ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
மறக்கப்படும் பாதிக்கப்பட்டோர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் யுத்தத் தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றது. மக்களுக்கு நீதிவழங் குவோம் என நாட்டுக்கு உறுதி வழங்கியிருக் கிறது. ஏன் சர்வதேசத்திற்குக் கூட அந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதன்படி அநீதிக்குட்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நீதியை நிலைநாட்டியே ஆகவேண்டும். அந்த நீதி வழங்கும் செயற்பாட்டிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகி நிற்கமுடியாது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் விடயத்தில் எதுவும் நடக்காது போன்றே தெரிகின்றது. மக்கள் தொடர்ந்து ஏமாற்றத்துடனேயே போராடிக்க…
-
- 0 replies
- 329 views
-
-
யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்து நீர்கொழும்பில் கேரள கஞ்சாவை விற்றுவந்தவர் வவுனியாவில் கைது வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட 2 கிலோகிராம் கேரள கஞ்சா பொதியினை வைத்திருந்த சந்தேக நபரை நேற்று இரவு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 2 கிலோகிராம் கஞ்சாவினை 1,50,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்து நீர்கொழும்பிற்கு கொண்டு சென்று 3,00,000 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 280 views
-
-
"தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியது" ஜே.வி.பி.யில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து பல விடயங்களை செய்யும் போது 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு சில பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியது என ஜே.வி.பியின் பொதுச்செயலாளரும் கோப்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தார். ஊழல் அற்ற மோசடிகள் அற்ற நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார். நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அவர், நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினையும் சந்தித்தார். …
-
- 0 replies
- 383 views
-
-
“அத்துமீறி திறந்து வைக்கப்பட்ட நினைவுக் கல்வெட்டுக்கள் கழற்றி எரியப்படும்” ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை.! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வை, மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் புறக்கணிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தனது முழுமையான நிதி ஒதுக்கீட்டிலும் பங்களிப்புடனும் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிடத்தை கிழக்கு முதல்வர் மற்றும் அவரது சகாக்கள் இணைத்து அவர்களது அரசியல் இலாபங்களுக்காக என்னை புறக்கணித்து விட்டு திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதா…
-
- 0 replies
- 377 views
-
-
காணி அபகரிப்புக்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு ; ஏழை மக்களின் வழக்குச் செலவுகளுக்கு சுமணரத்ன தேரர் உதவுவதாக உறுதி மட்டக்களப்பு, வாழைச்சேனை, முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி மக்கள் 57 பேருடைய குடியிருப்பு காணிகளை அத்துமீறி அபகரித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற்றுத்தருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை முறாவோடை பாடசாலைக்கு சொந்தமான மைதானக் காணிக்கு மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சகிதம் பொதுமக்கள் வேலியை அகற்ற முற்பட்ட சர்ச்சையையடுத்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் மாவட்ட அரசாங்க அதி…
-
- 3 replies
- 602 views
-
-
சித்தாண்டியில் காணாமல்போன 62 பேரின் 27ஆவது நினைவு தினம் மட்டக்களப்பு, சித்தாண்டியில் காணாமல்போன 62 பேரின், 27ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று சனிக்கிழமை (19) அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியான சுற்றிவலைப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில் வாழைச்சேனை, பேத்தாளை, முறாவோடை, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் அபாயத்தை எதிர்நோக்கினர். இந்நிலையில், சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தில் நலன்புரி முகாம் அமைத்து, இலங்கையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை …
-
- 0 replies
- 334 views
-
-
நாமலை பொலிஸ் அதிகாரத்தின் கீழ் விசாரணை செய்ய உத்தரவு நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் சந்தன களங்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார். குற்றவியல் சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்சவை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி, நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. அந்தக் கோரிக்கை இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. பொலிஸ் அதிகாரத்தின் கீழ் நாமலை …
-
- 2 replies
- 263 views
-
-
"நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்படபோகும் மாற்றம்" நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக ஊவா மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், கேகாலை, அவிசாவளை, மாதுறுஓயா, பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை அல்லது இடியுடன் கூட…
-
- 0 replies
- 348 views
-
-
படகுகள் குறித்து இந்தியக் குழுவினர் ஆராய்வு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட படகுகளின் நிலை தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இந்திய கடற்றொழில் அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்களின் தலைவர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட இக் குழு இலங்கைக்கு வருகை தந்து படகுகளை பார்வையிட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகளை இலங்கை அரசாங்கம் விடுவித்திருக்கும் நிலையில், அவற்றை இந்தியாவுக்கு கொண்டு செல்ல கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காகவே மேற்படி 9பேர் கொண்ட குழு இலங்கை வருகை தந்திருந்தது. இதன்படி இந்த குழுவினர் நேற்று யாழ்.மாவட்டத்தில…
-
- 1 reply
- 302 views
-
-
ஆற்றில் விழுந்த சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய கடற்படையினர் நுவரெலியா, கிரகரி ஆற்றில் மூழ்கிய இருவரை கடற்படை வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகள் கிரகரி ஆற்றில் ஜெட் ஸ்கை வோட்டர் கோட்டில் வலம் வந்து கொண்டிருந்த போது தற்செயலாக இருவர் ஆற்றில் விழுந்துள்ளனர். ஆற்றில் விழுந்த இருவரையும் இலங்கை கடற்படையினர் ரெபிட் ஆக்ஷன் படகின் உதவியுடன் காப்பாற்றியுள்ளனர். குறித்த சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள், தற்போது இவர்கள் லண்டனில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/23333
-
- 0 replies
- 218 views
-
-
வடக்கில் 50 ஆயிரம் கல் வீடுகள் விரைவில் Share வடக்கு – கிழக்கில் வீடுகள் இல்லாதோருக்காக 50 ஆயிரம் கல் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஒப்பந்த நிறுவனங்கள் ஊடாகவே இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ளது. தேசிய ஒருங்கி ணைப்பு மற்றும் நல் லிணக்க அமைச்சு தலைமையில் ஏனைய சில அமைச்சுக்கள் இணைந்து இதனை முன்னெடுக்கவுள் ளன. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால் இது தொடர்பான திட்டம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. …
-
- 2 replies
- 697 views
-
-
சர்வதேசத்தின் நீதிபதிகள் பங்கேற்பதில் தவறில்லை திட்டவட்டமாக அறிவித்தார் புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையினால் நாட்டுக்கு எந்தவொரு பாதகமுமில்லை கால அவகாசத்துக்குள் பிரேரணையை அமுல்படுத்துவோம் மீண்டும் பிரேரணையை மீளாய்வு செய்யமாட்டோம் மனித உரிமை விவகாரத்தை அக்கறையுடன் கையாள்வோம் நீதித்துறை பொறிமுறையை இலங்கையே தயாரிக்கும் மேலதிக கால அவகாசத்தை இனி கேட்கமாட்டோம் இணை அனுசரணை வழங்கியமை சிறந்த முடிவு (ரொபட் அன்டனி) இலங்கையில் இடம்…
-
- 0 replies
- 273 views
-
-
விஜயதாசவின் முடிவு என்ன? திங்களன்று அவர் வெளியிடுவாராம் ஐக்கிய தேசியக் கட்சியின் மையக் குழுக் கூட்டத்தில் சரமாரியான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனது – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி நாளை மறுதினம் திங்கட்கிழமை சிறப்பு அறிவிப்பு வெளியிடவுள்ளார். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சீனாவுக்குக் குத்தகைக்கு கொடுத்த விடயத்தில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதாக நீதி அமைச்சர் விஜயதாச மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டது. இதற்காக மூவர் அடங்கிய…
-
- 0 replies
- 227 views
-
-
கொழும்பை வந்தடைந்தது இந்திய இராணுவக் குழு இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ் மற்றும் அவரது குழுவினர் நான்கு நாள்கள் நல்லெண்ணப் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளனர். இராணுவத் தலைமையகத்துக்குச் சென்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடினர். இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கும் இடையிலான பயிற்சி ஒத்துழைப்புகளை அதிகரிப்பது குறித்து இந்தப் பேச்சுக்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை இராணுவம் அண்மைய ஆண்டுகளில் நல்ல அனுபவங்களைப் பெற்றிருப்பதாகவும், இலங்கையின் க…
-
- 0 replies
- 263 views
-
-
பறித்த காணிகளை மக்களிடம் மீள வழங்கவேண்டும் சாள்ஸ் எம்.பி. கோரிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பிரதேசத்தில் மீள் குடியமர்ந்த மக்களின் காணிப் பிணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நடாளுமன்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் …
-
- 0 replies
- 276 views
-
-
அமைச்சர் டெனீஸ்வரன் குறித்து ரெலோவின் இறுதி முடிவு இன்று வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி, கிராம, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனை கட்சியின் அங்கத்துவத்தில் தொடர்ந்து நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோ இன்றைய தினம் தீர்க்கமான முடிவொன்றை எட்டவுள்ளதாக அறிவித்துள்ளது. வடமாகாண அமைச்சர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக்குழு கையளித்த அறிக்கையின் பிரகாரம் அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜா ஆகியோர் பதிவி விலகியிருந்தனர். இந்நிலையில் ஏனைய …
-
- 0 replies
- 215 views
-
-
மன்னாரில் பொலிஸாருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் முறுகல்! மன்னார் அடம்பன் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த போராளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வடமாகாண ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமையில் மன்னார் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டனர். இதன்போது திடீர் என அங்கு …
-
- 2 replies
- 404 views
-
-
உயிரிழந்த நிலையில் யானை மீட்பு வவுனியா பாலமோட்டை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானையொன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பாலமோட்டை, ஊரல்குளத்தில் யானை ஒன்று இறந்து காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனை அடுத்து ஓமந்தை பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் சம்பவ இடத்துக்கு சென்றதுடன், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரியால் யானை இறந்தற்குரிய காரணம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவ் மருத்துவ அறிக்கையின் படி ஐந்து வயதுடைய யானை வெங்காய வெடியினை உண்டதனால் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவு உண்ண முடியாமல் இறந்துள்ளதென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 545 views
-
-
நோர்வேயின் பிரிட்டோவ் நன்சன் கடல் வளங்கள் மதிப்பீட்டுக்கு வருகிறது.! 2018ஆம் ஆண்டு இலங்கைக் கடற்பரப்பிற்குள் வருகை தரவுள்ள புதிய நோர்வேஜிய ஆராய்ச்சி கப்பலான பிரிட்டோவ் நன்சன் (M/V Dr. Fridtjof Nansen) இலங்கையின் கடல்வளங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளது. அதற்கான தயாரிப்பு கருத்தரங்கு தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கை மற்றும் நோர்வே மீன்பிடித்துறை அமைச்சுக்களுக்கிடையிலான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பின் பகுதியாக நடைபெறும் இச்செயற்பாட்டுக்கான அங்கீகாரம் இருநாடுகளதும் உயர் அரசியல் தலைமைகளிடமிருந்து கிடைத்துள்ளது. கடல் வளங்களின் தற்போதைய நிலை, மீன்வளத்தின் …
-
- 0 replies
- 156 views
-
-
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் கையேற்கப்பட்டதை எதிர்த்து பொதுமகன் ஒருவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பிரதேசத்தைச் சேர்ந்த நடராஜா குணசேகரம் என்பவர் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போதைய பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டமை மற்றும் 1990களில் இருந்து அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தான் உள்ளிட்ட மூவ…
-
- 0 replies
- 432 views
-
-
குழம்பிப்போய்க் கிடக்கும் இலங்கைத் திருநாடு நாடு என்றுமில்லாத அளவுக்குக் குழம்பிப் போய்க் கிடக்கின்றது. அரசு பல திசைகளில் இருந்தும் நெருக்கடிகளை எதிர்கொள்வதால் எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு தரப்புகளுக்கு இடையேயான பகைமைக்கு உதாரணமாகக் கீரியையும் பாம்பையும் குறிப்பிடுவார்கள். இவையிரண்டும் ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சுமுகமான உறவு பேணியதில்லை. அதே போன்று ஒன்றையொன்று கடுமையாக விமர்சிப்பதையும் ஒரு தரப்பின் கருத்து வெளிப்பாட்டை மற்றைய தரப்பு எள்ளி நகையாடுவதும் இந்த நாட்டின் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் …
-
- 2 replies
- 522 views
-
-
ஸ்ரீலங்காவில் தொடரும் சித்திரவதை உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா ஆறாவது ஆண்டாகவும் இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் ஸ்ரீலங்காவில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கம் சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளத…
-
- 0 replies
- 403 views
-
-
சக்தி டிவி செய்திகள் 18 08 2017 , 8PM
-
- 0 replies
- 271 views
-
-
11 வயதுச் சிறுமி மீது வன்கொடுமை – கிளிநொச்சியில் தாய் உட்பட மூவர் கைது! கோப்புப் படம் கிளிநொச்சி, சாந்தபுரத்தில் சிறுமி ஒருவரைக் துர்நடத்தைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் இருவரும், சிறுமியின் தாயும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது 11 வயதுடைய சிறுமி தான் 3 வயதில் இருந்து துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 425 views
-
-
’முஸ்லிம்களுக்கு உரியதென நான் கூறவில்லை’ "வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது என, நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். "எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், மஹிந்த ராஜபக்ஷ எம்.பியின் விசுவாசிகளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்காரரும் இணைந்து, நான் தெரிவிக்காத ஒன்றை திட்டமிட்டுப் புனைந்து எனக்கு கெதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது…
-
- 1 reply
- 346 views
-