Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதியின் நாடகம் மிகச்சிறப்பானது குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு மைத்திரி முயற்சி; மஹிந்த குற்றச்சாட்டு (ஆர்.யசி) ஜனாதிபதியின் நாடகமே இன்று மிகச் சிறப் பாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஊழல் வாதி களை தண்டிப்பதாக மேடையில் சவால் விடுத் தாலும் அமைச்சரவையில் ஊழல் வாதிகளுடன் கைகோர்த்தே ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். கோத்தபாய ராஜபக் ஷவின் வேலைத்திட்டங்களை இலங்கை மக்கள் எவரும் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்ஙதின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பொத…

  2. குற்றவாளிகளை காப்பாற்றும் பிரதமர் ரணிலின் நடவடிக்கை ஸ்ரீல.சு.க.விசனம்;ஜனாதிபதி தண்டனை வழங்குவார் என்கிறது (ஆர்.யசி) மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவ காரத்தில் இப்போது பிரதமர் கையாளும் நகர் வுகள் குற்றவாளிகளை காப்பாற்றும் வகை யில் அமைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறான குழுவமைத்து விசாரணை செய் தாலும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் முன் னெடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமர வீர தெரிவித்தார். அடுத்த வாரங்களில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் மாறுபட்டதாக அமையும், கடுமையான கட்டளைகளும் நகர்வுகளும் ஜனாதிபதியிடம் இருந்து எதிர்பார்க்கப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பிணைமுறி ஊழல் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி புத…

  3. சீமைக்கிழுவை மரத்தில் இருந்து மின் உற்பத்தி – சீனாவும் சிறிலங்காவும் உடன்பாடு சீமைக்கிழுவை (கிளிரிசீடியா) மரத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி, பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்றை சிறிலங்காவுடன் இணைந்து சீனா மேற்கொள்ளவுள்ளது. மொனராகல மாவட்டத்தில், 70 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த மின் திட்டம் அமைக்கப்படவுள்ளது. சீனாவின் Beijing Full Dimension Power Tech Company Ltd , Nanjing Turbine and Electric Machinery Group Company Ltd மற்றும் Electric Machinery Group Company Ltd, ஆகிய நிறுவனங்கள், சிறிலங்காவின், IMS Holdings நிறுவனத்துடன் இணைந்து இந்த மின் திட்டத்தை அமைக்கவுள்ளன. இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்த…

  4. வில்பத்துவில் சட்டவிரோத மணல் அகழ்வு வில்பத்து வனப்பகுதிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் குழுவொன்று மணல் அள்ளிச் செல்வதாக வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கரையோர வள முகாமைத்துவ நிறுவனம் என்பவற்றின் அனுமதி பெற்றே தாம் மணல் அகழ்வதாக, போலி ஆவணங்களைக் காண்பித்து மேற்படி நபர்கள் மணல் அள்ளிச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எனவும் தடுக்கப்படவேண்டியவை எனவும் வலியுறுத்தியிருக்கும் வனத்துறை இயக்குனர் நாயகம், குறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார். http://www.virak…

  5. ஒற்­று­மை­யாக இருந்­தி­ருந்­தால் இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­காது!! ஒற்­று­மை­யாக இருந்­தி­ருந்­தால் இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­காது!! வவு­னியா பேருந்து நிலை­யம் தொடர்­பில் முத்­த­ரப்­பி­ன­ரும் ஒற்­று­மை­யு­டன் செயற்­பட்­டி­ருந்­தால் இந்­த­நி­லைமை ஏற்­பட்­டி­ருக்­காது என்று வடக்கு மாகாண முத­ல­ மைச்­ச­ரின் செய­லா­ளர் தெரி­வித்­தார். இ.போ.சபை­யி­னர், தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர்­கள் மற்­றும் பழைய பேருந்து நிலை­யத்­தி­லுள்ள வர்த்­த­கர்­கள் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டி­ரு…

  6. ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் பலர் உயர் பதவி வகித்துள்ளனர்- ஜனாதிபதி : பாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு ஏற்ப குற்றம்சாட்டப்பட்டவர்களிடையே கடந்த அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பலர் இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக புதிய கட்சியொன்றை அமைத்து 2015க்கு பின்னோக்கிச் செல்வோம் என்று அவர்கள் குறிப்பிடுவது அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று ஊழல் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காகவேயாகும் என்றும் ஜன…

    • 1 reply
    • 270 views
  7. 11 மாணவர்களுக்கு கிளிநொச்சி நீதவான் அறிவுரை கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் 11 பேர் பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்பத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்தப்பட்டனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே அவர்கள் கைது செய்யப்பட்டு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்பத்தில் குறித்த மாணவர்களின் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் உத்தரவிட்டார். 8 மாணவர்களுடைய பெற்றோர்கள் மாத்திரமே ஆஜரா…

  8. சீட் பெல்ட், காற்று பலூனற்ற வாகன இறக்குமதிக்குத் தடை இருக்கைப் பட்டிகள் (சீட் பெல்ட்) மற்றும் காற்று பலூன் உள்ளிட்ட பயணிகள் பாதுகாப்புக்கான நடைமுறைகள் அற்ற வாகனங்களை, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் கொள்வனவு செய்யத் தடை விதிக்கவுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், வாகனங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் பிரகாரமே, இந்தத் தடை விதிக்கப்படவுள்ளதென, அமைச்சு தெரிவித்தன. கடந்த சில காலமாகவே, வாகனங்கள் தொடர்பான கொள்கைகளின் அடிப்படையில், சுத்தமோ அல்லது பசுமையோ பேணப்படவில்லை. நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களும், எதிர்…

  9. முள்­ளந்­தண்­டு­ வ­டம் பாதிக்­கப்­பட்­டுள்ள 64 பேர் கட­னா­ளி­கள்!! வடக்கு சமூ­க­சே­வை­கள் அமைச்­சு­மீது விச­னம் சமூக சேவை­கள் அமைச்­சி­னால் மல­சல கூடத்­துக்­கான இறு­திக்­கட்­டக் கொடுப்­ப­ன­வு­கள் வழங்­கப்­ப­டாத கார­ணத்­தி­னா­ல் வவு­னியா மாவட்­டத்­தில் முள்­ளந்­தண்டு வடம் பாதிக்­கப்­பட்ட 64 பேர் கடன்­சு­மை­க­ளுக்கு மத்­தி­யில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது­தொ­டர்­பாக மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: 2015ஆம் ஆண்டு, சிறப்­புத் தேவைக்­குட்­பட்ட முள்­ளந்­தண்டு வடம் பாதிக்­…

  10. பயன்­தரா உத்தி! “நாம் தற்­போது நிதா­ன­மாக, நியா­ய­மாக, நேர்­மை­யாக ஒரு­மித்த நாட்­டுக்­குள் தமி­ழர்­க­ளுக்கு மதிப்­பைப் பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கி­றோம். அது நடை­பெ­றா­விட்­டால், எமது சம்­ம­தம் இல்­லா­மல் நடை­பெ­றும் ஆட்­சியை மாற்­ற­வேண்­டிய நிலை ஏற்­ப­டும்” இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா­ஜ­வ­ரோ­த­யம் சம்­பந்­தன். உள்ளூ­ராட்­சித் தேர்­த­லை­யொட்டி திரு­ கோ­ண­மலை மாவட்­டத்­தில் நடை­பெற்ற பரப்­பு­ரைக் கூட்­டம் ஒன்­றில் பேசு­கை­யில் அவர் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­கள் மீதான எதிர்­பார்ப்­பு­கள் பல­வீ­னப்­பட்­…

  11. யாழ். மண்டைதீவு கடலில் மிதந்துவந்த மர்மப்பெட்டி யாழ்ப்பாணம், மண்டைதீவு கடலில் மிதந்துவந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியில் ஆயுதங்கள் இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடலில் மிதந்து வந்த குறித்த பெட்டி தொடர்பாக மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இப் பெட்டியானது மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பெட்டி தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/29658

  12. வட மாகாணத்தில் இராணுவத்தினர் சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார்கள் - முதலமைச்சர் வட மாகாணத்தில் தொடர்ந்தும் நிலை கொண்டிப்பதற்காக ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சமர்த்தியமாக காய்களை நகர்த்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஈடுபடுத்தப்படுவதன் ஊடாக, இராணுவத்தின் பிரசன்னத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக் வழங்கிய விசேட செவ்வியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ…

  13. யாழில் பயங்கரம்: குழந்தையை குத்திக் கொன்ற கொடூரம்; இருவர் வைத்தியசாலையில்! யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் மஊன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நபர் ஒருவரும் தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம்குறித்து விரிவாகத் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணை பத்திரகாளி கோவிலுக்கு அண்மையில் வசிக்கும் ஈஸ்வரன் எனும் நபர் தனது தாயினையும் தமையனின் குழந்தையையும் கத்தியால் குத்தியதோடு தானும் தற்கொலை செய்யும் நோக்கில் விஷம் அருந்தியுள…

  14. முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு 10 ஆயிரம் ரூபா! முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு 10 ஆயிரம் ரூபா! மறு­வாழ்வு வழங்­கப்­பட்ட முன்­னாள் போரா­ளி­க­ளில் தனி­யார் துறை­யில் பணி­யாற்­றி­வ­ரு­வோ­ருக்கு 10 ஆயி­ரம் ரூபா உத­வித் தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்­கான பதி­வு­களை மேற்­கொள்­ளு­மாறு யாழ்ப்­பாண மாவட்ட மறு­வாழ்­வுக் கிளை­யின் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்­தார். இது­தொ­டர்­பாக அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: மறு­வாழ்வு வழங்­கப்­பட்டு சமூ­கத்­து­டன் இணைக்­கப்­பட்ட முன்­னாள்…

  15. வடக்கில் விவேகம் அற்ற வேகத்தினால் பலியாகும் இளைஞர்கள் வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞரின் சடலம் மீட்பு… கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை பொது மக்களால் அவதானிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் அதிக வேகத்தில் உந்துருளியில் சென்ற குறித்த இளைஞர் வேககட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் விழுந்து இற…

  16. குளிருடன் கூடிய உறைபனி தொடரும்!! குளிருடன் கூடிய உறைபனி தொடரும்!! நாட்டின் பல பாகங்களில் குளிருடன் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என்று வளிமண்டவியல் திணைக்களம்வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அடுத்த வரும் நாள்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் , அதிகாலை நேரங்களில் உறைபனியை அவதானிக்கலாம். ஏனைய பாகங்களில் பொதுவாக சீரான காலநிலை நிலவும். வடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை, அநுராதபுரம், அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் மணிக்…

  17. தங்­கப் பெட்­ட­கத்­தைத் தேடி மற்­று­மொரு அகழ்வு முயற்சி தங்­கப் பெட்­ட­கத்­தைத் தேடி மற்­று­மொரு அகழ்வு முயற்சி தண்­ணீர் பெரு­க்கெ­டுத்­த­தால் தோல்வி விடு­த­லைப் புலி­க­ளால் மறைத்து வைக்­கப்­பட்­டது என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் இரும்­புப் பெட்­ட­கத்தை தேடி முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் நேநற்று அகழ்வு நட­வ­டிக்­கை­கள் முன்­னெடுக்கப் பட்டன. அந்த நட­வ­டிக்­கை­யும் தோல்­வி­யில் முடிவு பெற்­றது. முள்­ளி­வ…

  18. கொழும்பு கொதி­நி­லை­யால் – பன்­னா­டு­க­ளுக்­கும் பதற்­றம்!! கொழும்பு கொதி­நி­லை­யால் – பன்­னா­டு­க­ளுக்­கும் பதற்­றம்!! ஐ.தே.க. மற்­றும் சு.கவை சம­ர­சப்­ப­டுத்த முயற்சி ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையே மூண்­டுள்ள சொற்­போர்­க­ளால் கூட்­ட­ர­ சின் ஆயுள் கேள் விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. இது­தொ­டர்­பில் வெளி­நாட்­டுத் தூது­வர்­க­ளும், இரா­ஜ­தந்­தி­ரி­க­ளும் சிறப்பு அவ­தா­னம் செலுத்­தி­யுள்­ள­னர். …

    • 1 reply
    • 452 views
  19. சுகாதாரத்துக்கென தொலைக்காட்சி சேவை ஆரம்பம் நாட்டு மக்களிடையே சுகாதாரத்தைப் பேணும் நோக்கில், தேசிய சுகாதாரத் தொலைக்காட்சிச் சேவையொன்று, நாளை (20) முதல் கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டு மக்களின் சுகாதார நிலைமையைப் பேணல் மற்றும் சுகாதாரமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. தொற்றா நோய்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல், குடும்பநலச் சுகாதாரம் தொடர்பில் அறிவூட்டல், போஷாக்கு, விளையாட்டு மற்றும் வீட்டு வாழ்க்கை தொடர்பில் தெளிவூட்டல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், இந்தத் தொலைக்காட்சிச் சேவையூடாக ஒளி, ஒலிபரப்பப்படுமென,…

  20. காத்தான்குடியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் வேட்பாளரது வீட்டிற்குத் தீ!!! மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை ஈரான்சிற்றி நகரில் இன்று அதிகாலை வீடு ஒன்றும் வாகனம் ஒன்றும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வின் ஆதரவாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியில் வேட்பாளருமான முஹம்மது காஸிம் அப்துல் கையூம் என்பவரின் வீடும், வீட்டு உடமைகளும் பட்டா ரக வாகனமுமே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. தீ பரவத் தொடங்கியதும் வேட்பாளரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்கு வெளியே ஓடி வந்து கூக்குரலி…

  21. ஆட்கடத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா நிதி உதவி எதிர்வரும் 3 ஆண்டுகளில் ஆட்கடத்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு 183 மில்லியன் ரூபாவை (1.2 மில்லியன் அமெரிக்க டொலர் ) வழங்கவுள்ளது. இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார அலுவலகத்தினால் இலங்கையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு இந்த நிதித் தொகை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிகக் தூதுவர் அதுல் கெசப் தெரிவிக்கையில், “நவீன அடிமைத்தனத்தின் அடிப்படைக் காரணங்களைக் கையாளுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் சர்வதேசப் பங்காளரக்ளுடன் பணியாற்றுவதற்கு ஐக்கிய அரசுகள் பலமான அர்ப்பணிப்பு கொண்டுள்ளதுடன் இந்த முயற்சியை வரவே…

  22. லசந்த கொலை வழக்கில் அதிர்ச்சித் திருப்பங்கள்! சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படுகொலை செய்யப்பட்ட 2009 ஜனவரி 9ஆம் திகதிக்கு முதல் நாள், அவரது அலுவலகத்தை மருதானை திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாமைச் சேர்ந்த இராணுவ புலனாய்வாளர்கள் சிலர் கண்காணித்திருக்கும் அதிர்ச்சித் தகவலை புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். தாம் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இது உறுதியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர். மேலும் கொலை இடம்பெற்ற பின் அதை விசாரித்து வந்த கல்கிசை பொலிஸாரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக அன்றி, சாட்சியங்களை அடையாளம் கண்டு அ…

  23. பொறுப்பு கூறல், அரசியல் நல்லிணக்கத்தில் ஸ்தம்பிதம் : மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை (மனோசித்ரா) ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை அளித்த பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் நல்லிணக்கம் பற்றிய வாக்குறுதி ஸ்தம்பித நிலையிலேயே உள்ளது. அதேபோன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச சாசனத்துக்கு இணங்க தயாரிக்கப்பட்ட சட்டம் திகதியிடப்படாமல் உள்ளமை ஏற்புடையதல்ல என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் தொடர்பாக மனித உரிமைகள் கண்ணகாணிப்பகத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கை நேற்று வெளியிடப்படட்டது . அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,…

  24. இரு நாட்கள் தொடர்ச்சியாக அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் குறித்து ஜனாதிபதியின் நகர்வுகள் வேகமாக முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக எவ்வாறான வேலைத்திட் டங்களை முன்னெடுப்பது என்பது குறித்து ஆணைக்குழு, சட்டமா அதிபர், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்தியவங்கி ஆளுநர் ஆகியோருடன் நேற்று முன்தினமும் நேற்றும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல்வாங்கல் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் கண்டறிவதற்காக நிய…

  25. ஜனாதிபதி சூளுரை.! ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுகொடுத்த பின்னரே நான் ஜனாதிபதி பதவியிலிருந்து இருந்து விலகுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஊழல், குற்றங்கள் இல்லாத ஜனநாயக ரீதியிலான பயணம் ஒன்றை முன்னெடுக்க மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார். கொஸ்கம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒன்றுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ள போதிலும் இந்த நாட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.