Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் எழுச்சியுடன் நினைவேந்தல்! திருகோணமலை சம்பூர் ஆலம் குளம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டுளது. இதன்போது லெப்டினன் கேணல் குஞ்சனுடைய துணைவியார் பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் மாவீரர்களின் குடும்பத்தினர் மாவீரர்களுக்கான ஈகைச் சுடரின் ஏற்றி வைத்தனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/heroes-day-in-trinco-

  2. மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரியில் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல்! தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான இன்று மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இத்துயிலுமில்லத்தில் 65 மாவீரர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பல நூற்றுக் கணக்கானோர் இதில் …

  3. வடக்கில் பேரெழுச்சியுடன் மாவீரர் தினம்; தெற்கில் கோட்டாவுக்கு வலை: வீரவன்ச! மைத்திரி – ரணில் தலைமையிலான தேசத்துரோக ஸ்ரீலங்கா அரசாங்கம் உலக தமிழர் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதியின் விளைவாகவே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூர்வதை இன்று தடுக்கமுடியாதிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார். வடக்கில் விடுதலைப் புலிகளின் தலைவரது மாபெரும் உருவப்படம் காட்சிக்கு வைக்கப்படுகின்ற அதேவேளையில், தெற்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பிரித்தானிய ஆட்ச…

  4. மன்னார் ஆண்டான்குளம் மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள்! மன்னார் ஆண்டான்குளத்தில் அமைந்துள்ள மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் , முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் , மத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு 6.05ற்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது மாவீரர்களுக்கான மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுத்திக்கப்பட்ட யுத்தம் நிறைவடைந்தபோது மன்னார் – ஆண்டாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் உரைத்து சேதப்படுத்தப்பட்டு காணப்பட்டது. அது மாத்திரம் இன்றி …

  5. ஈச்சம் குளம் துயிலும் இல்லத்தில் நினைவேந்துவதற்குத் தடை வவுனியா ஈச்சம் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தடையுத்தரவுடன் துயிலும் இல்லத்துக்குச் சென்ற பொலிஸார் நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர் என்று அறிய முடிகின்றது. அதனால் அந்தப் பகுதி மக்களிடையே பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/51000.html

  6. முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியது மஹிந்த ஆதரவு கட்சி உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்று வேட்பு மனு கோரப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவின் கீழ் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி முதன் முதலில் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. அந்த கட்சியானது இன்று மாலைக்குள் 3 மாவட்டங்களில் 16 தொகுதிகள் தொடர்பில் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது. முதலில் களுத்துறை மாவட்டத்திலும் பின்னர் காலியிலும் அதனை தொடர்ந்து கம்பஹாவிலும் அக்கட்சி சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்தும் முதல் வைபவத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொன்டு களுத்துறை மாவட்ட செ…

  7. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் உறவுகளின் கண்ணீரால் நிறைந்தது தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான இன்று தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளெங்கும் மிக உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் பிரதான சுடரினை மாவீரர் இன்குயில் அவர்களது தந்தையார் ஏற்ற சம வேளையில் தமது மாவீரச் செல்வங்களை நினைந்து பெற்றோர் உறவுகள் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் . https://news.ibctamil.com/ta/internal-affairs/heroes-day-in-vannivilangulam-

  8. முல்லைத்தீவு தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் நெடியோனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்! 2017ஆம் ஆண்டுக்கான தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மிகவும் கண்ணீர் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் உறவினர்களால் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் கூடி கண்ணீர் மழையில் மாவீரர்களை அஞ்சலித்…

  9. கோப்பாயில் துயிலும் இல்ல முன் வீதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி! கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன்பாக இராசபாதை வீதியில் தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு இன்று(27) முற்பகல் 11.30 மணிக்கு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 3 மாவீரர்களின் தாயாரும் அரசால் சிறைப்பிடிக்கப்பட்டவருமான அன்னை ஜெயக்குமாரி சுடரேற்றினார். வடக்கு மாகாண அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று துயில் கொள்ளும் ஆயிரக்கணக்கான வீர மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கோப்பாய் துயிலுமில்லத்தில் இராணுவ பிரிகேட் முகாம் அமைக்கப்…

  10. கஞ்சிகுடிச்சாறில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள்! அம்பாறை திருக்கோயில் பிரதேச செயலகப்பரிவிற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் விதையாகிய மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வானது இன்று நடைபெற்றுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 11வருடங்களுக்கு பின்னர் இம்முறைதான் இங்கு பல நெருக்கடிகளுக்கும் மத்தியில் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு காலப்பகுதி வரை மாவீரர் தேசிய நாள…

  11. பாசையூரில் பெருமளவான மக்கள் திரண்டு மாவீரர்களை நினைவேந்தினர்! தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த 30 மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட பாசையூர் பகுதியில் குருநகர் மக்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு இன்று மாலை 6.05 மணிக்கு இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆனொல்ட் தலைமையில் இடம்பெற்ற இந்த வீரவணக்க நிகழ்வில் கடல் சிறுத்தைகள் பிரிவில் வீரச்சாவடைந்த மாவீரரின் தந்தை முதன்மைச் சுடரை ஏற்றினார். இங்கே பெருமளவான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற்று மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தினர். https://news.ibctamil.com/ta/internal-affairs/maveerar-nov27-pasaiyoor

  12. "ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பு" (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடுவதனால் மகிழ்ச்சியடைய முடியாது. எதிரணியில் பலவீனமாக உள்ள நபர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாம் தனித்து ஆட்சியமைக்கும் வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குருநாகல் பிரதேசத்தல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/27574

  13. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்பில் விசாரணை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் நிரோசன் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைப்பதற்கு நான்கு மில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை…

  14. வீர வணக்கம்… கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வு, இன்று (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை, காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாவீரர் தின நிகழ்வில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இரத்த தானமும் இதன்போது நடைபெற்றது. (படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/வீர-வணக்கம்/46-207995

  15. விமானப்படையிரினரின் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் 27 ஆம் ஆண்டு நினைவு! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விமானப்படையிரினரின் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று(27) நினைவு கூரப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வினை நினைவு கூர ஏற்பாடாகிக்கொண்டிருந்த வேளை இலங்கை விமானப்படையினரின் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதன்போது உயிரிழந்த 12 பொது மக்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வன்னிக்குறோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் திருவுருவப்படங்கள் பந்தலில் வைக்கப்…

  16. மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா ஒப்புதல் மத்­தல விமான நிலைய அபி­வி­ருத்தி உள்­ளிட்ட இந்­தி­யா­வுடன் இணைந்து இல ங்கை மேற்­கொள்ளும் கூட்டு முயற்சி திட்­டங்­க­ளுக்கு சீனா முழு­மை­யான ஒப்­பு­தலை வழங்­கி­யுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன தெரி­வித்தார். சீனா­வுக்கு அண்­மையில் மேற்­கொண்­டி­ருந்த உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் தொடர்­பாக ஊடகம் ஒன்­றுக்கு விளக்­க­ம­ளித்த போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். “மூலோ­பாய முக்­கி­யத்­துவம் வாய்ந்த மத்­தல விமான நிலைய அபி­வி­ருத்தித் திட்டம், திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதம் அபி­வி­ருத்தித் திட்டம் உள்­ளிட்ட இந்­தி­யா­வு­ட­னான கூட்டு முயற்சித் திட்­டங்­க­ளுக்கு சீனா முழு­மை­யான ஒப்­…

    • 2 replies
    • 217 views
  17. அம்பாறை மாவட்டத்தில் அடை மழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட தாழ்நிலப்பகுதிகள், மற்றும் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கரையோரப்பிரதேசங்களில் உள்ள சில குடியிருப்புகளும் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களின் அன்றாட நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏறடபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நேற்றிரவு முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் என்பதுடன் வீதிகள், வயல் வெளிகள் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத…

  18. நல்லாட்சியின் கூட்டு உடைகிறது நல்லாட்சியின் கூட்டுக்குள் பாரிய நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்தக் கூட்டு உடைந்துவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக, நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஆலோசனைகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்தால் மட்டுமே, இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமென்றும் அத்தகவல் தெரிவிக்கின்றது. சுதந்திரக்கட்சி அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்தால், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ…

  19. வீதிக்கு வந்த நல்லாட்சி பங்காளிகளின் உள்வீட்டு மோதல் (லியோ நிரோஷ தர்ஷன்) தேசிய அரசாங்கத்தின் பங்காளிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான மோதல்கள் வீதி சண்டைகளாக தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை சுதந்திர தினத்திற்கு முன் வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியுடன் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னர் வலுவான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்ற எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை எடுத்து வந…

  20. பிரபாகரனின் பிறந்த நாளில் சம்பந்தனுடன் இணைந்த முன்னாள் கடற்புலி முக்கியஸ்தர் யுத்த காலத்தில் மன்னார் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தலைவர் தியாகவராசா அருள்செல்வம் என்பவர், வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனை சந்தித்த அவர், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஆர்.சம்பந்தன் ஊடாகவே தீர்வு பெற்றுக் கொள்ள முடியும் என த…

  21. கொடிகாமம் துயிலும் இல்லம் முன்பாகவும் அஞ்சலி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொடிகாமம் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு பாரிய படைமுகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் கொடிகாமம் துயிலும் இல்லம் முன்பாக இன்று மதியம் அஞ்சலி சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர். http://globaltamilnews.net/archives/51788

  22. வலிகாமம் ஒட்டகப்புலத்தில் 29 ஏக்கர் காணி விடுவிப்பு! கோப்புப் படம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஒட்டகப் புலத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 29 ஏக்கர் காணிகள் நாளைமறுதினம் புதன்கிழமை(29) விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் வசாவிளானுக்கும், அச்சுவேலிக்கும் இடைப்பட்ட பகுதியான ஒட்டகப்புலம் அமல உற்பவ மாதா தேவாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. https://news.ibctamil.com/ta/internal-affairs/Land-Acquisition-Release-29-acre-land-in-Valikamam

  23. வாள்களுடன் பயணித்ததாக கூறி இரு இளைஞர்கள் கைது- சாவகச்சேரியில் சம்பவம்! சாவகச்சேரி மட்டுவில் - சிவன்கோவில் வீதியில், வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சாவகச்சேரி பொலிஸாரின் வீதிச் சோதனையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றியே மோட்டார் சைக்கிளில் பணித்ததாகவும் ஏதேனும் குற்றச் செயலைப் புரிவதற்காகவே அவர்கள் இவ்வாறு சென்றிருப்பர் என்று நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட…

  24. பல்கலை வாளாகத்திலும் புலிக்கொடி மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுவரும் நிலையில், கிழக்கு பல்கலை வாளாகத்திலும் இன்று காலை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. http://newuthayan.com/story/50838.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.