ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
மாணவிக்கு மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு ; புதுக்குடியிருப்பில் சம்பவம் புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது . புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவ்வாறு தங்கச…
-
- 0 replies
- 333 views
-
-
மானிப்பாயில் சற்றுமுன் வாள்வெட்டு :இளைஞன் படுகாயம் மானிப்பாய் பகுதியில் சற்றுமுன் இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் கூழாவடி பகுதியில் சற்றுமுன் இளைஞன் ஒருவன் மீது சரமாரியாக வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 6.45 மணியளவில் குறித்த வீதியால் மோட்டார் சைக்கிளில் அண்ணன் தம்பி இருவர் சென்ற நிலையில் பின்னால் வந்தவர்கள் வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர். குறித்த வாள்வெட்டில் மானிப்பாயை சேர்ந்த 22 வயதுடைய விஜிதரன் இரண்டு கைகளிலும் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வாள்வெட்டு தொடர்பான விசாரணைகள் மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். …
-
- 0 replies
- 563 views
-
-
இராமநாதபுரம் மகா வித்தியாலய நிர்வாகத்தை பழிவாங்கக்கூடாது Share கிளிநொச்சி இராமநாதபுரம் பாடசாலையின் வைரவிழா நிகழ்வை இடைநிறுத்துமாறு மாகாணக் கல்வி அமைச்சர் கடிதம் அனுப்பியிருந்தால், அதனை மாகாண சபை வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும் அந்த விடயத்தால் அந்தப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள பழிவாங்கப்படக்கூடாது எனவும் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கிளிநொச்சி இராமநாதபுரம் பாடசாலையின் வைரவிழா கடந்த 2ஆம் திகதி எழுச்சியுடன் நடைபெற்றது. வைரவிழாவை இடைநிறுத்துமாறு மாகாணக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தினார். பாடசால…
-
- 0 replies
- 190 views
-
-
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர் பரப்புரை Share இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப் பகுதிகளிலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற அரசியல் பரப்புரை இயக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசு உலகமெங்கும் விரிவுபடுத்துவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் பெருஞ்செயற்றிட்டங்களில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு கட…
-
- 0 replies
- 217 views
-
-
அபிவிருத்தியில் தமிழர் பிரதேசங்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றன Share தமிழர் தாயகப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில், அபிவிருத்தியில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. தமிழ்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாது அவர்கள் அவலத்துக்குள் ளாக்கப்படுகின்றனர். இதன்மூலம் மக்களைத் தமது பூர்வீக வாழ்விடங்களை விட்டுக் குடிபெயர்ந்து செல்லவைப்பதும், ஏதிலிகளாக அலைய வைப்பதுமே திட்டம் – என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். பூநகரிப் பிரதேசத்துக்குச் சென்ற நாடாளுன…
-
- 0 replies
- 195 views
-
-
கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். …
-
- 5 replies
- 1k views
-
-
புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வி அளித்துள்ள அவர், ”ஏகிய ராஜ்ய (Unitary State) என்ற சிங்களச் சொல், எக்சத் ராஜ்ய என்று புதிய அரசியலமைப்பில் மாற்றப்பட வேண்டும். சிறிலங்கா ஒருபோதும் ஒற்றையாட்சி நாடாக இருந்ததில்லை. தனித்தனியாக வாழ்ந்த பல மக்கள் குழுமங்கள் பிரித்தானியர்களால் ஒன்றாக கொண்டு வரப்பட்டனர். பின்னர் பெரும்பான்மை சமூகத்தினரால் ஒற்றையாட்சி திணிக்கப்பட்டது. எனவே, அனைத்து சமூகங்கள…
-
- 0 replies
- 226 views
-
-
விலையேற்றத்துக்கு எதிராக மட்டக்களப்பில் சுவரொட்டிகள் Share அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக மட்டக்களப்பு நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளுக்கு முன்னிலை சோசலிச கட்சி உரிமை கோரியுள்ளது. ”அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய்! அப்படி என்றால் நாங்கள் மண்ணையா உண்பது ? சம்பளத்தைக் கூட்டு!” என்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் ஒட்டப்பட்டுள்ளன. http://newuthayan.com/
-
- 0 replies
- 175 views
-
-
வீட்டிலேயே விரோதிகள் Share ஒரு பொய்யை நூறு தரம் திரும்பத் திரும்பக் கூறினால் கடைசியில் அது மெய்தான் என்று பன்னாட்டுச் சமூகம் கருத முற்படும். ஆனால் அந்தப் பொய் உண்மையில் ஒரு ஏமாற்றும் நோக்கிலானது என்பது தெரியவரும்போது, அதனால் ஏற்படத்தக்க பாதிப்பு மிகப் பெரியதாயிருக்கும்்் ” , என ர-ஷ்யத் தலைவர் விளாடிமீர் புடின் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த உண்மையை மனதில் இருத்திக் கொண்டு மேற்கொண்டு தொடர்வோம். ‘‘இன்று எமக்கு எதிரிகள் என எவருமில்லை. சகலரும் எமது நண்பர்களே’’ என அரச தலைவர் ஐ.நா . சபையில் வைத்துக் கருத்த…
-
- 0 replies
- 290 views
-
-
தேர்தலுக்குத் தயாராகும் பொதுஜன முன்னணி Share உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்களிடமிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சி, விண்ணப்பங்களைக் கோரத் தீர்மானித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தரமுல்லவில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கட்சி அறிவித்துள்ளது. இந்தக் கட்சி எதிர்க்கட்சிகளுடன் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/35265.html
-
- 0 replies
- 284 views
-
-
கடல், நிலம் மற்றும் ஆகாயம் எனும் மூன்றையும் ராஜபக்சர்களே விற்றுள்ளார்கள்! Report us Sinan 4 hours ago நல்லாட்சி அரசாங்கம் நாட்டை விற்பதாக கூறினாலும், உண்மையில் கடல், நிலம் மற்றும் ஆகாயம் எனும் மூன்றையும் ராஜபக்சர்களே விற்றுள்ளார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசிய சுகவாழ்வு கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை இன்று கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றுள்ளது. மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும் மக்கள் நலன் கருதி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டத்தின் இன்றைய நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் நாடாளுமன…
-
- 0 replies
- 256 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை கவனயீர்ப்புப் போராட்டம் எம்.நியூட்டன் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும், அர சியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் கவனயீப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடு தலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று யாழிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிக…
-
- 0 replies
- 113 views
-
-
அதிஉச்ச அதிகார பகிர்வு தொடர்பில் அரசின் உத்தரவாதம் நம்பிக்கை தருகிறது : எம்.ஏ.சுமந்திரன் திருமலைநவம் அதியுச்சமான அதிகாரப்பகிர்வை தமிழ்மக்களுக்கு வழங்கவே புதிய அர சியல் சாசனத்தை உருவாக்கி வருகி றோம். அதை நிறைவேற்றுவதற்கு முழுமையாகவும், அர்ப்பணிப்புடனும் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது என்ற உத்தரவாதத்தை வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் அமைச்சரு மான நிமால் சிறிபால டிசில்வா வெளி நாட்டு பிரமுகர்களுக்கும் ராஜதந்திரி களுக்கும் வழங்கியமை எமக்கு மேலும் நம்பிக்கை தருகிறது. இவ்வாறு யாழ். மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச…
-
- 0 replies
- 311 views
-
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் நேர்மைத் தன்மையை எதிர்பார்க்கின்றோம் - ஐ.நா. விஷேட நிபுணர் லியோ நிரோஷ தர்ஷன் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் நேர்மைத் தன்மையை ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கின்றது. அந்த வகையில் இறுதிக்கட்டப் போர் மற்றும் அதற்கு பின்னரான நிலைமைகள் உள்ளிட்ட இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மதிப்பீடு செய் வது இலங்கை விஜயத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடு கள் சபையின் விஷேட நிபுணர் பப்புலோ டி கிரீப் தெரிவித்துள்ளார். இலங்கை விஜயம் தொடர்பான முழுமையான அறிக்கை ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் பேரவையின் 38 ஆவது கூட்…
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கையை மையமாகக் கொண்ட இந்திய _ சீன இராஜ்ஜிய பனிப்போர் லியோ நிரோஷ தர்ஷன் இலங்கையை மையமாகக் கொண்டு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர பனிப்போர் தற் போது பல்துறைகளிலும் விரிவடைந்து வருகின்றது. இலங்கையில் இந்தியா என்ன திட்டங்களை முன்னெடுக்கின்றதோ, அவற்றுக்குள் சீனாவும் தனது திட்டங்களை புகுத்துவதற்கு கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மறுபுறம் வடக்கிலும் கிழக்கிலும் இந்திய திட்டங்களுக்கு நிகராக சீன திட்டங்களையும் முன்னெடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை வலயத்…
-
- 0 replies
- 253 views
-
-
பெயர் அளவில் மாத்திரம் செயற்படும் வடமாகாண மகளீர் அமைச்சு வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சிற்கான நிதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லையென வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த அமைச்சானது வெறும் எழுத்தளவில் மாத்திரமே உள்ளதாக தெரிவித்த அவர், அமைச்சிற்கான ஆளணி பற்றாக்குறைகளும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகான மகளிர் விவகார அமைச்சர் என்ற வகையில் என்ன நடவடிக்கை எடுத்துவருகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 355 views
-
-
எதிர்மனுக்கள் காரணமாக தேர்தல்கள் பின்போடப்படலாம் எஸ்.கே. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்ற அரசின் ஆலோசனைக்கு எதி ராக மனுத்தாக்கல் செய்துள்ளதால் தேர்தல்களை நடத்தமேலும் காலதாமதம் ஏற்படலாமென தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்பு கள் தெரிவிக்கின்றன. மனுமீதான விசாரணைகள் எப் போது ஆரம்பிக்கப்படுமென கூற முடியாதுள்ளதாக 'பெப்ரல்’ அமைப் பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் மனுக்கள் மூலம் கோரப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொள்ள மேலும் காலஅவகாசம் தேவையென்பதால் தேர்தல்களை நடத்த மேலும் காலதாமதம் ஏற்படல…
-
- 0 replies
- 192 views
-
-
பிரபாகரனின் தியாகம் ஐ.நாவில் காட்டிக்கொடுப்பு- இடைக்கால அறிக்கை ஆயுதமாக மாறியது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு ஆகிய விசாரணைகளில் இருந்து நல்லாட்சி அரசாங்கம், இலங்கை அரசு என்ற கட்டமைப்பை சாணக்கியமாக மீட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார். சட்டத்தரணிகளான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை பயன்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாணக்கியமாக இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்த இரத்தக் கறையை நீக்கிவிட்டார் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார். இலங்கை நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சட்டத்தரணி சுமந்திரன், ஐக்கிய நாடுகள் சப…
-
- 3 replies
- 375 views
-
-
இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா Share அமெரிக்க– இலங்கைப் படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. திருகோணமலையில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த, அமெரிக்க – இலங்கைக் கடற்படைகளுக்கு இடையிலான முதலாவது ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தி னால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், இலங்கை அரசு நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் போன்ற…
-
- 5 replies
- 326 views
-
-
இலங்கைக்கு 16 விமானங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை இலங்கை விமானப்படைக்கு 16 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வகையில், குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்படும் என விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் போர் விமானங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கைக்கு-16-விமானங்களைக்-கொள்வனவு-செய்ய-நடவடிக்கை/150-205136
-
- 1 reply
- 230 views
-
-
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ஜனாதிபதி ஆந்திர மாநிலத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை தரிசனம் செய்தார். ஜனாதிபதி, நேற்று இரவு திருப்பதிக்கு சென்றிருந்தார். அங்கு சென்ற ஜனாதிபதியை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்றுள்ளனர். அதன்பின்னர் திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஜனாதிபதி ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ஜனாதிபதி தனது மனைவி ஜெயந்தி புஷ்பகுமாரி மற்றும் சில அதிகாரிகளுடன் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்றார். காலையில் நடைபெற்ற சிறப்பு தரிசன சேவையில் அவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார். …
-
- 0 replies
- 473 views
-
-
10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியலில் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். படகொன்றில் காரைக்காலில் இருந்து மீன்பிடிப்பதற்காகச் சென்ற கருணாகரன், பிரதீபன், சுப்ரமணி உள்ளிட்ட பத்து இந்திய மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பணித்த படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். நெடுந்தீவுக்கு தென் கிழக்கேயுள்ள இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் போது கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவனின் வீட்டில் ஆஜர்படுத்த…
-
- 0 replies
- 214 views
-
-
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 627 views
-
-
யாழிற்கான புகையிரத சேவை நாவற்குழி வரை மட்டுப்படுத்தல் கொழும்பு - காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு - காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக இந்த சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் புகையிரதத்திற்கு முற்பதிவு செய்த பயணிகள் விசேட பேரூந்து மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையி…
-
- 0 replies
- 253 views
-
-
நாளை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார் ஜனாதிபதி.! இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையானை நாளை காலை சாமி தரிசனம் செய்யவுள்ளார். ஜனாதிபதியிற்கு திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளிக்க தயார் நிலையில் உள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தனது இந்திய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று திருப்பதியை சென்றடைந்தார். http://www.virakesari.lk/article/25444
-
- 2 replies
- 448 views
-