ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
தமிழர்கள் மீண்டும் போராடுவதற்கான தருணம் இதுவல்ல எம்மை நாமே ஆளும் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து அரை குறைத் தீர்வை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான கூட்டாட்சித் தீர்வு கிடைக்கும் வரை தமிழர்கள் சளைக்காது போராட முன்வர வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் உத்தேச அரசமைப்ப முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் டம்பெற்றபோது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டி ருந்தார். மேற்படி நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்துகொள்வார்களான சில ஊடகங்க…
-
- 0 replies
- 415 views
-
-
20ஐ ஆதரிப்பதா இல்லையா? கூட்டமைப்பு கூடி ஆராய்கிறது “அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நாளை மறுதினம் நாடாளுமன்றில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நடைபெறும். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா? என்பது தொடர்பில் இதன்போதே முடிவு எடுக்கப்படும்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 20ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “20ஆவது திருத்…
-
- 1 reply
- 202 views
-
-
வடக்கு முஸ்லிம்களின் வீடமைப்பு வசதிகளுக்காக முன்னின்று செயற்படுவேன் - மாவை வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வீடமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க தாம் முன்னின்று செயற்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய சோ.மாவை சேனாதிராஐா தெரிவித்துள்ளார். அதற்காக தற்போதைய காலம் உதயமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னேடுத்துள்ளதாக மாவை சேனாதிராஐா குறிப்பிட்டார். யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் தற்போதைய காலத்தில் வீடமைப்பு வசதிகள் அற்று இருக்கும் முஸ்லிம் மக்கள…
-
- 3 replies
- 507 views
-
-
நல்லெண்ண சமிக்ஞையாகவே இலங்கைக்கு வருகை தந்தேன் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் (ஆர்.ராம்) உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானு வேல் அடிகளார் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களையும், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகளுட…
-
- 1 reply
- 335 views
-
-
தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்டமைப்பு தயார் அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தத் தைக் கைவிட்டால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருப்பதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார். ‘‘விரைவில் அந்தத் தேர்தல் நடத்தப்படுவது நல்லது என்றே நினைக்கின்றோம்’’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘‘2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் குளறுபடிகள், – மோசடிகள் நடைபெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆச…
-
- 3 replies
- 382 views
-
-
தமிழ் அரசுக் கட்சி மீது ஈபிஆர்எல்எப் சீற்றம் இடைக்கால அறிக்கையின் இணைப்பில் தமது கட்சியைப் புறம்தள்ளிவிட்டதாம் ‘‘வழிநடத்தல் குழுவின் இடைக்கால வரைவுக்குப் பின்னிணைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டது, தமிழ் அரசுக் கட்சியின் யோசனைதான். அந்தக் கட்சி இப்படிச் செயற்படுவதை நாம் கண்டிக்கின் றோம்’’ இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தெரிவித்துள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் உயர்பீடச் சந்திப்பு வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் அந்தக் கட்சியின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்…
-
- 0 replies
- 322 views
-
-
நாட்டைப் பாதுகாப்பது பிக்குகளின் கடமையா? இது பௌத்த நாடு. பிக்குகள் நாட்டின் காவல் தெய்வங்கள். அமைச்சர்கள் பௌத்தத்தை மதிக்கத் தவறுகின்றார்கள். நாடாளுமன்றம் தற்போது கெட்டவர்களின் கூடார மாக மாறியுள்ளது. இவ்வாறொல்லாம் பேசியிருப்பவர் வேறு யாருமல்லர் இலங்கையின் பெரும் மாகாநாயக்கபீடமான அஸ்கிரிய பீடத்தின் நாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர். நாட்டின் மரியாதைக்குரிய இடமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றம் வளரும் பிள்ளைகளை அழைத்துச் செல்லக்கூடாத இடம் என்று கூறுமளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது என்றும் கவலைப்பட்டிருக்கிறார் அவர். அண்மையில் இதே மடாதிபதியைச் சந்தித்த பின்…
-
- 0 replies
- 470 views
-
-
கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸாரால் தேடப்பட்ட பிள்ளை ஒன்று தனது சொந்த வீட்டிலேயே நூதனமாக ஒளிந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதம்பே, புளியன்கடவர, வெல்பொதுவெ பிரதேசத்தை சேர்ந்த ஐந்து வயதான இச்சிறுவனை முன்பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக அவரது பெற்றோர் தயார்படுத்தி வைத்துள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் முன்பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாரான போது பிள்ளை காணாமல் போயிருந்தமையால் அவரது பெற்றோர் வீடு முழுவதும் தேடிப்பார்த்துள்ளனர். அதன்போது, வீட்டுக்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்று அவ்வழியாக வேகமாக பயணித்திருந்தமையால் அந்த லொறியில் பிள்ளை…
-
- 1 reply
- 589 views
-
-
அமெரிக்கா பறந்தார் செல்வம் அடைக்கலநாதன்; ஐ.நாவில் சனாதிபதியுடன் கைகோர்ப்பு? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தற்போதைய தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அமெரிக்கா பயணமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவரது இந்த பயணம் தொடர்பான வெளிப்படைத்தன்மை ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லையாயினும் இந்தச் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் பயணம் பல்வேறுபட்ட சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஸ்ரீலங்காவின் சனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக தனியே சென்றுள்ளமை தெரிந்ததே. எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 501 views
-
-
இந்துப் பிட்டி மயானத்தில் சடலம் எரிக்க இடைக்காலத்தடை புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி இந்துப்பட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பித்தது. சமூக நீதியின் அடிப்படையில் இந்த மயானத்திற்கு அண்மையில் வாழும் மக்களின் வாழ்வுரிமையை அடிப்படையாகக் கொண்டு இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் கட்டளையில் சுட்டிக்காட்டினார். இந்த மயானம் தொடர்பில் வடக்குமாகாண உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் உட்பட உள்ளுராட்சிக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் ஆராய்ந்து மேற்கொண்டு நடவடிக்கை மேற்க…
-
- 0 replies
- 375 views
-
-
குடாநாட்டில் ஒருதொகுதி காணிகளை டிசெம்பருக்குள் விடுவிக்க இணக்கம் பலாலியில் நேற்று நடந்த சந்திப்பில் முடிவு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு தொகுதிக் காணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்புத் தரப்பினர், மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன், கரவெட்டி, பருத்தித்துறை, தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், நல்லூர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர்கள் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரை பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்றுக் காலை 10.30 மணியிலிருந்து 12.30 மணி வரை சந்தித்துக் கலந்துரையாடினர். க…
-
- 0 replies
- 223 views
-
-
ஒன்பது மாகாண சபைகளையும் ஒக். 2 கலைத்துவிட யோசனை மைத்திரி, ரணிலிடம் கபே முன்வைப்பு முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் இணக்கப்பாட்டுடன் நாட்டின் 9 மாகாண சபைகளையுமே எதிர்வரும் ஒக்ரோபர் 2ஆம் திகதி கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள் ளது கபே அமைப்பு. சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கமையவே அரச தலைவர், தலைமை அமைச்சர் ஆகியோரிடம் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று கபே (நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்…
-
- 0 replies
- 243 views
-
-
மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதில் அரசுக்குக் குழப்பம் கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசு குழப்ப நிலைக்குள் உள்ளதாக அறியமுடிகின்றது. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவில் திருத்தங்களை முன்வைப்பது சாத்தியமாகாது என சட்டமா அதிபரும் சட்ட வல்லுநர்களும் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். உயர் நீதிமன்றின் வியாக்கியானத்துக்கு அமைவாகவே இந்த ஆலோசனையை அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் 20ஆவது திருத்தச் சட்டவரைவைக் கைவிடும் முடிவில் அரசு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இனிவரும் தேர்தல்கள் அனைத்தும் கலப்பு முறையிலேய…
-
- 0 replies
- 232 views
-
-
தமிழ்மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் தெளிவாக உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகம் ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தனது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருக்கும்போது, 2009ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரியபோது அத்தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதாக பெரும்பான்மையாக முடிவெடுக்கப்பட்டது. இதன்பின்னர், சட்டத்தரணி கனகேஸ்வரனின் வீட்டு நூலகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைர் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் (கூ…
-
- 1 reply
- 391 views
-
-
யாழ். சிறைச்சாலைக்குள்ளிருக்கும் கைதிக்கு கஞ்சாவை வழங்க முயற்சி 10 நாள்களில் 3ஆவது சம்பவம் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குள் உணவுப் பொதியுடன் கஞ்சா போதைப் பொருள் மறைத்து வைத்துக் கடத்தும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் இடம்பெற்ற 3ஆவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது என்று சிறைச்சாலைத் தரப்பினர் தெரிவித்தனர். சிறையிலுள்ள குறிக்கப்பட்ட பெயரையுடைய கைதி ஒருவருக்கு வழங்குமாறு கூறி சிறைச்சாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்ற இருவர் உணவுப் பொதியை அந்த வீட்டுக்காரரிடம் வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர். அதில் சந்தேகம் கொண்ட அந்த வீட்டுக்காரர் உணவுப் பொதியைச் சி…
-
- 0 replies
- 169 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சரால் பல சலுகைகள் வழங்கப்பட்டே கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 20ஆவது திருத்தச்சட்டம் கிழக்கு மாகாணத்தில் இரண்டு தடவைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாது ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்ன 20ஆவது திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் அதன் பின்னர் பரிசீலித்தே ஆதரிப்பதாக நிராகரிப்பதா என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், குறித்த திருத்தம் வெளிவராத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் தாம் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்தன. …
-
- 0 replies
- 375 views
-
-
கிளிநொச்சியில் வாள்வெட்டு : 4 பேர் வைத்தியசாலையில் கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டு தாக்குதல் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் மதுபோதையில் நின்ற நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர். எனினும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர…
-
- 6 replies
- 518 views
-
-
சர்வதேச சமவாய சட்டம் பேராபத்தை ஏற்படுத்தும் தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதியை சந்தித்து கூட்டு எதிரணியினர் கோரிக்கை (எம்.ஆர்.எம்.வஸீம்) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வலுக்கட்டாயமாக காணா மல் ஆக்கப்படுவதில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் நாட்டையும் தேசிய படைகளையும் சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்கும் விடயமாகும். எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு கொண்டு கொண்டுவரப்பட…
-
- 0 replies
- 412 views
-
-
22 ஆம் திகதி அல் ஹுசைனை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி ஹுசைனின் அதிருப்திக்கு பதிலளிப்பார்? ஐ.நா. அரசியல் உதவி செயலர் செனனையும் சந்திப்பார் (நியூயோர்க்கிலிருந்து ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமை ,ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செய லர் தோமஸ் செனன் மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய நாடுகளுக்கா…
-
- 0 replies
- 407 views
-
-
ஜனாதிபதி நியூயோர்க் நகரைச் சென்றந்தார்...! ஐக்கிய நாகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நியூயோர்க் ஜோண் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். நியூயோர் நகரில் ஜனாதிபதி தங்கும் ஹோட்டலில் அமெரிக்காவுக்கான இலங்கை தூவராலய உத்தியோகத்தர்கள் ஜனாதிபதியையும் ஜயந்தி சிறிசேன அம்மையாரையும் மிகுந்த கோலாகலமாக வரவேற்றனர். http://www.virakesari.lk/article/24584
-
- 0 replies
- 273 views
-
-
ஞானசார தேரர் நாட்டைவிட்டு ஓட்டம் சிங்கள ஊடகச் செய்தியால் பரபரப்பு பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது. பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. எனினும் அவர் சட்டத்தின் பிடியில் சிக்காமல் வலம் வந்து கொண்டிருந்தார். அவருக்கு, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் ஆதரவும் பாதுகாப்பும் இருப்பதாக அப்போது பல்வேறு தரப்பினராலும் கு…
-
- 0 replies
- 193 views
-
-
தேர்தல் நடக்கட்டும் மாகாண சபைகள் தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்கிற பேச்சு மீண்டும் அடிபட ஆரம்பித்திருக்கிறது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் தேர்தல் நடக்கலாம் என்றும் எதிர்வுகூறப்படுகின்றது. மாகாண சபைகள் அனைத்துக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கான அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதானால், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும், மக்களின் பெரும்பான்மை ஆதரவையும் பெறவேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படும் நிலையிலேயே தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களின் ஆயுள் இந்த மாதத்த…
-
- 0 replies
- 186 views
-
-
எந்தவொரு தேர்தலுக்கு முன்பாகவும் அரசமைப்புக்கான கருத்துக் கணிப்பே முதலில்வேண்டும் நாட்டில் எந்தவொரு தேர்தலை நடத்துவதற்கு முன்னரும், புதிய அரசமைப்புக்கான பொது வாக்கெடுப்பே நடத்தப்படவேண்டும் என்று அரசிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் டிசெம்பரில் நடைபெறலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த விடயத்தை அரசிடம் மீண்டும் ஆணித்தரமாகக் கூட்டமைப்புக் கூறியுள்ளது. 3 மாகாண சபைகளுக்கும் இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் அது புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி…
-
- 0 replies
- 170 views
-
-
தொடரும் சீரற்ற காலநிலையினால் டெங்கு காய்ச்சல் தீவிரம் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் தொகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 975 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 370 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த இருவார காலமாக நாட்டில் தொடரும் சீரற்ற …
-
- 0 replies
- 290 views
-
-
மஹிந்த பறித்த வீட்டை கையளிக்குமாறு கடிதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், அரசுடமையாக்கப்பட்ட மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத்தொகுதியை, உரிமையாளரிடமே கையளிக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, அந்த வீட்டை உரிமையாளரிடமே கையளிக்க, நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், சிரேஷ்ட சட்டத்தரணி அனுப்பிவைத்துள்ள, கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகம் சிவராஜா, சிவராஜா சரோஜினி ஆகியோருக்கு சொந்தமான, கொழும்பு- 6 வெள்ளவத்தை சப்…
-
- 0 replies
- 188 views
-