ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143349 topics in this forum
-
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு ( படங்கள் இணைப்பு) யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகளிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Tags http://www.virakesari.lk/article/22189
-
- 0 replies
- 280 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 21 07 2017
-
- 0 replies
- 133 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டர்களுக்கான அலுவலகத்தை வரவேற்பது வேதனை! காணாமல் ஆக்கப்பட்டர்களுக்கான அலுவலகத்தைப் பன்னாடுகளும், புலம்பெயர் அமைப்புக்களும் வரவேற்பது வேதனைக்குரியது என்று கிளிநொச்சியில் தொடர் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 152 ஆவது நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். “அரச தலைவருடனான சந்திப்பில் எமது பிள்ளைகளின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும் என்று உறுதியளித்திருந்தது. இதுவரை எமக்கான தீர்வுகள் எதுவுமே கிடைக்கவில்லை. எம்மையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதற்கே இந்த அலுவலக…
-
- 0 replies
- 337 views
-
-
வட மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு – எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய உரை:- கௌரவ அவைத் தலைவர் அவர்களே, எமது சபையின் நூறாவது அமர்வுக்கு முன்பாக இன்றைய 99வது அமர்வில் வட மாகாண சபையின் ஆயுட் காலத்திற்கு இன்னும் பதினைந்து மாதங்களே இருக்கின்ற நிலையில் கடந்த கடந்த மூன்று வருடம் 9 மாதத்தில் ஒட்டு மொத்த வட மாகாண சபையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு முதலில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மீளாய்வென்பது, கௌரவ அவைத் தலைவர் அவர்களே, ஏதோ அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப சொற்ப நிதியை ஏதோ செலவழித்தோம் என்று கணக்குக் காட்டுவதோ அல்லது 32,000 ஊழியர்களிற்கு மாதாந்தம் சம்பளம் மற்று…
-
- 2 replies
- 642 views
-
-
-
- 0 replies
- 398 views
-
-
பாடசாலை கால எல்லை ஒரு வருடத்தால் குறைப்பு.? (எம்.சி.நஜிமுதீன்) பாடசாலை கல்விக் கால எல்லையை ஒரு வருட காலத்தினால் குறைப்பதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. அதற்கிணங்க க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையை தரம் பத்திலும் உயர்தரப் பரீட்சையை தரம் பன்னிரெண்டிலும் நடத்துவதற்கு அவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. மேலும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பப்பிரிவாகவும் தற்போது தரம் ஆறு முதல் தரம் ஒன்பது வரை வரையறுக்கப்பட்டுள்ள கனிஷ்ட பிரிவை தரம் ஆறு முதல் தரம் எட்டு வரை வரையறுப்பதற்கும் அவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. மேலும் தரம் ஒன்பது முதல் தரம் பன்னிரெண்டு வரையிலான நான்காண்டு கல்வி நடடிக்கைகளை சிரே…
-
- 0 replies
- 308 views
-
-
காணாமல் போனோர் பிரச்சனைக்கான அலுவலகம் - ஐநா வரவேற்பு படத்தின் காப்புரிமைBUDDHIKA WEERASINGHE/GETTY IMAGES இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னமும் காணாமல் போய் இருக்கும் 20 ஆயிரம் பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உதவி செய்வதற்காக, இலங்கை அரசு ஒரு அலுவலகத்தை நியமித்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம், தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்க விரும்பும் இலங்கை மக்களுக்கு உதவும். மேலும் அவர்கள் எப்போது எந்த சூழ்நிலையில் காணாமல் போனார்கள் போன்றவற்றை தெளிவுபடுத்தும். படத்தின் காப்புரிமைBUDDHIKA WEERASINGHE/GETTY IMAGES இலங்கையில் நிலையான சமாதானத்தை நோக்கிய மற்றொரு நடவடிக்கை இது என்று அதிப…
-
- 0 replies
- 230 views
-
-
வடமராட்சி கிழக்கில் மக்களின் 7.8 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன ஜாப்பா மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரால் இவ்வீதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராமங்களில் வாழும் மக்களிற்கு அபாய நிலையின் போது வெளியேறுவதற்கு உரித்தான வீதி மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்தது. குறித்த வீதியை புனரமைப்புச் செய்வதற்கு யாழ…
-
- 0 replies
- 362 views
-
-
சோபித தேரருக்காக 300 மில்லியன் ரூபா செலவில் இந்தியா கிராமம் அமைக்க உள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்தியா, கொட்டோ ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி அமரர் மாதுலுவாவே சோபித தேரருக்காக கிராமம் ஒன்று அமைக்க உள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் இந்த கிராமம் அமைக்கப்பட உள்ளது. எல்பாத்தகம என்னும் கிராமமே சோபித தேரர் கிராமாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சி;ங் சாந்துவும், வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே. அதுகோரளவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளனர். இந…
-
- 2 replies
- 362 views
-
-
தமிழ்ப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு இரவோடு இரவாக அணிந்த துணியோடு வெளியேற்றப்பட்ட 72,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம்களில் முல்லைத்தீவு முஸ்லீம்களும் அடங்குவர். எக்குற்றமும் இழைக்காத அப்பாவி முஸ்லீம்கள் தமது மொழிச் சகோதரர்களான L.T.T.E. யினரால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 27 வருட அல்லோலகல்லோலப்பட்ட அகதி வாழ்வின் பின், தமது பரந்த குடும்பத்தோடு ஆர்வத்தோடும் ஆசையோடும் தமது பாரம்பரிய தாயகத்து மண்ணை நோக்கிச் சென்ற போது அதற்கு அதே மொழிச் சகோதரர்களால் எதிர்ப்பும் தடையும் காட்டப்படுவதென்பது தமிழ் மொழி பேசும் அதே சிறுபான்மையைச் சேர்ந்த ‘தற்போது தவறாக வழிநடத்தப்படும் தமிழ் குழுக்களுக்கு’ எவ்விதத்திலும் ஒவ்வாத செயலாகும். இது தார்மீக தர்மத்திற்கும் மானிட மனச்சாட்சிக்கும் முரண்படுவதோ…
-
- 5 replies
- 775 views
-
-
நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முழு ஆதரவு ஆஸி.வெளிவிவகார அமைச்சர் ஜூலியா எதிர்க்கட்சித்தலைவரிடத்தில் உறுதி (ஆர்.ராம்) நல்லிணக்க நிகழ்ச்சிநிரலை நடைமுறைப் படுத்துவதற்கும், அரசியலமைப்பு செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கும், தொடர்ச்சியான ஆதரவினை அவுஸ்திரேலியா வழங் கும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஷப் எதிர்க்கட்சித்தலைவரும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடத்தில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலியா பிஷப்புக்கும் எதிர்க்கட்சித்தலை…
-
- 1 reply
- 315 views
-
-
பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பதவியிலிருந்து நீக்கம்!! மத்திய மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான சுவிஸ்குமார் என்பவரை கொழும்புக்குத் தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று அவசரமாக ஒன்றுக்கூடிய பொலிஸ் ஆணைக்குழு அவரை பணிநீக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியது என்று கூறப்படுகின்றது. லலித் ஜயசிங்கவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எ…
-
- 2 replies
- 315 views
-
-
சீ.ஐ.டியின் அழைப்பை நிராகரித்த சிவாஜிலிங்கம் எஸ்.ஜெகநாதன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (சீ.ஐ.டி) விடுக்கப்பட்ட அழைப்பை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெரிவி…
-
- 1 reply
- 257 views
-
-
முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அமைச்சர் ரிசாத்த பதியுதீனின் அடியாட்கள் என்று அழைக்கப்படுகின்ற வன்னியை சேர்ந்த அவரது மிகவும் நம்பிக்கைக்குரிய விசுவாசிகள் சிலர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், அவரது புதல்வர் நாமல் ராஜபக்சவையும் இரகசியமாக சந்தித்த விவகாரம் புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துகொண்டு மகிந்த ராஜபக்சவுக்கு முகவராக செயல்ப்பட்டு, இந்த ஆட்சியை கவிழ்ப்பதன் மூலம் மீண்டும் மகிந்தராஜபக்சவின் ஆட்சியை கொண்டுவருவதற்காக திரைமறைவில் பல சூழ்ச்சிகளில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார் என்ற விடயம் அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றது. மகிந்தராஜபக்ஸ ஆட்சியில் முஸ்லிம…
-
- 0 replies
- 320 views
-
-
OMP சட்டத்தில் ஜனாதிபதி கைச்சாத்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் (OMP) சட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று கைச்சாத்திட்டதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், "காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டத்தின், இன்று நான் கைச்சாத்திட்டேன். நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்துக்கான இலங்கையின் பாதையில், இது இன்னொரு படியைக் குறிப்பிடுகிறது" என்று தெரிவித்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/OMP-சட்டத்தில்-ஜனாதிபதி-கைச்சாத்து/150-201056
-
- 1 reply
- 429 views
-
-
அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல் அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதே முரண்பாடுகளுக்கு காரணம் – ஜூலி பிஷொப்பிடம் சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் இன்றையதினம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார். 45 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையில் இதுவரையான காலமும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்களில் சகல இன மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவில்லை எனவும் இதுவே இலங்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முரண்பாட்டு நிலையினை தீர்ப்பதற்கு அனைத…
-
- 2 replies
- 289 views
-
-
ஐ.நா.அரசியல் செயலரிடம் முறையிட்டது அரசாங்கம் காணிகள் விடுவிக்கப்படும் என்கிறார் வெளிவிவகார அமைச்சர் (ரொபட் அன்டனி) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பென் எமர்சன் உண்மைக்கு புறம்பான மற்றும் பொருத்தமற்ற சில விடயங்களை தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கின்றார். நாம் அதுதொடர்பில் ஐ.நா.வின் உயர்மட்டத்திடம் எடுத்துக் கூறியிருக்கின்றோம். இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிசெயலர் ஜெப்ரி பெல்ட்மனிடம் இது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் ஐ.நா.வின் உ…
-
- 0 replies
- 303 views
-
-
முல்லை காடழிப்பும் வறட்சிக்குக் காரணம் முதலமைச்சர் சுட்டிக்காட்டு On 10 mins ago முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழா முறிப்புப் போன்ற இடங்களில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்குக் காணிகள் வழங்குவதற்காக காடுகள் அழிக் கப்படுகின்றன. நாம் வறட்சியை எதிர்கொள்வதற்கு இது வும் காரணம். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் நடந்த கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாம் வறட்சியை எதிர்கொள்வதற்குக் காடுகளை அளவு கணக்கில்லாமல் அழித்தமைதான் காரணம் என்று சுற்றுச் சூழலியலாளர்களும் இயற்கை அறிஞர்களும் கூறுகின்றார…
-
- 0 replies
- 173 views
-
-
கூழாமுறிப்புக் காட்டுப் பகுதி திட்டமிட்டு எரிக்கப்பட்டதா? உடனடி விசாரணை நடத்தவேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை குடியேற்றத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த கூழாமுறிப்புக் காட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சாம்பராகிய சம்பவம் தொடர் பில் உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும். இந்தத் தீ இயற்கையாக உருவானதாகத் தெரியவில்லை. திட்டமிட்ட ரீதியில் இதனை எரித்ததாகவே வலுவாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள பத்திரிகைச் செய்த…
-
- 0 replies
- 401 views
-
-
ரணிலைச் சந்தித்து பேசினார் ஐ.நாவின் ஜெப்ரி பெல்ட்மன் இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்த்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும், இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் உடனிருந்தனர். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றபோது ஜெப்ரி பெல்ட்மனைச் சந்தித்து அரசமைப்பு மறுசீரமைப்பு, நல்லிணக்கம் போன்றவற்றில் தாக்கம் செலுத்தும் காரணிகள் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார் என்று தெரிவ…
-
- 1 reply
- 411 views
-
-
கட்டாரில் இலங்கையர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை.! எந்த அளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அவற்றுக்கு முகம்கொடுக்கும் சக்திமிக்க ராஜ்ஜியமாக கட்டார் அமைந்துள்ளது. எனவே அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை யகத்தில் இடம்பெற்ற அக்கட்சியின் இளைஞர் அணி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்டார் நாடு எந்த அளவிலான அழுத்தங்கள் ஏற்பட்டாலும் அவற்றுக்கு ம…
-
- 0 replies
- 199 views
-
-
அன்று செய்த தவறை மீண்டும் ஐ.தே.க. இன்று செய்கின்றது.! ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதமும் பழிவாங்கல் செயற்பாடுமே கறுப்பு ஜூலை க்கு காரணமாகும். அன்று செய்த அதே தவறை இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி செய்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. மீண்டும் நாட்டில் இனவாதத்தை பலப்படுத்தி இனவாதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனவும் அக்கட்சி தெரிவித்தது. மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிஷ இளைஞர் அமைப்பு நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் இணைப்பாளர் எரங்க குணசேகர தெரிவிக்கையில், இலங்கையில் கறைபடிந்த சம்பவமே 1983 ஆ…
-
- 0 replies
- 207 views
-
-
புதிய அரசியலமைப்புத் தேவை என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை புதிய அரசியல் அமைப்பில் அதிகார பகிர்வு தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை. ஐக்கியம், பெளத்த மதத்திற்கான முன்னுரிமை என்ற விடயத்தில் எந்தவித விவாதத்திற்கும் இடமில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பே தீர்வாகும் எக்காரணம் கொண்டும் புதிய அரசியல் அமைப்பை தடுக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் இலங்கையின் வட பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் மேலும் 91 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டுமானங்கள் மற்றும் மீள்குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளிலும் தற்போதைய நல்லிணக்க பொறிமுறைகளில் இலங்கைக்கு அனைத்து வகையிலும் ஜப்பான் ஒத்துழைப்புக்களை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்தார். இலங்கையில் செயற்படும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமான கண்ணிவெடி ஆலோசணை குழுவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவ…
-
- 0 replies
- 206 views
-
-
மயிலிட்டி மக்களுக்கு வாழ்வாதார உதவி -ரொமேஸ் மதுசங்க, செல்வநாயகம் கபிலன் 27 வருடங்களுக்குப் பின்னர், அண்மையில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி பகுதி மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் முகமாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால், 100 மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. அத்துடன், அமைச்சினால் இரண்டு படகுகள், இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் என்பனவும் மயிலிட்டி கடற்றொழில் சமாசததுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர்…
-
- 6 replies
- 323 views
-