ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
தமிழ் பெயர் கொண்ட ஒருவர் நியூசீலாந்திலிருந்து போலி வேலை வாய்ப்பு அறிவித்தலை விடுத்துள்ளார்? நியூசீலாந்தில் வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி பொய் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வருவதை குறிப்பிட்ட தொழிற்சாலை நிறுவனம் மறுத்துள்ளது. Rotational Plastics என்ற நிறுவனத்தில் பணியாற்றுபவராகத் தம்மை அறிமுகப்படுத்தும் தமிழர் ஒருவர் பல தொகைப்பணத்தைக் கட்டி வருவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுமாறு கேட்கிறார். தங்குமிட வசதிகளும் வேறு கொடுப்பனவுகளை பற்றி அதில் விண்ணப்பம் அறிக்கைவடிவில் அவர் அனுப்புகிறார். இதுப்பற்றி நியூசீலாந்தில் வாழும் இலங்கையர் ஒருவர் நேரடியாக இந்த நிறுவனத்தை விசாரித்தபொழுது இதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல…
-
- 0 replies
- 186 views
-
-
அரசியல் கைதிகளின் வழக்கு மாற்றம் தொடர்பில் நாளை முடிவு அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளை வவுனியாவிற்கு இடமாற்றம் செய்வது தொடர் பில் நாளை வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்மானம் எடுப்போம். இது தொடர் பில் பேசித் தீர்க்க நாம் தயாராக உள்ளோம். அத்துடன் அரசியல் கைதிகளின் வழக்கு விசார ணைகளை துரிதப்படுத்த தயாராக உள்ளோம் என சபையில் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்தது. அத்துடன் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயாராக உள்ளோம். மேலும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அடுத்த வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் குறிப்பிட்டனர். பாராளுமன்றத்தில் நேற்று செவ்…
-
- 0 replies
- 182 views
-
-
‘மகிழ்ச்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும்’ “தீபத்திருநாளானது, அதனைக் கொண்டாடும் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்கும் லௌகீக வாழ்க்கைக்கும் ஒளியின் பங்கு மிக முக்கியமாக அமைகின்றது. அந்தவகையில், தீபாவளி தினத்தன்று இந்து பக்தர்களால் ஏற்றப்படும் தீப ஒளியானது, அவர்களது உள்ளங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துவதைப் போன்றே நம் நாட்டின் அ…
-
- 2 replies
- 576 views
-
-
கூட்டு அரசின் செயற்பாடுகள் எல்லாவற்றையும் எதிர்க்கவில்லை மகிந்த அணியின் உறுப்பினர் ஜானக வகும்புர தெரிவிப்பு நாம் அரசின் செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்க்கவில்லை. நல்லவற்றை ஆதரிக்கிறோம். அவற்றுக்கு கை உயர்த்தவே செய்கின்றோம். மக்கள் விரோதச் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது. இவ்வாறு மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வகும்புர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:இந்த அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் தினமும் தாக்கப்படுகின்றனர். நாட்டின் வளங்களைப் பாதுகாப்பதற்காகப் போராடும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப…
-
- 0 replies
- 227 views
-
-
வவுனியா பேருந்து ஒன்றில் கூட்டுக்களவாணி முறையில் கொள்ளையிட்ட குருநாகல் பெண்கள் தொடர்பாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, சாளம்பைக் குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த ஜெயக்குமார் லலிதா என்ற பெண்ணின் 15 ஆயிரம் ரூபா பணம் திடீரென்று பறிபோனமையையிட்டு அவர் பதறித்துடித்து அழுதுள்ளார். இதன்பின்னர் அவரைச் சுற்றி நின்ற பெண்கள்தான் பணத்தை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியமையடுத்து குறித்த கூட்டுக் களவாணிகள் தாம் கொள்ளையடித்த பணத்தினை மீளக் கையளித்துள்ளனர். நடந்தது என்ன? வவுனியா மாவட்டம் நெடுக்குளத்தில் குறித்த தனியார் பேருந்தில் ஆறு பெண்கள் ஏறியுள்ளனர். அவர்க…
-
- 0 replies
- 440 views
-
-
எமக்குரிய பணிகளிலிருந்து விலகி முரண்பாடாகவே செயற்படுகிறோம் இந்தியா சென்று திரும்பிய உறுப்பினர் கூறுகிறார் வடக்கு மாகாண சபைக்கான பணியிலிருந்து நாம் விலகி முரண்பாடான செயற்பபாடுகளிலேயே நாம் ஈடுபட்டு வருகின்றோம் என்பதை உணரக்கூடியதாக உள்ளது என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கருத்தமர்வு ஒன்றுக்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 18 பேர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று திரும்பினர். அங்கு இடம்பெற்ற பயிற்சிப்பட்டறை தொடர்பில் கருத்துக் கேட்டபோது இவ்வாறான கருத்துக்களை முன்வைத்தார். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு மாகாண சபையின் …
-
- 1 reply
- 338 views
-
-
குற்றப்புலனாய்வு திணைக்களம் சிவாஜிக்கு அழைப்பு குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரணைக்கு அளித்துள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் அழிவுகளை தடுக்கும் பிரிவை சேர்ந்தவர்கள் என தொலைபேசி ஊடாக தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் , பௌத்த மதகுரு ஒருவர் எனக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாகவும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி உள்ளதால் என்ன…
-
- 2 replies
- 438 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (17-10-2017)
-
- 0 replies
- 450 views
-
-
யாழ்ப்பாணத்தில் 5,000, வடக்கில் 7,000 பேர் டெங்குத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த மாதம் இது அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 4 ஆயிரத்து 999 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். என்று மாவட்ட சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது. வடக்கு மாகாணத்தில் இந்த வருடம் இதுவரை 7 ஆயிரத்து 8 பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மாகாணத் திணைக்களம் தெரிவித்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் 14 பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணி…
-
- 0 replies
- 430 views
-
-
கட்டுநாயக்கவில் சுற்றித்திரிந்த 60 பேர் கைது -ஐ. ஏ. காதிர் கான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா 1, 500 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாயை அபராதமாகத் தொகையாக செலுத்துமாறு, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் கட்டுநாயக்க வந்து சுற்றித்திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் ஆண்கள் என, நீதிமன்ற பதிவேட்டில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கட…
-
- 1 reply
- 602 views
-
-
களைகட்டியது தீபாவளி வியாபாரம் இந்துக்கள் நாளைய தினம் தீபாவெளிப் பண்டிகையைக் கொண்டாடவுள்ள இந்நிலையில் இன்று (17) வியாபார ஸ்த்தலங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன களைகட்டியிருந்தமையை அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்புரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதை காணமுடிந்தது. (படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/களைகட்டியது-தீபாவளி-வியாபாரம்/46-205710
-
- 0 replies
- 569 views
-
-
குடும்பப் பாரத்தைக் குறைக்க பூநகரி சந்தியில் நாவற்பழம் விற்கும் சிறார்கள்...
-
- 0 replies
- 447 views
-
-
‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’ “நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். மேலும், “வடக்குக்கு ஒரு நீதியும் தென் மாகாணத்துக்கு ஒரு நீதியும் என இரண்டு விசேட நீதிகள் எதுவும் இல்லை. இந்நாட்டில் ஒரு சட்டமே உள்ளது. “இந்தக் காரணத்தால் தெற்கு மக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்ததைப் போன்று விரைவில் சிவாஜிலிங்கத்துக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார். கொழும்பில், இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/உத்தரவை-மீறினால்-கடும்-நடவடிக்கை/175-20…
-
- 2 replies
- 539 views
-
-
தென்மராட்சியின் அபிவிருத்திக்கு ரூபா 30 மில்லியன் நிதியுதவி தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு ஒதுக்கீடு தென்மராட்சிப் பிரதேசத்தில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி சிறப்புத் திட்டத்தில் 24 வேலைத் திட்டங்களை மேற்கொள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மீன்பிடி, கல்வி, சமூகக் கட்டமைப்பு, சாலை அபிவிருத்தி போன்ற திட்டங்களுக்கெனவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. கைதடி நாவற்குழி தெற்கு ஸ்ரீமகா விஸ்ணு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் …
-
- 0 replies
- 392 views
-
-
வாள்வெட்டுக் குழுவின் அடாவடிகள் பதிவாகியது மானிப்பாய் லோட்டன் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்து வாள்வெட்டு நடத்திய சம்பவம் தொடர்பான காணொலி வெளியாகியுள்ளது. ஔிப்படக் கலைஞரான பத்ம ராசா என்பவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற வாள்வெட்டு குழுவின ரின் அடாவடியே அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்திறங்கியவர்களில் 4 பேர் வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து உள்கதவை காலால் உதைந்தும் வாளால் வெட்டியும் சேதம் விளைவிக் கின்ற காட்சிகள் பதிவ…
-
- 0 replies
- 294 views
-
-
சந்திரிகா, மைத்திரியின் கவனத்துக்கு கைதிகள் விடயத்தைக் கொண்டுசெல்வேன் பொது அமைப்புக்களிடம் விக்கி தெரிவிப்பு உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்து வருகின்றது. அவர்களது கோரிக்கைக்கு உடன் செவிசாய்க்குமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா ஆகியோரது கவனத்துக் கொண்டு செல்வேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த தரப்பினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரனை, நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்…
-
- 0 replies
- 279 views
-
-
வீதியிலுள்ள பிள்ளையார் சிலை உடைப்பு ShareTweet மன்னார் திருக்கேதீஸ்வரம் செல்லும் வீதியிலுள்ள பிள்ளையார் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை இன்று அதிகாலையிலேயே உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை உடைக்கப்பட்டதற்கான காரணம் என்னும் வெளியாகவில்லை. அதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/37608.html
-
- 3 replies
- 801 views
-
-
அருட்தந்தை இமானுவெல் சந்திரிக்காவுடன் சந்திப்பு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அடிகளார் இன்றைய தினம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான செயலகத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவை சந்தித்துள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களில் ஒன்றாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேரில் தற்போது கொழும்புக்கு விஜயம் செய்து அங்கு தங்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி இன ஒற்றுமையை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில…
-
- 1 reply
- 429 views
-
-
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் - எஸ். நிதர்ஷன் அநுராதபுரத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக் கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்கலைகழக முன்றலில் ஆரம்பித்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அரசியல்-கைதிகளுக்கு-ஆதரவாக-உண்ணாவிரதப்-போராட்டம்/71-205691
-
- 3 replies
- 696 views
-
-
வித்தியா படுகொலையாளிகளுக்கு நேர்ந்த புதிய மாற்றம்! யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரணதண்டனைக் குற்றவாளிகளில் நான்கு பேரை வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு பிரித்துவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நால்வரும் பல்லேகலை சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 2 கைதிகள் மஹர சிறைச்சாலைக்கும், 2 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர். ஏனைய மூன்று கைதிகளும் பல்லேகலை சிறைச்சாலையிலேயே விசேட பாதுகாப்பின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வெ…
-
- 0 replies
- 378 views
-
-
தேசிய தமிழ் மொழித்தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு தேசிய தமிழ் மொழித்தின விழாவை முன்னிட்டு நாடாத்தபட்ட போட்;டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு இந்து கல்லூரி மைதானத்தில் அமைக்கபட்ட விஷேட கலையரங்கில் நடைபெற்றது. கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்;தில் 14.15 ஆகிய இரண்டு நாட்களாக இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது இதில் இரண்டாம் (15) நாள் இரண்டாம் அமர்வில் இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடதக்கது. http://globaltamilnews.net/archives/45720
-
- 0 replies
- 297 views
-
-
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது.! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி - மன்னார் இடையே மீன்பிடியில் ஈடுபட்ட போது இவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். இவர்களின் டோலர் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்துள்ள 8 மீனவர்களையும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/25908
-
- 0 replies
- 179 views
-
-
காணி விடுவிப்பு காலாவதியான கால அவகாசம், சொந்தநிலம் கோரி மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்.! புதுக்குடியிருப்பில் இராணுவ வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி வீதிமறியல் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் இன்று காலை மக்களால் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியில் பிரதேச செயலகம் முன்பாக உள்ள 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி 682ஆவது படைப்பிரிவின் முகாமை அமைத்திருந்த நிலையில், தமது சொந்த நிலங்களை தம்மிடம் கையளிக்குமாறுகோரி குறித்த காணிகளின் உரிமையாளர்கள் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் தொடர்ந்து ஒரு மாதகால போராட்டத்தினை இராணுவ முகாம் முன்பாக முன்னெடுத்திருந்தனர். இதன் பலனாக ஒர…
-
- 0 replies
- 276 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 9 புதிய அமைப்பாளர்கள் நியமனம்.! ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அம்பாறை, கொழும்பு, மாத்தறை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்பாளர்களே இன்றைய தினம் நியமனம் பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை, அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரம் ஐந்து அமைப்பாளளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக நியமிக்க…
-
- 0 replies
- 315 views
-
-
இலங்கையில்இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சில புகைப்படங்களை பிரித்தானிய ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் வெளியிட்டு, அவர்களுக்கு என்ன ஆனது என கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள், வான் பரப்பில் வெடித்துச் சிதறும் புகைப்படம் ஒன்றையும் பிரான்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=192160&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 444 views
-