ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
‘ஞானசாரரை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை’ ஞானசார தேரரை, சகல வழக்குகளில் இருந்தும் விடுவிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை என, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகே தெரிவித்தார். இஸ்லாம் மதத்தையும் அல்லாஹ்வையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வந்த ஞானசார தேரருக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளை, திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவு, நீதிமன்றிலிருந்து வாபஸ் வாங்கியதாக, ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகேவைத் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவி…
-
- 0 replies
- 230 views
-
-
''பாராளுமன்றே இறுதி தீர்வை எடுக்கும்" ராஜித - ராம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு யோசனைகள் உள்ளன. எதிர்வரும் காலப்பகுதியில் அவை ஆராயப்படவுள்ளன. எவ்வாறாயினும் பாராளுமன்றமே இறுதி தீர்வை எடுக்கும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரட்னவிடத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25184
-
- 0 replies
- 272 views
-
-
தமிழர் தயாகத்தை அங்கீகரிக்க வாக்கெடுப்பு-தமிழ் மக்கள் பேரவை அதிரடி முடிவு தமிழர்களின் தாயகம், இறைமை உள்ளடங்கிய சுயாட்சியை அங்கீகரிப்பதற்கு ஏற்ற முறையில் வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது. புதிய யாப்புக்காக, அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாகவும் அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையாகவே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் எடுத்ததாகவும் பேரவை உறுப்பினர் ஒருவர் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார். இடைக்கால அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு கடந்த வெள்ளிக்கிழமை பேரவையின் உப குழு யாழ்ப்பாணத்தில் கூடியது. அங்கு சமகால நிலை…
-
- 0 replies
- 303 views
-
-
இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை விஜயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இரண்டு உயர்மட்ட அதிகாரிகள், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். உண்மையை ஊக்குவித்தல் மற்றும் மீள்நிகழாமை என்பன தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதை அடுத்து தன்னிச்சையான கைதுகள் குறித்த ஐக்கிய நாடுகள் பணியக குழு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது. அவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட பிரமுகர்கள் மற்றும் எதிர்க்கட்சித் …
-
- 0 replies
- 278 views
-
-
தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் விழா Share இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி,எழுத்தூர் பகுதியில் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. -தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிரஜா ஆகியோர் இணைந்து புதிய அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள்,யாழ் பாராளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 379 views
-
-
யாழ் ஈழவேந்தன் கலைக் கல்லூரியில் மகிந்த அணியினர் கலந்துரையாடல் Share யாழ்ப்பாணம் வந்துள்ள பசில் ராஐபக்ச தலைமையிலான மகிந்தவின் அணியினர் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இக் கலந்துரையாடல் யாழ் ஈழவேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறுகிறது. http://newuthayan.com/story/33539.html
-
- 1 reply
- 380 views
-
-
மஹிந்த தலைமையிலான குழு தாய்லாந்துக்கு திடீர் விஜயம் லியோ நிரோஷ தர்ஷன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்துக்கு சென்றுள்ளனர். குடும்ப உறுப்பினர்களுடன் தனிப்பட்ட விஜயமாகவே இது காணப்படுவதாக முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வின் பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார். எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தாய்லாந் துக்கான விஜயம் 10 நாட்களாக அமைந் துள்ளதாகவும் தாய்லாந்திலிருந்து வேறு நாடொன்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பாக இத்தாலிக்கு சென்று அங்கு…
-
- 0 replies
- 127 views
-
-
இடைக்கால அறிக்கையில் புதிய சொற்கள் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன -நிலைப்பாடு குறித்து இவ்வாரம் அறிவிப்பு என்கிறது அஸ்கிரியபீடம் லியோ நிரோஷ தர்ஷன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக வழி நடத்தும் குழுவின் இடைக்கால வரைவில் புதிய சொற்கள் உள்வாங்கப் பட்டுள்ளமை சந்தேகங்களை தோற்று வித்துள்ளது. மேலும் இடைக்கால வரைவு குறி த்த தேவையான யோசனைகளை யும் பரிந்துரைகளையும் இவ்வாரத்தில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங் கள் அரசாங்கத்திற்கு அறிவிக்கும் என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெத கம தம்மானந்த தேரர் குறிப்பிட்டார். சமஷ்டி முறைமைக்கு நாட்டை நகர்த்தக் கூடிய வகையில் பல்வேறு விடயங்கள்…
-
- 0 replies
- 296 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் : சம்பந்தன் தலையிட்டு தீர்வை பெற்றுத் தர வேண்டும் -– அருட்தந்தை சக்திவேல் ஜெ.ராஜன் எமது பிள்ளைகள் தமது உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களின் வழக்குகள் அநுராதபுரத்தில் விசாரிக்கப்படாமல் வவுனியாவிலேயே விசாரிக்கப்படவேண்டும். இவ்விடயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலையி ட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார் த்தை நடத்தி உரிய தீர்வைப்பெற்றுத் தரவேண்டும் என உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவிப்பதாக அரசியல் கைதி களை விடுதலை செய்வதற்கான தேசிய…
-
- 0 replies
- 188 views
-
-
தார்மீகப் பொறுப்பை விஜயகலா ஏற்கட்டும்! Share மாணவி வித்தியா வன்கொடுமை வழக்கு முடிவுக்கு வந்தாலும், அது புதிய திருப்பம் ஒன்றை எடுத்துள்ளது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரில் 7 பேர் குற்றவாளிகள் என்று தனி அமர்வுத் தீர்ப்பாயம் தீர்ப்ப ளித்துள்ளது. மூன்று நீதிபதிகள் கொண்ட அந்தத் தீர்ப்பாயத்தின் ஒரு நீதிபதியான மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில், குற்றவாளி களில் ஒருவரை மக்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய அமைச்சர் ஒருவர், அவரைப் பொலிஸாரிடம் ஒப்படைக்காமல் விட்டமை குற்றவாளி தப்பிச் செல்வதற்கு உதவியதாகவே அர்த்தப்படும் எ…
-
- 2 replies
- 353 views
-
-
தெற்காசிய நாடுகளின் 8 ஆவது மாநாடு கொழும்பில்.! (ஆர்.யசி) சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினர் பங்குகொள்ளும் 8வது மாநாடு எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்துகொளும் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் நாளை மறுநாள் இலங்கை வந்தடைவார்கள். எதிர்வரும் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதிவரை சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினரின் 8வது மாநாட்டு கொழும்பில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையினை நிகழ்த்தி மாநாட்டை ஆரம…
-
- 0 replies
- 225 views
-
-
மத்தள விமான நிலையம் விரைவில் இந்தியாவுக்கு எஸ்.கே அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான அமைச்ச ரவைப் பத்திரம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். கடன் சுமையாக மாறியுள்ள மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து தெற்காசிய வலயத்திலேயே அபிவிருத்தியடைந்த விமான நிலையமாக மாற்றுவதே அரசின் நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்தார். குத்தகை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் நாள் மற்றும் குத்தகை ஒப்பந்தத்தில் உள்ளடக்க வேண்டிய…
-
- 2 replies
- 301 views
-
-
வேட்பாளர் தெரிவில் கட்சிகள் தீவிரம் எம். நேசமணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவில் பிரதான கட்சிகள் உட்பட சகல தரப்பினரும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றிற்கு சவால் விடுக்கும் வகையில் இம்முறை கூட்டு எதிரணியி னர் தனியாக களமிறங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்யும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சி 17 வேட்புமனு தெரிவுக்குழுக்களை அமைத்துள்ளதாக தெரிவி…
-
- 0 replies
- 234 views
-
-
‘கொலையாளிகளின் பணம் வேண்டாம்’ “எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஒரு சதமும் வேண்டாம்” என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று, இவ்வாண்டு மே மாதம் 29ஆம் திகதி முதல் ட்ரயல் அட் பார் முறையில், யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், திரு…
-
- 0 replies
- 283 views
-
-
கோழிக் கறிக்குள் ஹெரோயின் யாழ்.சிறைச்சாலைக்குள் மீட்பு Share விளக்கமறியல் கைதிக்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட நபரொருவர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. விளக்கமறியலில் இருக்கும் கைதியொருவரைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் போத்தல் ஒன்றினுள் கோழிக்கறி கொண்டு சென்றுள்ளார். அந்த கோழிக் கறி மீது சந்தேகம் கொண்ட சிறைக்காவலர்கள் அதனை பரிசோதித்துள்ளனர். அப்போது கோழிக்கறியின் குழம்ப…
-
- 1 reply
- 207 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத்தலைமை தேவையில்லையென வடமாகாண முதலமைச்சர் தெரிவித்த கருத்தை காற்றில் பறக்கவிடவேண்டாமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் பழுகாம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. இவ்வஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வரவேண்டுமென விரும்பியதில் நானும் ஒருவன். நான்அவரிடம் வினயமாக வேண்டுவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 84 வயதாகியும் அனைத்தையும் ஞாபகம் வைத்துள்ளார…
-
- 3 replies
- 460 views
-
-
அழிவின் விளிம்பில் முல்லைத்தீவு மக்கள்; காப்பாற்றப் போவது யார்? – தமிழ்லீடருக்காக வன்னிமகள் தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. ஸ்ரீலங்காவில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ள முல்லை மாவட்டமானது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதிகளவான சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அப்பாவி பொதுமக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓரம்கட்டப்பட்டு கொன்றொழிக்கப்பட்டதுடன், எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதி என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு திறந்த…
-
- 1 reply
- 448 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 01.10.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 286 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை - வியாபாரம் வழமை யாழ்ப்பாண நகரில் மக்கள் கூடும் இடங்களில் யாழ்ப்பாண பெண்கள் அமைப்பினர் மற்றும் தீவக மக்கள் என பெயர் குறிப்பிட்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இருப்பினும் யாழ்ப்பாண நகரில் மக்கள் வழமைபோன்று தத்தமது கடமைகளில் ஈடுபட்டுவருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். குறிப்பாக தனியார் மற்றும் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுவருகின்றன. வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை தினம் ஆகையால் தனியார் கல்வி நிலையங்கள் வழமை போன்று இயங்குகின்றன. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரணதண…
-
- 0 replies
- 350 views
-
-
மன்னார் ஆயர் - வஜிர அபேவர்த்தன சந்திப்பு அமைச்சர் வஜிர அபேவர்த்தன மற்றும் மன்னார் ஆயர் கிங்ஸ்லி ஸ்வாமிப் பிள்ளைக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் வருங்கால தேர்தல் செயற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பின் போது, அமைச்சரால் ஆயருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் …
-
- 0 replies
- 210 views
-
-
வைரவிழாவுக்கு வடமாகாணமுதலமைச்சர், கல்வி அமைச்சரை அழைக்காதிருக்க 7 இலட்சம் பேரம் பேசினார் சிறிதரன்! கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்விற்கு பிரதமவிருந்தினர் அழைப்புத் தொடர்பாக இடம்பெற்ற பிரச்சனையில் குறித்த விழா கல்வி அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிப்படுகின்றது. குறித்த சம்பவம்தொடர்பாகத் தெரியவருவதாவது, கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழா நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரை அழைக்காது என்னை அழைத்தால் நான் 2 இலட்சம் ரூபா பணமும், சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறி 5மில்லியன் பெறுமதியான கட்டடம் ஒன்றையும் கட்டித்தருவேன் என கிளி…
-
- 3 replies
- 699 views
-
-
இலங்கை: பாம்பு கடியால் இறப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு பகிர்க இலங்கையில் பாம்புக் கடி காரணமாக ஆண்டுதோறும் 400 பேர் வரை உயிரிழப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. விளம்பரம் களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி வருடமொன்றுக்கு பாம்புக் கடி காரணமாக 80,000 பேர்வரை பாதிக்கப்படுவதாகவும் அதில் 400 பேர் வரை மரணத்தை சந்திப்பதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் களன மாதுவகே கருத்து தெரிவித்த போது முன்னர் பாம்புக் கடி காரணமாக வருடமொன்றுக்க…
-
- 0 replies
- 269 views
-
-
’ஏனைய மதத்தவருக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள்’ ஏனைய மதத்தவருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாம் நடந்துகொள்ளக் கூடாது. அவ்வாறு நடந்துகொண்டால் அது, தமது மதத்துக்கு அகௌரவத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். மன்னார், திருக்கேதீஸ்வரம் வீதியில் அமைந்துள்ள மாதொட்ட ரஜமகா விகாரையில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில், "வழிபாட்டுத் தலங்கள், தனி மனிதனுக்கு உரித்தானவை அல்ல. இவை சகலருக்கும் பொதுவானவையாகவே கருதப்படல் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்கள் என்ற வகையில் தூய்மையான எண்ணத்துடன் அன்பை வ…
-
- 0 replies
- 241 views
-
-
'புதிய வாழ்க்கைக்காக போராடுவோம்” துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பு.! “புதிய வாழ்க்கைக்காக போராடுவோம்” எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹட்டன் நகரில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தது. இத் துண்டு பிரசுரத்தில் நிறைவேறாத கனவுகள், சம்பளம் துண்டிப்பு, வருமான பகிர்வு, மரண பொறி என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இன்று காலை இந்த துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை ஹட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள அரச மரத்தடியிலிருந்து ஆரம்பமானது. இதன்போது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்க…
-
- 0 replies
- 215 views
-
-
புதிய அரசியலமைப்பு வயதான பெண்ணுக்கு அலங்காரம் செய்வதுக்கு ஒப்பானது!!! http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-01#page-11
-
- 0 replies
- 144 views
-