ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143345 topics in this forum
-
பிரித்தானிய உயரஸ்தானிகர்,வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி சந்திப்பு இலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி மெரில் விக்ரமசிங்கவை நேற்று வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். ஜேம்ஸ் டவுரிஸ் மன்னார் பகுதியில் மேற்கொன்டுள்ள விஜயத்தின் போது வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியை சந்திதித்துள்ளார். அங்கு அவருக்கு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியர் அட்மிரல் விக்ரமசிங்க அவர்கள் வரவேற்றியுள்ளார். இவா்களிடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் நினைவுச்சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. மேலும் இவர் தலைமன்னார் கடற்படை மு…
-
- 0 replies
- 253 views
-
-
உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடையமுடியாது “உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை ஒருபோதும் அடைய முடியாது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை முழுமையாக அறியவேண்டும். அது வெளிப்படுத்தப்படாதவரை நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது” இவ்வாறு எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலக தினத்தை முன்னிட்டு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரி…
-
- 0 replies
- 274 views
-
-
திருப்பெரும்துறை குப்பை பிரச்சினைக்கு குறுகியகால தீர்வு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இரகசிய உயர்மட்ட கலந்துரையாடலையடுத்து தற்காலிகமான தீர்வொன்று திருப்பெரும்துறை குப்பை பிரச்சினைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தை அடுத்து இந்த உயர்மட் ட இரகசிய கலந்துரையாடல் இடம்பெறுள்ளது. இதன் பிரகாரம் தற்காலிகமாக குப்பைகளை ஏறாவூர் பிரதேச சபை அல்லது வவுணதீவு பிரதேச சபைக்கு உட்பட் ட பகுதிகளில் தற்காலிகமாக கொண்டு சென்று கொட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது . ஆகவே இன்றில் இருந்து மாநகரசபைக்கு முதலமைச்சர் காரியாலயத்தில் இருந்து சகல உதவிகளையும் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரகசிய கலந்…
-
- 0 replies
- 268 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழு இலங்கை வருகை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய குழுவினர் டெல்லியிலிருந்து இன்று மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய குழுவினர் இலங்கையில் வந்துளனர். இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவை, இந்திய இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர். http://www.virakesari.lk/article/23832
-
- 0 replies
- 294 views
-
-
பெரும் அச்சுறுத்தலின் மத்தியில் கிளிநொச்சி நகரம் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயநிலை காரணமாக சுகாதாரத் துறையினரும், மன்னார் பிராந்திய தொற்றுநோய் விஞ்ஞான மருத்துவ அதிகாரி சுதாகர் தலைமையிலான டெங்கு விசேட நடவடிக்கைப் பிரிவினரும் மும்முரமாக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவினரது ஆய்வுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் காணப்படும் நீர்தேங்கக்கூடிய பாத்திரங்கள், பழைய போத்தல்கள் மற்றும் வீசியெறியப்படும் பாவனைப் பொருட்கள் ஆகியவற்றில் டெங்கு நுளம்புகள் வளர்வது கண்டறியப்பட்டுள்ளது. எனவே கிளிநொச்சி மாவட்ட மக்கள் தத்தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் காணப்படும் நீர் த…
-
- 0 replies
- 289 views
-
-
தலைவர் பிரபாகரனைத் தவறாகப் பேசிய பொலிஸ் அதிகாரிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் அவர்களை அமைதிப்படுத்திச் சாந்தப்படுத்தும் நிலை ஏற்பட்டது. சம்பவம் வடமராட்சி கொற்றாவத்தை என்ற இடத்தில்நிகழ்ந்தது. பொலிஸாரின் நடமாடும் சேவையிலேயேஇந்தச் சம்பவமும் இடம்பெற்றது. வடமராட்சி கொற்றாவத்தைப் பகுதியில் பொலிஸாரின் நடமாடும் சேவை இரண்டு தினங்கள் இடம்பெற்றது. அதன் முதல் நாளான நேற்று முன்தினம் ஆரம்ப விழா இடம்பெற்றது. நிகழ்வில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்ட…
-
- 4 replies
- 892 views
-
-
3 கேள்விகளும் இவ்வாறே கசிந்தன; பொத்தானில் கமெரா, காலில் சுவிட்ச்; நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில், இரசாயனவியல் பரீட்சையின் போது, கேள்விகள் மூன்று கசிந்த விவகாரம், பொலிஸ் விசாரணைகளின் ஊடாக அம்பலமாகியுள்ளது. கேள்விகளைக் கசியவிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பாடசாலைப் பரீட்சார்த்தியான மாணவனுக்கு, இரசாயனவியல் பாடத்துக்கு மேலதிக வகுப்புகளை எடுக்கும் ஆசிரியரே உதவிசெய்துள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பாதத்திலிருந்து தொழிற்படும் இயந்திர உபகரணத்தின் உதவியுடனேயே, அந்த கேள்விக்கான புகைப்படத்தை, தன்னுடைய வீட்டிலிருக்கும் கணினிக்கு, மாணவன் அனுப்பிவைத்துள்ளான். …
-
- 4 replies
- 557 views
-
-
மண்டைதீவில் படகு விபத்து – மாணவர்கள் ஐவர் உயிரிழப்பு பண்ணை, மண்டதீவு கடற் பகுதியில் சற்றுமுன்னர் நடந்த படகு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரைத் தேடும் பணி நடைபெறுகின்றது. உயிரழிந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மண்டை தீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற சமயமே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கடலுக்குச் சென்றபோதே இந்த இடர் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது. மேலதிக விவரங்கள் விரைவில்…. http://newuthayan.com/story/23607.html
-
- 43 replies
- 5.4k views
- 1 follower
-
-
உள்நாட்டுப் போரின் போதான செயற்பாடுகள் தொடர்பில் தனக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டின் இலங்கைத் தூதுவராக பணியாற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக அங்குள்ள மனித உரிமைகள் அமைப்புக்களால் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு இடையிலான 30 வருட கால போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றது என்று கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு அனுமதியளித்தேன் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று அ…
-
- 1 reply
- 519 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!! யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை, அரியாலைக்கும் பூம்புகாருக்கும் இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே குறித்த நபர் தொடருந்திலிருந்து இறங்கியுள்ளார். அவர் தொடருந்தின் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/24238.html
-
- 3 replies
- 350 views
-
-
”20“ ஏற்க கிழக்கு மாகாண சபை தயார்: முதலமைச்சர் நஸீர் அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மேலும் சில திருத்தங்களுடன் கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்படுமாயின் அதற்கு முழுமையான ஆதரவை வழங்க கிழக்கு மாகாண சபை தயாராகவுள்ளதாக முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் விடுதலைக்காக இந்த அரசாங்கம் செயற்படுமாயின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கு தாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வ…
-
- 0 replies
- 339 views
-
-
கையெழுத்திட்டார் சபாநாயகர்.! உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில், இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டமூலத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலானது கலப்பு முறையில் அதாவது, 60 வீதம் தொகுதிவாரி முறையிலும் 40 வீதம் விகிதாசார முறையிலும் நடைபெறவுள்ளதோடு பெண்களுக்கு 25வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக இருந்த ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் உள்ளுராட்சி அதிகார விசேட ஒழுங்குகள் சட்டம் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் …
-
- 0 replies
- 139 views
-
-
இலங்கை வீரர்களின் நினைவுத் தூபிக்கு அமெரிக்க தூதுக்குழு அஞ்சலி பத்தரமுல்லையில் அமைந்துள்ள முப்படையினரின் நினைவுத்தூபிக்கு அமெரிக்க இராணுவ தூதுக்குழுவினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அண்மையில் நிறைவுற்ற “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017” இல் பங்குகொள்வதற்காக அவுஸ்திரேலியாவிற்கான அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளையின் வடக்கு துணை கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபல் தலைமையில் வருகை தந்த 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரே முப்படையினரின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தினர். இராணுவத் தூதுக் குழுவினரோடு நினைவுத்தூபிக்குச் சென்ற இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செ…
-
- 0 replies
- 146 views
-
-
‘2020 வரை ஆட்சி நகரும்’ “தற்போதைய கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது” என்று நம்பிக்கையூட்டிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “அவ்வாறு முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலமே சாத்தியமாகும்” என்றும் குறிப்பிட்டார். “சூழ்ச்சிகளால் எதையும் சாதிக்க முடியாது. எவர் இருந்தாலும், எவர் போனாலும் பறவாயில்லை, எங்களது ஆட்சி தொடரும், எவர் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். அது எந்தக் கட்சியினராக இருப்பினும் பரவாயில்லை” என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அச்சு, இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளை நேற்று (30), ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 331 views
-
-
யாழ் பண்ணை கடல் காவுகொண்ட மற்றைய உயிர் - பல்கலைக்கழக மாணவியும் பலி யாழ்ப்பாண பண்ணை கடல் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் கயாமடைந்த பல்கலைக்கழக மாணவி நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த 24 ஆம்திகதி யாழ்ப்பாணம் பண்ணை குருசடித்தீவுக்கு சென்ற படகு விபத்திகுள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பெண்கள் கடலில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் அருகில் இருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டு 5 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் யாழ்பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவி செல்வி டயான சகாயதாஸ் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரி…
-
- 2 replies
- 471 views
-
-
இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் !!! இலங்கை எல்லைக்குள் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் அதிவேக தாக்குதல் படகின் உதவியுடன் மீட்டுள்ளனர். குறித்த படகு இலங்கைக்கு சொந்தமான வட கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் போது அனலைத்தீவுக்கு மேற்கு கடற் பகுதியில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பின்னர் கடற்படையினர் விரைவாக செயற்பட்டு நான்கு மீனவர்களை காப்பாற்றியதோடு படகையும் மீட்டுள்ளனர். காப்பாற்றப்பட்ட மீனவர்களுக்கு தேவையான முதலுதவி, உணவு மற்றும் குடிநீர் வசதிகளை வழங்கி பின்னர் காங்கேசன் துறை இ…
-
- 0 replies
- 253 views
-
-
"எக்காரணத்திற்காகவும் தனது பாதையை மாற்றப்போவதில்லை" நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காகவும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் பாராட்டத்தக்கவை என ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்துள்ளார். பல்வேறு விமர்சனங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த வரலாற்றுரீதியான நடவடிக்கைகளின் வெற்றிக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த ஐக்கிய அமெரிக்காவின் …
-
- 0 replies
- 268 views
-
-
போரின் போதான உயிரிழப்புக்கள் படுகொலையாகாது – ஜெகத் மீதான வழக்கால் அரசு சீற்றம் “பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கவே நாங்கள் போர் செய்தோம். ஆதாரங்கள் இல்லாமல் இராணுவத் தளபதிகள் மீது போர்க் குற்றங்களைச் சுமத்த முடியாது. போரின் போது இடம்பெற்ற உயிரிழப்புகள் அனைத்தும் படுகொலை என்று எடுத்துக் கொள்ள முடியாது” இவ்வாறு சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெ…
-
- 1 reply
- 267 views
-
-
போர்க்குற்ற விசாரணை: ஜகத் ஜயசூரிய மீது வழக்குத் தாக்கல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றஞ்சுமத்தி, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது பிரேஸில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஜகத் ஜயசூரிய மீது தென் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனவென, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/போர்க்குற்ற-விசாரணை-ஜகத்-ஜயசூரிய-மீது-வழக்குத்-தாக்கல்/150-203002
-
- 4 replies
- 1.4k views
-
-
மீள்குடியேற்ற பகுதிகளுக்கும் பேரூந்து சேவை விஸ்தரிப்பு யாழ்ப்பாணம் அச்சுவேலி தனியார் பேரூந்து சேவையானது எதிர்வரும் 2 ஆம் திகதியில் இருந்து மீள்குடியேற்ற பகுதிகளுக்கும் தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக வலிகிழக்கு தனியார் சிற்றூர்தி சேவைகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். கடந்த யுத்தகாலத்திற்கு முன்னர் வலி கிழக்கு பகுதிகளூடாகவும் சிற்றூர்தி சேவைகளானது இடம்பெற்றுவந்திருந்தது. எனினும் பின்னர் அப் பகுதிகள் உயர் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் அப் பகுதிக்கான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே தற்போது அப் பகுதிக்கான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலி கிழக்கு தனியார் சிற்றூர்தி சங்கத் தலைவர் அ…
-
- 0 replies
- 375 views
-
-
மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரி சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவர் மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பதுளை பிரதேசத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்யவுள்ளார். இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு - பதுளைவீதி கரடியனாறில் 81.4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம் உட்பட இன்னும் பல அரசியல் முக்க…
-
- 0 replies
- 228 views
-
-
இந்திய மீனவர்கள் எண்மர் கைது நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்படுகிறது. இரண்டு படகுகளில் வந்த எட்டு மீனவர்களும் இன்று காலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். http://newuthayan.com/story/24226.html
-
- 0 replies
- 144 views
-
-
வடக்கு மாகாண சபை கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினர் தமிழ் மொழியின் தேர்ச்சிக்காக ஆசிரியர்களுக்கு 100 மணித்தியாலங்கள் கொண்ட "புலமைசார் பட்டயக் கற்கை நெறி"க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இக்கற்கை நெறி ஆசிரியர்களை மையமாகக் கொண்டு புலமைசார் பட்டயக் கல்விக்கான பாடவிதானங்களை உள்ளடக்கியதாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை 021 7900540 இலக்க தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்-ளும்படியும் விண்ணப்பங்களை தலை-வர், ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கம், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாணம், மருத…
-
- 0 replies
- 487 views
-
-
உலகிலேயே இலங்கையானது அதிகூடிய வலிந்து காணாமல் ஆக்கபட்டோரை கொண்டிருக்கும் நாடாகும். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கு ஒரு மசோதாவை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியது. எனினும், இந்த நாள்வரைக்கும் அது நிறுவப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளை விசாரிக்க பணிக்கப்பட்ட எல்லா வகையிலுமான ஆணைக்குழுக்கள் இதுவரைக்கும் எந்தவொரு வழக்குகளையும் விசாரணை செய்து தீர்க்கவில்லை. அனைத்து விடயங்களிலும் தோல்வியே காணப்பட்டுள்ளது என சுவிட்ஸர்லாந்தில் இயங்கிவரும் மனித உரிமை அமைப்பின் இலங்கைக்கான பிரசார முகாமையாளர் யுவேஸ் போவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் …
-
- 0 replies
- 357 views
-
-
வானொலிப் பெட்டியொன்று வெடித்ததில், சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. மாலபே, பிட்டுகல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வானொலிப் பெட்டியை வீட்டுக்கு எடுத்துச்சென்று, குறித்த வானொலிப் பெட்டிக்கு மின்சாரத்தை கொடுப்பதற்கு முயன்றபோதே, இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 13 வயதுடைய சிறுவன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று, கூறப்படுகிறது. பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும், குறித்த சிறுவன், பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக, மாலபேயிலுள்ள தன்னுடைய பாட்டியின் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில், பிட்டுகல பிரதேச…
-
- 0 replies
- 429 views
-