ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒருபோதும் விற்கமாட்டோம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒருபோதும் விற்கமாட்டோம். துறைமுக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வினை பெற்றுத்தருவோம் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ள அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக திட்டம் மற்றும் அங்குள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை ஆராயும்பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க சென்றிருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.…
-
- 0 replies
- 195 views
-
-
அதிரடியாக முக்கிய புதிய நியமனங்கள் பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் புதிய இராணுவத் தளபதியென அதிரடியாக புதிய நியமனங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கபில வைத்தியாரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, லெப்டினென் ஜெனரல் மகேஷ் செனாநாயக்க புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன் ஜெனரல் மகேஷ் செனநாயக்க 22 ஆவது இராணுவத் தளபதியென்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/21472
-
- 0 replies
- 470 views
-
-
தற்பொழுது நாட்டில் தலைவர்கள் கூடி விட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச பிரகடனம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர் வெளிநாட்டவருக்கு தேவையான வகையில் வழக்கு விசாரணை செய்து பயங்கரவாதத்தை இல்லதொழித்த அரசியல் மற்றும் படைத் தரப்பினரை தண்டிக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று அரசாங்கத்தில் அதிகளவான தலைவர்கள் இருக்கின்றார்கள எனவும் இதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்மானத்தை …
-
- 0 replies
- 197 views
-
-
“அரசாங்கத்தால், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘வலுக்கட்டாயமாகக் காணாமல் போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயம் எனும் சட்டமூலம்’ நாட்டுக்குப் பாதகமான மிகவும் பயங்கரமானதாகும்” என்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கெப்பட்டியாகொட சிரிவிமல தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னரே ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “இந்தச் சட்டமூலத்தின் ஊடாக, இராணுவ வீரர் அல்லது அரசியல்வாதி, வெளிநாட்டு நீதிமன்றம் அல்லது வெளிநாட்டு அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு, அதனை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, அந்த நாட்டிடம், அந்நபரை ஒப்படைத்தல் அல்லது சர்வதேச நீதிமன்ற…
-
- 0 replies
- 180 views
-
-
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கும் ஐஎஸ் இன் திட்டம் முறியடிப்பு! கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்குவதற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு போட்டிருந்த திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தூதரகத்தைத் தாக்குவதற்காக ஐஎஸ் அமைப்பானது கட்டுநாயக்காவிலிருந்து ஒரு விமானத்தைக் கடந்தவிருந்ததாகவும் அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் சிறீலங்காவின் பல பகுதிகளிலிருந்தும் ஐஎஸ் இயக்கத்திற்கு பலர் உதவி செய்து வருவதாகவும், அது தொடர்பான தகவல்களையும், நேரடி எச்சரிக்கைகளையும் விடுக்க அமெரிக்க பாதுகாப்புப் பிரிவின் குழுவொன்று விரைவில் கொழும்பு வரவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ…
-
- 5 replies
- 873 views
-
-
6:00 கிழக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கிழக்கு-மாகாண-ஆளுநராக-ரோஹித-போகொல்லாகம/175-199850
-
- 0 replies
- 498 views
-
-
சுமந்திரன் பாராளுமன்றத்தை விட மாகாண சபைக்கே பொருத்தமானவர் எம்.ஏ.சுமந்திரன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து விட்டு, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும் என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சுமத்திரன் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதை விட, மாகாண சபைகளிலேயே அதிக தலையீடு செய்வதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வட மாகாணத்தில் முதலமைச்சர், அவைத் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என, அனைவரது செயற்பாடுகளிலும், சுமந்திரன் அழுத்தங்களை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். தனக்கு வி…
-
- 0 replies
- 323 views
-
-
ஷிப்லி பாறுக் மற்றும் மட்டுஅரசஅதிபர் தலைமையில் பாரிய நில அபகரிப்பு வாகரை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆழங்குளம் பிரதேசத்தில் 30 மருதமுனையை சேர்ந்தமுஸ்லீம் குடும்பங்களை முதல் கட்டமாக குடியேற்ற அரசாங்க அதிபரின் அங்கிகாரமும் மாகணசபையின் அனுமதியும் அளிக்கப்படு அதற்கானவீட்டு திட்ட பணிகள் எதிர்வரும் வாரங்களில் அமுல்படுத்தபடவுள்ளது இதனை சிப்லிபாறுக் முன்னின்று நடத்துகிறார் இவர்தான் முஸ்லீம்கள் மட்டக்களப்பின் மொத்த நிலப்பரப்பில் 2% நிலப்பரப்பில் குறுகி வாழ்வதாகவும் சனத்தொகை பரம்பல் விகிதத்தில் அவர்களுக்கு 30%நிலப்பரப்பு காணப்படவேண்டும் எனும் பிரச்சாரத்தை தொடங்கிவைத்தவர், இவ்வாறு ஏனைய மாவட்ட முஸ்லீம்களை இங்கே கொண்டுவந்து குடியேற்றி நிலப்பரம்பலையும் தமிழ் மக்களின் பரம்பலை குறைத…
-
- 0 replies
- 526 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சமஷ்டியோ அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்ததோ அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் விடயத்தில் இதுதான் நடக் கும் என்பதை எம்மவர்கள் மிகத்தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். இதையே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மிகத் தெளிவாக அண்மையில் கூறியிருந்தார். சமஷ்டியும் இல்லை; வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை ஆக பதின்மூன்றுக்கும் குறைவான தீர்வே தமிழ் மக்களுக்கு தரப்படப் போகின்றது. இதனால் எமது மக்களுக்கு எந்தப் பிர யோசனமும் இல்லை என்று முதலமைச்சர் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி வடக்கு மாகாண முதல மைச்சராகிய என்னை பதவியிலிரு…
-
- 0 replies
- 428 views
-
-
இராவணன் அன்பளித்த மான்களின் சந்ததியை பாதுகாக்க நடவடிக்கை திருகோணமலை -பஞ்ச ஈஸ்வரங்க ளில் ஒன்றாக விளங்கும் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம் இராவணனின் கதையோடு தொடர்பு பட்ட ஒன்றாகும். இலங்கை வேந் தன் இராவணன் இக்கோயிலுக்கு ஒரு சோடி மான்களை அன்பளிப்பு செய்துள்ளான் அவ்வாறு அன்பளிப்புச் செய்யப்பட்ட மான்களின் சந்ததிகள் தான் இன்றும் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றன. எனினும் திருகோணமலை கோட்டைக்குள்ளும்,கோணேஸ்வரம் கோயிலுக்கு அருகிலும் வாழ்ந்த மான்கள் தற்பொழுது அருகி வருகின்றன. கோயில் வளாகம் மற்றும் கோட்டைகளை விட்டு அவைகள் வெளியில் வந்து விட்டன. இதனால் அன்று கிடைத் ததை போன்று உணவும், பாதுகாப்பும், இன்…
-
- 2 replies
- 329 views
-
-
வடக்கு சுகாதார அமைச்சரை சந்தித்த வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை இன்று அமைச்சரது வவுனியா இணைப்பு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். இதன்போது வவுனியாவில் 399 பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும் தமது போராட்டம் 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லையென்றும் முதலமைச்சர், பிரதமர் ஆகியோர் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லையென்றும் தெரிவித்தனர். மாகாண சபையின் திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வ…
-
- 0 replies
- 246 views
-
-
அமைச்சர்களின் நியமனம்: பிரச்சனைகளின் தொடக்கமா- முடிவா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-02#page-6
-
- 0 replies
- 199 views
-
-
News 1st Shakthi Prime Time, Monday, 3 July 2017, 8PM (03-07-2017)
-
- 0 replies
- 256 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 03-07-2017
-
- 0 replies
- 135 views
-
-
கடமைகளைப் பொறுப்பேற்றார் அனந்தி Published by Priyatharshan on 2017-07-03 14:49:55 வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள், புனர்வாழ்வு, கூட்டுறவு அமைச்சராக புதிதாகப் பதவியேற்றிருக்கும் அனந்தி சசிதரன் இன்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ் ஏ-9 வீதியின் அரியாலைப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஐலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை வடக்கு மாகாண அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்த…
-
- 0 replies
- 296 views
-
-
வவுனியாவில் வயோதிபரின் சடலம் மீட்பு : கொலையா ? மரணமா? விசாரணை ஆரம்பம் வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்திலுள்ள நீர் தொட்டியொன்றுக்குள் இருந்து இன்று மதியம் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்தில் கடந்த சில காலமாக தங்கியிருந்த 53 வயதுடைய இராசரட்ணம் அரியரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையென்றும் இன்று மதியம் குளிப்பதற்கு தண்ணீர் தொட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையிலேயே குறித்த நபர் தண்ண…
-
- 0 replies
- 150 views
-
-
முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் அனைத்து முஸ்லிம் சமூகங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இவ்வாறு கூட்டணி ஒன்று அமைக்கப்பட உள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது இவ்வாறு முஸ்லிம் கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். வடக்கின் தமிழ் மக்கள் எந்தவொரு பிரச்சினையையும் தைரியமாக எதிர்கொள்வதற்கு அவர்களின் ஒற்றுமையே காரணம் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கை முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் இவ்வாறான ஓற்றுமையை காணக்கிடைக்கவில்லை என…
-
- 0 replies
- 244 views
-
-
நமக்குள் எங்கே பிரச்சனை ஆரம்பமாகிறது? விளக்குகிறார் சி.வி http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-02#page-5
-
- 0 replies
- 561 views
-
-
வழிநடத்தல் குழுவில் இருந்து மகிந்த அணி விலகியிருக்க முடிவு உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் வரை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் வரை, புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழுவிலிருந்து ஒதுங்கியிருப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மொனராகலையில் நடந்த நிகழ்வில் நேற்றுக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த அரசு தேர்தலை நடத்தாது காலத்தை இழுத்தடித்துச் செல்கின்றது. தேர்தலை நடத்…
-
- 0 replies
- 376 views
-
-
சுமந்திரனது தந்தை (ஆபிரஹாம்) விடுதலைபுலிகள் மின்கம்பத்தில் கட்டி வைத்து நையப்புடைத்ததன் பின்னர் அவர்கள் குடும்பமாக வடமராச்சியை விட்டு வெளியேறியதாக வடமராச்சி மக்கள் சிலரால் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 80ம் ஆண்டு தொடங்கங்களில், அரியாலை காசிப்பிள்ளை வாசிகசாலைக்கு பக்கத்தில, புங்கன்குளம் சந்தி புகையிரதநிலையத்திற்கு முன்பாக எத்தனை பேருக்கு உந்த நையப்புடைப்புக்களும், மரணதண்டனைகளும் வழங்கப்பட்டது என்று யாரிடமாவது எண்ணுக்கணக்கு இருக்குமோ தெரியாது. சில நேரங்களில் ஒரே நாளில் இரண்டு மூன்று பேருக்கும் பக்கத்து பக்கத்துக்கு சந்திகளில் “தீர்ப்பு” வழங்கப்பட்டிருக்கும். கடைசியாக எனக்குத் தெரிய அரியாலைப்பகுதியில்; ஒருவரை தபாற்கட்டை சந்தியில் கிளைமோர், வயர்கள் உடன…
-
- 3 replies
- 919 views
-
-
தமிழ் மக்களின் தியாகத்திற்கு நியாயமான அரசியல் தீர்வு வேண்டும் ; சந்திரகுமாா் தமிழ் மக்கள் தாங்கள் இழந்த இழப்புக்களுக்கும், செய்த தியாகத்திற்கும் நிகரான நியாயமான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றனா். என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா். கிளிநொச்சி உதயநகா் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் எதற்காக தியாகங்களை செய்தார்களோ எதற்காக இழப்புக்களைச் சந்தித்தாா்களோ, அதற்கான நியாயமான தீர்வு கிடைக்க வேணடும். அதற்கு தமிழ் மக்…
-
- 0 replies
- 286 views
-
-
மஹிந்தவின் கூட்டம் இன்று திருமலையில் அநுராதபுரத்திலிருந்து வாகனப் பேரணி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள பேரணியும் பொதுக் கூட்டமும் இன்று பி.ப.2.30 மணிக்கு திருகோணமலை நகரில் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. திருமலை துறைமுகம், எண்ணெய்க்குதம் உள்ளடங்கலாக தேசிய சொத்துகளை விற்பனை செய்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊழல் மோசடி, பிரிவினைவாத அரசியலமைப்பு, டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியாமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கத்…
-
- 1 reply
- 278 views
-
-
கருத்துக்களை கேட்டறியாமல் எழுந்து செல்ல முற்பட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு Newsfirst.lk tamil
-
- 1 reply
- 237 views
-
-
முன்னாள் போராளிகளான 36 பட்டதாரிகளுக்கு வேலை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில், பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டு, இயக்கத்தில் இணைந்துகொண்ட முன்னாள் போராளிகள் 36 பேருக்கு அரச திணைக்களங்களில் பட்டதாரிகளாக நியமனம் செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனா்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா் டி.எம். சுவாமிநாதனே, மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். முன்னாள் போராளிகளான பட்டதாரிகளின் விவரத்தை திரட்டிய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அவை தொடர்பிலான அறிக்கையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார். அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்ததையடுத்தே, …
-
- 1 reply
- 393 views
-
-
புதிய அரசமைப்புக்கு ஆதரவளியோம் – அஸ்கிரிய பீடம் திட்டவட்டம்!! புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் இடைக்கால அறிக்கை இறுதி செய்யப்படவுள்ள நேரத்தில், அஸ்கிரிய பீடத்தின் தலைமையில் நேற்று ஒன்றுகூடிய பௌத்த சங்கச் சம்மேளனங்கள், புதிய அரசமைப்புக்குத் தமது முழுமையான எதிர்ப்பை வெளியிடத் தீர்மானித்துள்ளன. புதிய அரசமைப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அனைத்துப் பௌத்த பீடங்களையும் ஒன்று திரட்டி அதனை முழுமையாக எதிர்ப்பதற்கு அவை நேற்று முடிவு செய்துள்ளன. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 6 ஆம் திகதி பெரும…
-
- 1 reply
- 393 views
-