ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
நாடு கடத்தப்பட்ட நால்வர் விளக்கமறியலில்! போலி கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி வெளிநாடு சென்ற நால்வரை பொலிஸார் கைது செய்தனர். பருத்தித்துறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வர் போலி கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தனர். அவை போலி கடவுச் சீட்டுக்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட நால்வரும் நேற்று இலங்கை வந்திறங்கினர். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தகவலின் பேரில், குறிப்பிட்ட நால்வரையும் இரகசிய பொலிஸார் கைது செய்து மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தினர். சந்தேக நபர்கள் நால்வரையும் நாளை (30…
-
- 0 replies
- 419 views
-
-
“அரசியலமைப்பு ஏற்கனவே தயாராகிவிட்டது”: தேரர் தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவல் புதிய அரசியலமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் வண.பெல்லன்வில விமலரதன தேரர். “புதிய அரசியலமைப்புக்கான எதிர்ப்புகள் இன்னும் அடங்காத நிலையில், அரசியலமைப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பைத் தயார் செய்த இரண்டு பேரின் பெயர்களும் எனக்குத் தெரியவந்துள்ளது. அது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்” என்று தேரர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு வெகு விரைவில் பாராளுமன்றில் கையளிக்க…
-
- 0 replies
- 281 views
-
-
ஆட்சியைப் பிடிக்க மகிந்த விசமத்தனம் FacebookTwitterPinterestEmailGmailViber ஆட்சியைப் பிடிக்க மகிந்தவும் அவரது அணியினரும் புதிய அரசமைப்புத் தொடர்பிலும், வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விசமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இதற்கு வலுச்சேர்ப்பது போல் எமது தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார். இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 291 views
-
-
சிங்கள அரசியல், மத தலைவர்களுக்கு அதிகாரங்களைத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிங்கள அரசியல், மதத் தலைவர்கள் என்ன தருவார்கள் என்று யோசிக்காதீர்கள். உங்களுக்கு வேண்டியதை ஒன்றுபட்டுக் கேளுங்கள். ஒரே குரலில் கேளுங்கள். என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தாங்கள் சிங்கள அரசியல் மற்றும் மத ரீதியான தலைமைகளுடன் பலதையும் பேசி வருகின்றீர்கள். சில நேரங்களில் அவர்களைச் சினம் ஊட்டும் வண்ணமும் கருத்துக்ளை வெளியிட்டு வருகின்றீர்கள். இதனால் தர இருப்பதையும் சிங்கள அரசியல் தலைவர்கள் தராது விட்டு விடுவார்களோ என்ற ஒரு பயம் தமிழ் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகிறது. இது பற…
-
- 0 replies
- 331 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (28-10-2017)
-
- 0 replies
- 233 views
-
-
தடுமாறும் கூட்டரசு FacebookTwitterPinterestEmailGmailViber மீன் விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்த வியாபாரி ஒருவரிடம் வந்த அவரது நண்பர்கள் சிலர் இவ்வளவு நல்ல மீன்களை விற்கும் கடைக்கு ஒரு விளம்பரப் பலகையைப் பொருத்தினால் நல்லதல்லவா? என்றார்கள். மீன் விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்த வியாபாரி ஒருவரிடம் வந்த அவரது நண்பர்கள் சிலர் இவ்வளவு நல்ல மீன்களை விற்கும் கடைக்கு ஒரு விளம்பரப் பலகையைப் பொருத்தினால் நல்லதல்லவா? என்றார்கள். நண்பர்களது யோசனைக்கமைய விளம்பரப்பலகை யொன்றைப் பொருத்தினார் அந்த வியாபாரி. ‘‘இங்கு புதிய மீன்கள் விற்பனைக்கு உள்ளன’’ எனவும் அதில் பொறி…
-
- 0 replies
- 367 views
-
-
படைக்குறைப்பு அவசியத்தை வலியுறுத்தும் அரியாலைச் சூடு அரியாலைப் படுகொலை தொடர்பான விசாரணைகள் கடற்படையினரை நோக்கித் திரும்பியிருக் கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை டொன்பொஸ்கோ டெஸ்மன் (வயது 25) என்ற இளைஞர் வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவர் சுடப்பட்டார். படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். கொலையாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் சந்தேக வளையம் கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினர் மீது விழுந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்…
-
- 0 replies
- 517 views
-
-
போர்க்குற்ற நீதிபதி மோட்டூ நுகுசி இலங்கைக்கு இரகசியப் பயணம் FacebookTwitterPinterestEmailGmailViber கம்போடியாவில் போர்க்குற்றங்களை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இடம்பெற்றிருந்த ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி, இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நீதிபதி மோட்டூ நுகுசி மூன்று பேர் கொண்ட ஜப்பானிய குழுவுக்குத் தலைமை ஏற்று இலங்கை வந்துள்ளார். இந்தக் குழுவினர் பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, வான்படைத் தளபதி கபில ஜெயம்பதி, …
-
- 0 replies
- 416 views
-
-
தேசியமட்ட ஆங்கிலப் போட்டியில் வடக்கில் 10 பேருக்கு முதலிடங்கள் FacebookTwitterPinterestEmailGmailViber தேசிய மட்ட ஆங்கிலப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் வடக்கு மாகாணம், 10 முதலாம் இடங்களையும், 7 இரண்டாம் இடங்களையும், 4 மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளது என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்தார். வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் வருமாறு, உரையாடல் நாடகம்: கனிஷ்ட பிரிவு நாடகம்–விதுவர்சன் – வவுனியா தமிழ் ம.ம.வி., சிரேஷ்ட பிரிவு நாடகம்– இ.அட்சயன்– – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. ஆங்கிலப் பிரதி எழுதுதல் (அச்செழுத்து)– பி.பிரவீணா , தரம் -6 (முதலாம் இடம்) வடமராட்சி இமையாணன் அ.த.க.பா…
-
- 0 replies
- 717 views
-
-
இலங்கையில் முதன்முறையாக அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் முப்பத்து இரண்டு வருடங்களின் பின், அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது. கொழும்புத் துறைமுகத்தை நாளை (28) வந்தடையவுள்ள ‘த நிமிட்ஸ் கெரியர் ஸ்ட்ரைக் க்ரூப்’ என்ற இந்தக் கப்பல், அதன் துணைக் கப்பல்களுடன் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், 1985ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முதலாக ஒரு விமானம் தாங்கிக் கப்பல் இலங்கைக்கு வருவதன் மூலம், அண்மைக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. ச…
-
- 1 reply
- 449 views
-
-
வவுனியாவில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தொகை வெடி பொருட்கள் மீட்பு வவுனியா, கல்நட்டன்குளம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலாப் பகுதி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தொகை வெடி பொருட்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கயை குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. எம்.பி.எம்.ஜீ வகையை சேர்ந்த சுமார் 500 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவை விடுதலைப்புலிகளினால் யுத்தகாலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை…
-
- 0 replies
- 224 views
-
-
தனிப்பிராந்தியமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது வடமாகாணம் வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்தியமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தற்காலத்தில் இலங்கையில் பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். எந்தவொரு நாட்டுக்கோ அ…
-
- 5 replies
- 719 views
-
-
ஊழல், போர்க்குற்றங்களிலிருந்து தப்புவதற்காக இடைக்கால அறிக்கையை எதிர்க்கிறார்கள் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு அமைதியாக இருக்கிறோம் என்கிறார் மாவை எம்.பி. (எம்.நியூட்டன்) ஊழல்களை மறைக்கவும் போர்க் குற்றம் புரிந்தவர்கள் தப்பிச் செல்லவும் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவும் தான் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை இனவாதமாகப் பார்க்கிறார்கள். இதனால்தான் வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கையை எதிர்க்கின்ற நிலைமை உருவாகி யுள்ளது எனத் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எம்மை விமர்சிப்பவர்களுக்கு உரிய பதிலை வழங்க ம…
-
- 1 reply
- 305 views
-
-
இப்போது என்னால் ஏதும் கூறமுடியாது FacebookTwitterPinterestEmailGmailViber வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இப்போதைக்குத் தன்னால் எதுவும் கூறமுடியாது என்று கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். காங்கேசன்துறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசாவே அடுத்த முதலமைச்சராவதற் குத் தகுதியானவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்திருந்தார். நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவும் அதற்கு மறுப்பே…
-
- 1 reply
- 552 views
-
-
ஆட்சியாளர்கள் மீதான நம்பிககையீனத்தால் புதிய அரசியலமைப்பை எதிர்க்கிறோம் கலாநிதி நாலக்க கொடஹேவா கேசரிக்கு செவ்வி நேர்காணல்: ஆர்.ராம்– படப்பிடிப்பு: உதேஷ் இந்திக்க தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு நாம் எதிரானவர்கள் இல்லை. ஆனால் ஆட்சியில் உள்ள தலைவர்கள் மீதான நம்பிக்கை கேள்விக் குறியாகவுள்ளது. அதன் காரணத்தினாலேயே புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை எதிர்க்க வேண்டியுள்ளது என வியத்மக என்னும் தொழில்வாண்மையாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஐ.நா.வில் புலம்பெயர் அமைப் ப…
-
- 0 replies
- 396 views
-
-
மைத்திரியும், ரணிலும் சிறையில் இருக்க வேண்டியவர்கள்;நாமல் தெரிவிப்பு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிமசிங்கவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆனால் பொதுச் சொத்துக்களை விற்பனை செய்வதை எதிர்த்து போராடுகின்ற பொதுமக்களுக்கு மட்டுமே ஸ்ரீலங்காவில் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின்போது கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை நேற்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட…
-
- 0 replies
- 345 views
-
-
அதிகாரம் இல்லாத பாராளுமன்றத்தை குண்டுவைத்து தகர்ப்பதே மேலானது விமல் வீரவன்சவின் கட்சி மீண்டும் வலியுறுத்தியது (ஆர்.யசி) பிளவுபடாத இலங்கையை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும். ஆகவே, புதிய அரசியல் அமைப்பை தோற்கடிப்பதையே இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றோம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்தது. அதிகாரம் இல்லாத பாராளுமன்றம் இருப்பதை விடவும் குண்டு வைத்து தகர்ப்பதே மேலானது. இதுவே கட்சியின் நிலைப்பாடு எனவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி அலுவலகத்தில் இடம…
-
- 1 reply
- 497 views
-
-
"இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்று வித்தையாகும்" (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்று வித்தையாகும். சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் எடுக்கும் போது அதன் மத்திய குழுவில் 950 அங்கத்தவர்களில் 46 பேர் மாத்திரமே இருந்துள்ளனர். எனவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்பட்டு வருவதாக புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குற்றம் சுமத்தினார். அதேபோன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களில் 40 அங்கத்தவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். என…
-
- 0 replies
- 349 views
-
-
தேவைப் பகுப்பாய்வு மதிப்பீடு விரைவில் வடக்கில் நடக்கும்! FacebookTwitterPinterestEmailGmailViber வடக்கு மாகாண தேவை பகுப்பாய்வு மதிப்பீட்டை மேற்கொள்ள வடக்குக்கான அபிவிருத்திச் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதோடு அதற்கான நிதியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கான அபிவிருத்திச் செயலணிச் செயற்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் தலைமை அமைச்சரின் செயலாளர் பாஸ்கரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் போர் முடிந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வடக்குக்கான அபிவிருத்திக்…
-
- 0 replies
- 426 views
-
-
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிசார் வவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார் திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று 27 ஆம் திகதி முற்பகல் உறவினருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது குறித்த முன்னாள் போராளி எங்குள்ளார். ? என்ன தொழில் புரிகின்றார்? திருமணமாகியுள்ளதா? போன்ற விபரங்களை கேட்டுப் பெற்றுள்ளதாக முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 297 views
-
-
அரசியல் கைதிகள் விடயத்தில் பாரிய அலட்சியப்போக்கு போராட்டங்கள் தீவிரமடையும் என்கிறது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு (இரோஷா வேலு) உண்ணாவிரதமிருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உட்பட அனைத்து தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அனைத்து அரசியல் தரப்புக்களினதும் செயற்பாடுகளை கண்டிப்பதாக தெரிவித்த அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு போராட்டங்கள் தீவிரமடையும் நிலைமைகள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஊடகவிய லாளர் மாநாடு நேற்று கொழும்பு 'குரு மதுர' காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவ்வமை…
-
- 0 replies
- 233 views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தவறான பிரசாரம் கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி நேர்மையான, எளிமையான அரச தலைவராக விளங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கை இன்று சரியான பாதையில் பயணிப்பதையிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கட்டாரில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தனர். கட்டாருக்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கட்டாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகல் டோஹா நகரில் இடம்பெற்றபோதே அவர்கள் இவ்வாறு தெ…
-
- 0 replies
- 373 views
-
-
காதலித்து ஏமாற்றிய இளைஞனுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை 16 வயதுக்கு குறைந்த சிறுமியை காதலித்து பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. முல்லைத்தீவு, மாங்குளம், ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன், 2011 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை காதலித்து ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி ஒரு குழந்தைக்கு தாயாக்கியுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞன் தன்னை திருமணம் முடிப்பார் என காத்தி…
-
- 0 replies
- 339 views
-
-
யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தாய் சாவு!! யாழ்ப்பாணம் அரியாலையில் தாய் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. இரு ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. கடன் தொல்லையே தாய் தவறான முடிவெடுக்கக் காரணமாக அமைந்துள்ளது என் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பெண்ணின் கணவர் இரு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார் என்றும், அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தா் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan…
-
- 18 replies
- 3k views
- 1 follower
-
-
சமஷ்டிக்கான முயற்சியின் பின்னணியில் சர்வதேசம் சர்வதேசத்தின் தேவைக்கு அமைவாகவே இலங்கையில் சமஷ்டி முறைமை க்கு சமனான ஆட்சி முறையை நிறுவுவ தற்கு முயற்சிக்கப்படுகிறது. அந்தவகை யில் அரசாங்கத்தின் அரசியலமைப்பு தயாரிப்பு முயற்சியின் பின்னணியில் சர்வதேசமே காணப்படுகின்றது என்று முன்னாள் பாதுகாப்பு பேச்சாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரம்புக்வெல்ல தெரிவித்தார். இலங்கையில் சமஷ்டியை உருவாக்குவதன் மூலம் வடக்கு பிராந்தியத்துடன் தனித்து கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கே சர்வதேச நாடுகள் முயற்சிக்கின்றன. அதற்காகவே இவ்வாறு இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான …
-
- 0 replies
- 470 views
-