ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
இலங்கையில் 'விண்கல் மழை' - வெறும் கண்களால் பார்க்க முடியுமென அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஆண்டுக்கு ஒருமுறை மிகவும் தெளிவாக தெரியக்கூடிய விண்கல் மழையை இன்றிரவு (புதன்கிழமை) காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைNASA ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7 முதல் 17ஆம்…
-
- 0 replies
- 403 views
-
-
கோதபாஜ அமெரிக்கா பயணம், கட்சிக்குள் முரண்பாடு காரணம் என தகவல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாஜ ராஜபக்ச அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் விடயத்தில் முரண்பாடு ஏற்பட்டதால் அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என கட்சித் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே கோதபாஜ ராஜபக்சவின் நிலைப்பாடு. ஆனால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அந்த நிலைப்பாட்டை ஏற்கவில்ல…
-
- 0 replies
- 252 views
-
-
கின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம் காலிமுகத் திடலில் கடந்த கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உத்தியோகபூர்வமாக இந்த மரம் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன ரணதுங்க சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இந்த கிறிஸ்மஸ் மரம் திறந்துவைக்கப்பட்டது. காலிமுகத் திடலில் நடைபெற்ற மூன்று நாள் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மரத்தின் உயரம் 72.1 மீற்றர் - அதாவது, 236 அடியும் 6.58 அங்குலம் என்று அளவிடப்பட்டிருந்தது. அதன்படி, உலகின் உயரமான செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் என்…
-
- 0 replies
- 224 views
-
-
யாழில் கண் சத்திரசிகிச்சை செய்துகொண்டோருக்கு கிருமித்தொற்று: விசாரணைகள் ஆரம்பம் inShare யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டமை தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூவரடங்கிய விசாரணைக் குழுவினர், குறித்த தனியார் வைத்தியசாலையில் ஆய்வுகளை நடத்தினர். கண் சத்திரசிகிச்சையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் கிருமித்தொற்று குறித்து விசாரிப்பதற்காக மூவரடங்கிய விசாரணைக்குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். வடமாகாண சுகாதார அமைச்சு, மத்திய சுகாதார அமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கம…
-
- 1 reply
- 426 views
-
-
காணாமல் போனோர் பணியகத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட மூவரே தமிழ் மொழி பேசுவோர் காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூவரே தமிழ்மொழி பேசுபவர்கள் என்றும் ஏனைய நால்வரும் சிங்கள மொழி பேசுவோர் என்றும் தெரியவந்துள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிகளுக்கு நியமிப்பதற்காக ஏழு பேரின் பெயர்களை அரசியலமைப்பு சபை, சிறிலங்கா அதிபருக்கு முன்மொழிந்துள்ளது. இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர்களில் நால்வர் சிங்களவர்கள் என்றும், இருவர் தமிழர்கள் என்றும், ஒருவர் முஸ்லிம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஜெயதீபா, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமைச…
-
- 1 reply
- 273 views
-
-
புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐ.நா கரிசனை கொண்டுள்ளது – சரத் வீரசேகர குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பு கரிசனை கொண்டுள்ளதாக அட்மிரால் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் செய்யும் போது அநேக சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் மற்றும் முகாம்களை மட்டுமே பார்வையிடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். படைத்தரப்பினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடற்படை உயர் அதிகாரிகளான கமாண்டர்கள் …
-
- 1 reply
- 257 views
-
-
முகமாலை தெற்கில் மீள்குடியமர அனுமதி!! முகமாலை தெற்கில் மீள்குடியமர அனுமதி!! பளைப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகமாலை தெற்கின் ஒரு பகுதி நேற்று மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்டது. 25 குடும்பங்கள் மீள்குடிய மரத் தயாராக வந்திருந்தனர். பிரதேச செயலர் திருமதி ஜெ.பிரமோதயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார். 2011ஆம் ஆண்டு தொடருந்துத் தடம் அமைப்பதற்காக வேம்பொடுகேணி முதல் இந்திராபுரம், முகமாலை தெற்குவரை முதன்மைச் சா…
-
- 0 replies
- 308 views
-
-
விக்கி நாடாளுமன்றம் சென்று மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்… அடுத்த தடவை நல்ல முதலமைச்சர் கிடைக்க வேண்டும் – சுகிர்தன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- எமக்கு அடுத்தமுறை நல்ல முதலமைச்சர் ஒருவர் கிடைக்கவேண்டும்.அதேவேளை தற்போதைய முதல்வர் நாடாளுமன்றுக்கு சென்று மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் இதுதான் தனது விருப்பம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்றையதினம் இடம்பெற்றது.இந்த அமர்வில் முதலமைச்சரின் அமைச்சு மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு ம…
-
- 0 replies
- 216 views
-
-
விக்கி டக்ளஸைச் சாடியதால் பொங்கியெழுந்தார் தவராசா!! விக்கி டக்ளஸைச் சாடியதால் பொங்கியெழுந்தார் தவராசா!! ஈ.பி.டி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை மாகாண சபையின் நேற்றைய அமர்வில் விமர்சித்தபோது சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா பொங்கி எழுந்தார். அத்துடன் நிற்காது முதல்வரையும் கடுமையாகச் சாடினார். வடக்கு மாகாண சபையின் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று நடைபெற்றது. அது தொடர்பில் மு…
-
- 1 reply
- 601 views
-
-
தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூரில் தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ்நாடு காவல்துறையினதும், இந்திய இராணுவத்தினதும் பயன்பாட்டில் இருந்த ஆயுதங்கள், தளபாடங்களும், பழங்கான போர்கருவிகள் உள்ளிட்டவையும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக கார்கில் போரின் போது இந்திய இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட டாங்கி ஒன்றும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கரைய…
-
- 0 replies
- 435 views
-
-
யாழ்.மாநகர சபையில் 29 இலட்சம் மோசடி செய்த பெண்ணுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்.மாநகர சபையில் 29 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த பெண்ணுக்கு எதிராக ஏன் இதுவரையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி,தவராசா முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு கேள்வி எழுப்பினார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ். மாநகர சபையில் கடமையாற்றிய பெண்ணொருவர் 29 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்துள…
-
- 0 replies
- 427 views
-
-
கூட்டு அரசின் ஆயுள் 2020 வரை நீடிப்பு! கூட்டு அரசின் ஆயுள் 2020 வரை நீடிப்பு! தற்போது பதவியில் உள்ள கூட்டு அரசு 2020ஆம் ஆண்டு வரைக்கும் பதவியில் நீடிக்கும்; அதற்கான பச்சைக் கொடியை சிறிலங்கா சுதந்திரக் கட்சி காட்டியுள்ளதாக அறியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் ஆயுள்காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், 2020ஆம் ஆண்டுவரை அதை நீடிப்பதற்கு சிறி…
-
- 0 replies
- 253 views
-
-
சாவகச்சேரி நகர சபைத் தேர்தல்- மகிந்த அணியினர் பின்வாங்கல்!! சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வந்த மகிந்தவின் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணிக் கட்சியினர் இறுதி நேரத்தில் தமது முயற்சியைக் கைவிட்டுத் திரும்பினர். தமது வேட்பாளர் பட்டியலில் இருந்த பெயர் ஈ.பி.டி.பி.யினரால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தமையைக் கண்டு வேட்பு மனுவை நேற்றுத் தாக்கல் செய்யா மல் பின்வாங்கினார்கள். சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமானது. நாளை 14ஆம் திகதி மதியம் வரை…
-
- 0 replies
- 309 views
-
-
அரசியல் கைதிகள் வழக்கு- தொடர்ந்தும் இழுபடுகிறது!! அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள தமது வழக்குகளை, வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மீண்டும் மாற்றுமாறு கோரி, அரசியல் கைதிகள் மூவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, பெப்ரவரி 2ஆம் திகதியன்று வாதத்துக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் தீர்மானித்தது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் நீதியரசருமான எல்.டி.பி. தெஹிதெனிய முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்குறிப்பிட்ட திகதி அறிவிக்கப்…
-
- 0 replies
- 313 views
-
-
பழுதடைந்த கேக் மீதான ஐசிங் முதல்வரினது உரை- அஸ்மின் சாடல் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வரவு செலவுத்திட்ட உரை பழுதடைந்த கேக் மீது ஐசிங் போட்டதைப் போலவே இருக்கின்றது என்று உறுப்பினர் அ.அஸ்மின் சபையில் சாடினார். வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கருத்துவெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்துக்கு ஒரு விவாதம்…
-
- 0 replies
- 207 views
-
-
வடக்கு , கிழக்கு பகுதிகளில் வீணையில் தனித்துப் போட்டி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து இடங்களிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, யாழ்ப்பாண மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வேட்பு மனுவைக் கையளித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வாகவு…
-
- 0 replies
- 425 views
-
-
சர்வதேசத்தில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் : ஜனாதிபதி எமது மக்கள் மத்தியில் நிலவிய சமூக முரண்பாடுகளே ஆயுத போராட்டம் வரையில் சென்றடைந்தன. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் நாட்டினை பிளவுபடுத்தும் சக்திகள் சர்வதேச ரீதியில் இன்றும் செயற்பட்டு வருகின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இனி ஒருபோதும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாத யதார்த்தமானதும் நிரந்தரமான ஒரு சமாதானத்தை உருவாக்கும் நாட்டினை கட்டியெழுப்புவதே எமது ஒரே நோக்கமாகும். இன்னொரு யுத்தத்திற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறான ஒரு நாட்டினை உருவாக்க சகல தரப்பினரும் கைகோர்க்க வேண்டும்…
-
- 0 replies
- 132 views
-
-
பிரபாகரன் யுகம் மீண்டும் உருவாகும் அபாயம் : ரோஹித அபேகுணவர்தன அரசாங்கம் வடக்கில் ஒரு சட்டத்தையும் தெற்கில் மற்றுமொரு சட்டத்தையும் அமுல்படுத்துகின்றது. எனவே, இது மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் யுகம் உருவாவதற்கு வழிவகை செய்யும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜ முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடு…
-
- 0 replies
- 115 views
-
-
மஹிந்தவின் தனித்த பயணம் ஒருபோதும் வெற்றியளிக்காது கட்சியில் இருந்து தனித்து செயற்படும் சகல தரப்பினரும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்ளுங்கள். தனித்த பயணம் ஒருபோதும் சாத்தியமாகாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் தனித்த பயணம் அவரது வீழ்ச்சிக்கே வித்திடும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில். …
-
- 0 replies
- 147 views
-
-
அதிகாரப்பகிர்வு மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வல்ல : மனோ கணேசன் அதிகாரப்பகிர்வு மூலமாக மாத்திரம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஒருபோதும் சாத்தியமாகாது. கடந்த கால தவறுகளை திரும்பிப்பார்த்து விடப்பட்ட தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வடக்கிலும், தெற்கிலும் இருந்து நாட் டினை பிரிக்கும் எந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை நாம் தடுத்து நாட்டினை ஒன்றிணைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஒன்றிணைத்த மதச் சகவாழ்வு மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநயாக ஞா…
-
- 0 replies
- 229 views
-
-
காயங்களை ஆற்ற நீண்டகாலம் தேவை யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் காயங்களை ஆற்றுவதற்கு பல வருடங்கள் எடுக்கும். இலங்கை ஏற்கனவே இந்த விடயத்தில் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இந்த சவால்களை வெற்றி கொள்வதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என் றும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இந்த செயற்பாட்டை அரசாங்கத்தி…
-
- 0 replies
- 138 views
-
-
யாழ் மாநகர சபையின் முதல்வராக சி.வி.கே சிவஞானத்திற்கு சந்தர்ப்பம்! உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊடகவியலாளர் வித்தியாதரனை யாழ் மாநகர முதல்வராக நிறுத்துவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இர…
-
- 4 replies
- 523 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் சுமார் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளது: மீள்குடியேற்ற அமைச்சு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. 30 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், அவர்களை மீள்குடியேற்றும் செயற்பாடு இடம்பெற்றதுடன், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,66,906 வீடுகளை அமைக்க வேண்டியுள்…
-
- 3 replies
- 539 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் – சாவகச்சேரியில் UNP – கிளிநொச்சியில் மகிந்த தரப்பு – கட்டுப் பணம் செலுத்தின… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் 11.12.2017 நேற்று நண்பகல் செலுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் முல்லை மாவட்ட முகவர் திலகநாதன் கிந்துஜன் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது இதன்போது கட்சிய…
-
- 1 reply
- 418 views
-
-
வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேரின் சிறைத்தண்டனையை உறுதி செய்தது யாழ். மேல் நீதிமன்றம் யாழ்ப்பாணத்தில் செயற்படும் பிரபல வாள்வெட்டுக் குழுக்களில் ஒன்றான, டில்லு என்பவர் தலைமையிலான வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேருக்கான சிறைத்தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளார். வாள்வெட்டுக் குழுவின் தலைவரான டில்லு உள்ளிட்ட மூவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் ஏனைய ஐந்து பேருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலைய…
-
- 0 replies
- 315 views
-