ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
சூத்திரதாரிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்: நல்லாட்சியிலும் இனவாத செயல்கள் இடம்பெறுகின்றமை வேதனைக்குரியது என்கிறார் பிரதமர் ரணில் (ஆர்.யசி) அம்பாறை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் சகலரும் விசாரணை மூலம் விரைவில் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நல்லாட்சியிலும் இனவாத செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் …
-
- 0 replies
- 141 views
-
-
தனது சகோதரரை முகமாலைக்கு அனுப்பினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்புத் தூதுவரான ஜோர்தான் இளவரசர் மிரெட் அல் ஹுசேன் நேற்று சிறிலங்காவை வந்தடைந்தார். நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக கொழும்பு வந்த அவர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக, நாளை முகமாலைக்குச் செல்லவுள்ளார். அத்துடன், வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் இளவரசர் மிரெட் அல் ஹுசேன் சந்திக்கவுள்ளார். கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம், 163 ஆவது நாடாக இணைந்து கொண்டுள்ளதை அடுத்து, இளவரசரின் இந்தப் பயணம் …
-
- 1 reply
- 385 views
-
-
‘இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரை இல்லை’ இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரை, மேற்கத்திய மருத்துவத்தில் இதுவரையிலும் கண்டுப்பிடிக்கப்பட வில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்தார். “மேற்கத்திய மருத்துவ முறைமையின் பிரகாரம், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரேயொரு முறைமை, சத்திரசிகிச்சை முறைமையாகும்” என்றும் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க மேலும் தெரிவித்தார். இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரை தொடர்பில் சமூகத்தில் வெகுவாகப் பேசப்படுகின்றது. இந்நிலையிலேயே, அவர் விடுத்திருந்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 159 views
-
-
‘பீ’ அறிக்கை பொய் அம்பாறையில் அண்மையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பில், சட்டத்தை அமுல்படுத்தும்போது குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல, இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள “பி” அறிக்கை பொய்யானதாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளதென, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், நேற்று (04) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அத…
-
- 0 replies
- 166 views
-
-
காணாமல்போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் புலம்பெயர் அமைப்புகளின் கட்டளைகளை நிறைவேற்றுவோரே ; குணதாச அமரசேகர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சுயாதீனமாக செயற்படக்கூடிய உறுப்பினர்களை நியமிக்கத்தவறிவிட்டார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து அவர்களது கட்டளைகளை நிறைவேற்றுபவர்களே காணாமல்போனோர் அலுவலகத்திற்கு ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த கால அரசாங்கத்திற்கு பாதகமாகவும், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு சாதகமாகவும் தமது விசாரணைகளை மேற்கொள்வார்கள். என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேர…
-
- 0 replies
- 82 views
-
-
இந்தியாவை தஞ்சமடையவோ இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்கும் தேவையோ எனக்கு இருக்கவில்லை.. இந்தியத் துணைத் தூதுவர் உயர்திரு யு.நடராஜன் அவர்களுக்கான பிரிவு உபசார வைபவம் வடமாகாண சபை அலுவலக கேட்போர் கூடம், கைதடி 04.03.2018 ஞாயிற்றுக் கிழமை பி.ப 4.30 மணியளவில் முதலமைச்சர் உரை இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக்கொண்டிருக்கின்ற அவைத்தலைவர் கௌரவ சீ.வீ.கே. சிவஞானம் அவர்களே, எமது அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்திருக்கும் இலங்கையின் வடபகுதிக்கான இந்தியத்துணைத் தூதுவர் உயர்திரு யு.நடராஜன் அவர்களே, வடமாகாண சபையின் கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ வடமாகாண சபை உறுப்பினர்களே, மற்றும் …
-
- 2 replies
- 542 views
-
-
சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்: வடபகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த இந்த பேரணி கோவில் வீதி ஊடாக கைலாசபிள்ளையார் கோவிலை சென்றடைந்து பின்னர் முதலமைச்சர் அலுவலகம் வரை சென்று அங்கு முதலமைச்சரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வடமாகாண ஆளுநர் ஊடாகவும் இந்து கலாச்சார திணைக்கள பிரதிநிதி ஊடாக இந்து கலாசார அமைச்சருக்…
-
- 1 reply
- 266 views
-
-
இலங்கையின் ஆடுகளத்தில் இந்தியா – சீனாவுக்கு அடுத்து அமெரிக்கா களமிறங்குகிறதா? இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் தொண்டர் சமாதான படையணி என்ற பெயரில் அமெரிக்காவின் அணி ஒன்று இலங்கையில் வியாபிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படையணியின் தலைவரை அமெரிக்க ஜனாதிபதியே நியமிப்பார். அப்படையணியை இலங்கையில் காலூன்றச் செய்வது குறித்த உடன்படிக்கைக்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது என பேராசிரியர் விஸவவித்ததாரண தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட அவர…
-
- 3 replies
- 406 views
-
-
யாழ்- கோட்டையை வழங்கினால் மக்களின் காணிகளை விடுவிக்க முடியும்! யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாம்களை அங்கு நகா்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என இராணுவத்தினா் தெரிவித்ததாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபா் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தாா். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இராணுவம், பொலிஸாா் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடா்பான கோரிக்கை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போதே யாழ்ப்பாண மாவட்ட செ…
-
- 1 reply
- 432 views
-
-
அஷ்ரப் மரணத்துக்கான காரணம் தெரிந்தது – 18 ஆண்டு கால இரகசியம் அம்பலம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது. 2000ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ஆம் நாள், அமைச்சராக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரப் உள்ளிட்டவர்கள் பயணம் செய்த எம்.ஐ.17 உலங்குவானூர்தி ஊரகந்த பகுதியில் மலையில் விபத்துள்ளானது. இந்தப் சம்பவத்தில் அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் திட்டமிட்ட ஒரு சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் இருந்து வந்தது. அஷ்ரப் மரணமான, உலங்குவானூர்தி விபத்து தொடர்பாக ஆராய, மேல்முறையீட்டு நீ…
-
- 1 reply
- 327 views
-
-
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ்த் தரப்புகளது இன்றைய நிலைப்பாடும்! நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ்த் தரப்புகளது இன்றைய நிலைப்பாடும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான சபைகளைக் கைப்பற்றியுள்ளபோதிலும், வலுவான ஆட்சியை நிறுவுவதற்குப் போதுமான பெரும்பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியுள்ளது. இதன் காரணமாக வேறு தரப்புகளுடன் இணைந்து ஆட்சிமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு…
-
- 0 replies
- 284 views
-
-
எதற்காக ஆணைக்குழு? காணாமல்போனோர் பணியகத்துக்கான ஆணையாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருக்கான நிய மனங்கள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டது. இந்த ஆணைக்குழு எதற்காகச் செயற்படப்போகிறது என்பது தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசிடம் சில கேள்விகளை முன்வைக்கவேண்டியுள்ளது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரங்க கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் உயிருடன் இல்லை’ என்று தெரிவித்திருந்தார். அரச தலை…
-
- 0 replies
- 296 views
-
-
முன்னாள் போராளியொருவரது குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான குறித்த நபர் தற்போது புளொட் அமைப்பின் முக்கியஸ்தராகியுள்ளார்.அவ்வகையில் ஒட்டுக்குழு புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,மத்திய குழு உறுப்பினரும், மாமனிதர் சிவராம் கொலை முக்கிய சூத்திரதாரியுமான ஆர்.ஆர் எனப்படும் இராகவன் அவ்வமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டோர் விழாவில் பங்கெடுத்திருந்தனர். இதேவேளை பிளவுண்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரே வைபவத்தில் பங்கெடுத்துமுள்ளனர். சுரேஸ்பிறேமசந்திரன்,வரதராஜாப…
-
- 0 replies
- 607 views
-
-
222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள் மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை நேரடி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, 50 வீதமான உறுப்பினர்கள் நேரடியாகவும், 50 வீதமான உறுப்பினர்கள் மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படியும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கா, மாகாணசபைகளின் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் பணிகள் கலாநிதி தவலிங்கம் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழு 4 மாதங்களில் தமது அறிக்கையை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிட…
-
- 3 replies
- 406 views
-
-
கொக்குவில் பிரம்படி வீதியில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! கொக்குவில் பிரம்படி வீதியில் உள்ள வீட்டின் மீது சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்..... இன்று(04-03-2018) கொக்குவில் பிரம்படி பகுதிக்கு சென்ற 7 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து ஒரு நபரை விசாரித்துள்ளனர். அவர் அங்கு இல்லை என வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்த போது, வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்…
-
- 0 replies
- 256 views
-
-
அம்பாறை தாக்குதல் மேலதிக விசாரணை – சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைப்பு:- அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார். அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் உலங்கூர்தியில் அம்பாறை மாவட்டத்துக்கு …
-
- 1 reply
- 285 views
-
-
முல்லைத்தீவில் புதையல் தோண்டிய 10 பேர் கைது!! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட களிக்காடு என்ற கிராமத்தின் காட்டுப்பகுதியில் பூசைகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு புதையல் தோண்ட முற்பட்ட முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட 10 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். விடுதலைப்புலிகள் காலத்தில் காணப்பட்ட புதையல்கள் இருப்பதாகக் கருதி, குறித்த நபர்கள் பூசை வழிபாடு மற்றும் வெடி வைத்து தகார்ப்பதற்கு ஏற்ற வகையில் பொருள்களுடன் அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றனர். முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்குக…
-
- 2 replies
- 303 views
-
-
தலைமைத்துவ மாற்றம் ; ஆழமாக சிந்திக்க வேண்டும் : மறுசீரமைப்பு அவசியம் என்கிறது ஐக்கிய தேசியக் கட்சி ஆர்.யசி பிரதமருக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் நாம் தீர்மானங்களை முன்னெடுப்போம். கட்சியின் மறுசீரமைப்பு நகர்வுகளில் தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஹபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஒரு சிலரது தனிப்பட்ட தீர்மானங்கள் கட்சியினையும், தேசிய அரசாங்கத்தையும் சீரழித்துவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் அவசியம் …
-
- 0 replies
- 153 views
-
-
மைத்திரி - ரணில் அதிகாரப் போட்டி : மஹிந்த தரப்பு பலமடையும் - ஜே.வி.பி ஆர்.யசி மைத்திரி -ரணில் ஆகியோரின் அதிகாரப் போட்டியின் விளைவாக மீண்டும் மஹிந்த தரப்பு அரசியல் பலமடையும் நிலைமை ஏற்படும். இந்த அரசாங்கம் கள்வர்களைத் தண்டிக்காது கள்வர்களை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை முன்னெடுக்க முயற்சிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றம் சாட்டுகின்றார். தேசிய அரசாங்கத்தின் நிகழ்கால சர்ச்சைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தினை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில். ஜனாதிபதியும் பிரதமரும் கடந்த 2015 ஆம் ஆண…
-
- 0 replies
- 168 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணை இவ்வாரம் சபாநாயகரிடம்? ஆதரவு தேடி கையெழுத்து வேட்டை எஸ்.வினோத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை பெறும் வேலைத்திட்டம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அது இவ்வார இறுதிக்குள் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இணை தேசிய அமைப்பாளர் ரஞ்சித் சொய்சா நேற்றுத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: நல்லாட்சி அரசாங்கத்தை மக…
-
- 0 replies
- 319 views
-
-
தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பிக்குமார்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது. அங்கு ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அங்கு வருகைதந்திருந்த பௌத்த பிக்குகளின் செயற்பாடு அங்கிருந்தவர்களை சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளது. குறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் நாட்டின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியபோது பௌத்த மதகுரு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் சகிதம் கலந்து கொண்ட பிக்கு, இவர்கள் இருவர் மாத்திரம் மரியாதை கொடுக்காமல் ஆ…
-
- 2 replies
- 347 views
-
-
மார்ச் மாதம் வந்தாலே நாட்டில் அமைதியீனம்! *கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்படும் *பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் - ஜனாதிபதி கூறுகிறார் பட்டிருப்பு, காங்கேயனோடை நிருபர்கள் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழவேண்டும்.அதுவே நான் காணும் கனவாகும். அந்தக் கனவை நனவாக்கமுடியாவிட்டால் இந்த நாடே அழிந்துவிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வட,கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் வகையில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்…
-
- 0 replies
- 213 views
-
-
கொழும்பு அரசு ஒதுக்கும் நிதி விவரத்தை வெளிப்படுத்துக!! கொழும்பு அரசு ஒதுக்கும் நிதி விவரத்தை வெளிப்படுத்துக!! கொழும்பு அரசிடம் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது?. ஒதுக்கப்படும் நிதி பிரதேச செயலகங்களுக்கு என்ன திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கபடுகின்றது?. இந்த நிதி அறிக்கையை யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்தார். …
-
- 0 replies
- 202 views
-
-
சுதந்திரக் கட்சியின் அமைச்சர் பதவி மாற்றங்கள் தொடர்பில் குழப்ப நிலைமை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் பதவி மாற்றங்கள் தொடர்பில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் முதல் கட்ட அமைச்சரவை மாற்றங்கள் ஐக்கிய தேசியக் கட்சி;க்குள் இடம்பெற்றது. இதேவிதமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களுக்கு இடையிலும் அமைச்சுப் பதவி மாற்றங்கள் நடைபெறவிருந்தன. எனினும், அமைச்சர்கள் சிலர் பதவிகளை விட்டுக் கொடுக்கவோ புதிய பதவிகளை ஏற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை. இதனால் அமைச்சரைவயில் மாற்றம் செய்வதில் ஜனாதிபதிக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ர…
-
- 0 replies
- 140 views
-
-
ரணிலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்துக் கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இறுதிக் கட்ட முயற்சியாக ரணிலை பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும், சில இளைய உறுப்பினர்களும் இணைந்து ரணிலை பாதுகாப்பதில் 24 மணித்தியாலமும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது…
-
- 0 replies
- 149 views
-