகாணசபை உறுப்பினரும் மனைவியும் கைது – கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் 5 குண்டுகள் : தென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். தலங்கம பிரதேசத்தில் தனியார் பேருந்துச் சாரதியை தாக்கியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமது சொகுசு வாகனத்தில் பயணித்த வேளை தனியார் பேருந்து சாரதியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணத்தினாலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது தென் மாகாணசபை உறுப்பினரும் அவரது மனைவியும் இணைந்து கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பேருந்து சாரதியை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை ஒருவர் ,…

  25. இலங்கை: ”தமிழர் இலக்கு வைக்கப்பட்டது போல முஸ்லிம்கள் மீது இலக்கு” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதுபோல, கண்டி மாவட்டத்தில் இப்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சிங்கள இனவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கையின் முக்கிய முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.