ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
இடைக்கால அறிக்கைக்கு தீ வைப்பு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கையை, மத்திய மாகாண சபை உறுப்பினர் தீ வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இந்த அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினரே, அவ்வறிக்கையை இவ்வாறு தீயிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இடைக்கால-அறிக்கைக்கு-தீ-வைப்பு/175-204895
-
- 3 replies
- 339 views
-
-
நூற்றாண்டை முன்னிட்டு கோட்டை புகையிரத நிலையம் கோலாகலம்! கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் நூறாவது ஆண்டு நிறைவு விழா நாளை (4) கொண்டாடப்படுகிறது. விழாவின் ஆரம்பமாக இன்று கோட்டை புகையிரத நிலையத்தில் விசேட அணிவகுப்புகள், அலங்காரங்கள் என்பன நடைபெற்றன. மேலும், புகையிர நிலையத்தில் விசேட வழிபாட்டு பீடம் அமைக்கப்பட்டு பிரித் ஓதும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. புகையிரதத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நூற்றாண்டையொட்டி புதிய சுவர்ப் பூச்சுக்கள் பூசப்பட்டு, நடைமேடைகள் தோறும் வண்ண வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு முற்றிலும் மாறுபட்ட ஒரு புகையிரத நிலையமாகக் காட்சியள…
-
- 0 replies
- 266 views
-
-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதிக்கு தொடர் விளக்கமறியல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் நிரபராதி என தீர்ப்பயத்தால் விடுவிக்கப்பட்ட நபர் , குறித்த வழக்கின் சாட்சியத்தினை அச்சுறுத்திய வழக்கில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார். மாணவி கொலை வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த காலப்பகுதியில் வழக்கின் முதலாவது சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் என்பவர் தன்னை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கோபி எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் காழ்புணர்வு காரணமாகவே இந்த வழக்கில் கைது செய்தார் எனவும் , இந்த வழக்கில் இருந்து வெளியே வந்தால் கோபியை வெட்டுவேன் என நீதிமன…
-
- 0 replies
- 135 views
-
-
யாழ் செட்டிதெரு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது வாள் வெட்டு யாழ்ப்பாணம் செட்டிதெரு பகுதியில் நின்றிருந்த முச்சக்கரவண்டி சாரதி மீது இன்று மாலை வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செட்டித்தெரு பகுதியில் நின்றிருந்த நல்லூரை சேர்ந்த 21வயதுடைய ஞானசேகரம் குமனேந்திரன் என்பவரே வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் நின்றிருந்த குறித்த சாரதியை தாறுமாறாக வாளினால் வெட்டி விட்டு சென்றுள்ளனர். கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 142 views
-
-
வவுனியாவில் நடுத்தெருவில் அமர்ந்து போராட்டம் வவுனியா பன்றிக்கெய்தகுளம், மரையடித்தகுளம் பகுதியிலுள்ள 45 இந்திய வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை உதவி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.ஜயசேன போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, உடனடியாக தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நாளைய தினமே இப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு பெற்றுத்தருவதாகவும் அளித்த வாக்குறுதியையடுத்து மக்கள் வீதியை விட்டு அக…
-
- 0 replies
- 173 views
-
-
தமிழர்களை பிளவுபடுத்தும் அரசியலால் சாதிக்க போவதென்ன? Share வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இடம்பெறு மெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பூர்த்தியடைய வுள்ளது. இரண்டு மாகாண சபைகளுக்கும் ஒரே திகதியில் தேர்தல் இடம்பெற மெனத் தெரிகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைந்து கொள்வது தொடர்பாக அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்க…
-
- 0 replies
- 229 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்.! (ஆர்.யசி) அகதிகள் தொடர்பிலான சர்வதேச சமவாயத்தை இலங்கை ஏற்றுகொள்ளாத காரணத்தினால் அகதிகளை இலங்கை ஏற்றுகொள்ள வேண்டிய தேவை இல்லை. ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விரைவில் இலங்கையில் இருந்து வெளியேற்றப்படவுள்ளனர் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துஸ்பிரயோக சம்பவம் குறித்த குற்றம் நிரூபிக்கபடும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25261
-
- 0 replies
- 249 views
-
-
புதிய அரசியல் அணி- விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவார் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுடன் புதிய அரசியல் அணி உருவாகும் என தெரிக்கப்படுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில சிவில் அமைப்புகளும் இணைந்து புதிய அரசியல் அணியை உருவாக்கும் என புளொட் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். புதிய அரசியல் அணியை உருவாக்குவது குறித்து, தீவிரமான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. வடக்கு கிழக்கு உட்பட கொழ…
-
- 0 replies
- 230 views
-
-
கொக்குவில் தொலைபேசி விற்பனை நிலைய தாக்குதல்:இரு இளைஞர்கள் கைது கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தை தாக்கிய சம்பவம் தொடர்பாக கொக்குவிலை சேர்ந்த இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கைத்தொலைபேசி விற்பனை நிலையத்துக்கு 3 மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த இளைஞர் குழுவினர் அக்கடை மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதுடன் கடையின் முன் பகுதிகளை வாள்கள் கம்பிகளால் தாக்கி விட்டு சில கைத்தொலைபேசிகளையும் திருடிக்கொண்டு தப்பி சென்றிருந்தனர். இச் சம்பவம் குறித்த கடைக்க…
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கை : 928 கிலோ போதைப் பொருளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதி உத்தரவு பகிர்க இலங்கையில் கடந்த ஆண்டு பிடிபட்ட 928 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளை பகிரங்கமாக அழித்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைSEAN GARNSWORTHY/GETTY IMAGES விளம்பரம் அவரது உத்தரவின்பேரில் இந்த மாத முடிவுக்குள், பகிரங்கமான ஒரு இடத்தில் இவற்றை அழித்துவிட போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தயாராகி வருகின்றது. "கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை நீதிமன்ற நடவடிக்கை முடிவடையும் வரை பாதுகாத்து வைப்பது வழக்கமான நடைமுறையாகும். இவ்வாறு அதிக அளவிலான போதைப் பொருட்களை சேமித்து வைப்பதில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்…
-
- 0 replies
- 204 views
-
-
பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் அரசமைப்பு வேண்டாம் Share புதிய அரசமைப்புத் தொடர்பில் ஒரே நாளில் சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்கள் தெரிவித்திருக்கக்கூடிய கருத்துக்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. சிங்கள பௌத்தர்களுக்கு வேண்டியதை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும், தமிழர்களுக்கு வேண்டியதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கூறியிருக்கிறார்கள். ரணில் அனுராதபுரத்திலும் சம்பந்தர் மன்னாரிலும் பேசினார்கள். அவை ஒவ்வொன்றும் ஒன் றுக்கொன்று முரண் பாடான விடயங்களைச் சொல்கின்றன. …
-
- 0 replies
- 274 views
-
-
மாலதி படையணி போராளி சந்தியா காலமானார் மாலதி படையணி போராளியும் மணலாறு கட்டளைத்தளபதி குமரனின் துணைவியும் படைப்பாளியுமான கு. சந்தியா இந்தோனேஷியாவில் காலமானார். விடுதலைப்போராட்ட வரலாற்றில் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2ஆம் லெப்ரின் மாலதி படையணி போராளியாக இருந்து போராட்ட களங்களில் பங்கெடுத்து படைப்பாளியாகவும் தனது பணியினை செய்துள்ளார். இந்நிலையில் தாயக மக்கள் போராளிகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. https://news.ibctamil.com/ta/internal-affairs/ltte-army-fighter-Sandia-died-in-Indonesia
-
- 16 replies
- 2.2k views
-
-
யாழில் “சொலிடாரிடி சென்றர்” சட்ட உதவி அலுவலகம் திறப்பு “சொலிடாரிடி சென்றர்” சட்ட உதவி அலுவலகம் நேற்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இந்தியன் இல்லத்திற்கு அருகாமையில் நேற்று குறித்த கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சொலிடாரிடி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் அலோன்சோ சசோன் ஆகியோர் இணைந்து சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தனர். இந்த சொலிடாரிடி சென்ரர் சட்ட உதவி அலுவலகத்தின் ஊடாக தொழிலாளர் உரிமை சம்பந்தமான, ஆரோக்கியமான வேலைச்சூழலில் பால் நிலை சமத்துவம் பேணுதல் தொடர்பான சட்டஉதவிகள் வழங்கப்படும். இந்த நிலையத்தின் சட்ட உதவிக…
-
- 0 replies
- 362 views
-
-
அடைக்கலம் புகுந்தோரை விரட்டுவது குற்றமாகும் Share “ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அடைக்கலம் தேடி வருபவர்களை விரட்டி யடிப்பது பன்னாட்டு ஏதிலிகள் சட்டத்தின்படி மாபெரும் குற்றமாகும். மியன்மார் நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை நடவடிக்கையையடுத்து அங்கிருந்து அடைக்கலம் தேடி இலங்கை வந்துள்ள ரோஹிங்ய முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்” இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். கொழும்பில் …
-
- 10 replies
- 687 views
-
-
மானிப்பாயில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நால்வர், கைது !! யாழ்ப்பாணம் மானிப்பாயில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட, பெண்கள் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் இரகசிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.என்.டி.நாலக்க ஜெயவீர தெரிவித்தார். கைதான நால்வரும், யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் 26 வயதுடைய யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில்…
-
- 0 replies
- 301 views
-
-
மட்டக்களப்பில் காந்தி ஜெயந்தி தினம் கடைப்பிடிப்பு Share மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 148வது ஜெயந்திதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலையருகே இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். http://newuthaya…
-
- 12 replies
- 2k views
-
-
அரசியல் கைதிகளுக்கு தீர்வில்லையேல் தமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொடர்ந்து ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழில். உள்ள தமிழரசு கட்சி அலுவலகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒன்று கூடிய அரசியல் கைதிகளின் உறவினர்கள் , பொது அமைப்புக்கள் , சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தை அடுத…
-
- 0 replies
- 174 views
-
-
சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க திட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISHARA S.KODIKARA/AFP/GETTY IMAGES சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாத்தறை பச்கொட பகுதியில் தமிழ் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவதற்கு சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்திட…
-
- 0 replies
- 215 views
-
-
இலங்கை: கிழக்கு கடலில் அழிந்து வரும் பவளப்பாறைகள் பகிர்க படத்தின் காப்புரிமைHASSAN AMMAR/AFP/GETTY IMAGES இலங்கையில் கிழக்கு கடற்பரப்பில் பரவி வருகின்ற நட்சத்திர மீன்களினால் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சகம் கூறியுள்ளது. விளம்பரம் இந்த நட்சத்திர மீன்கள் தொடர்பாக ஆய்வுகளை முன்னெடுக்குமாறு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர தேசிய நீரியல் வள மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி முகவர் நிறுவனத்திற்கு கட்டளையிட்டுள்ளார். இந்த ஆய்வு பணிகளுக்கு கடற்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவும் அவர் கேட்டுகொண்டுள்ளார். படத்தின் க…
-
- 0 replies
- 293 views
-
-
ரோஹிங்யா விவகாரம் குறித்து சவூதியில் உயர் மட்டப் பேச்சு சவூதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்கான நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் சவூதியில் உயர் மட்டப்பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று ஜித்தாவை சென்றடைந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை, சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் …
-
- 0 replies
- 274 views
-
-
புதிய அரசமைப்பு நிறைவேற இடமளியேன் முன்னாள் அரச தலைவர் மகிந்த திட்டவட்டம் Share புதிய அரசமைப்பை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்கப்படாது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைய புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. உத்தேச புதிய அரசமைப்பைத் தோற்கடிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியினால் மூன்று செயற்குழுக்கள் ஏற்கனவே நியமிக்…
-
- 1 reply
- 491 views
-
-
"புதிய அரசியலமைப்பிற்கு தீ வைத்து தடுப்போம்" (ஆர்.யசி) நாட்டை பிளவுபடுத்தி மாகாண சபைகளை அரசாங்கத்தின் பிடியில் இருந்து நீக்கும் அரசியல் அமைப்பே அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் மாகாணங்களின் எல்லைதாண்டிய போக்கினை மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு பாரளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் தீ வைத்து தடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25217
-
- 2 replies
- 431 views
-
-
மியன்மாருக்கு வருமாறு ஞானசாரருக்கு அழைப்பு 969 அமைப்பு விடுப்பு Share இலங்கையின் கடும் பௌத்தபோக்கு அமைப்பான பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரை மியன்மார் நாட்டுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மியன்மார் நாட்டின் 969 இனவாத அமைப்பின் தலைவர் அசின் விராது தேரர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். சிறுபான்மை ரோஹிங்கிய மக்களுக்கு எதிரான மியன்மார் அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகள் காரணமாக அந்த நாடு பன்னாட்டுச் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடங்கியுள்…
-
- 0 replies
- 251 views
-
-
மகிந்தவுடன் பசில் இருக்கும்வரை அவருக்கு விடிவுகாலமே இல்லை 3 பசில் ராஜபக்ச தொடர்ந்தும் மகிந்தவுடன் இருந்தால் மகிந்த என்ற ஒரு பாத்திரம் அரசியலில் இருந்து காணாமல் போய்விடும். பசிலை விரட்டிவிட்டால் மகிந்தவுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று இராஜாங்க அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: சுதந்திரக் கட்சியின் அரசியல் இன்று சவால்மிக்கதாக அமைந்துள்ளது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுதான் இதற்குக் காரணம். மைத்திரி அணியா மகிந்த அணியா என்…
-
- 0 replies
- 196 views
-
-
பொன்சேகாவுக்கு தேசியப் பட்டியலில் இடம்கொடுத்தது ஏன்? புது விளக்கம் கொடுக்கிறார் சரத் வீரசேகர Share படையினருக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போது அவர்களுக்கு எதிராகßÄச் சாட்சியமளிப்பதற்காகவே தான் சரத் பொன்சேகாவுக்குத் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: போர் முடிந்து எட்டு வருடங்களின் பின் முன்னாள் இராணுவ…
-
- 0 replies
- 123 views
-