ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143360 topics in this forum
-
பாராளுமன்றில் விநோதம் கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் சபை அமர்வு சபாநாயகர் ஆசனத்தில் பிரியங்கர ஜயரட்ன (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கூட்டு எதிர்க்கட்சி அணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வொன்றை நடத்திய விநோத சம்பவமொன்று நேற்று பாராளுமன்றத்தில் அரங்கேறியிருந்தது. இதன்போது ஜனாதிபதி ஆசனத் தில் பிரசன்ன ரணவீர எம்.பி. யும், அக்கிராசனத்தில் பிரியங்கர ஜயரட்ன எம்.பியும் அமர்ந்திருக்க இரு உறுப்பினர்கள் தமது உரைகளை நிகழ்த்தியிருந்தனர். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்…
-
- 0 replies
- 284 views
-
-
மீண்டும் சபையில் வெடித்தது சர்ச்சை ஆகஸ்ட் 4 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்குள்ளும், வெளியிலும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது திட்டமிட்ட வகையில் குண்டர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நேற்று சபையில் ஏற்பட்டன. இதன்போது மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவாக கூட்டு எதிர்க்கட்சியும் போர்க்கொடி பிடித்து களமிறங்கியதால் சபையில் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது. இதனால் பாராளுமன்ற…
-
- 0 replies
- 188 views
-
-
உடன்படிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் மைத்திரி்பால நிறைவேற்று ஜனாதிபதியா பெயரளவில் ஜனாதிபதியா? ஜே.வி.பி. கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு எதிராக முடியுமான அனைத்து போராட்டத்தையும் முன்னெடுப் போம். இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். ஜனாதிபதியின் விருப்பிற்கு மாறாக ஒப்பந்தம் இன்று கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியா? அல்லது பெயரளவிலான ஜனாதிபதியா? என்பதனை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. …
-
- 0 replies
- 195 views
-
-
ரவி கருணாநாயக்கவின் மனைத் தொகுதி தொடர்பில் அவரது நிறுவன சிரேஷ்ட முகாமையாளர் பரபரப்பு சாட்சியம் க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட லக்ஷ்மி காந்தன் 2016 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் 70 மில்லியன் ரூபாயும் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 75 மில்லியன் ரூபாயும் கொடுத்தார். என்னிடம் அதிகமாகவே பணப்புழக்கம் இருக்கும். வழமையாக நிதிக்கூற்று அறிக்கையோ பற்றுச்சீட்டுக்களையோ நான் பேணுவதில்லை ஆகவே இந்த பணத்துக்கும் பற்றுச்சீட்டுக்கள் எவையும் பேணப்படவில்லை என க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் சிரேஸ்ட நிதி முகாமையாளர் வி. ஜே சின்னையா தெரிவித்தார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வசித்தத…
-
- 0 replies
- 233 views
-
-
இலங்கையின் நவீன போர்க்கப்பல் கொழும்பு வந்தது!! இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் நவீன போர்க் கப்பல் இதுவாகும். இதனைத் தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இக் கப்பல் இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22 ஆம் திகதி நடைபெற்றது. அதேவேளை, இலங்கை கடற்படைக்காக அமைக்கப்படுகின்ற இரண்டாவது கப்பல் 2018 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்…
-
- 7 replies
- 569 views
-
-
வித்தியா கொலையில் பெரிய இரு கழுகுகள் கைது செய்யப்படாதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 10 பேருக்கும் அப்பால் இரு பெரிய கழுகுகள் உள்ளதாகவும், அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வியெழுப்பியுள்ளார். மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாணவி வித்தியா படுக…
-
- 2 replies
- 448 views
-
-
பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் பேயாட்டத்தை கண்டு மாணவிகள் அஞ்சி ஓட்டம் வாக்கெடுப்பின் போது தோல்வியடையப் போவதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட காரணத்தினாலேயே கூட்டு எதிரணியினர் பாராளுமன்றத்தை குழப்பினார்கள். எனவே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் எதிர்தரப்புக்களின் திருத்தங்கள் எவையும் இல்லாமலேயே கைசாத்திடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகளிர் பாடசாலை மாணவிகள் சிலரும் கூட பாராளுமன்ற அமர்வினை பார்வையிட வந்திருந்த நிலையில் கூட்டு எதிரணியினரின் பேயாட்டத்தை கண்டு அஞ்சி ஓடினார்கள். பாடசாலை மாணவியர் மக்கள் பிரதிநிதிகளை பார்த்து அஞ்சி ஓடுவதென்பது பாரதூரமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது. பாராளுமன்றத்தில் இடம்ப…
-
- 0 replies
- 323 views
-
-
வடக்கு மாகாண சுழற்சிமுறை ஆசனம் புளொட்டின் கோரிக்கை நிராகரிப்பு ஜெயசேகரத்தின் பெயர் பரிந்துரை வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுழற்சிமுறை நியமன ஆசன விடயத்தில், புளொட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவரான ஆர்.ஜெயசேகரத்தின் பெயர் தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் சுழற்சி முறை ஆசனத்தின் அடிப்படையில் பதவி வகித்த வவுனியா மாவட்ட உறுப்பினர் மயூரன், மாகாண சபையின் நேற்றைய நூறாவது அமர்வுடன் விடை பெற்றார். மாகாண சபையில் நன்றியுரையும் நேற…
-
- 2 replies
- 605 views
-
-
சக்தி டிவி செய்திகள் 28th July 2017, 8PM
-
- 0 replies
- 254 views
-
-
ஆசியாவின் நோபல் பரிசு இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ”ராமன் மக்சாசே” விருது இலங்கைத் தமிழ்ப் பெண் கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது. 82 வயதுடைய இவர் இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளார். இந்த விருது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் அரச தலைவராக இருந்த ரெமோன் மெக்செசேவின் ஞாபகர்த்தமாக இந்த விருது வழங்கப்படவுள்ளது. http://uthayandaily.com/story/14350.html
-
- 3 replies
- 604 views
-
-
வடக்குப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கருத்தரங்கு போருக்குப் பின்னரான சூழலில் வடபகுதிப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தால் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இணையத்தின் தலைவர் தே.தேவானந்த தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். பேராசிரியர் தயா.சோமசுந்தரம், வாசுகி ஜெய்சங்கர், கலாநிதி எஸ்.ஜீவசுதன் மற்றும் உதயனி நவரட்ணம் மற்றும் பொன்னம்பலம் ஜமுனாதேவி ஆக…
-
- 0 replies
- 267 views
-
-
நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியின் பின்னணி குறித்த சந்தேகங்கள் கடந்த 22ஆம் திகதி நல்லூரில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால், யாழ்.குடாநாடு மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளும் அதிர்ச்சியில் உறைந்தன. குறித்த தினத்தன்று மாலை 5 மணியளவில் நீதிமன்றில் கடமையை முடித்துக் கொண்டு புறப்பட்ட நீதிபதிக்குப் பாதுகாப்புக்காக ஒரு பொலிஸ் உத்தியோத்தர் நீதிபதியின் காருக்குள்ளும், வீதி ஒழுங்குப் பாதுகாப்புக்காக மற்றுமோர் பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் நீதிபதி பயணித்த வாகனத்தின் முன்னாலும் பயணித்துள்ளனர். நல்லூர் கோவில்வீதியும் பருத்தித்துறை வீதியும் இணை…
-
- 0 replies
- 331 views
-
-
யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை ;மட்டக்களப்பில் ரணில் யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை.பாரிய அபிவிருத்திகளையும் சாவால்களையும் நோக்கியோ சென்றுகொண்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்புக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வழங்கள் உள்ளது.அவற்றில் முழுமையான பிரயோசனங்கள் அடையப்படவில்லை. அந்த வளங்களை பயன்படுத்தி எவ்வாறு பிரயோசனம் அடையளாம் இலங்கையில் மூவின மக்களும் வாழும் பிரதேசமாக காண…
-
- 0 replies
- 269 views
-
-
தாக்குதல்களில் ஐவர் காயம் – தென்மராட்சியில் சம்பவம்!! தென்மராட்சிப் பகுதியில், தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகளும் உட்பட ஐந்து பேர் நேற்று இரவு சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலுக்கு இலக்கான வரணி வடக்கைச் சேர்ந்த நக்கீரன் கோமதி (வயது-29) இவரது மகளான நக்கீரன் பிரியங்கா (வயது-12), சாவகச்சேரி கண்டுவில் ஒழுங்கையைச் சேர்ந்த கருணாகரன் கரன்யூட் (வயது-34) நுணாவில் மேற்கைச் சேர்ந்த ஜெயபாலன் ஜெயரூபன் (வயது-28), சாவகச்சேரி கச்சாய் வீதியைச் சேர்ந்த ஜெயபாலன் நிரூஜன்(வயது-27) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதால் ஒரு இடத்தில் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் …
-
- 0 replies
- 301 views
-
-
இந்திய மீனவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 77 பேரை விடுதலைசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது. இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு 41 பேர் ஊர்காவற்துறை, 25 பேர் பருத்தித்துறை, 66 மீனவர்கள் யாழ்ப்பாணம், 11 பேர் தலைமன்னார் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலைசெய்யப்படவுள்ளனர். இதேவேளை, 92 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவ…
-
- 0 replies
- 188 views
-
-
இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் விவசாயிகள் கிளிநொச்சி – இரணைமடு வாய்க்காலை மேலும் ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து செல்வதால் சிறுபோக செய்கை பாதிக்கப்படும் அச்சத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு விவசாய சம்மேளத்தின் கீழ் உள்ள விவசாயிகளே இப் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். http://uthayandaily.com/story/14410.html
-
- 0 replies
- 470 views
-
-
காரைநகர் கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள கடலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு காரைநகர் கடற்படைமுகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில், கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலமானது 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஆணுடையதெனவும் குறித்த நபர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்டுள்ள சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articl…
-
- 0 replies
- 272 views
-
-
சட்டவிரோதக் குடியேற்ற விடயத்தில் அசண்டை வடக்கு மாகாண சபை மீது உறுப்பினர் அஸ்மின் குற்றச்சாட்டு வடக்கு மாகாணத்தின் தெற்கு எல்லைப் பகுதியில் உள்ள 3 பிரதேச செயலகப் பிரிவில் காடுகள் அழிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றம் இடம்பெறுகின்றது. மாகாண சபை அதனைத் தடுப்பது தொடர்பில் எந்த அவதானத்தையும் செலுத்தவில்லை. இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.அஸ்மின் குற்றம் சாட்டினார். வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக சேவை செய்திர…
-
- 0 replies
- 222 views
-
-
பசில், நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 23 பேருக்கு எதிராக எப்.சி.ஐ.டி.யினால் 12 வழக்குகள் தாக்கல் 89 விசாரணைக் கோவைகள் சட்ட மா அதிபரிடம் என்கிறார் பேச்சாளர் (எம்.எப்.எம்.பஸீர்) பசில் ராஜபக் ஷ, நாமல் ராஜபக் ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 23 பேருக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் மேல் நீதிமன்றங்களில் 12 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நிதிக் குற்றப் புலனாய் வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற 335 முறைப்பாடுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட விசாரணைகளிலேயே இந்த 12 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 89 சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நிறைவடை…
-
- 0 replies
- 374 views
-
-
மருதடி விநாயகர் ஆலயம் பெறுநர் குழுவால் கையேற்பு நீதிமன்றின் ஆணைக்கு அமைவாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் ஆணைக்கு அமைவாக மானிப் பாய் மருதடி விநாயகர் ஆலயம் பெறுநர் குழுவால் கையேற்கப்பட்டுள்ளதாக, சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் திருமதி யு.யசோதா அறிவித்தார். “மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் ஆணையின் பிரகாரம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெறுநர்களாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் பதிவாளர், இந்துக் குருமார் ஒன்றியத்தின் 2 மூத்த குருக்கள், யாழ்ப்பாண மேலதிக மாவட்டச் செயலர், வலி.தென்மேற்குப் பிரதேச செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கணக்காளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுன…
-
- 0 replies
- 382 views
-
-
ஐங்கரநேசன் இன்னும் சுற்றாடல் அமைச்சரா? மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே நேற்றுப் பலத்த சந்தேகம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுற்றாடல் அமைச்சரும், மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கர நேசன், மாகாணசபையின் உறுப்பினர்களுக்கு நேற்றுத் துணியினாலான பைகளை வழங்கினார். அந்தப் பைகளில் வடக்கு மாகாணச் சுற்றாடல் அமைச்சு என்று பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் மாகாண சபை உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. மாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் திடீரென இதனை உறுப்பினர்களுக்கு நேற்றைய தினம் விநியோகித்தார். அதில் வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சு என்று பொறிக்கப்பட்…
-
- 0 replies
- 279 views
-
-
பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள பிணைமுறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக்கொள்வதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும் பதவியிலிருந்து விலக்க முற்படலாம். எனினும் அதற்கு மாத்திரம் நாம் இடமளிக்கப்போவதில்லை. எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி…
-
- 0 replies
- 304 views
-
-
புளொட் மையக் குழு அவசரமாகக் கூடுகிறது வடக்கு மாகாண சபையில்சுழற்சிமுறை நியமன ஆசனத்தை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புளொட்டின் மையச் செயற்குழுக் கூட்டம் அவசர அவசரமாக நாளை சனிக்கிழமை வவுனியாவில் கூட்டப்பட்டுள்ள தாகத் தெரியவருகின்றது. தமது கட்சியின் கோரிக்கை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வும், தமக்குத் தெரியாமல் தமிழ் அரசுக் கட்சி, வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறை நியமன ஆசனத்தை வழங்கி விட்டதாகவும் புளொட் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பிலும், எதிர்காலத்தில் எவ்வாறு செயற்…
-
- 0 replies
- 397 views
-
-
அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் - பாதுகாப்பு செயலர் சந்திப்பு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருவருக்குமிடையில் இருதரப்பு விடயங்கள் தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டி ஏஆர் ரணவக்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/22409
-
- 1 reply
- 262 views
-
-
மோ.சைக்கிள், அலைபேசி வாங்கிக் கொடுத்து பெற்றோரே பிள்ளைகளைக் கெடுக்கின்றனர் வாள்வெட்டு வழக்கில் யாழ்.நீதிவான் காரசாரம் “பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. கல்வி கற்கின்ற காலப்பகுதியில் பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்கள், அலைபேசிகளை வாங்கிக் கொடுத்துப் பெற்றோர்களே பிள்ளைக ளைப் பாழாக்குகின்றனர். இவ்வாறு யாழ்ப்பாண நீதிவான் மன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் தெரிவித்தார். நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஜனவரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 7 பேர் மறியலில் உள்ளனர். அவர்களது வழக்கு நேற்றுமுன்தினம் …
-
- 0 replies
- 280 views
-