ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றம் ; உடனடியாக மாற்றவும் சேதமடைந்த நாணயத்தாள்கள் நாளை முதல் செல்லுபடியற்றதாகும். எனவே சேதமடைந்த நாணயத் தாள்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் மற்றும் கிழிந்த நாணயத் தாள்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள இலங்கை மத்திய வங்கி கிளைகளில் மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாணயத்தாள்களில் எழுதுதல், அவற்றை ஏதேனும் ஒரு வகையில் சிதைத்தல் மட்டுமல்லாது அவற்றை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனவே சித…
-
- 0 replies
- 202 views
-
-
வீட்டுச்சின்னத்தில் ரெலோ போட்டியிடும் !! நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலானது தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் நாம் போட்டியிடுகின்ற கடைசித்தேர்தலா என்பதை தமிழ் அரசுக் கட்சி தான் தீர்மானிக்க வேண்டும். இந்தத் தேர்தலுக்கான ஆரம்ப ஆயத்தங்கள் அனைத்துமே நல்ல அனுபவங்களை கற்றுத் தந்துள்ளன என தமிழீழ விடுதலை இயக்க(ரெலோ) கட்சியின் முக்கியஸ்தரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோநோகராத லிங்கம் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் தமிழ் ஈழ விடு…
-
- 0 replies
- 856 views
-
-
ஆக்கிரமித்த கட்டடங்களை உடன் கையளிக்க வேண்டும் ஆக்கிரமித்த கட்டடங்களை உடன் கையளிக்க வேண்டும் வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகளை ஆக்கிரமித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஈ.பி.டி.பி. கட்சியினர் அவற்றை உடனடியாக மீளக் கையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய. கட்சிச் செயலர்கள், பொலிஸார், தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கு…
-
- 0 replies
- 231 views
-
-
யாழ் பல்கலை – மருத்துவ பீட சிகிச்சையியற் துறைக்கு 700 மில்லியனில் 8 மாடிகள்…. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிகிச்சையியற் துறைக்கான கட்டடத் தொகுதிக்கு, அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. எட்டு மாடிகளை கொண்ட, மருத்துவ பீட சிகிச்சையியற் துறை கட்டடத் தொகுதியானது, 700 மில்லியன் ரூபா செலவில் கட்டப்படவுள்ளது. இந்தப் பாரிய பணி எதிர்வரும் இரண்டு வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய அடிக்கல் நாட்டு நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மரு…
-
- 0 replies
- 265 views
-
-
கூட்டமைப்புக்கு அக்கினிப் பிரவேசமாக அமையும் உள்ளூராட்சித் தேர்தல் உள்ளூராட்சித் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் ஒரு அக்கினிப்பிரவேசமாகவே அமையப் போகின்றது. என்றுமில்லாதவாறு கூட்ட மைப்புக்கு எதிரான கண்டனங்கள் எதிரணியினரால் முன்வைக்கப் பட்டு வருகின்றன. மாகாணசபைத்தேர்தல் போன்று ஒரு மிகப்பெரிய வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாய நிலையில் அந்த அமைப்பு உள்ளது. கூட்டமைப்பில் உள்ள பங்காளிக்கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதைக் காணும்போது அந்த அமைப்பின் ஆயுள் நீடிக்குமா என்ற சந்தேகமும…
-
- 2 replies
- 445 views
-
-
விக்கிக்கு விரைவில் சம்பந்தன் பதிலடி! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையை கடுமையாகச் சாடி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே பதிலடி கொடுக்கத் தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகின்றது. பதிலடி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையைக் கடுமையாகச் சாடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். தான் எந்தவொரு கட்சி சார்ந்தவன் அல்ல என்றும், கட்சித் தலை…
-
- 6 replies
- 706 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு… தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றையதினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்திவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது எனவும் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தலை புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிபெறுவதற்காகவே இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற முன்னாள…
-
- 3 replies
- 450 views
-
-
தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு துரிதகதியில் தீர்வுகாண முயலவேண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வானது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கமானது தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அறிந்திருந்தும் கூட அதற்கு தீர்வுகாண இதயசுத்தியான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. இதனால் யுத்தத்தில் பெரும் அழிவுகளை சந்தித்த தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 241 views
-
-
ஆனந்தசங்கரி, சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கிடையில் முரண்பாடு, உடைகிறதா தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்ற ஆசனப் பங்கீடுகளினால் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கூட்டணி உருவாகியது. தற்போது தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈபிஆர்எல்எவ் இற்குமிடையில் ஆசனப் பங்கீட்டில் முரண்பாடு தோன்றியுள்ளது. வவுனியா நகரசபைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வேட்பாளர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்ற உற…
-
- 1 reply
- 285 views
-
-
முஸ்லிம்கள் என்றாலே ஒருமடங்கு தண்ணியை ஊண்டிக் குடிக்கும் ஞானசாராவுக்கு,மற்ற முஸ்லிம் தலைவர்களைவிட ரிசாட் பதியுதீனைக் கண்டால்தான் கண்ணுக்குள் உருத்துகின்றது. ஞானசார உண்மையிலேயே நாட்டுப்பற்றுள்ளவர் என்றிருந்தால், நாட்டை நாசப்படுத்திய பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதில் எந்தத்தப்பும் இல்லை என்று கூறியிருக்க மாட்டார். அதே நேரம் இலங்கைக்கு எதிராக செயல்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்தும் டயஸ்போராக்களை சந்தித்து சிரித்த முகத்தோடு போட்டோ பிடித்திருக்க மாட்டார். எங்களுக்கு சுயாட்சி தாருங்கள் என்று போராடும் தமிழ் தலைவர்களின் செயல்பாட்டைக் கண்டும் காணாதவர்போல் நாடகமாடமாட்டார். இலங்கையில் நடந்தது போர்க் குற்றமல்ல இனப்படுகொலைதான் நடந்தது என்று விக்கி…
-
- 5 replies
- 709 views
-
-
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வரதராஜப்பெருமாள் உட்பட 6 பேரிடம் பொலிஸார் விசாரணை மட்டக்களப்பு நகரில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதான வேட்பாளர் வரதராஜப்பெருமாள் உட்பட 6 வேட்பாளர்களை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மட்டக்களப்பு மாநகர சபையில் வரதராஜப்பெருமாள் தலைமையில் தமிழர் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் , மட்டக்களப்பு நகரில் இன்று காலை தமது முதலாவது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்நிலையில் அவர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதாகவும் அதில் சந்தேகம் கொண்ட பொலிஸார், தேர்தல் வி…
-
- 0 replies
- 184 views
-
-
என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை – சி.வி – வாரத்துக்கொரு கேள்வி – 25.12.2017 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சென்ற மூன்று வாரங்களாக சில பல காரணங்களுக்காக வாரத்துக்கான கேள்வி தேர்ந்தெடுக்கப்பட்டு பதிலிறுக்கப்படவில்லை. இவ்வாரத்துக்கான கேள்வி இதோ – கேள்வி: நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன? பதில்: என் கட்சி என்ன? என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள்…
-
- 8 replies
- 995 views
-
-
ஒற்றுமையே இறுதி ஆயுதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றிபெறுமெனவும், இதன் மூலம் கூட்டமைப்பின் பலத்தை மீண்டும் நிரூபிக்க முடியுமெனவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஞாயிறு "சுடர் ஒளிக்கு' வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் வழங்கிய செவ்வி வருமாறு கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் புளொட்டுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. தற்போது சுமூகமான நிலை காணப்படுவதாகவே தகவல…
-
- 0 replies
- 423 views
-
-
வாக்குறுதி மட்டுமல்ல திட்டமும் வேண்டும்! உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகள் மெல்ல மெல்ல ஆரம்பமாகத் தொடங்கிவிட்டன. முக்கியமான கட்சி களின் பரப்புரைகள் தொடங்கவில்லை என்றாலும், சிறு சிறு கட்சிகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன. இதில் ஆரம்பத்திலேயே கேட்க முடியும் குரல் ‘அபிவிருத்தி’ பற்றியதாகவே இருக்கிறது. மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களைப் போன்று அல்லாமல் தமது பகுதியின், வட்டாரத்தின் அபிவிருத்தி குறித்தே மக்கள் கவனத்தில் எடுப்பார்கள் என்று கருதுகின்ற அரசியல்வாதிகள் அது பற்றிய வாக்குறுதிகளையு…
-
- 0 replies
- 304 views
-
-
வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் உதவி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் உதவிகளை வழங்க உள்ளது. வட மாகாணத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் 6 லட்சத்து நான்காயிரத்து 731 அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளது. மீள்குடியேற்றத்திற்கு உதவுதல் மற்றும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுதல் உள்ளிட்ட காரணிகளை முதனிலைப்படுத்தி இவ்வாறு உதவு தொகை வழங்கப்பட உள்ளது. 2003ம் ஆண்டு முதல் இதுவரையில் ஜப்பானிய அரசாங்கம் நிலக்கண்ணி வெடி அகற்றுவதற்காக 32 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2017/58195/
-
- 0 replies
- 219 views
-
-
படைத்தரப்பு பித்தலாட்டம்!! படைத்தரப்பு பித்தலாட்டம்!! கேப்பாபிலவில் இராணுவத்தின் வசமுள்ள எஞ்சிய காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலரிடம் கையளிக்கக் கொண்டு சென்ற மனு இராணுவத்தால் தடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக அபகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக் காணிகளை அல்லது அவற்றுக்கான நட்டஈடு கோரும் மனுவே மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கேப்பாபிலவு மக்கள் குற்றஞ்சாட்டினர். நட்டஈடு கோரிக் கையளிக்கப்பட்ட மனுவுக்கும் தமக்…
-
- 0 replies
- 349 views
-
-
முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஊடுருவல் அதிகரித்து விட்டது!! முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஊடுருவல் அதிகரித்து விட்டது!! களுதாவளையில் அமைக்கப்படும் பொருளாதார மத்தியநிலையம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று தெரிவித்தார் தமிழர் ஐக்கிய சுதந்திரமுன்ன ணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன். இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது, “பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபார…
-
- 0 replies
- 279 views
-
-
தூய அரசியல் கலாசாரத்திற்கான பயணத்தில் கட்சி, நிறம் – குடும்ப உறவு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது- ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இம்முறை தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ள 31 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ வெளியிட்டுவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊழல் மோசடியில்லாத தூய ஆட்சிக்கான சுதந்திரத்தின் உடன்படிக்கை மகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்களிடம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் எதிர்காலத்திற்காக தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் …
-
- 1 reply
- 328 views
-
-
மார்ச் 21 இல் ஜெனிவாவில் இலங்கை குறித்த விவாதம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதேபோன்று பூகோள காலக்கிர மீளாய்வு தொடர்பான இலங்கையின் விவாதம் மார்ச் மாதம் 16ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் இலங்கை தொடர்பான பிரதான விவாதம் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை முன்வைப்பார். அதன்பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் சம்பந்த…
-
- 0 replies
- 252 views
-
-
இலங்கை வருகிறார் யப்பான் வெளிவிவகார அமைச்சர் யப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ , ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளில் யப்பான் மற்றும் இலங்கை சுமூகமான …
-
- 0 replies
- 481 views
-
-
இழுபடும் இனப்பிரச்சினைக்கான தீர்வு இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வின் அவசியம் தொடர்பில் சகல மட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேசமும் இதற்கான அழுத்தத்தினை வழங்கிக்கொண்டு இருக்கின்றது. எனினும் இனப்பிரச்சினை தீர்வு குறித்த முன்னெடுப்புகள் உரியவாறு இடம்பெறுகின்றனவா? என்பது இப்போது கேள்விக்குறியாகி இருக்கின்றது. தமிழ் மக்களின் வலிகளை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதயசுத்தியுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவில்லை என்றெல்லாம் பல விமர்சனங்களும் இப்போது மேலெழுந்து வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக…
-
- 0 replies
- 384 views
-
-
அடுத்த வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் அடுத்த வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந் தன் தெரிவித்தார். வவுனியா நகரசபைக்காக உதய சூரியன்சின்னத்தில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிடும் இ.கௌதமனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பில் ரெலோவும் புளொட்டும் இணைந்து போட்டியிடும் கடைசி தேர்தல் இதுதான். ஏதிர்வரும் செப்டெம்பர் மாதம் …
-
- 3 replies
- 461 views
-
-
அரசியலமைப்பு சபையிலிருந்து விலகினார் விஜயதாச நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து விலகியுள்ளார். விஜயதாச ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார். 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.இதில் 10 உறுபபினர்கள் அங்கம் வகிப்பதுடன், சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சித் தலைவருக்கே இந்த சபையின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சபையின் உறுப்பினர்களாக அரசாங்கத் தரப்பில் இருவர், எதிர்கட்சியில் இருவர், ஜனாதிபதியின் பரிந்துரைக்கமையவும், பிரதமரின் பரிந்துரைக்கமைய ஒருவரும், சிறு கட்சிகளின் சார்பாக ஒருவரும் தெரிவு செய்யப்படுவர். 10 உறுப்ப…
-
- 0 replies
- 255 views
-
-
கேப்பாபுலவில் 132 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு – ரூபவதி கேதீஸ்வரன்! முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று(27) 302 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களின் காணிகளில் 132 ஏக்கர் காணி நாளை(28) காலை பத்து மணிக்கு விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த மாசி மாதம் முதலாம் திகதி 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் குறித்த போராட்டம் 302 ஆவது நாளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.வெயில், மழை, பனி என்று பாராது அம்மக்கள் 10 மாதங்களாக தொ…
-
- 6 replies
- 856 views
-
-
முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு வவுனியா பூந்தோட்டம் மறுவாழ்வு நிலையத்தில் மறுவாழ்வு பெற்றுவந்த மூன்று முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. தலைமைத்துவப்பயிற்சி, தச்சுத்தொழில், பிட்டிங், சிங்கள, ஆங்கில கற்கை மொழிகள், யோகா, கனணி, போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு மூன்று முன்னாள் போராளிகள் அவர்களின் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர். http://newuthayan.com/story/58538.html
-
- 0 replies
- 360 views
-