ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
புரிந்துணர்வு உடன்படிக்கை தற்போது பொருத்தமாக இருக்கும்: சம்பந்தனுக்கு மாவை கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பான உடன்படிக்கையில் தமிழரசுக் கட்சி கைச்சாத்திட முன்வந்த சந்தர்ப்பத்தில், கூட்டுக்கட்சிகள் அதனை தாமதப்படுத்தியதால், அந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வரவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை பொருத்தமானதாக இருக்கும் என தாம் நம்புவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிய …
-
- 1 reply
- 538 views
-
-
யாழ். நிலவரம் குறித்து மைத்திரியுடன் பேச்சு விரைவில் நடத்தும் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தின் தற்போதைய குளறுபடிச் சூழல் குறித்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர – அவசிய பேச்சு நடத்தவுள்ளது. இதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறு கூட்டமைப்பு கேட்டுள்ளது. எதிர்வரும் திங்கட் கிழமைக்குப் பின்னர் ஓரிரு தினங்களுக்குள் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு மாத காலத்தினுள் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸார் சுட்டு ஒருவர் இறந்தார். அதேபோன்று ஒருவர் சுட்டு பொலிஸ…
-
- 1 reply
- 240 views
-
-
பொலிஸார் மீது வாள்வெட்டு: மற்றொரு சந்தேகநபர் கைது கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொக்குவில் அம்பாள் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 30 ஆம்திகதி கோப்பாய் பொலிஸார் மீது கொக்குவில் நந்தாவில் பகுதியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/16589.html
-
- 0 replies
- 351 views
-
-
ரவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு? வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தனது பதவையை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள ஊடகமொன்று, இன்று (05) வௌியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (03) அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில் பணியாற்றுவது, அரசாங்கத்துக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் சிக்கலானதாகும். எனவே, இதற்கு சிறந்த தீர்வு பதவியை இராஜினாமா …
-
- 0 replies
- 182 views
-
-
எவருமே கைவிட்ட நிலையில் தெய்வத்திடம் கதறியழுத உறவுகள் ; தெய்வத்தின் பதில் தான் என்ன ? காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து தமது உறவுகளை தம்மிடமே ஒப்படைக்கக்கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் இறுதியில் வற்றாப்பளை கண்ணகி அம்மனிடம் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, பொங்கி படையலிட்டு, தேங்காய் உடைத்து, கதறியழுது வேண்டினர். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 150 ஆவது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து 150 நாட்களாக வீதியில் தமது உறவுகளை தம்மிடமே ஒப்படைக்கக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தபோதிலும் இதுவரை எந்தவித பதில்களும் க…
-
- 0 replies
- 302 views
-
-
தீயது செய்வோரை அறிவுரைகளால் திருத்த முயலுங்கள் தீய செயல்கள், போதைப்பொருள் பாவனை, களவுகள் என்பவற்றில் ஈடுபடக்கூடிய மிகக் குறுகிய தொகுதியினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அறிவுரை கூறி திருத்த முயலுங்கள். அதுமுடியாவிட்டால் சட்டரீதியாகவாவது அவர்களைத் திருத்தி அவா்களையும் இந்தச் சமுதாய நீரோட்டத்தில் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். காக்கைதீவு பொதுச் சந்தைக் கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே …
-
- 0 replies
- 341 views
-
-
பிரதமரை வாழ்த்திய எதிரணியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற வாழ்க்கைக்கு அகவை 40 என்பதால், அவரை வாழ்த்தும் விசேட நிகழ்வு, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் சில உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில், இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகைத் தந்திருந்த போது, எதிரணியின் உறுப்பினர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதேவேளை, பிரதமரை வாழ்த்தும் முகமாக, சுமார் 4000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்டிருந்ததாக தெரியவருகி…
-
- 2 replies
- 438 views
-
-
தமிழரசு கட்சியை தவிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. – ஸ்ரீகாந்தா கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து, ஏனைய மூன்று கட்சிகளும் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு தனி அணியாக செயற்படுவது என்பது எம்மால் ஏற்கப்படமுடியாத நிலைமையாகும். தமிழ் மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் ந. ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய மூன்று அங்கத…
-
- 0 replies
- 271 views
-
-
சக்தி டிவி செய்திகள் 04 08 2017 , 8PM
-
- 0 replies
- 345 views
-
-
நன்றி கெட்ட முதலமைச்சர் ; சாடுகிறார் சிறிநேசன் கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்இ தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைக்காது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மட்டக்களப்பிற்கு அழைத்து வந்தமை பிணக்க அரசியலை செய்வது போன்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞனமுத்து ஸ்ரீநேசன் தெவித்தார். எந்தவொரு இனமாக இருந்தாலும் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லக்கூடிய முதலமைச்சரே தங்களுக்கு தேவையென அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரச தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் …
-
- 0 replies
- 424 views
-
-
நல்லூர் முத்து உள்ளிட்ட இருவர் கைது 'விக்டரை' கைது செய்ய 6 குழுக்கள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய குழுவின் முக்கிய உறுப்பினர்கள் எனக் கருதப்படும் நல்லூர் முத்து உள்ளிட்ட இருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே மது உள்ளிட்ட இருவரைக் கைது செய்து 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ள நிலையிலேயே நேற்று யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்புக் குழு இவ்விரு சந்தேக நபர்களையும் கைது செய்தது. பொலிஸார் மீதான தாக்குதல் குற…
-
- 2 replies
- 543 views
-
-
சுயாட்சி இன்றேல் தமிழரின் தனித்துவம் பறிபோய்விடும் முதலமைச்சர் நேற்றுத் தெரிவிப்பு புதிய அரசமைப்பில் சுயாட்சி உள்ளடக்கப்படாவிட்டால் தமிழர்களது தனித்துவம் பறிபோய்விடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் கூட்டாட்சி அரசமைப்பு மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு என்பனவும் கட்டாயம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். சமகால அரசியல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தீர்வுத் திட்டம் எந்த நிலைக்கு வந்துள்ளது என்று எனக்குத் தெரியாது. என…
-
- 2 replies
- 519 views
-
-
மன்னாரில் சக்தி வாய்ந்த வெடிபொருள்கள் மீட்பு மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை கிராம அலுவலர் பிரிவில் சக்திவாய்ந்த வெடிபொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாப்பாமோட்டை கிராம அலுவலகர் ஊடாக காட்டுப்பகுதியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடி பொருள்கள் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக வெடி பொருள்கள் நேற்றுக் காலை மீட்கப்பட்டன. http://newuthayan.com/story/16486.html
-
- 0 replies
- 250 views
-
-
பயணிகள் பேருந்து தொடருந்துடன் விபத்து – 7 பேர் படுகாயம் வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று மாலை 4மணியளவில் பயணிகள் பேருந்து தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரியவருகின்றது வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த அரச பேருந்து ஒன்று தொடருந்துக் கடவையை கடக்க முயன்றபோது மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகின்றது. விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 7பேர் படுகாயமடந்துள்ளனர் என்றும், பேருந்தின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையிலேயே விபத்து நடந்துள்ளது என்றும் த…
-
- 0 replies
- 288 views
-
-
‘நிலாவரை’ புதிர் அவிழ்ந்தது குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை. அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது. …
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் உயர்நீதி மன்றம் தீர்ப்பு தேசிய வருமான சட்டமூலம் திருத்தமின்றி நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் தொடர்பான சட்டமூலம் திருத்தமின்றி நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றம் இன்று ஆரம்பமாகிய போது சபாநாயகர் கருஜயசூரிய இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22737
-
- 0 replies
- 327 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 04-08-2017
-
- 0 replies
- 171 views
-
-
சுன்னாகம் வாள்வெட்டு ; மூவர் கைது சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் முறையே 21,23,24 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின்போது வாள்வெட்டுக் காயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். http://uthayandaily.com/story/15980.html
-
- 4 replies
- 561 views
-
-
வடக்கின் பாதுகாப்பு நிலையை ஆராய்கிறது அமெரிக்கா வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், ஆராய்ந்துள்ளார். அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகராகக் கடந்த மாத இறுதியில் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் பொறுப்பேற்றிருந்தார். முதலில் பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசிய அவர், அடுத்த கட்டமாக வடக்கிலுள்ள படைத் தளங்களுக்கான பயணத்தை மேற்கொண்டார். கடந்த 30 ஆம் திகதி கிளிநொச்சிப் படைகளின் தலைமையகத்துக்கு சென்று, அதன் கட்டளை அதிகார…
-
- 2 replies
- 342 views
-
-
அம்மாச்சி உணவகத்துக்கு சிங்களப் பெயர் திணிக்க முயற்சி என்கிறார் விக்கி அம்மாச்சி உணவகத்துக்கு சிங்களத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று கொழும்பு அரசு வற்புறுத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலும் இதைப்போன்ற உணவகம் அமைப்பதற்கு நடுவண் அரசிடம் நிதி கோரப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே கொழும்பு அரசு மேற்படி நிபந்தனை விதித்துள்ளதை முதலமைச்சர் நேற்று வெளிப்படுத்தினார். …
-
- 2 replies
- 630 views
-
-
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர் கட்சியை சேர்ந்த 34 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை பாராளுன்ற செயலாளரிடம் கையளிக்கப்ட்டுள்ளது. http://www.virakesari.lk/article/22691
-
- 2 replies
- 259 views
-
-
லெப்டினன்ட் கேர்னல் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் லெப்டினன்ட் கேர்னல் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி காணாமற்போயுள்ளதாக அவரின் மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தனர். பல தடவைகள் நீதிமன்றத்தைப் புறக்கணித்ததன் காரணமாக, மேன்முறையீட்டு மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாக இருக்கும் போது, மேல் நீதிமன்றத்தால் விடுதலை செ…
-
- 1 reply
- 401 views
-
-
மனித உரிமை மீறலில் பொலிஸ் என குற்றச்சாட்டு “பொலிஸார் ஆதாரமில்லாமல் எங்கள் பிள்ளைகளைக் கைது செய்கின்றனர். நாங்கள் பயத்தில் உறைந்து போயுள்ளோம். அதற்கெதிராக நடவடிக்கை எடுங்கள்” என்று வடமராட்சியைச் சேர்ந்த தாய்மார்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்தியக் கிளையில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். வடமராட்சியில் கடந்த சில தினங்களாகப் பொலிஸார் தொடர் தேடுதல் நடத்தி வருகின்றனர். பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் 17 பேரை இதுவரை கைது செய்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில், கைது செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்பத்…
-
- 0 replies
- 297 views
-
-
ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ அமைதிகாக்கும் படை உள்ளிட்ட தூதுக்குழு - இராணுவத் தளபதி சந்திப்பு ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் தலைநகரத்தைச் சேரந்த இராணுவ அமைதி காக்கும் படையினர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இராணுவத் தளபதி, கடந்த ஐந்து வருட காலமாக ஐக்கிய அமெரிக்காவுடனான அமைதிகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் தொடர்பாக விளக்கமளித்தார். இதன்போது, லெப்டினன்ட் கேணல் கால்ஸ் வாஸ் (தூதுக்ககுழுத் தலைவர் ) , லெப்டினன்ட் கேணல் டொங்லின் டொனமு, மேஜர் கால்ஸ் ரொ…
-
- 1 reply
- 267 views
-
-
கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி ஆபத்தில் முடியும் சுதந்திரக் கட்சியில் இருந்து அமைச்சர்கள் விலகினால் தனிக் கட்சி ஒன்று ஆட்சி அமைக்க நேரிடலாம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத்தான் பெற வேண்டியேற்படும். அப்படி நடந்தால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு-ம் பிரச்சினை களுக்கும் எம்மால் இலகுவில் முகம் கொடுக்கமுடியாது. ஆகவே,கூட்டு அரசுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே வழி. இவ்வாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். கூட்டு அரசைத் தொடர்வது குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்றில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா…
-
- 0 replies
- 285 views
-