ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
கொழும்பில் 50 ரூபாவுக்கு பயணிக்கும் தூரத்துக்கு யாழில் 300 ரூபாவை கட்டணமாக அறிவிடும் ஆட்டோ சாரதிகள் – வட மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் (மயூரன்) வடக்கிலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டுப்பாடு இல்லாமல் கட்டணங்களை அறவிடுவதைக் கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விசேட கவனயீர்ப்பு பிரேரணையை முன் மொழிந்தார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் க…
-
- 0 replies
- 226 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரட்டைக் குடியுரிமை உண்டு அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கீதா குமாரசிங்கவைத் தவிர்ந்த வேறும் சிலரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என அவர் சுட்டி…
-
- 0 replies
- 241 views
-
-
கருத்துக் கணிப்பாக மாறப்போகும் தேர்தல் முடிவு எதிர்வரும் தை மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் குறித்த பரபரப்பு மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது.வேட்பாளர் தெரிவுகள், கூட்டணிகள் குறித்த பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. யார் மாநகர பிதாவாவது, யார் சபைத் தலைவராவது என்கின்ற பேச்சுக்களும் அடிபடத் தொடங்கிவிட்டன. தேர்தல் வருகின்றது என்பதனாலேயே மாவீரர்களின் தியாகங்களைத் தூசு தட்டி எடுத்துத் துயிலுமில்லங்களைத் துப்புரவாக்கத் தொடங்கிவிட்டார்கள் என்கின்ற விமர்சனங்களும் உண்டு. அதில் உண்மையில்லை என்று ஒரேயடியாக மறுக்கவும் முடியாது. வடக்கு, க…
-
- 0 replies
- 531 views
-
-
வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் கைது வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா நகரப்பகுதியில் சந்தேகத்திடமான நபர்களை சோதனை செய்த போது கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் வேறு வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து 1 கிலோ 910 கிராம் கேரளா கஞ்சாவுடன் ப…
-
- 0 replies
- 482 views
-
-
தற்போது பிரபாகரன் இருந்திருந்தால் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், கனிய எண்ணெய் மூலமாகவே போரில் வெற்றி பெற்றிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று -07- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கைக்கு வரும் எண்ணெய் கப்பல்களை சமுத்திரத்தில் நிறுத்தி வைப்பதனால் பிரபாகரன் அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து, யுத்தத்தில் இலகுவாக வெற்றி பெற்றிருப்பார். யுத்தம் நடைபெற்ற போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு விடுதலைப் புலிகளால் முடியுமாக இருந்தது அந்த வகையில் தற்போது யுத்தம் நடைபெற்றிருந்தால் இன்று இலங்கை இருந்திருக்காது. நாம் பிரபாகரனின் அட…
-
- 0 replies
- 378 views
-
-
யாழ்ப்பாணத்தில் பெய்யும் தொடர் மழை : 3 ஆயிரத்து 862 பேர் பாதிப்பு! யாழ் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்து 98 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்த மழை தொடர்சியாக பெய்து வருகின்ற நிலையில் வடக்கில் யாழ் மாவட்டத்திலும் தொடர்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சில சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் 01-உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 94 குடும்பங்களை சேர்ந்த 342 பேர் …
-
- 0 replies
- 635 views
-
-
தோராவில் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிக்கு இராணுவம் இடையூறு ! முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்ய சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக எமது ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்வதற்கு நேற்றையதினம் செவ்வாய்கிழமை(07112017)சென்ற மாவீரர்களின் உறவினர்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் வன்னி விளாங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் துயிலும் இல்லம், முழங்காவில் துயிலும் இல…
-
- 0 replies
- 529 views
-
-
தரமற்ற பெற்றோலை கப்பலிலிருந்து இறக்கமாட்டேன் (ஆர்.ராம். எம்.எம்.மின்ஹாஜ்) எவர் என்ன கூறினா லும் என்னை வீட்டுக்கு அனுப்பினாலும் நான் அமைச்சராக இருக்கும் வரை தரமில்லாத பெற்றோலை கப்பலில் இருந்து இறக்க மாட்டேன். அத்துடன் இந்த விடயத்தில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எனக்கு அழுத்தம் பிரயோகம் செய்யவில்லை. மேலும் இந்த பிரச்சினையை ஒரு சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். தயவு செய்து இந்த பிரச்சினையை தீர்க்க எனக்கு இடமளியுங்கள் என துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சபையில் தெரிவித்தார். இந்த நிலைமைக்கு நாட்டை கொண்டு வந்தமைக்கு காரணமானவர்களை இனங்காணும் வகையில் விசார…
-
- 0 replies
- 345 views
-
-
வழக்கை மீண்டும் மாற்றுவதற்கு மேன்முறையீடு செய்ய முடியும் நீதியமைச்சர் தலதா விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சாட்சியாளர்கள் தமக்கான பாதுகாப்பு இல்லையென்று கோரியதன் காரணமாகவே வவுனியா நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதாக சபையில் தெரிவித்த நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள வழக்கை மீண்டும் மாற்றுவதற்காக மேன்முறையீடு செய்யமுடியும் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை நீதித்துறை, குற்றச்செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சியாளர்களுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு, குற்றச்செயல்களை தடுத்தல் ஆகிய திருத்தச்ச…
-
- 0 replies
- 236 views
-
-
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம் : சதித்திட்டமா? ஆராய்வதற்கு அமைச்சரவை உப குழு நியமனம் (நமது நிருபர்) நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் குறித் தும் இந்த விவகாரத்தில் சதித்திட்டம் ஏதே னும் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, அநுரபிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த ஆகிய மூவரை உள்ளடக்கியே இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முற்பகல் ஜனாதி…
-
- 0 replies
- 456 views
-
-
ஜனாதிபதியினால் மாத்திரமே நாட்டைக் காப்பாற்ற முடியும்- மெதகொட அபயதிஸ்ஸ அனு 33 mins முன் செய்திகள் Leave a comment 2 Views தற்போதுள்ள கள நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் தகுதியான ஒரு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தான் என இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். எளிய அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். நாட்டில் பொது எதிர்க் கட்சியென்று உள்ளது. இருப்பினும், இதுவரையில் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த எந்தவொரு சட்ட மூலத்தையும் அதனால் தடுத்து…
-
- 0 replies
- 271 views
-
-
தமிழ்த் தலைவர்கள் எதையும் சாதிக்கவில்லை தமிழ் மக்களுக்கான உரிமை மற்றும் தீர்வு தொடர்பான, எமது தமிழ்த் தலைவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் பேச்சளவிலானது மாத்திரமே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் சாடியுள்ளார். வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பு விழா பாடசாலை முதன்மை மண்டபத்தில் பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அப்போதிருந்த தந்தை செல்வா தொடக்கம் தற்போது சம்பந்தன் ஐயா வரைக்கும…
-
- 1 reply
- 455 views
-
-
உத்தியோகபூர்வ மொழியாகும் தமிழ் – இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்கு மகாணங்களில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசமைப்பு உருவாகவுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச வேலைகளில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். http://newuthayan.com…
-
- 13 replies
- 1.6k views
-
-
ஆளுனர் அலுவலத்தின் பின் கதவு எங்கே உள்ளது. – சிவாஜி கேள்வி:- வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என தனக்கு தெரியாது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசியல் கைதிகள் தொடர்பில் வடமாகாண ஆளுனரை சந்தித்து கதைத்து இருந்தேன். மறுநாள் பத்திரிகை ஒன்றில் சிவாஜிலிங்கம் ஆளுனரை பின் கதவால் சந்தித்தார் என செய்தி வெளியிட்டு இருந்தது. வடமாகாண ஆளுனரின் அலுவலகத்திற்கு செல்வதற்கு பின் வழியாக வாசல் இருக்க…
-
- 0 replies
- 390 views
-
-
2 மில்லியன் ரூபா போலி நாணயத் தாள்களுடன் அரியாலையில் தம்பதியர் கைது!! போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளம் தம்பதியர் இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 400உம், ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 148 உம் கைப்பற்றப்பட்டன. அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்டன என்று நம்பப்படும் பிறின…
-
- 2 replies
- 697 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது குறித்து கூட்டமைப்பின் உறுப்புக்கட்சிகளிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. புதிய அரசியலமைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை தமிழசுக் கட்சி தான்தோன்றித்தனமாக தீர்மானம் எடுப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி குற்றம் சுமத்தி வந்தது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பல தடவைகள் கோரியும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இந்தப் பின்புலத்தில் …
-
- 0 replies
- 495 views
-
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு ! முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில்; வீடொன்றிற்கு அருகில் சிறிய கொட்டில் அமைப்பதற்கு குழிதோண்டிய போது உரப்பை ஒன்றில கட்டப்பட்ட நிலையில் ஐம்பது மிதிவெடிகளும் அவற்றிற்கான வெடிப்பிகளும் மீட்கப்பட்டுள்ளன. மக்கள் மீள்குடியேற்றம் செய்;யப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில் உள்ள குடும்பமொன்று அவரது காணிக்குள் நிரந்தரவீடொன்றினை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பருவமழை பெய்துவருவதனால் இன்று (07-11-2017) வீட்டின் அருகில் கொட்டில் ஒன்றைப்;போடுவதற்கு கிடங்;கு கிண்டியபோது, வெடிபொருட்கள் வெளிவந்தததையடுத்து, கிராமஅலுவலர் மற்றும்…
-
- 0 replies
- 375 views
-
-
பிள்ளையானின் வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் 07 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய சந்தேக நபரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசன்துரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதடன் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதில் ஒருவர் தேடப்பட்டுவரும் நிலையில் ஒருவர் மரணம்அடைந்துள்ள…
-
- 0 replies
- 700 views
-
-
மாட்டுவண்டியில் பயணித்த மகிந்த அணியினர் நாட்டில் தற்போது நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு நிலையில் வடமேல் மாகாண சபையின் இன்றைய அமர்வுக்கு மகிந்த அணியினர் மாட்டுவண்டியில் சென்றுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியும், நல்லாட்சி அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையிலாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் மகிந்த அணியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தனர். http://newuthayan.com/story/44435.html
-
- 0 replies
- 325 views
-
-
மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு வடக்கு – கிழக்கில் இடம்மாற்றம் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 7 மாவட்ட நீதிபதிகளுக்கு வருடாந்த இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம்மாற்றம் 2018 ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்குவரும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் , வவுனியா மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும் மாற்றப் பெறுகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கழநிதிபாலன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் கல்முனை மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் பெற…
-
- 0 replies
- 251 views
-
-
வடக்கு கிழக்கை இணைத்தால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் இனங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை துண்டுகளாகப் பிரிக்க முற்பட்டால் நாட்டில் மீண்டுமொரு பேரழிவு ஏற்படும் என உத்தேச அரசியல் யாப்பிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் முக்கிய பௌத்த பிக்குகளில் ஒருவரான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பௌத்த பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எச்சரித்துள்ளார். ஹம்பாந்தோட்டை சிப்பிகுளம் பகுதியில் உள்ள முகம்மதியா இஸ்லாமிய அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். நாட்டில் வாழும் அனைத்து இன மற்றும் மதங்களை மதித்து அவர்களுக்…
-
- 1 reply
- 456 views
-
-
கூட்டமைப்பில் இருந்து விலகுகிறார் ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு பேரவையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பளிக்கப்படாததை அடுத்தே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டராங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி அனந்தன், அரசியலமைப்பு பேரவையில், தமக்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறு பலமுறை சபாநாயகரிடம் கோரியிருந்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் இரா…
-
- 0 replies
- 264 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவொரு இறுதிச் சந்தர்ப்பம் கூட்டு அரசினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் போகுமானால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் எந்த அரசினாலும் அது இயலாது போய்விடும் என்பதுதான் யதார்த்த நிலையாகும். இந்த நாட்டில் இரண்டு முதன்மைக் கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இன்று அவையிரண்டும் கொள்கை அளவில் ஒத்த கருத்துக்களையே கொண்டுள்ளன. இலங்கை ஒரு சிறிய நாடு என்ற வகையில், அருகில் உள்ள சீனா, இந்தியா போன்ற பெரிய நாடுகளை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் சந்தர்ப் பத்துக்கு ஏற்றவாறு தமது கொள்கைகளை அவ்வப்…
-
- 0 replies
- 374 views
-
-
பெற்றோலுக்கே திணறும் அரசுக்கு ‘‘பெடரல்” ஒரு கேடா:- மகிந்த கிண்டல் பெற்றோல் பிரச்சினைக்கே தீர்வை வழங்கத் திண்டாடும் இந்த அரசு, பெடரல் (கூட்டாட்சி) விவகாரத்தை எப்படிக் கையாளப்போகின்றதோ எனத் தெரியவில்லை. இவ்வாறு கிண்டலா கக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த அரசிடம் நிர்வாகத் திறனோ அல்லது முகாமைத்துவ திறனோ துளியளவேனும் இல்லை. எந்த விடயத்தில் கை வைத்தாலும் பிரச்சினை தலைவிரித்தாடுகின்றது. அவற்றைத் தீர்ப்பதற்குரிய நடைமுறையும் அரசுக்குத் தெ…
-
- 0 replies
- 344 views
-
-
யாழ். பல்கலை பட்டமளிப்பை இரண்டு பிரிவாக நடத்த மாணவர்கள் எதிர்ப்பு : மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை புறந்தள்ளி 33வது பொதுப்பட்டமளிப்பினை இரண்டு பகுதியாகவே நடாத்துவதற்கு யாழ் பல்கலை நிர்வாகம் தீர்மானத்துள்ளதாக அறிவித்தமைக்கு மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல் பகுதி டிசம்பர் 09 2017இல் கலை மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களை தவிர்த்து நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/48718
-
- 0 replies
- 280 views
-