ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
‘ஆவா ஒரு மாயை’ வடக்கில், ஆவாக்குழு என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணி வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ஷெல்களை தோள்களில் சுமந்துச்சென்று தாக்குதல்களை நடாத்தி, ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகள், கத்திகளுடனும் பிளேட்டுகளுடனும் அலையவேண்டிய தேவையில்லை என்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் துளசி தெரிவித்தார். மட்டக்களப்பு, உப்போடை லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக செயலாளர் துளசி மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது: வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட வ…
-
- 0 replies
- 377 views
-
-
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவை செயலிழக்கச் செய்ய முயற்சி: சிலோன் டுடே பத்திரிகையில் செய்தி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிலோன் டுடே பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டிருந்தது. நிதிக்குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் குற்றவியல் விசாரைணைப்பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணைக்குழுவிற்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி சிலோன் டுடே செய்தி வௌியிட்டுள்ளது. முக்கிய நபர்கள் மற்றும் குற்றவியல் விசாரணை தொடர்பான 62 கோவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என சிலோன் டுடே பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 321 views
-
-
சக்தி டிவி செய்திகள் 12 08 2017 , 8PM
-
- 0 replies
- 229 views
-
-
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுடன் உணர்வுபூர்வமான சந்திப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மொகமட் கேசாப் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் உணர்வுபூர்மாக அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நல்லூரடியில் தனது உத்தியோகபூர்வ காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, நீதிபதி இளஞ்செழியனைக் கண்டதும், அமெரிக்க தூதுவர் ஓடோடிச் சென்று கைலாகு கொடுத்து, அவ…
-
- 0 replies
- 342 views
-
-
நெடுந்தீவில் காற்றுடன் கடும் மழை – மரங்கள் முறிந்தன நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. கடும் காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. வீடுகள், சமுர்த்தி வங்கிக் கூரை என்பன சேதமடைந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. மரங்கள் வீதிகளின் குறுக்காக வீழ்ந்தால் போக்குவரத்துத தடைப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/19162.html
-
- 0 replies
- 303 views
-
-
அமைச்சுப் பதவி தொடர்பில் டெனீஸ்வரனின் முடிவு நாளை? வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் நாளை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெலோவின் தலைமைக் குழு நேற்று காலை வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டது. வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனும் அதில் கலந்து கொண்டார். கூட்டத்தில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்துக்கு வழிசமைக்கும் முகமாக அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ரெலோ தலைமைக் குழு கோரியிருந்தது. உடனடியாக பதவி விலகுவதற்கு மறுப்பு…
-
- 0 replies
- 287 views
-
-
அந்த நேரத்தில் பதிலளிப்பேன் – ரவி கருணாநாயக்க! நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ளது என்று கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அந்த நேரத்தில் பதிலளிப்பேன் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடாதிபதியை இன்று முற்பகல் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது- புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கியதன் பின்னர் மஹாநாயக்க தேரரை சந்தித்தேன். நிலைமைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்தேன். எனக்கு எதிராக 48 மணித்தியாலங்களுக்குள் நடவடிக்கை எடுக்க முடியுமாயின், தயவுசெய்து ஏனையவை தொடர…
-
- 0 replies
- 240 views
-
-
புகலிடம் கோரியுள்ள சிரிய அகதிகள் சிரியாவை சேர்ந்த குழு ஒன்று இலங்கையில் புலிடம் கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அகதி அந்தஸ்து கோரிய இவர்களில் ஆறு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். இதுவரை அகதி அந்தஸ்து கோரியுள்ளவர்களின் எண்ணிக்கை 312 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனவும் அகதி அந்தஸ்து கோரியுள்ள சிரிய மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாதெனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம் ரணசிங்க தெரிவித்துள்ளார். http://newuthayan.com/story/19128.html
-
- 0 replies
- 306 views
-
-
யாழ்.சிறையில் இருந்து உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் இருவர் யாழ்ப்பாணம் சிறையில் இருந்தவாறு உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் - கொக்குவில் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டைமை தொடர்பாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களே இவ்வாறு சிறைச்சாலைக்குள் இருந்தவாறு உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளனர். எனினும் - கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக தனது மகனிற்கு தொடர்பு உள்ளது என குறித்த மாணவர்களில் ஒருவரது தந்தை பொலிஸாரிடம் …
-
- 4 replies
- 451 views
-
-
நெருக்கடியில் தேசிய அரசு : மனமுடைந்த விஜயதாச லியோ நிரோஷ தர்ஷன் சுசிலுக்கு மஹிந்த ஆதரவுக்கரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற் றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கம் நெருக்கடி களை சந்தித்துள்ளது. அரசாங்கத்தில் இர ண்டு முக்கிய அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியில் மிக விரைவில் இணைந்து கொள்ளவுள்ளனர். அரசாங்கத் தின் மீதுள்ள அதிருப்தி மற்றும் கட்சியிலும் ஆட்சியிலும் ஓரங்கட்டப்படுகின்றமை இதற்கு முக்கிய காரணங்கள் என தெரியவருகிறது. மத்திய வங்கியின் பிணை முறிகள் மோசடி விவகாரத்தில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர…
-
- 0 replies
- 400 views
-
-
யாழ். நகரப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை!! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் தற்போது காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து நீடித்த வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் கன மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தொடரும் மழையால் வீதிகளில் வெள்ள நீர் ஓடுவதைக் காண முடிகின்றது. யாழ். நகரப் பகுதியில் நீண்ட நாள்களுக்குப் பின்னர் கன மழை தற்போது பொழிகின்றது. http://newuthayan.com/story/18942.html
-
- 1 reply
- 412 views
-
-
வரட்சியால் கிளிநொச்சியில் பல குடும்பங்களுக்கு குடிநீர் இல்லை வரட்சியின் தாக்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுவது குடிநீர்ப் பிரச்சனையாகும். இதனால் மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயாலாளர் பிரிவு அதிகளவில் பாதிப்பட்ட பிரதேச செயாலாளர் பிரிவாகும். பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15 க்கும் அதிகமான கிராமங்கள் முற்றாக நீர் இன்றி காணப்படும் பிரதேசமாக உள்ளது. இந்த நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பூநகரிப் பிரதேச சபை ஆகியன இணைந்து, குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றன. எனினும் வரட்சியினால் பாதிக்கபட்ட 5604 குடும்பங்களில் 2160 குடும்பங்களுக்கு மாத்திரம் குடிநீர…
-
- 0 replies
- 160 views
-
-
புதிய அரசமைப்பு விடயத்தில் மைத்திரியின் அவசரமான தலையீட்டை கூட்டமைப்பு வலியுறுத்தும் புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்து வருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரச மைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு அரச தலை வர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதற்காக அவரைச் சந் திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கட்சி கேட்டுள்ளது. எனினும் இதுவரை சந்திப்புக்கு நேரம் வழங்கப்படவில்லை. ‘‘அரச தலைவரைச் சந்திப்பதற்கு நாம் ஏற்கனவே நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தோம். இன்னும் கிடைக்க வில்லை. வடக்கில் ஏற்பட்ட அமைத…
-
- 0 replies
- 183 views
-
-
பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் அமைந் துள்ள இந்து ஆலயத்திற்கு அருகில் புதிதாக புத்தருடைய சிலை ஒன்றை இராணுவத்தினர் அடாத்தாக அமைத்துள்ளனர். வழிபாட்டு தலங்கள் அமைக்கப்படும் போது உள்@ராட்சி திணைக்களங்களில் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது இலங்கையின் சட்டமாகும். ஆனால் இந்த நடை முறை குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டதில் பின்பற்றப்படவில்லை என உள்@ராட்சி திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர். பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் உள்ள வைரவ கோவிலிற்கு பக்கத்தில் உள்ள ஆலமரத்தின் கீழ் சிறிதாக புத்தர் சிலை ஒன்று கடந்த 2010 ஆம் ஆண்டள வில் இராணுவத்தினரால் வைக்கப்பட்டி ருந்தது. இந்த சிலை சிறி…
-
- 1 reply
- 568 views
-
-
முன்னாள் கடற்படைத் தளபதி அடுத்த சில நாட்களில் கைது.? கடற்படையினர் ஐந்து தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடையை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்யவுள்ளதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று திருகோணமலை கன்சைட் முகாமில் தடுத்து வைத்து கொடூரமாக சித்தரவதை செய்ததாகவும் அங்கு அவர்களைக் கொலை செய்தமை தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்ததாகவும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இரகசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாகவும் அதன் படி…
-
- 0 replies
- 230 views
-
-
சிறிதரன் எம்.பி. பதவிமுத்திரை விவகாரம் – குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நாடாளுமன்றப் பதவி முத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவற்றை மோசடியான முறையில் பயன்படுத்தினார் எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை யடுத்து அந்த விசாரணைகள் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனக் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பதவிமுத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவை களவாடப்பட்டுத் தவறானமுறைய…
-
- 0 replies
- 192 views
-
-
வடக்கில் நடக்கும் சிறு விடயங்களை தெற்கில் பெரிதாக்குகின்றனர் – சஜித் வடக்கில் இடம்பெற்ற சில சிறிய குற்றச் செயல்களை வைத்து வடக்கு மாகாணத்தில் மீண்டும் மோசமான சூழ்நிலை உருவாகி விட்டது என்று தெற்கில் சிலர் பொய் உரைக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தேசிய பயிலுநர் தொழிற்பயிற்சி அதிகார சபையின் மேசன் கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருமறைக் கலா மன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது-; நாட்டில் சமாதானமும், சாந்தியும் ஏற்பட்டுள்ளமையை ஒர…
-
- 0 replies
- 183 views
-
-
சுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐ.தே.க துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐக்கிய தேசியக் கட்சி துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் தனித்து ஆட்சி அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும், சுதந்திரக் கட்சியின் நடவடிக்கைகள் கூட்டு எதிர்க்கட்சியை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் …
-
- 0 replies
- 136 views
-
-
வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் - இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேபாளத்தில் வைத்து நேற்று இடம்பெற்றுள்ளது. பிம்ஸ்ரெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டிற்கு அமைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 387 views
-
-
தூய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் சவால் வெற்றி கொள்ளப்படும் : ஜனாதிபதி மேலிருந்து கீழ் வரை மோசடிகள், களவு மற்றும் ஊழல்கள் நிறைந்திருந்த இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஒரேயடியாக மாற்றிவிட முடியாது என்றபோதும் நேர்மையாக செயற்படும், நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை உருவாக்கும் கஷ்டமான பணிக்காக தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அந்த சவாலை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்க்கும் தூய அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். தலவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மகாவலி எச் வலயத்தில் உள்ள விவசாயிகளுக்கு கா…
-
- 0 replies
- 119 views
-
-
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பது அவசியமற்றது: மனோ கணேசன் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ஆம் திருத்த யோசனையை கைவிட வேண்டும் என்றும், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி-, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும…
-
- 0 replies
- 215 views
-
-
வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் டெலோவி;ன் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம் வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அமைச்சு பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைமைத்துவ குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் சனிக்கிழமை கூடிய அந்தக் கட்சியின் தலைமைத்துவ குழு ஐந்து மணித்தியாலங்கள் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டெனிஸ்வரனின் இராஜிநாமா விடயம் முக்கியமாக ஆராயப்பட்டதாக அந்தக் சட்சியின் செயலாளர் சிறிகாந்தா கூட்டம் …
-
- 1 reply
- 359 views
-
-
அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று யாழில் ஆரம்பமாகிய உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. அகில இலங்கை சைவ மகா சபையின் அமைப்பாளர் ப.நந்தகுமார் தலைமையில் இன்று காலை யாழ். நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இரண்டாம் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன. இதன் போது மாநாட்டின் இருநாள் நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்த தமிழக பேரூர் ஆதீன இளைய பட்டம் தவத்திரு மருத்தாச்சலம் அடிகளார் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டார். மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தம் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர். தமிழ் எங்கள் மொழ…
-
- 3 replies
- 740 views
-
-
செயற்றிறன் மிக்க நீதிக்கட்டமைப்பு அவசியம் – மா.இளஞ்செழியன் நாட்டின் நீதி கட்டமைப்பானது மிகவும் செயற்றிறன் மிக்கதாக இருக்க வேண்டும் என்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். ஒரு நாட்டின் அபிவிருத்தி நீதி கட்டமைப்பில் தங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் சங்கத்தின் நீதம் மலர் இன்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
- 7 replies
- 593 views
-
-
வாகன விபத்துகளில் ஐந்து மாதங்களில் ஆயிரத்து 270 பேர் பலி (எம்.சி.நஜிமுதீன்) 2017 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி ஆயிரத்து இருநூற்று எழுபது பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவி தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதயில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் 528 இடம்பெற்றுள்ளதுடன் அதில் சிக்கி 548 பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கையை விட இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 34 மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் போக்க…
-
- 0 replies
- 294 views
-