Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘பிரச்சினைகள் தீரவில்லை’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் “யுத்தம் நிறைவடைந்தது. ஆனால், பிரச்சினைகள் தீரவில்லை. பயங்கரவாதம் மட்டுமே முற்றுப்பெற்றுள்ளது. இனவாதம் இன்னும் அதிகரித்துள்ளது” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும், மன்னாரில் நீர் பிரச்சினை காணப்படுவது போல் யாழ்ப்பாணத்திலும் காணப்படுகின்றது. அங்கு நீரை விநியோகிப்பதற்கான புதிய செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் - எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை, நேற்று (07) மாலை திறந்து வைத்து உரையாற்றகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்…

  2. ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை’ “இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை" என, புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இலங்கை உள்ளாகியுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில குழுக்கள் இப்படியான வதந்திகளை தமது நலனுக்காக பரப்பலாம். எவ்வாறிருப்பினும், அப்படியான ஒரு நிலை ஏற்படுமாயின், இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் ஆகியோர் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய தயார் நிலையில் உள்ளனரெனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்த…

  3. மஹிந்தவுடன் 8 அமைச்சர்கள் சந்திப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் 8 பேர், நேற்று (07) மாலை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பின்போது, எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கிடையேயான திட்டங்கள் பல நிறைவுக்கு வரவுள்ளன. அத்துடன், நல்லாட்சியிலிருந்து வௌியேற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 18 பேர் தயாராக உள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்தன. இ…

  4. உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் முதலில், எமது மக்களது உணர்வு ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. அவை தீர்க்கப்பட்டால் மாத்திரமே தேசிய நல்லிணக்கமானது உணர்வுப்பூர்வமானதாகவும், வலுவுள்ளதாகவும் அமைவதற்கு சாத்தியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் வாழ்கின்ற த…

  5. 300 பொருத்து வீடு­க­ளுக்கு பய­னா­ளி­களை தாருங்­கள் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­ருக்கு மீள்­கு­டி­யேற்ற அமைச்சு கடி­தம் 300 பொருத்து வீடு­க­ளுக்­குப் பய­னா­ளி­கள் பட்­டி­ய­லைத் தேர்வு செய்து அனுப்பி வைக்­கு­மாறு, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் செய­லா­ள­ரி­னால், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்­குக் கடி­தம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. பொருத்து வீட்டு அமைக்­க­வேண்­டாம் என்று வடக்கு மக்­க­ளும், அர­சி­யல் கட்­சி­க­ளும் தொடர்ச்­சி­யா­கக் கோரிக்கை விடுத்து வரு­கின்­றன. இது தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று முன்­தி­னம் விவா­தம் கூட நடை­பெற்­றி­ருந்­தது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பொருத்து வீடு அம…

  6. வடக்கு முதல்வரை சந்தித்தார் தமிழிசை! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடுக் கிளைத் தலைவர் தமிழிசைக்கும் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது. தமிழிசை தனிப்பட்ட பயணமாக நேற்று இலங்கைக்கு வந்திருந்தார். அவர் இன்று யாழ்ப்பாணம் வந்தார். வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்களை அவர் இன்று சந்தித்தார். நேற்று தமிழிசையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் சந்தித்திருந்தனர். http://uthayandaily.com/story/9830.html

  7. எதிர்கட்சி தலைவருக்கு எதிராக களம் இறங்கிய மட்டு. அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களை இடம்மாற்றினார்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரைஇடமாற்றம் செய்ய முற்பட்ட எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இரண்டு பிரதேச செயலாளர்களை மட்டு அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது பல்வேறு பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யவேண்டும் என எழுந்துள்ள மக்களின் அழுத்தத்தை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் உள்நாட்டு அலுவல்க…

    • 1 reply
    • 510 views
  8. மாநாயக்க தேரர்களை மீறி அரசியலமைப்பை கொண்டுவர ஒருபோதும் இடமளியோம் வீதிக்கு இறங்குவோம்; அத்துரலியே ரத்ன தேரர் கூறுகிறார் (ஆர்.யசி) பெளத்த கொள்கை – கோட்­பா­டு­களை மீறி புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க முடி­யாது. மா­நா­யக்க தேரர்­களின் கருத்­து­க்களை மீறி புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­ப­டு­மா யின் வீதியில் இறங்கி போரா­டவும் தயா­ராக உள்ளோம் என்று இலங்கை தேசிய மகா சங்க சபையின் தலைவர் அத்­து­ர­லியே ரத்­ன தேரர் அர­சாங்­கத்­திற்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். அர­சி­ய­ல­மைப்பு குறித்த ஆலோ­சனை குழு­விலும்,வழி­ந­டத்தல் குழு­விலும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் உறுப்­பி­னர்­களே அதி­க­மாக உள்­ளனர். அவர்களுக்கு மாத்­தி­ரமே அர­…

  9. சங்­க­பீட கோரிக்­கையை ஏற்று சம்­பந்தன் இறங்கி வர­வேண்டும் பந்தை எப்­படி போடப்­போ­கின்­றா­ரென பார்ப்போம் என்­கிறார் டிலான் (ரொபட் அன்­டனி) சங்­க­பீ­டங்­க­ளுக்கு எதி­ராக தமிழ் கூட்­ட­மைப்பு செல்­வதில் அர்த்­த­மில்லை. மாறாக சங்க பீடங்­களின் கோரிக்­கையை ஏற்றுக் கொள்­வ­தாக கூட்­ட­மைப்பு அறி­விக்க வேண்டும். தேர்தல் முறை மாற்­றத்­தி­னூ­டாக அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை முன்­னெ­டுக்­கலாம் என சங்­க­பீ­டங்கள் கூறி­யுள்­ளதால் அதனை பயன்­ப­டுத்தி அந்த திருத்­தத்­திற்குள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் உள்­ள­டக்கி விட வேண்டும். எனவே தற்­போது பந்து சம்­பந்தன் கையில் உள்­ளது. அவர் எப்­படி விளை­யாடப் போகின்றார் என்­பதே இங்கு முக்­கி­ய­மான…

  10. புலம்­பெயர் அமைப்­புக்­க­ளி­னா­லேயே தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது இறுதி வரைவு வழி நடத்தல் குழு­வி­லி­ருந்து விரைவில் வில­குவோம் என்­கி­றது கூட்டு எதி­ரணி (ரொபட் அன்­டனி) எங்­க­ளு­டைய எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தி­ யிலும் அர­சாங்­க­மா­னது கூட்­ட­மைப்­புடன் இணைந்து நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கும் ஒரு­மைப்­பாட்­டுக்கும் பங்கம் ஏற்­படும் வகை யில் புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்­து­ வ­ரு­கின்­ற­மையின் கார­ண­மாக மா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்­டனர். அதனை நாங்கள் வர­வேற்­ப­து டன் தேரர்­க­ளுக்கு எமது ஆத­ர­வையும் தெரி­விக்­கின்றோம் என்று கூட்டு எதி­ர­ணியின் தலை­ வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். அ…

  11. கொக்­கு­வில் இந்­து­வில் கற்­றல் புறக்­க­ணிப்பு கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரிக்கு முறை­யற்ற வகை­யில் அதி­பர் நிய­ம­னம் இடம்­பெற்­றுள்­ள­தா­கத் தெரி­வித்து வடக்கு மாகாண கல்வி அமைச்­சுக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து நாளை­ம­று­தி­னம் திங்­கட் கி­ழமை கற்­றல் புறக்­க­ணிப்­புக்கு பழைய மாண­வர் சங்­கத்­தால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் பாட­சா­லைக்கு அதி­பர் சேவை தரம் 1இல் உள்ள ப.கணே­சனை நிய­மிக்க ஆவன செய்­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரி­டம் பழைய மாண­வர் சங்­கம் கோரி­யுள்­ளது. கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரிக்கு நேற்­றைய தினம் புதிய அதி­பர் நிய­மிக்­கப்­பட்­ட­தனை பாட­சா­லை­யின் பழைய மாண­வர்­கள் எதிர்ப்­ப­தோடு இதனை ஆட்…

  12. 10 ஆண்டுகளாகத் தடுப்பிலிருந்த அரசியல் கைதி நேற்று விடுவிப்பு 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சி­யல் கைதி கொழும்பு சிறப்பு மேல் நீதி­மன்­றால் நேற்று விடு­விக்­கப்­பட் டார். கிளி­நொச்­சி­யைச் சேர்ந்த ஜெய­ராம் இரா­ம­நா­தன் 2007ஆம் ஆண்டு பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் இர­க­சி­யப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார். அன்­றி­லி­ருந்து அவர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­தார். கொழும்­பு­லி­ருந்து கட்­டு­நா­யக்கா செல்­லும் தொட­ருந்­துப் பாதையை வெடி­குண்டு வைத்து தகர்க்க சதித் திட்­டம் தீட்­டி­யமை இரா­ணு­வத்­தின் உயர் அதி­கா­ரி­யின் நட­வ­டிக்­கை­களை வேவு பார…

  13. முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிற்கு, பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் இராணுவத் ஜெனரல் தளபதி தயா ரட்நாயக்கவை பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமேந்து உற்பத்திசாலையில் 600 தொன் எடையுடைய இயந்திர சாதனங்களை அறுத்து பழைய இரும்பிற்காக விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ராட்நாயக்கவை தவிர மேலும் மூன்று முன்னாள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்…

    • 1 reply
    • 301 views
  14. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டம் சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதென சுற்றுலாத் துறை அமைச்சை மேற்கோள்காட்டி சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது. பிரபலமான மடுத் தேவலாயம் மற்றும் வில்பத்து சரணாலயம் போன்ற மக்களைக் கவரும் பல இடங்களை மன்னார்மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாவட்டமாக, மன்னாரை மாற்றும வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடற்கரையுடன் இணைந்த 300 ஏக்கர் பகுதி அடையாளம் காணப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன எனவும் அச்செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thuliyam.com/?p=72949

    • 0 replies
    • 649 views
  15. மயிலிட்டித் துறைமுகம் விடுவிப்பு என்பது ஒரு அரசியல் நாடகம் எனவும், அடுத்த தேர்தலின்போது மயிலிட்டி மக்கள் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் மயிலிட்டி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மயிலிட்டித்துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துறைமுகம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது, மக்களின் குடியிருப்புப் பகுதி விடுவிக்கப்படவில்லை. அப்படியாயின் நாம் எப்படித் தொழில் செய்வது எனவும் அம்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்? அத்துடன், விடுவிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் இராணுவம் கம்பிக்கட்டை போட்டி வேலி அடைப்பதாகவும், மயிலிட்டிச் சந்தியையும், துறைமுகத்தையும் உள்ளடக்கிய பிரதேசத்தில் எந்தவொரு மக்களின் வீடுகளும் உள்ளடக்கப்படவில்லையெனவும் அவர்கள் கவ…

    • 0 replies
    • 250 views
  16. ''தமிழ், சிங்கள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மொழி மூல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்" தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியும் சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி மூல வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் போதே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வினை காண முடியும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்தை சகவாழ்வினதும் நல்லிணக்கத்தினதும் மாவட்டமாக பெயரிட வேண்டும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த கொண்டு வந்த தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/2…

  17. கோட்டாபய விரைவில் கைது? மகாநாயக்கர்களிடம் சரணடைந்த ராஜபக்ச ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே இன்று தெரிவித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க யுத்தத்தை வழிநடத்திய ஒரே காரணத்திற்காக தன்னை கைது செய்ய தற்போதைய அரசாங்கம் சர்வதேசம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் காலை அவசரமாக சிங்கள …

  18. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த குற்றத்துக்காக என்னை கைதுசெய்வதற்கென அரசாங்கத்தினால் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இன்னும் ஒருமாத காலத்தில் நான் கைது செய்யப்படுவேன் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நான் அரசியல் பயணத்தை ஆரம்பிப்பேன் என மக்கள் எதிர்பார்க்கும் காரணத்தினால் தான் இவர்கள் என்னை சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று வெ ள்ளிக்கிழமை அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக் ஷ பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்…

    • 0 replies
    • 244 views
  19. நோர்வேயுடன்ப யாழ். பல்கலைக்கழகத்துடன் தூயசக்தி தொழில்நுட்ப உதவி உடன்படிக்கை மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகத்துடன் தூயசக்தி தொழில்நுட்ப உதவி சம்பந்தமான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. உடன்படிக்கையின் அடிப்படையில், தூயசக்தி தொழில்நுட்பம் சம்பந்ததாக மாணவர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் அறிவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுமே இதன் நோக்கம் நோர்வே மற்றும் ஸ்ரீலங்காவின் தனியார் நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் கொண்ட ஒரு ஆய்வுக் குழுவை உருவாக்கும் நோக்கில் நோர்வே தூதுவாராலயத்தினால் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படவுள்ள உதவியின் உத்தேச மதிப்பீடு 112 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்…

  20. மாவீரர்களின் பெற்றோர் புதுக்குடியிருப்பில் கௌரவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் பொதுவாக விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலேயே பல்வேறு அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டன. தற்போது ஜனனாயகப் போராளிகள் கட்சியால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கௌரவிப்பு நிகழ்வுகள் இனிவரும் காலத்திலும் படிப்படியாக முன்னெடுக்கப்படும் என அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான துளசி தெரிவித்தார். http://uthayandaily.com/sto…

  21. சக்தி டிவி செய்திகள் 8PM (07-07-2017)

  22. வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் வீதியில் சென்ற பொலிசார் மீது அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பொலிசார் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்று விட்டனர்.நேற்று இரவு 11 மணியளவில் வீதியால் சென்ற பொலிசார் உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவிலடிப்பகுதியில் மதுபோதையில் நின்ற இளைஞர்கள் சிலர் பொலிசார் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவர்களைத் தாக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஒரு மணித்தியாலயங்கள் வரை இடம்பெற்றுள்ளது. பின்னர் பொலிசார் அப்பகுதியிலிருந்து சென்றுவிட்டனர். இது குறித்து பொலிசார் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முறைப்பாடுகளும் மேற்கொள்ளவில்லை. எனினும் …

  23. கோத்தபாயவை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மைத்திரி, ரணில் தலைமையிலான கூட்டாட்சி அரசு நீதியை பெற்றுத்தரவில்லையென குற்றம் சுமத்தப்பட்டு இவ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு…

  24. திறக்கப்பட்ட தினத்திலிருந்து மூடப்பட்டுள்ள சாவகச்சேரி தும்புத் தொழிற்சாலை வடக்கு மாகாண கைத்தொழிற்றுறைத் திணைக்களத்தினால் சாவகச்சேரி கோயிற்குடியிருப்புப் பகதியில் நிர்மாணிக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலை திறக்கப்பட்ட நாளிலிருந்து இயங்காத நிலையில் காணப்படுகிறது. கடந்த மார்ச் 29 ஆம் திகதி (29.03.2017) வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்ட தும்பு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறித்த தொழிற்சாலை திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் செயற்படாமல் மூடியுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். http://uthayandaily.com/…

  25. நாவற்குழியில் தாது கோபுரம் அமைக்க தற்காலிக தடை எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணம், நாவற்குழி சிங்களக் குடியேற்றப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாதுகோபுர கட்டுமான பணிகளுக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், இன்று (07) தடையுத்தர பிறப்பித்தார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வழக்கு எடுத்துகொள்ளப்படும் வரை எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது என, அவர் தனது உத்தரவில் தெரிவித்தார். நாவற்குழி பகுதியில் அனுமதி பெறாது அமைக்கப்பட்டுவரும் விகாரை தொடர்பாக பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்ததுடன், அனுமதியற்ற கட்டடம் அமைக்கப்படுவது தொடர்பாகவும் சாவகச்சேரி பிரதேச சபையா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.