Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 20 09 2017 , 8PM

  2. கிழக்கை யார் ஆள்வது என்பதை மக்களே தீர்மானிப்பர் கிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வரவேண்டும் என நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடகிழக்கு இணைப்புக்கு எதிராக தான் கருத்துத்தெரிவித்து வருவதால் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்பி, மக்களை குழப்பி தனக்கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை…

  3. பொறுப்­புக்­கூ­றலை நிறை­வேற்­று­வது தமிழ்க் கூட்­ட­மைப்­பி­னது கடமை பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­படு­த­லைக் குற்­றம் என்று அறி­விக்­கும் சட்­ட­வரைவின் மீதான விவா­தம் நாடா­ளு­மன்­றத்­தில் நாளை­ ம­று­தி­னம் நடை­பெற இருந்த நிலை­யில் அது திடீ­ரென நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­தச் சட்­ட­ வரைவின் மீதான விவா­தம் நிறுத்­தப்­ப­டு­வது இது இரண்­டா­வது தடவை. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் உத்­த­ர­வின்­ப­டியே விவா­தம் மீண்­டும் ஒத்திவைக்கப்பட்­டுள்­ளது என்று தெரி­ கி­றது. இதற்கு முன்­ன­ரும் ஒரு தடவை இவ்­வாறே இந்த விவா­தம் அரச தலை­வ­ரால் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. இந்­தச் சட்­ட­வரைவுக்கு எதி­ரா­கப் பிக்­கு­கள் போர்க்­கொடி தூக்­கி­ய­தைத் தொட…

  4. தேர்தல் சட்டமூலம். தமிழரசுக் கட்சி மாத்திரமே ஆதரவு. ஏனையவை புறக்கணிப்பு மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈபிஆர்எல் ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களிக்கவில்லை. இன்று புதன்கிழமை இரவு வாக்கெடுப்பு நடைபெற்றபோது அவர்கள் சபையை விட்டு வெளியேறியதாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். இந்த சட்டமூலத்திற்கு தமிழரசுக் கட்சி மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. இந்த சட்டமூலத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான தேர்தலை 50 வீதம் தொகுதிவரி முறை மூலமும் 50 வீதம் விகிதாசார முறையின் மூலமும் நடத்தப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருத்தச் சட்டத்தில் 60 வீதம் தொகுதிவரி …

  5. கென்யாவில் 3 பில்லியன் ரூபா திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது கென்ய தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 2 பில்லியன் ஷில்லிங்கை (3 பில்லியன் ரூபா) திருடிய குற்றச்சாட்டில், சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. மோஷீன் ரணதுங்க என்பவர் 2012, ஜூலை மாதம் 90 நாள் விசாவில் கென்யா சென்றிருந்தார். எனினும் சட்டவிரோதமாக 2016ஆம் ஆண்டு வரை அங்கு தங்கியிருந்த அவர், தான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து 2 பில்லியன் ஷில்லிங்கைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கென்யாவை விட்டுத் தப்பியோடியிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் க…

  6. மடி­யில் கன­மி­ருந்­தால்­தானே வழி­யில் பய­மி­ருக்க வேண்­டும் போர்க்குற்­றச்­சாட்­டுக்கு அஞ்­சும் இராணு­வத்தைப் பார்த்­துக் கேள்வி எழுப்­பு­கி­றார் பொன்­சேகா ‘‘தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரில் ஈடு­பட்ட படை­யி­னர் எவ­ரும், குற்­றங்­கள் எதை­யும் செய்­யா­வி­டின் எந்­தக் கவ­லை­யும் கொள்­ளத் தேவை­யில்­லையே?’’ இவ்­வாறு முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும், அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா கேள்வி எழுப்­பி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: காணா­மற்போனோர் அலு­வ­ல­கம் தனியே வடக்கு – கிழக்கு மக்­க­ளுக்­காக அமைக்­கப்­ப­ட­வில்லை. தெற்­கி­லுள்ள மக்­க­ளுக்­கா­க­வும் தான் அமைக்­கப்­பட்­டுள்­ளது. போரில் ஈடு­பட்ட படை­யி­னர் மீது நட…

  7. படகில் நியூஸிலாந்து சென்றோர் இந்தோனேசியாவில் மடக்கப்பட்டனர் படகு மூலம் நியுசிலாந்து நோக்கி பயணித்த 28 பேர் இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கையை வந்தடைந்த இவர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல மினுவாங்கொடை நீதவான் சிலனி சதுரந்தி பெரேரா அனுமதித்தார். இதேவேளை, சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிரவிடப்பட்டுள்ளது. http…

  8. ‘தொல்லைகள் அதிகரித்துவிட்டன’ வடக்கு மாகாணத்தில், காட்டு யானைகளின் தொல்லைகளும், குரங்குகளின் தொல்லைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. இதன் காரணமாக, தங்களது வாழ்வாதாரமான பயிர்ச் செய்கைகளையும், தங்களது இருப்பிடங்களையும், உயிர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அன்றாடம் போராடி வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்களையும், அவர்களது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களையும் காட்டு யானைகள் மற்றும் குரங்குகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடியாக மேற்கொள்ளப் படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அறியத் தர முடியுமா? என்று, நாடாள…

  9. தொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய மேம்பாட்டிற்கு இந்தியா உதவி ஹட்டன், நுவரெலிய மாவட்டத்தில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் டாரஞ்சித் சிங் சந்து மற்றும் கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.நடரசாலிங்கமும் கைச்சாத்திட்டனர். தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு 199 மில்லியன் ரூபாவை மானியமாக வழங்குகிறது. குறித்த மேம்படுத்தல் திட்டத்தில் புதிய உ…

  10. ஜனாதிபதி மைத்திரி - ட்ரம்ப் முதன்முறை சந்திப்பு நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்து இரண்டாவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை முதன்முதலாகச் சந்தித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அளித்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பாரியார் ஜயந்தி புஷ்பா குமாரியும் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப்பும் உடனிருந்தனர். http://www.virakesari.lk/article/24707

  11. வடக்கு – தெற்கு இன­வா­தி­க­ளி­டையே உத்­தி­யோ­கப்­பற்­றற்ற ஒப்­பந்­தங்­கள்....அமைச்­சர் மனோ­க­ணே­சன் வடக்கு – தெற்கு இன­வா­தி­க­ளி­டையே உத்­தி­யோ­கப்­பற்­றற்ற ஒப்­பந்­தங்­கள் காணப்­ப­டு­கின்­றன. இவர்­கள் அனை­வ­ரும் உற­வி­னர்­க­ளா­வர். இப்­ப­டி­யான உற­வி­னர்­கள் சிறி­த­ளவே இருக்­கின்­ற­னர். இவர்­களை ஓரம்­கட்டி இலங்­கை­யர்­கள் என்­ப­தன் கீழ் பய­ணிப்­போம். இவ்­வாறு அமைச்­சர் மனோ­க­ணே­சன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூ­யோர்க்குக்குச் சென்று ஐ.நா. பொதுச் சபை அமர்­வில் உரை­யாற்­ற­வுள்­ளார். அவர் உரை­யாற்­றும்­போது அங்­குள்ள இன­வா­தக் குழுக்­கள் அவ­ருக்­கெ­தி­ராகப் போராட்­டங்­களைச் செய்­ய­வுள்­…

  12. ஜெனிவாவில் தமிழ்ச்செல்வனின் மனைவி

  13. மன்னார் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு எதிராக, மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், புதன்கிழமை (20) காலை முறைப்பாடு செய்துள்ளார். மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த கடலுணவு பொருட்களைக் கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகரான வெற்றிவேல் தயானந்தன் (வயது-40) என்பவரே, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “…

  14. சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இன்றைய தினம் காலை இடம்பெற்றது. சமத்துவத்திற்கான பிரஜைகளின் நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன், புரவெசி பலய அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் காமினி வியங்…

  15. ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார். இலங்கையிலுள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவஸ்கி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் நேற்று சந்தித்துள்ளார். கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பு மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார். இச் சந்திப்பில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. கலந்துரையாடலின் இறுதியில் இச் சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன http://www.virak…

  16. யாழில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு ஏற்பட்ட அவமானம்..! யாழ் மண்டைத் தீவு பகுதியில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவிக்கு, நபர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை நேற்றைய தினம் யாழ் பொலிசார் கைது செய்துள்ளனர். மண்டைத் தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவருக்கே இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டரங்கு ஒன்றில் உள்ள அறை ஒன்றில் வைத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த மாணவி தனது பெற்றோரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொலிஸில் முற…

  17. யாழில் போதைப் பொருளுடன் 10ம் தரத்தில் கற்கும் மாணவர் கைது யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=95596

  18. புலிகளை அழித்தொழித்ததால் என்னைப் பழிவாங்குகின்றனர் நான் நினைத்­தி­ருந்­தால் புலி­க­ளு­டன் ஒப்­பந்­தத்­தைச் செய்­து­ கொண்டு சத்­த­மில்­லா­மல் இருந்­தி­ருக்க முடி­யும். நாட்­டுக்­காக நான் புலி­க­ளி­டம் போர் செய்து அவர்­களை அழித்­த­தால் இன்று இந்த ஆட்­சி­யா­ளர்­கள் எங்­களை அர­சி­யல் ­ரீ­தி­யா­கப் பழி­வாங்­கு­கின்­ற­னர். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நாங்­கள் மிக­வும் சிர­மப்­பட்டு இந்த நாட்­டைப் புலி­க­ளி­டம் இருந்து மீட்­டெ­டுத்­தோம். தாய் நாட்­டின்­மீது நாம் வைத்த அன்பு கார­ண­மாக இந்த நாட்­டைப் புலி­க­ளி­டம் இருந்து பாது­காப்­ப­தற்குப் பல தியா­கங்­களைச் செய்­தோம். எ…

  19. கழிவுகளை கொட்டுவதற்கான தடையுத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றால் நீக்கம் மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையினால் மேல் நீதிமன்றில் குறித்த தடையினை நீக்குமாறு கோரும் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதனை விசாரணைசெய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடின் குறித்த தடையுத்தரவினை நீக்கியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணை எதிர்வரும் 04 ஆம்திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மாநகர …

  20. உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடாது – சம்பந்தன்! எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலேயே போட்டியிடும் எனவும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்…

  21. யாழ். அம்­மாச்சி உண­வ­கம் சத்­தம் சந்­த­டி­யின்­றித் திறப்பு கொழும்­பின் அழுத்­தம் கார­ணமா? வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சால் நடத்­தப்­ப­டும் அம்­மாச்சி உண­வ­கம் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது. கொழும்பு அர­சின் அழுத்­த­த்தால் திறப்பு விழா நிகழ்வு ஏது­மின்றி அது இயங்­கி­யது. வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சின் ஏற்­பாட்­டில் விவ­சா­யக் கண்­காட்சி நேற்­றை­ய­தி­னம் திரு­நெல்­வே­லி­யில் அமைந்­துள்ள விவ­சாயப் பயிற்சி கல்­லூ­ரி­யில் ஆரம்­ப­மா­னது. அதில் பயிற்­சிக் கல்­லூ­ரிக்கு முன்­பாக அம்­மாச்சி உண­வ­கம் ஊடாக கண்­காட்­சி­யில் பங்­கேற்ற அனை­வ­ருக்­கும் உண­வு­கள் வழங்­கப்­பட்­டன. வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சால் அம்­மாச்சி உண…

  22. பாத யாத்­தி­ரையில் குழப்பம் முன்னாள் ஜனா­தி­பதியின் செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத் தொடர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதி­மன்­றினால் விதிக்­கப்­பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் என்­ப­வற்றைச் செலுத்­து­வ­தற்­காக பெளத்த தேரர்கள் நேற்று கிரி­பத்­கொ­டையில் நிதி திரட்­டும்­போது அங்கு குழப்ப நிலை ஏற்­பட்­டது. “சில் துணி சிறைக் கைதி­களைப் பாது­காக்கும் நிதியம்” எனும் அமைப்பு லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதி­மன்­றினால் விதிக்­கப்­பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் என்­ப­வற்றைச் செலுத்­து­வ­தற்­காக கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் ந…

  23. லலித்துக்கும் அனுஷவுக்கும் பிணை முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (20) பிணை வழங்கினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/லலித்துக்கும்-அனுஷவுக்கும்-பிணை/175-204161

  24. ‘புதிய அரசியல் சீர்திருத்தத்தின் ஊடாக நல்லதொரு தீர்வை வழங்குவோம்’ “இந்த நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும். எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். “தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார். அம்பாறை, திருக்கோவில…

  25. கொன்று குவிப்பைக் கண்டு கதறியோருக்கு ‘ஆறுதலையாவது வழங்க முடியும்’ “இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று, எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த அகமானது அமைக்கப்பட்டமை வரவேற்புக்குரியது” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு, வட்டுவாகலில் நிர்மாணிக்கப்பட்ட, பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலையம் திறப்பு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில், சிறப்பு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.