ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143349 topics in this forum
-
மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தின் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான றெக்ஸ் கமில்டன்(வயது-27) என தெரிய வருகின்றது. மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படு கா…
-
- 1 reply
- 323 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையம் பெருங்கொடையாகும் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையம் பெருங்கொடையாகும் என கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 21.07.2017 கிளிநொச்சி முழங்காவிலில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் ஐந்து மில்லியன் ரூபா நிதியில் முழங்காவிலில் அமைக்கப்பட்ட நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையத்தினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் த…
-
- 0 replies
- 124 views
-
-
கட்டுநாயக்க விமானப் படை முகாமின் பெண்கள் விடுதியின் பின்புறத்தில் பயணப் பை ஒன்றிலிருந்து பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதியின் பின்புறமாக நேற்றுமுன்தினம் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் வீராங்கனை சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட கறுப்பு நிற பை ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அவர் அதனை சோதனையிட்டுள்ளார். அதன்போது அந்தப் பையினுள் கறுப்பு நிற பொலித்தீன் பை ஒன்று காணப்பட்டதுடன் அதனுள் துணியினால் சுற்றப்பட்டு குழந்தையின் சடலம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பெண் படைவீரர் விமானப்பட…
-
- 0 replies
- 283 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் இம்மாத இறுதியில் பிரதமர் தகவல் (எம்.எம்.மின்ஹாஜ்) அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் இம்மாத இறுதியிலும் அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் தொடர்பான ஒப்பந்தம் இவ்வருட இறுதியிலும் கைச்சாத்திடப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பால் பண்ணையாளர்களை உருவாக்கும் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ஐக்கிய தேசிய கட்சி தலைவரான நான் பசும் பால் குடிக்கும் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். ஆகவே பசும் பால் உ…
-
- 0 replies
- 263 views
-
-
மண் வளம் அழிகிறது, இயறகை சமநிலை குழம்புகிறது ஆறுகள் பெருக்கெடுத்து வயல் நிலங்களை அழிகிறது மீன் வளம் குறைகிறது, வறட்சி, ஜீவனோபாய தொழில் இல்லை. மொத்தத்தில் வறுமைக்கோட்டில் மடடக்களப்பு மாவடடம் முதலிடத்தில், ஆனால் அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே அதிகளவான நிதி ஒதுக்கீடு!! இரவு இரவாக சடடவிரோத மண் அகழ்வுகள் மேட்கொள்ளப்பட்டு நூறு கணக்கான லாரிகளில் மன்னம்பிட்டிய பாலத்தினால் கொழும்புக்கு ஏற்றப்படுகிறது. கொழும்பில் இருந்து மாலத்தீவுகளுக்கு ஒரு லாரி 250,000/- களுக்கு ஏற்றப்படுகிறது. இது மத்திய அரசின் அனுசரணையுடன் கூட்டு மாபியாவாக நடத்தப்படுகிறது. ஜனாதிபதியின் சொந்த இடமான பொலன்னறுவையில் அள்ளப்பட்டிருந்த மணல் இப்போது நிறுத்தப்பட்டு மட்டக்களப…
-
- 0 replies
- 403 views
-
-
அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழம் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புகலிட கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலியா நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளார். அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் குறித்த அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படவுள்ளதாகவும் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டத்திற்கு தடுப்பில் உள்ள புகலிட கோரிக்கையாளர்கள…
-
- 0 replies
- 383 views
-
-
வட பகுதியில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களால் உயிரிழப்புக்களும் அங்க வீனங்களும் படுகாயங்களும் ஏற்பட்ட வண்ண முள்ளன. நாளுக்கு நாள் இந்த விபத்துக்கள் அதி கரித்துக் கொண்டே இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வந்தால்தான் உண்டு என்னும் அளவில் விபத்துக்கள் மலிந்து விட்டன. இவ்வாறு நாளாந்தம் விபத்துக்கள் அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்களால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் படும் துன்பம் சொல்லூந்தரமன்று. அண்மையில் இளம்தாய் ஒருவர் விபத்தில் உயிரிழந்துவிட்டார். ஆறு மற்றும் எட்டு வயதுகளில் இரண்டு பிள்ளைகள். தாயை இழந்த அந்தப் பிள்ளைகளின் பரிதவிப்பு பார்ப்பவர்களை அழவைக்கிறது. இப்போது அந்தப் பிள்ளைகள் வீட்டில் உள்ள அறைகளில் தங்கள்…
-
- 0 replies
- 320 views
-
-
வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் முகநூல் மூலம் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டதை ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியதையடுத்து அவரது முகநூல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினருமான சயந்தன் ஒரு பெண் முகநூல் கணக்குடன் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டிருந்தார். குறித்த முகநூல் பெண் தனக்கு சிறு வயது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகமானது தாம் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் தாம் முழுப்பொறுப்பு எடுப்பதாகவும் பிழையென நிருபிக்க இயலுமாயின் நிரூபிக்கலாம் எனவும் பகிரங்கமா சவால் விட்டுள்ளது. இந்த சம்பவங்களின் பின்னர் சயந்தன் அவர்களின் முகநூலும் அவரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தின் …
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
சங்கமம் இணையத்தளத்தின் கிளிநொச்சி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர். சங்கமம் இணையத்தள அலுவலகத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் உட்புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த கணிணிகள், அலுவலக உபகரணங்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதேவேளையில் குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தனே இருக்கலாம் என்று கிளிநொச்சி வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மாகாணசபை உறுப்பினர் சயந்தன், போலி முகநூல் ஒன்றில் இருப்பவர் பெண் என நினைத்து தகாத வகையில் உரையாடிய ஆதாரங்களை சங்கமம் இணையத்தளமே வெளியிட்டிருந்தது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையான வ…
-
- 0 replies
- 369 views
-
-
ஒளிப்படங்கள் எடுத்து மிரட்டியவர் மறியலில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி எடுக்கப்பட்ட பெண்ணின் ஒளிப்படங்களை ஆபாசப் படங்களாக மாற்றி அவரிடம் கப்பமாகப் பணம் பெற்ற ஒருவர் விளக்கமறி யலில் வைக்கப்பட்டார். சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் பா.சுப்பிரமணியம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார். தென்மராட்சிப் பிரதேசத் தைச் சேர்ந்த குறித்த யுவதியை முகவர் ஒருவரிடம் செல்லுமாறு காதலன் கூறியுள்ளார். யுவதியை ஆலயமொன்றுக்கு வரவழைத்த முகவர் பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டுமெனக் கூறி ஆலய முன்றிலில் வைத்து ஒளிப்படங்கள் எடுத்துள்ளார். சில நாள்க…
-
- 0 replies
- 183 views
-
-
வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளால் மாணவர்கள் படுகாயம்: யாழில் சம்பவம்! யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளொன்றினால் படுகாயமடைந்த 18 மாணவிகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) மதியநேர இடைவேளையின்போது மாணவிகள் மைதானத்தில் இருந்த வேளை வானில் இருந்து வீழ்ந்த மஞ்சள் நிறமுடைய திரவத்தினாலேயே மாணவிகள் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்தி செய்தியாளர் தெரிவித்தார். குறித்த திரவத்தினால் மாணவிகளின் அவயவங்களில் ஏற்பட்ட எரிகாயங்களினாலேயே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://thuliyam.com/?p=740…
-
- 1 reply
- 449 views
-
-
இலக்கை அடைவதற்கு இலங்கை முன்னோக்கி பயணிக்க வேண்டும் 'கேசரி'க்கு வழங்கிய விசேட செவ்வியில் ஜெப்ரி பெல்ட்மன் (லியோ நிரோஷ தர்ஷன்) காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் புதிய அரசியலமைப்பை நோக்கிய முன்னெடுப்புக்கள் மிகவும் முக்கியமானவை. அவை காலத்தின் தேவையாகவும் காணப்படுகின்றன. வெறும் ஏடுகளுக்குள் மட்டுப்பட்டு விடக்கூடாது இலக்கை அடைவதற்கு இலங்கை சவால்களுக்கு மத்தியில் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என ஐக்கிய நாடு கள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை'கேசரி'க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேல…
-
- 0 replies
- 181 views
-
-
ஐ.நா துணைச் செயலாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் பிழையான தகவல்களும் இருக்கக் கூடும் – ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைச் செயலாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் பிழையான தகவல்களும் இருக்கக்கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை தொடர்பில் காட்டி வரும் பக்கச்சார்பற்ற கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைச் செயலாளர் ஜிப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றைய தினம் மாலை சந்தித்திருந்தார். இதன்போது இலங்கை தொடர்பில் போதியளவு தெளிவு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜிப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 156 views
-
-
தமிழ் கூட்டமைப்புக்கு ரணிலுடன் டீல் இருப்பதாக சந்தேகிக்கின்றோம் சர்வஜன வாக்கெடுப்பை கோருவதன் பின்னணி என்கிறார் டிலான் (ரொபட் அன்டனி) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் தேர் தல் முறை மாற்றம் ஆகியவற்றை மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கின்றார். ஆனால் சர்வஜன வாக்கெடுப்பை கோருவதன் மூலம் தமிழ்க் கூட்டமைப்பு ஜனாதிபதியின் முயற்சிக்கு தடை யாக உள்ளது என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். இதன்மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பி…
-
- 0 replies
- 146 views
-
-
காணாமல்போனோர் குறித்த சட்டத்தில் ஜனாதிபதி கைச்சாத்து ஐ.நா. பொதுச் செயலர் வரவேற்பு உதவத் தயார் எனவும் அறிவிப்பு கனடா, அமெரிக்கா, பிரிட்டனும் இலங்கைக்கு பாராட்டு (ரொபட் அன்டனி) காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான நிரந்தர அலுவலகத்தை அமைக் கும் சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளமையை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் பாராட்டியுள்ளதுடன் இது பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் முக்கியமாக அம்சமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெ ளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் உண்மையை தேடிக்கொ…
-
- 0 replies
- 186 views
-
-
ஒத்துழைப்பின்றேல் உரிய தருணத்தில் தீர்க்கமான முடிவினை எடுப்போம் எச்சரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித்தலைவர் (ஆர்.ராம்) புதிய அரசியல் சாசனத்தினை உருவாக் கும் பணிக்கு அனைவரினது பங்களிப்பினை யும் எதிர்பார்க்கின்றோம்.தற்போது ஒத்துழைக்காதவர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கோருகின்றோம். முடிவொன்று ஏற்படுத்தப்படுமென்று எதிர்பார்க்கின்றோம். அவ்வாறில்லையெனில் உரிய நேரத்தில் தீர்க்க மான முடிவொன்று எடுக்கப்படும் என எதிர்க் கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்தார். புதிய அரசியலமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க…
-
- 0 replies
- 120 views
-
-
மனித உரிமை நிலைமையில் அதிகூடிய முன்னேற்றம் தேவை இலங்கை குறித்து பிரிட்டனின் வருடாந்த அறிக்கையில் தெரிவிப்பு (ரொபட் அன்டனி) இலங்கையின் மனித உரிமை நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானியா மனித உரிமை விடயத்தில் மேலும் முன்னேற்றத்தை வெளிக்காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. தனது வருடாந்த மனித உரிமை தொடர்பான அறிக்கையை வெளி யிட்டுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 2015 ஆம் ஆண்டு ஐ.ந…
-
- 0 replies
- 148 views
-
-
சிறந்த எதிர்காலத்திற்கு அதிகாரப்பகிர்வே வழி கூட்டமைப்புடனான சந்திப்பில் ஐ.நா. அரசியல் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (ஆர்.ராம்) இலங்கையின் விடயங்களை நாம் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். இங்கு அசாதாரண சூழல் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. தற்போதுள்ள சூழலில் நியாயமான அரசியல மைப்பு ஒன்றின் ஊடாக அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதுவே இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் முன்னேற்றத் திற்கும் அடிப்படையாக அமை யும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 178 views
-
-
தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார். கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/22176
-
- 7 replies
- 537 views
-
-
தன் தலையை தொட்டுக்காட்டி கல்வி அமைச்சரை எச்சரிக்கை செய்தார் எதிர்க்கட்சி தலைவர்:- வடமாகாண கல்வி அமைச்சரை, எதிர்க்கட்சி தலைவர் தன் தலையினை தொட்டுக்காட்டி நாம் இதில் இருந்து ஆரம்பிக்க வேண்டி வரும் என எச்சரிக்கை செய்தார். வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரினால் நேற்றைய அமர்வின் போது, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தனது செல்வாக்கினை பயன்படுத்தில் கொக்குவில் இந்து கல்லூரிக்கு புதிய அதிபரை நியமித்து உள்ளதாக குற்ற சாட்டினை …
-
- 0 replies
- 166 views
-
-
புதிய அரசமைப்பு முயற்சியை தோற்கடிக்க மகிந்த கங்கணம் இரு முனைத் தாக்குதலுக்குத் திட்டம் புதிய அரசமைப்பொன்றை இயற்றும் கூட்டு அரசின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கு இரு முனைத் தாக்குதலை நடத்துவதற்கு மகிந்த அணி தீர்மானித்துள்ளது. சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அந்த அணியின் உறுப்பினர்கள் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் கூடினர். கொழும்பு, விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மகிந்தவின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், அரசமைப்பு மீளமைப்பு பணி, உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைவு, வெளிநாட…
-
- 0 replies
- 278 views
-
-
மாணவ செயற்பாட்டாளரை வெள்ளைவானில் கடத்த காவல்துறையினர் முயற்சி – மங்கள அதிருப்தி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காவல்துறையினரின் கடத்தல் முயற்சி குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர அதிருப்தி வெளியிட்டுள்ளார். மாணவ செயற்பாட்டாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து கடத்திச் செல்ல முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளைவானில் சிவில் உடையணிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு வரும் மாணவர் ஒருவரை கடத்த முயற்சித்தமை பிழையானது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜ…
-
- 1 reply
- 415 views
-
-
அரசமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து நழுவுகிறது அரசு புதிய அரசமைப்பை உருவாக்கும் விடயத்தில் அரசுக்கு ஆர்வம் குன்றிவிட்டது. அந்த முயற்சிகளிலிருந்து அவர்கள் பின்வாங்கப் பார்க்கின்றார்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது தனிப்பட்ட நலன்களைப் பற்றி மாத்திரமே தற்போது சிந்திக்கின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினர், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் இடித்துரைத்துள்ளனர். கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் நேற்றுச் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. ஆர்…
-
- 0 replies
- 141 views
-
-
சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன் சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சர் சின்னத்தம்பி ராஜரட்ணம் பிறந்த வீட்டை, சிங்கப்பூரின் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். ராஜட்ணத்தின் தற்போதைய தலைமுறை உறவினர்கள் அயலுறவுத்துறை அமைச்சரை வரவேற்று, யாழ்ப்பாணப் பாரம்பரிய உணவுப் பொருள்களைப் பரிசளித்தனர். சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சராக 1980ஆம் ஆண்டு தொடக்கம் 1985ஆம் ஆண்டு வரையில் சின்னத்தம்பி ராஜரட்ணம் பணியாற்றினார். இவர், சபாபதிப்பிள்ளை சின்னத்தம்பியின் புதல்வனாக 1915ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி சித்தங்கேணியில் பிறந்தார்…
-
- 93 replies
- 3.9k views
- 1 follower
-
-
ஜெப்ரி பெல்ட்மன் – இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினார். http://newuthayan.com/story/12782.html
-
- 2 replies
- 234 views
-